The post மஞ்சு வாரியர் நடித்திருக்கும் ‘ஆயிஷா’ சவுதி அரேபியாவில் வெளியாகிறது appeared first on Touring Talkies.
]]>இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘கண்ணிலு கண்ணிலு..’ எனத் தொடங்கும் பாடலுக்கு ‘நடனப்புயல்’ பிரபுதேவா நடனம் அமைத்திருக்கிறார். இந்த பாடலுக்கான வீடியோ சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் வெளியாகியிருக்கிறது.
பிரபு தேவாவின் மெய்சிலிர்க்க வைக்கும் நடன அமைப்பால் இந்தப் பாடல், பார்வையாளர்களின் மனதை கவர்ந்திருக்கிறது. இந்த பாடலின்போது பயன்படுத்தப்பட்ட இசை, நேரலையாக பராகுவே மற்றும் செக் குடியரசு நாட்டு நாட்டிலிருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்டன.
‘ஆயிஷா’ திரைப்படம், மலையாள மொழியில் மட்டுமல்லாமல் அரபு மொழியிலும் படமாக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக இந்த படம், சர்வதேச தரத்திலான படைப்பாக உயர்வு பெற்றிருக்கிறது. அதனால் இதனை ஒரு உலக சினிமா என்றும் குறிப்பிடலாம்.
மேலும் இந்தப் படத்தில் 70 சதவீதம், இந்தியாவிற்கு வெளியேயுள்ள பிற நாட்டை சேர்ந்த கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள். அரபு நாடுகளில் இந்த திரைப்படம் அரபு மொழியில் வெளியாகவிருக்கிறது. சவுதி அரேபியாவில் ஒரு இந்திய திரைப்படம், இத்தகைய அற்புதமானதொரு கவனத்தை பெறுவது இதுவே முதல் முறை.
பிரபல நடிகரும், இயக்குநரும், நடன கலைஞருமான பிரபுதேவா இந்தப் படத்திற்கு நடனம் அமைத்துள்ளார். இந்தப் படத்தின் உலகளாவிய கவனத்திற்கு இந்த நடனமும் ஒரு முக்கிய காரணி.
அத்துடன் இசையமைப்பாளர் ஜெயச்சந்திரன் இசையில், பாடலாசிரியர்கள் பிகே ஹரி நாராயணன் மற்றும் சுஹைல் கோயா ஆகியோர் எழுதிய பாடலுக்கு இந்திய மற்றும் அரபு நாட்டினை சேர்ந்த பின்னணி பாடகர்கள் இணைந்து பாடியுள்ளனர்.
இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடிக்க, அவருடன் ராதிகா, சஜ்னா, பூர்ணிமா உள்ளிட்ட இந்திய கலைஞர்களுடன் துனிசியா நாட்டை சேர்ந்த லத்திபா, ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த சலாமா, பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஜெனிபர், நைஜீரிய நாட்டைச் சேர்ந்த சரஃபினா, ஏமன் நாட்டை சேர்ந்த சுமையா, சிரியா நாட்டை சேர்ந்த இஸ்லாம் என பல நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களும் நடித்திருக்கிறார்கள்.
ஆயிஷா’ திரைப்படத்திற்கு கதை, திரைக்கதையை ஆஷிப் கக்கோடி எழுத, அறிமுக இயக்குநர் அமீர் பள்ளிக்கல் இயக்கியிருக்கிறார். விஷ்ணு ஷர்மா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, அப்பு என். பட்டாத்திரி படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, மோகன்தாஸ் கலை இயக்கத்தை மேற்கொண்டிருக்கிறார்.
இந்த திரைப்படத்தை கிராஸ் பார்டர் கேமரா பிரைவேட் லிமிடெட் எனும் படத் தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த தயாரிப்பாளர் ஜக்காரியா பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.
ஃபெதர்டச் மூவி பாக்ஸ் பிரைவேட் லிமிடெட், இமேஜின் சினிமாஸ் லாஸ்ட் எக்ஸிட் மற்றும் மூவி பாக்கெட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சம்சுதீன், ஜக்காரியா வவாத், ஹாரிஸ் தேஸம், அனீஷ் பி.பி. மற்றும் பினீஷ் சந்திரன் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றி இருக்கிறார்கள்.
