The post எம்.ஜி.ஆருக்கே ‘பன்’ கொடுத்த வாலி! appeared first on Touring Talkies.
]]>எம்.ஜி.ஆர் நடித்த பல திரைப்படங்களுக்கு பாடல் இயற்றி இருக்கிறார் வாலி. ஆனால் இடையில் இடைவெளி விழுந்துவிட்டது. அப்போது எம்.ஜி.ஆர். இயக்கத்தில் அவரே நாயகனாக நடிக்கும் உலகம் சுற்றும் வாலிபன் படம் உருவானது.
கள் எழுதியுள்ளார். ஆனால் இடைப்பட்ட காலத்தில் ஒரு முறை எம்.ஜி.ஆருக்கு வாலியின் மேல் ஒரு சின்ன மன வருத்தம் ஏற்பட்டதாம்.
நேராக சத்யா ஸ்டுடியோ சென்ற வாலி, எம்.ஜி.ஆரை சந்தித்து உரிமையாக, “உலகம் சுற்று் வாலிபன் படத்தில் பாடல் எழுத எனக்கு வாய்ப்பு கொடுங்கள்” என்று கேட்டார்.
அதற்கு எம்.ஜி.ஆர்., உறுதியாகச் சொல்லாமல், “ஆகட்டும் பார்க்கலாம்” என்றார், பட்டும் படாமல்.
உடனே வாலி, “ இந்தப் படத்தில் நான் பாடல் எழுதவில்லை என்றால் மக்கள் ஏற்க மாட்டார்கள்” என்றார்.
குழப்பமாக எம்.ஜி.ஆர்., “ஏன்” என்று கேட்க.. அதற்கு வாலி, “படத்தின் பெயர், உலகம் சுற்றும் வாலிபன். இதில் ‘வாலிபன்’ என்பதில் என்னுடைய பெயரை நீக்கிவிட்டால், ‘உலகம் சுற்றும் பன்’ என்று ஆகிவிடுமே.. இதை எப்படி மக்கள் ஏற்பார்கள்?” என்று முகத்தை சீரிஸாக வைத்துக்கொண்டு வாலி கேட்டார்.
வாலி கூறியதைக் கேட்ட எம்.ஜி.ஆர். ரசித்துச் சிரித்தார். அதோடு, “சரி, நீயும் பாட்டு எழுது” என அனுமதித்தார்.
பாடல் எழுத பாட்டுத்திறமை மட்டும் போதாது.. பேச்சுத் திறனும் வேண்டும் என்பதற்கு வாலி ஓர் உதாரணம்.
The post எம்.ஜி.ஆருக்கே ‘பன்’ கொடுத்த வாலி! appeared first on Touring Talkies.
]]>The post கலைஞர் எடுத்துக் கொடுத்த பாடல் வரி! appeared first on Touring Talkies.
]]>“மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்”, “உதயசூரியனின் பார்வையிலே” போன்ற, திரைப்படம் + அரசியல் இணைந்த வரிகளை அளித்தவர் வாலிதான்.
இந்த நிலையில் முரசொலி மாறன் தயாரிக்க எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா நடித்த “எங்கள் தங்கம்” திரைப்படம் 1970 ஆம் ஆண்டு உருவாகியது.
இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் கவிஞர் வாலி எழுதினார். “தங்கப்பதக்கத்தின் மேலே”, “நான் செத்துப் பொழச்சவன்டா” போன்ற பிரபலமான பாடல்கள் இவர் எழுதியவைதான்.
இப்படி பாடல்களை உருவாக்கிக்கொண்டு இருந்தார்கள் இசை அமைப்பாளர் எம்.எஸ்.வி.யும், வாலியும்.
புதிய பாடல் ஒன்றுக்கு மெட்டு ஏற்றபடி,
“நான் அளவோடு ரசிப்பவன்” என்று முதல் வரியை வாலி எழுதிவிட்டார். ஆனால் அடுத்தவரி வரி அந்த மெட்டுக்கு ஏற்ற மாதிரி அமையவில்லை.
பிரசவ வேதனை போல தவித்தார் வாலி.
அப்போது கலைஞர் அங்கே வந்தார், அவரிடம் வாலி விசயத்தைச் சொன்னார்.
முதல்வரி, “நான் அளவோடு ரசிப்பவன்” என்பதை அறிந்த கலைஞர், உடனே, “எதையும் அளவின்றி கொடுப்பவன்” என்றார்.. மெட்டுக்கு ஏற்றமாதிரி.
வாலிக்கும், எம்.எஸ்.வி.க்கும் பெரும் மகிழ்ச்சி.
பிறகு இந்த பாடலைக் கேட்ட எம்.ஜி.ஆர்., “பாடல் அருமை. அதிலும் “அளவின்றி கொடுப்பவன்” என்ற வரி மிகச்சிறப்பு” என்றார்.
உடனே வாலி, “இந்த பாராட்டை கலைஞருக்கு கொடுங்கள். அவர்தான் இந்த வரியை எழுதியது எழுதினார்” என்றார்.
பிறரின் திறமைக்கான அங்கீகரத்தை தான் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்ற வாலியின் பெருந்தன்மை எத்தனை பேருக்கு வரும்?
