Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
வனிதா விஜயகுமார் – Touring Talkies https://touringtalkies.co Sat, 24 Jul 2021 08:18:09 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png வனிதா விஜயகுமார் – Touring Talkies https://touringtalkies.co 32 32 ரம்யா கிருஷ்ணனை மறைமுகமாகக் கண்டித்த வனிதா விஜயகுமார் https://touringtalkies.co/vanitha-vijayakumar-imitates-ramya-krishnan-on-big-boss-jodigal-programme/ Sat, 24 Jul 2021 08:17:11 +0000 https://touringtalkies.co/?p=16472 சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக் பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியிலிருந்து விலகினார் நடிகை வனிதா விஜயகுமார். அதைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் தன்னை அவமானப்படுத்தியதாகவும், மோசமாக நடத்தியதாகவும் பெயர் குறிப்பிடாமல் நீண்ட அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். வனிதா விஜயகுமாரின் விலகலுக்குக் காரணம் அந்த நிகழ்ச்சியில் நடுவராக இருந்த நடிகை ரம்யா கிருஷ்ணன்தான் காரணம் என்று  பலரும் கருத்து தெரிவித்து வந்தார்கள். தற்போது அந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரம்யா கிருஷ்ணன் கடுமையாக […]

The post ரம்யா கிருஷ்ணனை மறைமுகமாகக் கண்டித்த வனிதா விஜயகுமார் appeared first on Touring Talkies.

]]>
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக் பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியிலிருந்து விலகினார் நடிகை வனிதா விஜயகுமார். அதைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் தன்னை அவமானப்படுத்தியதாகவும், மோசமாக நடத்தியதாகவும் பெயர் குறிப்பிடாமல் நீண்ட அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.

வனிதா விஜயகுமாரின் விலகலுக்குக் காரணம் அந்த நிகழ்ச்சியில் நடுவராக இருந்த நடிகை ரம்யா கிருஷ்ணன்தான் காரணம் என்று  பலரும் கருத்து தெரிவித்து வந்தார்கள்.

தற்போது அந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரம்யா கிருஷ்ணன் கடுமையாக நடந்து கொண்டதைத் தொடர்ந்து, வனிதா விஜயகுமார் வெளியேறுவது போன்று அந்த வீடியோ அமைந்துள்ளது. இதனை வைத்து ரம்யா கிருஷ்ணனால்தான் வனிதா விஜயகுமார் வெளியேறியிருப்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக தனது யூ டியூப் பக்கத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு நேரலையில் பதிலளித்தார் நடிகை வனிதா விஜயகுமார்.

அதில், “குறை சொல்வதற்கும், புகார் சொல்வதற்கும் இதில் ஒன்றுமே இல்லை. எனக்குச் சொல்லப்பட்ட நிகழ்ச்சியின் வரைமுறைகள் வேறு. அங்கு நடக்கும் நிகழ்ச்சி வேறாக இருந்தது. நடனம் ஆடத் தெரிந்தவர்கள் ஒரு நிகழ்ச்சிக்குப் போவது வேறு.. மற்றவர்கள் போவது வேறு.

ஆனால், இந்த நிகழ்ச்சி பிக் பாஸ் ஜோடிகள் சம்பந்தமான போட்டிக் களம். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கெடுத்தவர்கள் மட்டுமே, இதில் பங்கு பெற முடியும். அதனால்தான் என்னைத் தொடர்பு கொண்டார்கள்.

அப்போது நான் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர். ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சிக்கு நடுவராக வேறு இருந்துள்ளேன். ஆகையால், மீண்டும் போட்டியாளராக செல்ல நான் விரும்பவில்லை. “இது நடன நிகழ்ச்சி அல்ல. அனைவருக்குமே மார்க் தனித்தனியாக இருக்கும். இது பொழுதுபோக்கு நிகழ்ச்சி மட்டுமே. போட்டியாளர் வெளியேற்றம்.. விமர்சனம் எல்லாம் இருக்காது. நீங்கள் இருப்பதை மக்கள் விரும்புவார்கள், ஆகையால் பங்கெடுக்க வேண்டும்…” என்று விஜய் டிவியினர் என்னை வற்புறுத்தினார்கள். அதனால்தான் அதில் கலந்து கொள்ள நான் சம்மதித்தேன்.

நாம்தான் இப்போது சீரியல்களில் நடிக்கவில்லையே என்பதால், ஏதேனும் ஒரு நிகழ்ச்சியின் மூலம் மக்களைச் சந்திக்கலாமே என்று நினைத்துதான் இதற்கு ஒப்புக் கொண்டேன்.

