The post கரு.பழனியப்பன் இயக்கும் புதிய படம் ‘ஆண்டவர்’ appeared first on Touring Talkies.
]]>2003-ம் ஆண்டு ‘பார்த்திபன் கனவு’ என்கிற வித்தியாசமான படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகத்தில் இயக்குநராகக் காலடி எடுத்து வைத்தார் கரு.பழனியப்பன்.
‘பார்த்திபன் கனவு’க்குப் பின்னர் ’சிவப்பதிகாரம்’, ‘பிரிவோம் சந்திப்போம்’, ’மந்திரப் புன்னகை’, ’சதுரங்கம்’, ’ஜன்னல் ஓரம்’ ஆகிய படங்களை இயக்கியிருந்தார்.
அவர் இயக்கிய படங்களில் ஆகச் சிறப்பான படமான ‘சதுரங்கம்’ தயாரிப்பாளரின் நிதிப் பிரச்சனை மற்றும் அப்படத்தின் ஹீரோவான ஸ்ரீகாந்தின் ஒத்துழைப்பின்மையில் சில வருடங்கள் தாமதாக வந்து வெற்றி பெறாமல் போனது.
‘மந்திரப் புன்னகை’ படத்தில் கரு.பழனியப்பன் ஹீரோவாக நடித்ததை அடுத்து புதுமுக இயக்குநரான சந்திரா தங்கராஜ் இயக்கத்தில் ‘கள்ளன்’படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அந்தப் படம் இன்னும் ஓரிரு வாரங்களில் ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் தற்போது 9 ஆண்டுகளுக்குப் பின்னர் தனது புதிய பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இயக்குநர் கரு.பழனியப்பன். இந்தப் புதிய படத்திற்கு ‘ஆண்டவர்’ என்று பெயர் சூட்டியுள்ளார்.
இந்தப் படத்தைத் தயாரிக்கும் லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிக்கவுள்ளார்.
படத்திற்கு இசை – யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு – வேல்ராஜ், படத் தொகுப்பு – கே.எல்.பிரவீன், கலை இயக்கம் – ராஜீவன் ஆகிய தொழில் நுட்பக் கலைஞர்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளனர்.
நாயகன், நாயகி மற்ற நடிகர்கள் டெக்னீஷியன்கள் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
The post கரு.பழனியப்பன் இயக்கும் புதிய படம் ‘ஆண்டவர்’ appeared first on Touring Talkies.
]]>The post பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் ஹீரோவாகிறார் appeared first on Touring Talkies.
]]>தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பல போட்டியாளர்கள் இந்நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் புகழ் வெளிச்சத்தை பயன்படுத்தி சினிமாவிலும் நடித்து வருகிறார்கள்.
பிக்பாஸ் மூலம் பிரபலமான ஹரீஷ் கல்யாண், ஆரவ், கவின், முகின், ரைசா வில்சன், ரம்யா பாண்டியன் ஆகியோர் தமிழ் சினிமாக்களில் நடித்து வருகின்றனர்.
இப்போது இந்த வரிசையில் பிக்பாஸ் 4-வது சீசனில் ரன்னராக வந்த மாடல் அழகர் பாலாஜி முருகதாஸ், தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.
அவர் நடிக்க உள்ள படத்தை லிப்ரா புரடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரன் தயாரிக்க உள்ளார்.
The post பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் ஹீரோவாகிறார் appeared first on Touring Talkies.
]]>The post ‘லிப்ரா’ ரவீந்தர் சந்திரசேகர் இயக்கும் ‘மார்க்கண்டேயனும் மகளிர் கல்லூரியும்’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>இவர் தற்போது ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ என்னும் படத்தைத் தயாரித்து அதில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார். இப்போது நடிகரையும் தாண்டி இயக்குநராகவும் மாறியிருக்கிறார்.
‘மார்க்கண்டேயனும் மகளிர் கல்லூரியும்’ என்கிற படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ரவீந்தர் சந்திரசேகர்.
‘பர்ஸ்ட் மேன் பிலிம்ஸ் வொர்க்ஸ்’ நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர்கள் சரவணப்பிரியன், மற்றும் சிவதுரை இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.
இந்தப் படத்திற்கு பிரியா மாலி என்ற ஒரு பெண் இசையமைப்பளாராக அறிமுகமாகிறார். ‘நட்புனா என்னானு தெரியுமா’, ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ ஆகிய படங்களுக்கு படத் தொகுப்பு செய்த நிர்மல், இந்தப் படத்துக்கும் படத் தொகுப்பாளராகப் பணியாற்ற இருக்கிறார். பல திரைப்படங்களுக்கு கலை இயக்கம் செய்திருக்கும் நர்மதா வேணி இந்தப் படத்திற்கும் கலை இயக்கம் செய்கிறார்.
