The post இயக்குநர் கவிதா இயக்கியிருக்கும் திரில்லர் படம் ‘ஆதாரம்’..! appeared first on Touring Talkies.
]]>இப்படத்தில் புதுமுக நடிகர் அஜித் விக்னேஷ் நாயகனாக நடிக்க, பூஜா நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ராதாரவி, Y.G.மகேந்திரன், கதிரவன் பாலு, அட்ரஸ் கார்த்திக் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் அதிகம் சொல்லப்படாத ஹெய்ஸ்ட் ஜானரில், காதல் கமர்ஷியல் அம்சங்கள் கலந்து, அனைவரையும் கவரும் வண்ணம் இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தின் இறுதிகட்ட வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. படத்தின் டிரெய்லர், இசை வெளியீடு மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
இப்படத்தின் டீசரை நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் P.S.மித்ரன், ஒளிப்பதிவாளர் P.G.முத்தையா மற்றும் இயக்குநர் S.R.பிரபாகரன் ஆகியோர் வெளியிட்டனர். திரை பிரபலங்கள் வெளியிட்ட இப்படத்தின் டீசர், சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இயக்குநர் சீனு ராமசாமி, இந்த டீசரை பகிர்ந்து “கவனம் ஈர்க்கும் டீசர்… வாழ்த்துக்கள்” என பாராட்டியுள்ளார்.
The post இயக்குநர் கவிதா இயக்கியிருக்கும் திரில்லர் படம் ‘ஆதாரம்’..! appeared first on Touring Talkies.
]]>The post ஜெயலலிதாவுக்கு டெஸ்ட் வைத்த ராதாரவி! appeared first on Touring Talkies.
]]>அவர் சட்டம் படித்தவர். அதோடு, பல வகை புத்தகங்களைப் படிப்பவர்.
இது குறித்து அவர் சமீபத்தில் புது யுகம் தொலைக்காட்சிக்காக கவிஞரும், ஊடகவியலாளருமான துரை பாரதிக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், “அ.தி.மு.க. சார்பாக சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போது பல விசயங்கள் குறித்து சட்டமன்றத்தில் பேசுவேன். அப்போது ஏற்கெனவே நான் படித்த புத்தகங்களில் இருந்து பல விசயங்களை கோட் செய்வேன். அவை ஆங்கிலத்தில் இருந்தால் அவற்றின் தமிழாக்கத்தையும் சொல்வேன்.
அடுத்த நிமிடமே, முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்து ஒரு சிட் வரும். அதில், ‘எந்தெந்த புத்தகங்களில் இருந்து கோட் செய்தீர்கள். அவற்றை தர முடியுமா.. படித்துவிட்டு தருகிறேன்’ என்று இருக்கும்.
ஜெயலலிதாவுக்கு குறிப்பிட்ட புத்தகங்களை அளிப்பேன். ஒரு வாரத்தில் திருப்பி அளித்துவிடுவார்.
ஒரு முறை எனக்கு சந்தேகம்.. ‘உண்மையிலேயே படிக்கிறாரா.. சும்மா வாங்கி வைத்து திருப்பி அனுப்புகிறாரா’ என்று!
திரும்பி வந்த புத்தகங்களை புரட்டினேன்.. முக்கியமான வார்த்தைகள்.. பக்கங்களில் தனது பச்சை இங்க் பேனாவால் குறிப்பிட்டு இருந்தார் ஜெயலலிதா.
‘ச்சே.. ஒரு பெரிய தலைவரை இப்படி சந்தேகப்பட்டோமே’ என வருந்தினேன்” என்று கூறியிருக்கிறார் ராதாரவி.
The post ஜெயலலிதாவுக்கு டெஸ்ட் வைத்த ராதாரவி! appeared first on Touring Talkies.
]]>The post எம்.ஆர்.ராதா படிக்கலே! ராதா ரவி ஓப்பன் டாக்! appeared first on Touring Talkies.
]]>மேடைப் பேச்சுக்களின் போதே, வெளிப்படையாக பேசுவார். யாரைப் பற்றியும் கவலைப்படாமல், தான் நினைத்ததை வெளிப்படுத்தும் தைரியம் உள்ளவர் ராதாரவி.
இதனால் பல முறை சர்ச்சை ஏற்பட்டாலும் அவர் கவலைப்பட்டது இல்லை.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் ஒரு தொலைக்காட்சியில் தான் படித்த புத்தகங்கள் பற்றி பகிர்ந்து கொண்டார் ராதாரவி.
