The post ரஜினியிடம் ஒரு கேள்வி? வைரமுத்து. appeared first on Touring Talkies.
]]>கவிப்பேரரசு வைரமுத்து சினிமாவில் மறக்க முடியாத பல பாடல்களை கொடுத்தவர். அவர் பாட்டு எழுதாத படங்கள் குறைவு என்றே சொல்ல முடியும் உச்ச நடிகர்களுக்கு பல வெற்றி பாடல்களை கொடுத்தவர்.
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வைரமுத்து,கமல்,ரஜினிகாந்த் கலந்து கொண்டனர். அப்போது ரஜினியிடம் நீங்கள் பார்க்காத வெற்றி இல்லை,மேடைகள் இல்லை,புகழ்,நீங்கள் சேர்க்காத பொருள் இல்லை இந்த வாழ்க்கை உங்களுக்கு சொல்கிற செய்தி என்ன என்று கேட்டார் வைரமுத்து.
வாழ்க்கையில் எத்தனையோ படிகள் இருக்கிறது.மரணம் எந்த படியில் வரும் என்று சொல்ல முடியாது. அடுத்த படியில் கூட இருக்கலாம். நிரந்தரமில்லாதது. வாழ்க்கை என்பது ஒரு பகல் கனவு என்றார் ரஜினிகாந்த்.
The post ரஜினியிடம் ஒரு கேள்வி? வைரமுத்து. appeared first on Touring Talkies.
]]>The post ‘மாவீரா’ படத்துக்காக 10 நிமிடங்களில் தயாரான பாடல்…! appeared first on Touring Talkies.
]]>கவிப் பேரரசரின் புலமையும், ஜி.வி.பிரகாசின் அழகிசையும் காலமுள்ளவரை ஒலிக்கும். பத்தே நிமிடத்தில் பாட்டு தயரானது.
பட்டாம்பூச்சிக்கு
பட்டுத்துணி போட்டது போல
சிட்டாஞ்சிட்டுக்கு சேலைக் கட்டி
விட்டது யாரு?
சீனிக்கட்டியில செலை ஒன்னு
செஞ்சு வச்சது போல
எட்டா ஒயரத்தில் எச்சி ஊற
விட்டது யாரு?
வன்னித் தமிழா வாய்யா
உனக்கு வாச்சப் பொருளைத் தாயா
பச்ச முத்தம் ஒண்ணு கொடுத்தா
பற்றிக் கொள்வேன் தீயா
அடி வஞ்சிக்கொடியே வாடி
வளர்த்த பொருளத்தாடி
பாசத்த உள்ள வச்சுப்
பாசாங்க வெளிய வச்சு
வேசங்கட்டி வந்தவளே
வெறும் வாய மெல்லுறியே
மாவீரன் மண் காக்க
மானமுள்ள பெண் காக்க
அஞ்சாறுப் புலிக்குட்டி
அவசரமா வேணுமடி.
இன்னும் இன்னும் திகட்ட இப்படி நீள்கிறது பாடல்…
“இந்த ‘மாவீரா’ படம் மாபெரும் வெற்றியைப் பெறும் என்பதை இரண்டாவதாக இந்தப் பாடலும் உறுதிப்படுத்தியுள்ளது. பேராளுமைகள் இருவருக்கும் நெகிழ்ந்த நன்றிகள்.” என்கிறார் படத்தின் இயக்குநரான வ.கௌதமன்.
The post ‘மாவீரா’ படத்துக்காக 10 நிமிடங்களில் தயாரான பாடல்…! appeared first on Touring Talkies.
]]>