பாடல்களை மாலியும், ரவீந்தர் சந்திரசேகரும் எழுதுகிறார்கள். உடைகள் வடிவமைப்பு – ஹினா, லைன் புரொடியூஸர் – வருண், இணைத் தயாரிப்பு – அசோகன், தயாரிப்பு மேலாளர் – மனோகர், காந்த், விளம்பரம் – லைட்ஸ் ஆன் மீடியா, புகைப்படங்கள் – ராஜா, மக்கள் தொடர்பு – நிகில் முருகன், டிஸைன்ஸ் – தண்டோரா, தயாரிப்பு – சரவணப்பிரியன், சிவதுரை.
படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர், நடிகைகளின் தேர்வு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
The post ‘லிப்ரா’ ரவீந்தர் சந்திரசேகர் இயக்கும் ‘மார்க்கண்டேயனும் மகளிர் கல்லூரியும்’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>The post மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் நடிக்கப் போவது சிம்புவா..? appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தை லிப்ரா புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ரவீந்திரன் சந்திரசேகரன் தயாரிக்கவிருக்கிறார்.
மனோஜ் பாரதிராஜா கடந்த சில ஆண்டுகளாக அளித்த பேட்டியில் தான் ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எழுதி வைத்திருப்பதாகவும், அதையே தன்னுடைய முதல் படமாக இயக்கப் போவதாகவும் சொல்லியிருந்தார்.
“ஒருவேளை அந்தப் படம்தான் இதுவா..?” என்று விசாரித்தபோது அதனை முற்றிலும் மறுத்தார் மனோஜ் பாரதிராஜா.
“லிப்ரா புரொடெக்சன்ஸ் நிறுவனத்திற்காக நான் செய்யப் போவது வேறொரு கதை. முழுதாக ஸ்கிரிப்ட்டை முடித்துவிட்டேன். எல்லாம் தயாராக இருக்கிறது. இதில் சிம்பு நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
நான் இப்போது அடுத்து வரும் நாட்களில் ‘மாநாடு’ படத்தில் சிம்புவுடன் நடிக்கவிருக்கிறேன். அந்த நேரத்தில் அவரிடத்தில் இந்தக் கதையைச் சொல்லி ஓகே வாங்கலாம் என்று நினைத்துள்ளேன்.. நிச்சயமாக சிம்பு என் படத்தில் நடிப்பார் என்று நம்புகிறேன்..” என்றார் மனோஜ் பாரதிராஜா.
நல்லதே நடக்கட்டும். வாழ்த்துகள்..!
The post மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் நடிக்கப் போவது சிம்புவா..? appeared first on Touring Talkies.
]]>The post நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராகிறார் appeared first on Touring Talkies.
]]>இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் கே.பாரதி ஒரு நடிகராகத்தான் தமிழ்த் திரையுலகத்தில் அறிமுகமானார். 1999-ம் ஆண்டு வெளியான ‘தாஜ்மஹால்’ படத்தில் அவரை நாயகனாக அறிமுகப்படுத்தினார் அவரது தந்தையான இயக்குநர் பாரதிராஜா.
அதன் பின்பு ‘சமுத்திரம்’, ‘கடல் பூக்கள்’, ‘அல்லி அர்ஜூனா’, ‘வருஷமெல்லாம் வசந்தம்’, ’பல்லவன்’, ‘ஈர நிலம்’ ஆகிய படங்களில் நாயகனாக நடித்திருந்தாலும் தமிழ்ச் சினிமாவில் ஒரு குறிப்பிட்ட இடத்தை அவரால் பிடிக்க முடியவில்லை. அதற்குப் பின்பும் ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.
கடந்த சில வருடங்களாகவே ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தின் இரண்டாம் பாகத்தை அவர் இயக்கப் போகிறார் என்ற செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தன. ஆனால் உறுதிப்படுத்தவில்லை.
இந்த நிலையில் தற்போது மனோஜ் பாரதிராஜா இயக்குநராகிறார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘சுட்ட கதை’, ‘நளனும் நந்தினியும்’, ‘ஐநா’, ‘கொலை நோக்குப் பார்வை’, ‘நட்புனா என்னான்னு தெரியுமா’ உள்ளிட்ட சில படங்களைத் தயாரித்திருக்கும் லிப்ரா புரொடெக்சன்ஸ் நிறுவனம் மனோஜ் பாரதிராஜா இயக்கும் முதல் படத்தைத் தயாரிக்கவிருப்பதாக அதன் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் அறிவித்துள்ளார்.
படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படுமாம்.
The post நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராகிறார் appeared first on Touring Talkies.
]]>