உண்மையில், அந்த நிகழ்ச்சியை நடுவர்கள் பார்த்தவிதம் கொஞ்சம் சீரியஸாக இருந்தது. பெரிய நடன  நிகழ்ச்சி மாதிரியும், அதில் நாங்கள் போட்டியிட்டு ஜெயித்து கப்பைத் தூக்குவதற்குப் போன மாதிரியும் இருந்தது. ஆனால், அது உண்மையில்லை.

பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் வெற்றியாளராக வரவேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லை. அந்த நிகழ்ச்சியில் நடுவர்கள் நடந்துகொண்ட விதத்தில் எனக்கு உடன்பாடில்லை.

மற்றொருவருடன் ஒப்பிட வேண்டாம் என்று நான் ஏன் சொன்னேன் என்றால், அனைவருமே சிறந்த போட்டியாளர்கள் என்னும்போது ஒப்பிடலாம். ஒரு நடிகர் படத்தில் நடிக்கும்போது, அந்தப் படத்தைப் பற்றி மட்டுமே பேச முடியும். விஜய்யிடம் போய் அஜித் நடித்திருப்பதால் பிரமாதமாக நடித்திருப்பார் என்று சொல்வது சரியா?. அது சரியான முறையல்ல என்று நினைக்கிறேன்.

அனைவருமே அவர்களுடைய நிலையில் சிறந்த ஸ்டார்கள்தான். அனைவருக்குமே ரசிகர்கள் இருக்கிறார்கள். நான் நானாக இருப்பதுதான் என் ரசிகர்களுக்குப் பிடித்திருக்கிறது.

ஷாரிக் பல்டி அடித்தான் என்பதற்காக சுரேஷ் சக்கரவர்த்தியும் பல்டி அடிக்க முடியுமா என்பதுதான் எனது கேள்வி. சுரேஷ் சக்கரவர்த்தி சாருக்கு பயங்கர கை வலி. அதையும் மீறி அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதைப் பற்றி யாருமே பேசவில்லை.

அவர் ஒரு ஸ்டெப் தவறாக ஆடியதால், எனக்குக் கொஞ்சம் தடுமாற்றம் ஏற்பட்டது. தவறு நடப்பது இயல்புதான். அதை எப்படிச் சொல்கிறோம் என்பது மிகவும் முக்கியம்.

எலிமினேஷனும் இல்லை என்பதால், கொஞ்சம் பாராட்டிவிட்டு பின்பு இப்படிச் செய்திருக்கலாம் என்று சொல்லலாம்.

ஆனால், ரொம்பவே ஊக்கம் இல்லாத வகையில் பேசியதால் நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். சக நடிகர்களுக்கு மத்தியில் ஒருவரை மட்டும் குறிப்பிட்டுப் பேசுவது முறையல்ல.

நான், அவர், சுரேஷ் சக்கரவர்த்தி அனைவருமே நடிகர்கள்தான். அவர் வேண்டுமானால் 200 படங்கள் நடித்திருக்கலாம். அது எனக்குத் தேவையில்லாதது. ஆனால், சக நடிகர்களுக்கு மரியாதை முக்கியம் என்பதையே விரும்பினேன்.

அவர் பேசியதைப் பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. ஆகையால்தான் அவர் பெயரைக்கூட குறிப்பிடாமல் பேசுகிறேன். எனக்கு அதில் ஈடுபாடு இல்லை என்பதால் அந்த நிகழ்ச்சியிலிருந்து விலகிவிட்டேன்…” என்று சொல்லியிருக்கிறார் வனிதா விஜயகுமார்.

The post ரம்யா கிருஷ்ணனை மறைமுகமாகக் கண்டித்த வனிதா விஜயகுமார் appeared first on Touring Talkies.

]]>
வனிதா-பவர் ஸ்டார் சீனிவாசனின் கல்யாண புகைப்படம் செய்த கலாட்டா..! https://touringtalkies.co/vanitha-power-star-srinivasans-wedding-photo-gala/ Thu, 22 Jul 2021 09:34:07 +0000 https://touringtalkies.co/?p=16414 நடிகை வனிதா விஜயகுமார் தன் பெயரை மீண்டும், மீண்டும் லைம் லைட்டிலேயே வைத்திருக்கிறார். சமீபத்தில்தான் விஜய் டிவியின் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பத்ரகாளி வேடமிட்டு ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார். அதோடு அந்த நிகழ்ச்சியில் இருந்து தான் பாதியிலேயே வெளியேறுவதாக ஒரு செய்தியை வெளியிட்டார். இந்தச் செய்தியின் முடிவில் அவருக்கும், அந்த நிகழ்ச்சியில் நடுவராக அமர்ந்திருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலால்தான் இது நிகழ்ந்ததாக மறைமுகமாகச் சொல்லியிருந்தார். இதை உறுதிப்படுத்தும்வகையில் அந்த டிவி வெளியிட்ட அந்த […]

The post வனிதா-பவர் ஸ்டார் சீனிவாசனின் கல்யாண புகைப்படம் செய்த கலாட்டா..! appeared first on Touring Talkies.