The post கலைஞர் எடுத்துக் கொடுத்த பாடல் வரி! appeared first on Touring Talkies.
]]>The post கமல் பாடிய முதல் பாடல் எது தெரியுமா..? appeared first on Touring Talkies.
]]>உலக நாயகன் கமல் பல வேடங்களில் நடித்து நிறைய வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். களத்தூர் கண்ணமா தொடங்கி விக்ரம் படம் அரை இன்னும் ஓயாமல் ஓடி கொண்டிருக்கும் மகா நடிகர் கமல்
மறக்க முடியாத படங்கள் வரிசையில் வாழ்வே மாயம், சிவப்பு ரோஜா, இன்னும் நீங்காத இடம் பிடித்தவை. நடிப்பில் மட்டும் அல்லாது பாடல் பாடுவதிலும் கட்டிகாரர் தன் முதல் முறையாக கமல் இளையராஜா இசையில் பன்னீர் புஷ்பங்களே எனத் தொடங்கும் இப்பாடலை பாடினார்.
அதன் பிறகு கமலின் நடிப்பில் வெளியான படம் சிவப்பு ரோஜாக்கள். மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம்.வித்தியாசமான கதைக்கலம் இப்படத்திலும் இளையராஜா இசையில் கமல் நினைவோ ஒரு பறவை எனத் தொடங்கும் கவிஞர் வாலியின் வரிகளில் கமல் பாடியிருந்தார். அதன் பிறகு வந்த அவரது படங்களில் ஒரு பாடலாவது பாடி விடுவர் கமல். சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் பத்தல பத்தல …பாடல் குறிப்பிடத்தக்கது.
The post கமல் பாடிய முதல் பாடல் எது தெரியுமா..? appeared first on Touring Talkies.
]]>The post முருகதாஸை அதிரவைத்த கவிஞர்! appeared first on Touring Talkies.
]]>மறு நாள் வரச் சொன்ன வாலி அதன்படியே ஒரு பாடலை எழுதிக் கொடுத்து இருக்கிறார். அதில் “வத்திக்குச்சி பத்திக்காதுடா, யாரும் வந்து உரசுற வரையில” என முதல் வரி இருக்கவே, முருகதாஸ் அதிர்ந்துவிட்டார்.
“ சார், படம் முழுக்க அஜித்குமார் வாயில் ஒரு குச்சியை வைத்துக்கொண்டே இருப்பார், இது எப்படி உங்களுக்கு தெரிந்தது” என ஆச்சரியமாக கேட்டிருக்கிறார்.
“ சார், படம் முழுக்க அஜித்குமார் வாயில் ஒரு குச்சியை வைத்துக்கொண்டே இருப்பார், இது எப்படி உங்களுக்கு தெரிந்தது” என ஆச்சரியமாக கேட்டிருக்கிறார்.
வாலிக்கும் இது ஆச்சரியமாகத்தான் இருந்ததாம்.
The post முருகதாஸை அதிரவைத்த கவிஞர்! appeared first on Touring Talkies.
]]>The post பாடகர் டி.எம்.எஸ்.தான் வாய்ப்பு பெற காரணம்: உருகிய கவிஞர் appeared first on Touring Talkies.
]]>அந்த சம்பவத்தை வாலியின் வாயிலாகவே கேட்கலாம்.
“திரைப்படங்களில் பாடல்கள் எழுதவேண்டும் என்கிற ஆசை எனக்கு இருந்தது. எனது சொந்த ஊர் ஸ்ரீரங்கம். அப்போது எல்லாம் இப்போது இருக்கும் நவீன வசதிகள் இல்லை.
“டி.எம்.எஸ் இல்லை என்றால் எனக்கு திரை வாய்ப்பே கிடைத்திருக்காது” என மறைந்த கவிஞர் வாலி நெகிழ்ந்து கூறியதை சமீபத்தில் விவரித்தார் அவருடன் பயணித்த திரைப்புள்ளி.
அந்த சம்பவத்தை வாலியின் வாயிலாகவே கேட்கலாம்.
“திரைப்படங்களில் பாடல்கள் எழுதவேண்டும் என்கிற ஆசை எனக்கு இருந்தது. எனது சொந்த ஊர் ஸ்ரீரங்கம். அப்போது எல்லாம் இப்போது இருக்கும் நவீன வசதிகள் இல்லை.
ஆகவே பாடகர் டி.எஸ்.எஸ்.ஸூக்கு, என்னைப்பற்றி குறிப்பு எழுதி கூடவே ஒரு பாடலையும் எழுதி கடிதம் போட்டேன். உடனே அவரிடமிருந்து “உனக்கு நல்ல திறமை இருக்கிறது.. சென்னைக்கு வா..” என்று பதில் கடிதம் போட்டார். அப்போது அவர் வளரத் தொடங்கி இருந்த காலம். நானும் நடிகர் நாகேஷோடு ஒரே அறையில் தங்கியிருந்து, பல சிரமங்களை அனுபவித்து வாய்ப்பு தேடி முன்னேறினோம்” என்று நெகிழ்ந்து சொன்னாராம் வாலி
The post பாடகர் டி.எம்.எஸ்.தான் வாய்ப்பு பெற காரணம்: உருகிய கவிஞர் appeared first on Touring Talkies.
]]>