இந்தோ -அரேபிய கூட்டுத் தயாரிப்பாக உருவாகியிருக்கும் ‘ஆயிஷா’, சவூதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளில் அரேபிய மொழியில் வெளியாகிறது.
இதனால் இந்திய கலைஞர்களும், படைப்பாளிகளும் சர்வதேச அளவிலான கவனத்தை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post மஞ்சு வாரியர் நடித்திருக்கும் ‘ஆயிஷா’ சவுதி அரேபியாவில் வெளியாகிறது appeared first on Touring Talkies.
]]>The post மஞ்சு வாரியரை நடனமாட வைத்த பிரபுதேவா…! appeared first on Touring Talkies.
]]>நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடித்திருக்கும் புதிய திரைப்படம் ‘ஆயிஷா’. இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள புதிய பாடலுக்கு பிரபல நடிகரும், இயக்குநரும், நடன கலைஞருமான பிரபுதேவா நடனம் அமைத்திருக்கிறார். இந்த பாடலை பாடலாசிரியர் பி. கே. ஹரி நாராயணன் மற்றும் சுகைல் கோயா ஆகியோர் எழுதியுள்ளனர். ஜெயச்சந்திரன் இசையமைத்திருக்கிறார். இந்தப் பாடலை இந்திய மற்றும் அரபு நாட்டை சேர்ந்த பின்னணி பாடகர்கள் இணைந்து பாடி இருக்கிறார்கள்.
‘ஆயிஷா’ திரைப்படத்திற்கு கதை, திரைக்கதையை ஆஷிப் கக்கோடி எழுத, அறிமுக இயக்குநர் அமீர் பள்ளிக்கல் இயக்கியிருக்கிறார். விஷ்ணு ஷர்மா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜெயச்சந்திரன் இசையமைத்திருக்கிறார். அப்பு என். பட்டாத்திரி படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, மோகன்தாஸ் கலை இயக்கத்தை மேற்கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தை கிராஸ் பார்டர் கேமரா பிரைவேட் லிமிடெட் எனும் படத் தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த தயாரிப்பாளர் ஜக்காரியா பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார். ஃபெதர்டச் மூவி பாக்ஸ் பிரைவேட் லிமிடெட், இமேஜின் சினிமாஸ் லாஸ்ட் எக்ஸிட் மற்றும் மூவி பாக்கெட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சம்சுதீன், ஜக்காரியா வவாத், ஹாரிஸ் தேஸம், அனீஷ் பி.பி. மற்றும் பினீஷ் சந்திரன் ஆகியோர் இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார்கள். இந்த திரைப்படம் மலையாளம், ஆங்கிலம், அரபு, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஏழு மொழிகளில் தயாராகிறது.
இந்த பாடலுக்கு நடிகை மஞ்சு வாரியருடன் ராதிகா, சஜ்னா, பூர்ணிமா, துனிசியா நாட்டை சேர்ந்த லத்திபா, ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த சலாமா, பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஜெனிபர், நைஜீரிய நாட்டைச் சேர்ந்த சரஃபினா, ஏமன் நாட்டை சேர்ந்த சுமையா, சிரியா நாட்டை சேர்ந்த இஸ்லாம் ஆகியோரும் கலந்து கொண்டு தங்களின் ஒத்துழைப்பை வழங்கி இருக்கிறார்கள்.
‘நடனப்புயல்’ பிரபுதேவாவின் நடன அசைவில் தயாராகியிருக்கும் இந்த லிரிக்கல் வீடியோவில் நடிகை மஞ்சு வாரியருடன் பல நாட்டைச் சேர்ந்த பெண்மணிகள் இடம் பெற்று நடனமாடியிருப்பதாலும், இந்த படத்தில் இடம் பெற்ற ஆயிஷா ஆயிஷா எனும் ஸ்ரேயா கோஷல் பாடிய பாடல் இணையத்தில் வெளியாகி ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டிருக்கிறது என்பதாலும், இந்த பாடலுக்கும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
The post மஞ்சு வாரியரை நடனமாட வைத்த பிரபுதேவா…! appeared first on Touring Talkies.
]]>The post “மஞ்சு வாரியர் செய்த சதி” – நடிகர் திலீப் கோர்ட்டில் மனு…! appeared first on Touring Talkies.
]]>தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகையொருவர் கடந்த 2017-ம் ஆண்டு கேரளாவில் நள்ளிரவில் வேன் ஒன்றில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானார்.