அப்போது அவர், “வாழ்க்கை அனுபவங்கள் பல விசயங்களைக் கற்றுத் தரும் என்பது உண்மைதான். அதே நேரம் எல்லா அனுபவங்களையும் நாம் பெற்றுவிட முடியாது. அந்த வாழ்க்கைப் பாடங்களை நமக்குக் கற்றுத் தருவது புத்தகங்கள்தான்.
மேக அப் பற்றி பல புத்தகங்களை நான் படித்து இருக்கிறேன். அவை மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன.
என் அப்பா எம்.ஆர்.ராதாவும் அது போன்ற புத்தகங்களை படித்திருந்தால் இன்னும் சிறப்பாக மேக் அப் போட்டு அசத்தி இருப்பார்” என்றார்.
உடனே செய்தியாளர், “என்ன இப்படிச் சொல்றீங்க.. அவரது மேக் அப்.. நடிப்புக்கு ஈடாகுமா” என்றார் பதைபைத்து.
அதற்கு ராதாரவி அசால்ட்டாக, “ இப்படித்தான் சொல்வீங்கன்னு தெரியும்.. ஆனா நான் சொன்னதுதான் உண்மை. மேக் அப் குறித்த புத்தகங்களை அவர் படித்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்” என்றார் மீண்டும்.
ராதாரவி எப்போதுமே ஓப்பன் டாக்தான்.
The post எம்.ஆர்.ராதா படிக்கலே! ராதா ரவி ஓப்பன் டாக்! appeared first on Touring Talkies.
]]>The post ஓப்பனை.. ஒங்கப்பனை: கலைஞர் வார்த்தையில் நெகிழ்ந்த ராதாரவி! appeared first on Touring Talkies.
]]>அதே நேரம், கதாநாயகனாகவும் சில படங்களில் நடித்து உள்ளார்.
அதில் ஒன்று, தைமாசம் பூவாசம். இதை அவரே தயாரித்தார்.
அந்தப் படத்தில், வயது முதிர்ந்த வாத்தியாராக நடித்தார். முடியை மழித்து பெரிய மீசை வைத்து அடையாளமே தெரியாமல் மாறி இருப்பார் அந்தப் படத்தில். ஏதோடு வழக்கம்போல அட்டகாசமான நடிப்பு.
இப்படத்தின் சிறப்பு காட்சியை, நடிகர் சங்கத்தில் அப்போது இருந்த திரையரங்கில் முக்கிய பிரமுகர்களுக்கு திரையிட்டார். அதில் தி.மு.க. தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதிக்கும் அழைப்பு விடுக்க.. அவரும் கலந்துகொண்டார்.
படம் பார்த்து முடித்தவுடன் வெளியே வந்தார் கலைஞர். ராதாரவியும், படத்தில் மேக் அப் மேனாக பணிபுந்த கஜபதியும் நின்று கொண்டு இருந்தார்கள்.
கஜபதியைப் பார்த்த கலைஞர், “ஒப்பனை சிறப்பு” என பாராட்டினார். அருகில் இருந்த ராதாரவிக்கு, “எவ்வளவு சிரமப்பட்டு நடித்திருக்கிறோம்.. நம்மை பாராட்ட…” என்று நினைக்கும் அந்த விநாடியே, அவரைப் பார்த்து, “ஒங்கப்பனைவிட சிறப்பு” என சொல்லிவிட்டுச் சென்றார் கலைஞர்.
இந்த சம்பவத்தை சமீபத்தில் தெரிவித்த ராதாரவி, “கஜபதியை பாராட்டிய அதே விநாடி என்னையும் பாராட்டினார். அதுவும் கண நேரத்தில், ‘ஒப்பனை.. ஒங்கப்பனை..’ என அவருக்கு எப்படித்தான் தோன்றியதோ!” என பழைய சம்பவத்தை நெகிழ்ந்து கூறினார்.
அவர்தானே கலைஞர்!
The post ஓப்பனை.. ஒங்கப்பனை: கலைஞர் வார்த்தையில் நெகிழ்ந்த ராதாரவி! appeared first on Touring Talkies.
]]>The post “என்னை எதிர்த்தவர்களின் டெபாசிட்டே பறி போய்விட்டது…” – நடிகர் ராதாரவியின் கிண்டல் appeared first on Touring Talkies.
]]>நேற்றைக்கு நடைபெற்ற டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த விழாவில் நடிகர் ராதாரவி பேசும்போது, “நான் குடும்பமாக நினைக்கும் பெப்சியை சேர்ந்தவர்கள் இங்கு வந்திருப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இன்று பெப்சி நல்ல நிலைமையில் இருக்க செல்வமணி முக்கிய காராணம்.