]]>
நடிகை வனிதா விஜயகுமார் தன் பெயரை மீண்டும், மீண்டும் லைம் லைட்டிலேயே வைத்திருக்கிறார்.

சமீபத்தில்தான் விஜய் டிவியின் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பத்ரகாளி வேடமிட்டு ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார். அதோடு அந்த நிகழ்ச்சியில் இருந்து தான் பாதியிலேயே வெளியேறுவதாக ஒரு செய்தியை வெளியிட்டார்.

இந்தச் செய்தியின் முடிவில் அவருக்கும், அந்த நிகழ்ச்சியில் நடுவராக அமர்ந்திருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலால்தான் இது நிகழ்ந்ததாக மறைமுகமாகச் சொல்லியிருந்தார். இதை உறுதிப்படுத்தும்வகையில் அந்த டிவி வெளியிட்ட அந்த நிகழ்ச்சியின் புரமோவும் வடிவமைக்கப்பட்டிருந்தது. இது அந்த நிகழ்ச்சியின் டிஆர்பிக்காக செய்யப்பட்ட செட்டப் என்கிறது டிவி மீடியா உலகம்.

அதேபோல் நேற்றைக்கு மேலும் ஒரு செய்தி புகைப்படத்துடன் வெளியானது. வனிதாவுக்கு 4-வது முறையாக திருமணமாகப் போவதாகவும், அவருடைய வருங்கால கணவரின் பெயரின் முதல் எழுத்து S என்ற ஆங்கில எழுத்தில் துவங்கும் என்று ஒரு ஜோதிடர் கூறியதாக வனிதாவே ஒரு வீடியோ செய்தியில் கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து யார் அந்த 4-வது இளிச்சவாய கணவர் என்று அனைவரும் தேடத் துவங்க.. 2 மணி நேரம் கழித்து ஒரு புகைப்படத்தை தனது டிவீட்டர் பக்கத்தில் வெளியிட்டார் வனிதா. அந்தப் புகைப்படத்தில் வனிதாவும், பவர் ஸ்டார் சீனிவாசனும் திருமணக் கோலத்தில் நின்றிருக்கிறார்கள். இதே புகைப்படத்தை பவர் ஸ்டார் சீனிவாசனும் தனது டிவீட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இந்தப் புகைப்படம் வந்ததும் ஒருவேளை இது நிஜமோ என்றெண்ணி ஒரு கணம் திகைத்துப் போய்விட்டார்கள் இணையத்தளவாசிகள். பின்பு கொஞ்சம் சுதாரித்து இது ஒரு சினிமா விளம்பரத்துக்காக செய்யப்படுகிறது என்பதை உணர்ந்து கொஞ்சம் மூச்சுவிட்டார்கள்.

வனிதா தற்போது நடித்து வரும் ஒரு திரைப்படத்தின் பிரமோஷனுக்காகத்தான் இது மாதிரி டிராமா போடுகிறார்கள் என்பதுதான் உண்மை. என்ன இருந்தாலும் இது உண்மையாக இருக்காது என்பதை பத்திரிகையாளர்கள் ஏற்கெனவே ஊகித்துவிட்டார்கள். ஏனெனில் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு ஏற்கெனவே 3 மனைவிகள் இருக்கிறார்கள்.

பின்னிர மாட்டாங்க..?

The post வனிதா-பவர் ஸ்டார் சீனிவாசனின் கல்யாண புகைப்படம் செய்த கலாட்டா..! appeared first on Touring Talkies.