இந்த வழக்கில் பிரபல மலையாள நடிகரான திலீப்பும் குற்றம் செய்யத் தூண்டிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு 83 நாட்கள் சிறையில் இருந்து தற்போது ஜாமீனில் வெளியில் வந்துள்ளார்.
இந்த வழக்கு கடந்த 5 வருடங்காளாக கேரளாவில் எர்ணாகுளத்தில் இருக்கும் சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தினமும் ஒரு திருப்பம் நிகழ்கிறது. இரு தரப்புக்கும் ஆதரவாகவும் எதிராகவும் பேசுவதும் வாடிக்கையாகிவிட்டது.
இந்த நிலையில் சாட்சிகளை குலைத்ததாக நடிகர் திலீப் மீது காவல்துறை மற்றொரு வழக்கை சமீபத்தில் பதிவு செய்துள்ளது.
இந்தப் பரபரப்பான சூழலில் இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார் நடிகர் திலீப்.
அதில், “மலையாள சினிமாவின் சக்தி வாய்ந்த ஒரு பிரிவினரால் தனிப்பட்ட பழி வாங்கல் எண்ணத்தின் காரணமாகவும், மற்றும் தொழில் போட்டி காரணமாகவும் என் மீதான இந்த வழக்கில் பொய்யான புகார் புனையப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார் திலீப்.
மேலும், “என் முன்னாள் மனைவி மஞ்சு வாரியருக்கும், கேரள காவல்துறையில் டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள உயர் போலீஸ் அதிகாரி ஒருவருக்கும் தொடர்பு உள்ளது. இதன் விளைவாகத்தான் நான் இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டேன்..” என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.
The post “மஞ்சு வாரியர் செய்த சதி” – நடிகர் திலீப் கோர்ட்டில் மனு…! appeared first on Touring Talkies.
]]>The post இயக்குநர் மணிரத்னம் வெளியிட்ட ‘சென்டி மீட்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் appeared first on Touring Talkies.
]]>இந்த படத்தை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் அவர்களும், ஷிவாஸ் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் மற்றும் தயாரிப்பாளர் எம். பிரசாந்த் தாஸ் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் ‘அசுரன்’ பட புகழ் நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடிக்கிறார். அவருடன் நெடுமுடி வேணு, யோகி பாபு, காளிதாஸ் ஜெயராம், கோகுல் ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய், ராம் சுரேந்தர், கோபி சுந்தர் ஆகிய மூன்று இசையமைப்பாளர்கள் இசையமைத்திருக்கிறார்கள். படத்தின் பின்னணி இசையை ஜேக்ஸ் பிஜாய் கவனித்திருக்கிறார்.
சந்தோஷ் சிவன் மற்றும் அஜில் இணைந்து திரைக்கதை எழுத, சசிகுமரன் சிவகுரு வசனம் எழுதியிருக்கிறார். படத் தொகுப்பை லாரன்ஸ் கிஷோர் மேற்கொண்டிருக்கிறார்.
தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இந்த ‘சென்டி மீட்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது. இதனை இந்தியாவின் முன்னணி இயக்குநரான மணிரத்னம் வெளியிட்டிருக்கிறார். இதற்காக பிரத்யேக காணொளி ஒன்றையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.
‘அசுரன்’ படத்திற்கு பிறகு நடிகை மஞ்சு வாரியாரின் நடிப்பில் உருவாகி இருப்பதாலும், படத்தின் தலைப்பு ‘சென்டி மீட்டர்’ என வித்தியாசமாக இருப்பதாலும், ஃபர்ஸ்ட் லுக்கில் யோகி பாபு மற்றும் காளிதாஸ் ஜெயராமின் தோற்றம் கவனத்தைக் கவரும் வகையில் இருப்பதாலும், ‘சென்டி மீட்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
The post இயக்குநர் மணிரத்னம் வெளியிட்ட ‘சென்டி மீட்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் appeared first on Touring Talkies.
]]>The post நடிகை மஞ்சு வாரியருக்கு மலையாள இயக்குநர் கொடுத்த லவ் டார்ச்சர்..! appeared first on Touring Talkies.