அவர் எனக்கு ஒரு அறிவுரை சொன்னார். “சங்கத்தில் ஏதாவது பிரச்சனை வந்தால் அனைவரையும் கூப்பிட்டு பேசுங்கள்…” என்றார் அது தவறு. பிரச்சனை என்பது வந்தவுடன் போய்விடும். அதையெல்லாம் கண்டு கொள்ளக் கூடாது. பிரச்சனையுடன் உறவாடக் கூடாது. என்னை எதிர்த்தவர்களால்தான் என் நிலை இங்கு என்ன என்பது இன்று எனக்கு தெரிந்துள்ளது, அதனால் அவர்களுக்கு நன்றி.
இந்த சங்கத்தில் நான் பார்த்து சேர்த்தவர்கள்தான் என்னை எதிர்த்து கேஸ் போட்டார்கள். இப்போது எங்களை எதிர்த்து நின்றவர்கள் எல்லோருக்குமே டெபாசிட் போய்விட்டது.
டைரக்டர் யூனியனிலே பிரச்சனையா…? அப்போ டப்பிங் யூனியனிலும் இருக்கும்பா என்கிறார்கள். “நாய் குலைக்குதேன்னு சிங்கமும் குலைக்க முடியாது”. இதை புரிந்து கொள்ள வேண்டும்.
இயக்குநர் சங்கத் தேர்தல் குறித்துக் கேள்விப்பட்டு நான் பெரிதும் வருத்தப்பட்டேன். நம்முடன் நிறைய வல்லவர்கள் இருக்கிறார்கள். செல்வமணி நிச்சயமாக இந்தத் தேர்தலில் ஜெயிப்பார். யாரும் கவலைப்பட வேண்டாம்…” என்றார்.
The post “என்னை எதிர்த்தவர்களின் டெபாசிட்டே பறி போய்விட்டது…” – நடிகர் ராதாரவியின் கிண்டல் appeared first on Touring Talkies.
]]>The post “சங்கத்தில் சம்பளம் கொடுக்கவே பணமில்லை. இதில் எப்படி ஊழல் செய்ய முடியும்..?” – ஆர்.கே.செல்வமணி கேள்வி appeared first on Touring Talkies.
]]>நேற்றைக்கு டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சியில் பேசும்போது செல்வமணி இதைத் தெரிவித்தார்.
அவர் பேசும்போது, “இப்போதெல்லாம் சங்கத்தில் வந்து வேலை செய்யவே பயமாக இருக்கிறது. ராதாரவி அண்ணனை பார்த்துதான் நான் என்னை தேற்றிக் கொள்வேன். ஆனால், இப்போது அதுவே கடினமாக இருக்கிறது.
நாம் பதவிக்கு வந்துவிட்டாலே நாம் மற்றவர்களுக்கு வேலை பார்க்கும் அடிமை போல் நினைத்துக் கொள்கிறார்கள். யார், யாருக்கெல்லாமோ பதில் சொல்ல வேண்டிய நிலை உள்ளது.
இது எதுவுமே வேண்டாம் என்று முடிவு செய்து வீட்டுக்குப் போகலாம் என்று நினைக்கும்போது, யாராவது “சார்… உங்களால்தான் நான் இப்போது உயிரோடு இருக்கிறேன்…” என்று சொல்வார்கள். அதை நினைத்து, திரும்பவும் இந்த இடத்தில் வந்து அமர வேண்டியிருக்கிறது.
எங்கள் சங்கத்தில் வரும் சந்தா தொகை, அலுவலக ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கவே போதாது. இதில் நான் எப்படி ஊழல் செய்ய முடியும்..? அனைத்து சங்கங்களிலும் இதே நிலைதான் உள்ளது.. நல்லது செய்ய நினைப்பவர்கள் மீது பழிதான் விழுகிறது.
ராதாரவி அண்ணன் நான் உதவி இயக்குநராக இருந்தபோது எனக்கு என்ன மரியாதை தந்தாரோ, இப்போதும் அதே மரியாதையைதான் தருகிறார். நல்ல மனிதர் அவர். இங்கு நல்ல உள்ளங்கள் நிறைய பேர் இருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து சிறப்பான பணி செய்து இந்தச் சங்கத்திற்கு நல்ல பெயர் வாங்கித் தர வேண்டும்..” என்றார்.
The post “சங்கத்தில் சம்பளம் கொடுக்கவே பணமில்லை. இதில் எப்படி ஊழல் செய்ய முடியும்..?” – ஆர்.கே.செல்வமணி கேள்வி appeared first on Touring Talkies.
]]>