]]>
‘பிக்பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியில் இருந்து விலகினார் வனிதா விஜயகுமார் https://touringtalkies.co/vanitha-vijayakumar-withdraws-from-big-boss-jodigal-show/ Sat, 03 Jul 2021 04:53:37 +0000 https://touringtalkies.co/?p=15946 ‘பிக் பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியிலிருந்து அதிரடியாக வெளியேறியிருக்கிறார் நடிகை வனிதா விஜயகுமார். சமீபகாலமாக மீடியா உலகத்தில் பரபரப்பு நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை வனிதா விஜயகுமார் இன்றைக்கு ஒரு பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார். தான் அவமானப்படுத்தப்பட்டதாலும், மோசமாக நடத்தப்பட்டதாலும் விஜய் தொலைக்காட்சி நடத்தும் ‘பிக்பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியில் இருந்து தான் வெளியேறிவிட்டதாக அறிவித்திருக்கிறார் வனிதா விஜயகுமார். விஜய் தொலைக்காட்சியில் தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வருகிறார் வனிதா விஜயகுமார். ‘பிக் பாஸ் சீசன்-3’, ‘குக் வித் கோமாளி […]

The post ‘பிக்பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியில் இருந்து விலகினார் வனிதா விஜயகுமார் appeared first on Touring Talkies.

]]>
‘பிக் பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியிலிருந்து அதிரடியாக வெளியேறியிருக்கிறார் நடிகை வனிதா விஜயகுமார்.

சமீபகாலமாக மீடியா உலகத்தில் பரபரப்பு நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை வனிதா விஜயகுமார் இன்றைக்கு ஒரு பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார்.

தான் அவமானப்படுத்தப்பட்டதாலும், மோசமாக நடத்தப்பட்டதாலும் விஜய் தொலைக்காட்சி நடத்தும் பிக்பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியில் இருந்து தான் வெளியேறிவிட்டதாக அறிவித்திருக்கிறார் வனிதா விஜயகுமார்.

விஜய் தொலைக்காட்சியில் தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வருகிறார் வனிதா விஜயகுமார். பிக் பாஸ் சீசன்-3’, ‘குக் வித் கோமாளி சீசன்-1’, ‘கலக்கப் போவது யாரு’ ஆகிய நிகழ்ச்சிகளில் வனிதா விஜயகுமார் பங்கெடுத்துள்ளார்.

தற்போது இதே தொலைக்காட்சி நடத்தி வரும் ‘பிக் பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியிலும் வனிதா விஜயகுமார் கலந்து கொண்டிருக்கிறார்.

பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆண், பெண் போட்டியாளர்களை ஜோடியாக்கி அவர்களிடையே “யார் சிறந்த ஜோடி..?” என்று தேர்வு செய்யும்விதமாக இந்த நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி தற்போதுதான் ஞாயிறுதோறும் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் சுரேஷூக்கு ஜோடியாக வனிதா விஜயகுமார் ஆடி வருகிறார். சமீபத்தில் ‘காளி’ வேடமிட்டு ஆடியதற்கு மிகப் பெரிய பாராட்டுக்களைப் பெற்றார் வனிதா விஜயகுமார்.

ஆனால், தற்போது அந்த ‘பிக் பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியிலிருந்து தான் விலகுவதாக வனிதா விஜயகுமார் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வனிதா விஜயகுமார் இன்றைக்கு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,  “பிக்பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியில் எனது ‘காளி’ அவதாரத்துக்குப் பாராட்டுகளுக்கும், ஆதரவும் தந்த ஊடகங்கள், மற்றும் என் ரசிகர்கள், என் நலம் விரும்பிகளுக்கும் இந்த நேரத்தில் நன்றி கூறிக் கொள்கிறேன்.

‘பிக்பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியை விட்டு நான் வெளிநடப்பு செய்யும் முன், நான் உருவாக்கிய தாக்கத்தை நீங்கள் பார்க்க வேண்டும் என்று விரும்பினேன்.

ஒருவர் கொடுமைப்படுத்துவதை, துன்புறுத்துவதை நான் என்றுமே ஏற்க மாட்டேன். அது யாராக இருந்தாலும், என் குடும்பத்தினராக இருந்தாலும் சரி. இது இந்த உலகுக்கே தெரியும்.

‘பிக் பாஸ்-3’ நிகழ்ச்சியிலிருந்தே விஜய் டிவி எனது குடும்பமாகிவிட்டது. ‘குக் வித் கோமாளி’, ‘கலக்கப் போவது யாரு..’ என்று மேலும் அவர்களது பல நிகழ்ச்சிகளில் சிறப்பு பங்கேற்பாளர் என்று முறையில் அவர்களோடு நான் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.

எங்களுக்குள் பரஸ்பர மரியாதை உண்டு. அது எப்போதுமே நீடிக்கும். ஆனால் பணி செய்யும் இடத்தில் தொழில் முறை அல்லாது, நெறிமுறையற்ற நடத்தையை ஏற்கவே முடியாது.