]]>மலையாள சினிமாவில் புதிய அலையை ஏற்படுத்திய இயக்குநர்களில் ஒருவர் சணல்குமார் சசிதரன். ‘Oraalppokkam’, ‘Ozhivudivasathe Kali’ ‘Sexy Durga’, ‘Unmadiyude Maranam’, ‘Ah’r Kayyattam’,’ Vazhakku’, ‘Chozha’ ஆகிய படங்களை இயக்கிய பல்வேறு விருதுகளை வாங்கியவர்.
இவருடைய இயக்கத்தில் உருவான ‘கயாட்டம்’ என்ற படத்தில் நடிகை மஞ்சு வாரியரும் நடித்திருந்தார்.
இந்தச் சூழலில் சமீபத்தில் நடிகை மஞ்சு வாரியர் மீது பரபரப்பான புகார் ஒன்றை எழுப்பியிருந்தார் இயக்குநர் சணல்குமார் சசிதரன்.
அதில், நடிகை மஞ்சு வாரியார் காணாமல் போய்விட்டார் என்றும், அவர் யாருடைய கட்டுப்பாட்டிலோ இருக்கிறார் என்றும் அவர் பதிவிட்டிருந்தார்.
இந்தப் பதிவுக்கு பதில் வராமல் போக, தொடர்ந்து 4 நாட்கள் கழித்து மீண்டும் தனது பேஸ்புக் பக்கத்தில் இது தொடர்பாக பதிவொன்றை எழுதினார் சணல்குமார் சசிதரன்.
அதில், “கடந்த ஒரு வார காலமாக காணவில்லை. எனது புகாருக்கு மஞ்சு வாரியரோ, அவர் சம்பந்தப்பட்டவர்களோ விளக்கம் அளிக்கவில்லை. மஞ்சு வாரியர் கந்து வட்டி கும்பலின் பிடியில் சிக்கி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். மஞ்சு வாரியரை காணவில்லை என அவரது மேனேஜருக்கு டேக் செய்து பதிவு போட்டிருந்தபோதிலும் எந்தத் தகவலும் தனக்குக் கிடைக்கவில்லை…” என்று அந்தப் பதிவில் தெரிவித்திருந்தார் சணல்குமார்.
மேலும், “மஞ்சு வாரியர் எங்கிருக்கிறார் என்பதை கண்டறிய நான் போலீஸில் புகார் கொடுக்கவில்லை. காரணம் எனக்கு சட்டம் மீது நம்பிக்கை இல்லை. இது தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை குடியரசுத் தலைவருக்கும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் நான் கடிதம் அனுப்பியிருக்கிறேன்.
திருநங்கை ஷாலு மரணம் முதல் மஞ்சு வாரியர் வழக்குவரையிலும் பல்வேறு சம்பவங்களில் கேரளாவில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. மேலும் நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் திலீப், விசாரணை அதிகாரிகளை தாக்குவதற்கு சதி திட்டம் தீட்டியது தொடர்பாக மஞ்சு வாரியர் சாட்சியம் அளித்ததால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. சமூக வலைத்தலங்களில் நான் எழுதும் பதிவுகளுக்கு மஞ்சு வாரியர் எந்த ஆட்சேபணையும் தெரிவிக்காததால் எனது சந்தேகம் வலுப்பதாகவும்“ சணல்குமார் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து நடிகை மஞ்சு வாரியர் கொச்சியில் உள்ள எலமான்கரை போலீஸ் ஸ்டேஷனில் இயக்குநர் சனல்குமார் சசிதரன் மீது புகார் ஒன்றை அளித்தார்.
அதில், “இயக்குநர் சணல்குமார் சசிதரன் என்னை குறித்து தொடர்ந்த அவதூறு கருத்துக்களை பரப்பி வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
மேலும் அந்தப் புகாரில் சனல்குமார் சசிதரன் மீது மஞ்சு வாரியர் அடுக்கடுக்கான புகார்களை கூறியுள்ளார்.
அதில், “சனல் குமார் சசிதரன் இயக்கிய ‘கயட்டம்’ திரைப்படத்தில் நடித்தபோது அவர் என்னை காதலிப்பதாக கூறினார், ஆனால், அதை நான் ஏற்க மறுத்து விட்டேன். அதன் பிறகும் அவர் தொடர்ந்து என்னை காதலிப்பதாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்தார். அவரின் நடவடிக்கையை நான் கண்டித்தேன். ஆனால், அவர் விடாமல் தொடர்ந்து என்னை காதலிப்பதாக கூறி என்னை டார்ச்சர் செய்து வருகிறார்..” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து மஞ்சு வாரியரின் இந்தப் புகாரின் பேரில் திருவனந்தபுரத்தில் உள்ள இயக்குநர் சணல்குமாரின் வீட்டிற்கு வந்த போலீஸார், அவரைக் கைது செய்து கொச்சிக்கு அழைத்து வந்தனர்.
அப்போது வேண்டுமென்றே தனது பேஸ்புக் பக்கத்தில் இந்தச் சம்பவத்தை நேரலை செய்தார் இயக்குநர் சணல்குமார். தன்னை யாரோ கடத்துவதாக அதில் பேசினார். மேலும் தன்னை போலீஸார் துன்புறுத்துவதாகவும் கதறினார்.
கடந்த புதன்கிழமை இரவு 9 மணிக்கு கொச்சியில் உள்ள எலமன்கரா போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வரப்பட்ட சணல்குமாரிடம் வழக்கு பற்றி உயரதிகாரிகள் விசாரித்தனர். பின்பு மறுநாள் வியாழக்கிழமை காலையில் அவரை ஜாமீனில் விடுவிக்க போலீஸார் முடிவெடுத்தனர்.
சணல்குமாரின் உறவினர்கள் ஜாமீன் சம்பந்தமான அனைத்துப் பிரச்சினைகளையும் முடித்த பின்பும் சணல்குமார் “நான் ஜாமீனில் போக மாட்டேன். என்னை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்…” என்று அடம் பிடித்திருக்கிறார்.
இதனால் வேறு வழியில்லாமல் போலீஸாரும் ஒரு நாள் தாமதித்து நேற்று காலை அவரை ஆலுவாவில் இருக்கும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.
நீதிமன்றத்தில் தனது தரப்பு வாதத்தை பதிவு செய்த சணல்குமார் ஜாமீனில் விடுதலையாகி வெளியேறினார்.
நீதிமன்றத்திற்கு வெளியே பத்திரிகையாளர்களிடத்தில் பேசிய இயக்குநர் சணல்குமார், “நான் மஞ்சு வாரியரை டார்ச்சர் செய்யவில்லை. அவரைக் காதலிப்பதாக நான் சொன்னது உண்மைதான். அதில் ஒன்றும் புதுசில்லையே.. அவருடைய வாழ்க்கை மிகவும் ஆபத்தில் உள்ளது. அதைத்தான் அவருக்குச் சொல்ல முயற்சித்தேன்.
என் இயக்கத்தில் அவர் நடித்த ‘கயாட்டம்’ படம் இன்னும் வெளியாகவில்லை. அதைப் பற்றி அவரிடம் பேசுவதற்கு மிகவும் முயற்சி செய்தேன். அதுவும் முடியவில்லை. போலீஸும், நீதிமன்றமும் இதில் இருக்கும் மர்மத்தை வெளியில் கொண்டு வருவார்கள் என்று நம்புகிறேன்..” என்றார்.
The post நடிகை மஞ்சு வாரியருக்கு மலையாள இயக்குநர் கொடுத்த லவ் டார்ச்சர்..! appeared first on Touring Talkies.
]]>The post “அன்றும், இன்றும் பிரபுதேவா மீது எனக்குக் காதல் இருக்கிறது” – நடிகை மஞ்சு வாரியரின் திடீர் ரொமான்ஸ்..! appeared first on Touring Talkies.
]]>‘ஆயிஷா’ என்ற படத்திற்காக மஞ்சு வாரியாருக்கு நடனம் கற்றுக் கொடுக்க தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வந்துள்ளார் பிரபுதேவா.
நடனத்தின் மீது காதல் கொண்டிருக்கும் இரண்டு பேர் இங்கே ஒன்று சேர்ந்திருக்கிறார்கள் என்பதையும் தாண்டி வேறொன்றும் இதில் இருக்கிறது.
நடிகை மஞ்சு வாரியர் “தான் நேசிக்கும் மிகப் பெரிய நட்சத்திரம் பிரபுதேவா” என்று கூறியிருக்கிறார்.
இது குறித்து தன்னுடைய சமூக வலைத்தளத்தில் மஞ்சு வாரியர் எழுதும்போது, “நான் லாலேட்டன், மம்முட்டி, ஷோபனா சேச்சி ஆகியோரின் ரசிகைதான். ஆனால் என்னுடைய இளம் வயதில் நான் ஒருவருக்கு கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்தேன் என்றால் அது பிரபுதேவாவுக்குத்தான்.