வேலை செய்யும் இடத்தில் பெண்களை, ஆண்கள் மட்டும் மோசமாக நடத்துவதில்லை. பெண்களும் அதைவிட மோசமாக நடத்துகின்றனர். பொறாமை கொள்கின்றனர். நமக்கு வரும் வாய்ப்புகளை நாசமாக்க முயற்சிக்கின்றனர்.

இங்கே, இப்போது ஒரு மோசமான நபரால் நான் துன்புறுத்தப்பட்டேன். அவமானப்படுத்தப்பட்டேன். மோசமாக நடத்தப்பட்டேன். அவரது திமிர் காரணமாக… அவரால் எனது தொழில் வளர்ச்சியை ஏற்க முடியவில்லை என்பதே இதற்குக் காரணம்.

உங்களைவிட எல்லா விதத்திலும் மூத்த நபர், கடுமையாக உழைத்து முன்னேறியவர். முன்னேறக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் இளைஞர்களைக் கீழ்மையாகப் பார்ப்பதும், அவர்களது ஊக்கத்தைக் கெடுத்து அவமானப்படுத்துவதையும் பார்க்க வேதனையாக இருக்கிறது.

குறிப்பாக நீண்ட போராட்டத்துக்குப் பின், குடும்பத்தினரின், கணவரின் ஆதரவு இல்லாமல் சாதிக்கும், வெற்றி காணும், 3 குழந்தைகளின் தாயை இப்படி நடத்துகிறார். பெண்கள், சக பெண்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும். மாறாக அவர்களின் வாழ்க்கையை மோசமாக மாற்றக் கூடாது.

பிக்பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியிலிருந்து விடை பெறுவதில் எனக்குப் பெரும் வருத்தம்தான். மற்ற அத்தனை போட்டியாளர்களுக்கும் எனது வாழ்த்துகள்.

வெற்றி மட்டுமே முக்கியமல்ல. போட்டியில் பங்கேற்று, சவாலை ஏற்பதே மிக முக்கியம்.

சுரேஷ் சக்ரவர்த்தி, என்னை மன்னித்துவிடுங்கள். எனக்கு எது சரியோ அதை நான் செய்தாக வேண்டும். என்னால், நீங்களும் இந்த நிகழ்ச்சியை விட்டு விலக வேண்டியதாகிவிட்டது. ஆனால், எனது முடிவுக்கு ஆதரவு கொடுத்த நீங்கள்தான் எனது உண்மையான நண்பர்…” – இவ்வாறு அந்த அறிக்கையில் வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

ஒரு பெண்தான் தன்னை அவமானப்படுத்திவிட்டார் என்று வனிதா விஜயகுமார் சொல்வதையும், முன்னேறுபவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்று அவர் சொல்வதையும் வைத்துப் பார்த்தால் வனிதா விஜயகுமார் சண்டையிட்டது அந்த நிகழ்ச்சியின் நடுவராக இருக்கும் ரம்யா கிருஷ்ணனுடன் இருக்கலாம் என்று மீடியா உலகம் கருதுகிறது.

அதே சமயம் இது ஒரு செட்டப்பான நாடகம் என்றும் சிலர் சொல்கிறார்கள். விஜய் டிவியும், வனிதா விஜயகுமாரும் சேர்ந்து நிகழ்ச்சியின் டி.ஆர்.பி.யை அதிகப்படுத்துவதற்காக இந்த டிராமாவை ஆடுகிறார்கள் என்று சொல்கிறார்கள்.

விஜய் டிவி தரப்பில் இது குறித்து விசாரித்தபோது “எலிமினேட் செக்ஷனில் சுரேஷ் சக்கரவர்த்தி-வனிதா விஜயகுமார் ஜோடி தோல்வியடைந்து போட்டியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார்கள். தான் நீக்கப்பட்டதைத் தாங்க முடியாமல்தான் வனிதா விஜயகுமார் இப்படி பேசுகிறார்…” என்கிறார்கள்.

ஆனாலும், இந்த வார ஞாயிற்றுக்கிழமை எபிசோடுக்கு டி.ஆர்.பி.யைக் கூட்டுவதற்காக வனிதா மற்றும் விஜய் டிவி இரு தரப்பினரின் சதி வேலைதான் இது என்று டிவி வட்டாரங்கள் அடித்துச் சொல்கின்றன…!

The post ‘பிக்பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியில் இருந்து விலகினார் வனிதா விஜயகுமார் appeared first on Touring Talkies.

]]>