பிரபுதேவா மீது எனக்கு காதல் இருப்பது என்னை தனிப்பட்ட முறையில் அறிந்த அனைவருக்கும் தெரியும். அந்தக் காதல் அன்றும், இன்றும் இருக்கிறது” என்று பிரபுதேவா மீது கொண்ட தன்னுடைய காதலைப் பற்றி சொல்லியிருக்கிறார் மஞ்சு வாரியர்.
The post “அன்றும், இன்றும் பிரபுதேவா மீது எனக்குக் காதல் இருக்கிறது” – நடிகை மஞ்சு வாரியரின் திடீர் ரொமான்ஸ்..! appeared first on Touring Talkies.
]]>The post மஞ்சு வாரியருடன் திலீப் ரகசிய பேச்சு – கோர்ட்டில் வெளியான தகவல்..! appeared first on Touring Talkies.
]]>பிரபல நடிகையின் பலாத்கார வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிகளை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் திலீப்பின் முன் ஜாமீன் மனு மீது கேரள உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணைக்காக நடிகர் திலீப் சென்ற மாதம் 3 நாட்கள் கொச்சி சிஐடி போலீஸாரிடம் விசாரணைக்காக ஆஜரானார். இந்த நிலையில் நேற்று காலை போலீஸ் தரப்பில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், நடிகர் திலீப் தான் பயன்படுத்திய பழைய போன்களை எங்களிடம் ஒப்படைக்க மறுக்கிறார். இது சந்தேகத்தை ஏற்படுத்துவதால் இந்த முன் ஜாமீன் மனு விசாரணையை உடனடியாக இன்று (நேற்று) நடத்த வேண்டும் என்று கோரப்பட்டது. இதையடுத்து நேற்று பிற்பகல் இந்த மனுவை நீதிபதி கோபிநாத் விசாரித்தார்.
அப்போது திலீப் தரப்பிற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்தார். விசாரணை அதிகாரிகள் கேட்கும் அனைத்து ஆவணங்களையும் உடனடியாக திலீப் ஒப்படைக்க வேண்டும். போனை ஒப்படைக்க மறுப்பது ஏன்? போலீசார் மீது நம்பிக்கை இல்லை என்றால் உயர் நீதிமன்ற பதிவாளரிடம் போனை ஒப்படைக்க வேண்டும் என்று கூறினார்.
திலீப் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதாடும்போது, “திலீப்பின் பழைய போனில் அவரது முதல் மனைவியான நடிகை மஞ்சு வாரியாருடன் திலீப் பேசிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அது போலீசிடம் கிடைத்தால் அவருடைய தனிப்பட்ட விஷயங்கள் வெளியே செல்ல வாய்ப்பு உண்டு.
மேலும் அந்த போனில் வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்கள் உள்ளன. அது வெளியே சென்றாலும் திலீப்புக்கு சிக்கல் ஏற்படும். எனவே இந்த போனை ஒப்படைப்பது குறித்து சிறிது ஆலோசித்த பின்னரே முடிவு எடுக்க முடியும்…” என்று வாதிட்டார்.
தொடர்ந்து விசாரணை இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இன்றைக்கு நீதிபதி “திலீப் தனது செல்போன்களை சீல் வைக்கப்பட்ட கவரில் வைத்து உயர்நீதிமன்றப் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும்..” என்று உத்தரவிட்டுள்ளார்.
பழைய செல்போனை ஒப்படைக்க கோரி குற்றப் பிரிவு போலீசார் அனுப்பிய நோட்டீசுக்கு நடிகர் திலீப் அனுப்பிய பதில் கடிதத்தில், “நடிகை பலாத்காரம் நடந்த 2017-ம் ஆண்டு நான் பயன்படுத்திய செல்போனை, என்னை கைது செய்த பிறகு நீதிமன்றத்தில் ஒப்படைத்து விட்டேன். அந்த போன் தடயவியல் பரிசோதனைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டு விட்டது.
தற்போது போலீஸார் கேட்டுள்ள போன்களில் ஒன்று வேறொருவரின் பெயரில் வாங்கப்பட்டதாகும். சில நாட்களுக்கு முன்புதான் அதைப் பயன்படுத்த தொடங்கினேன். இன்னொரு போனை வங்கி தேவைக்கு மட்டுமே பயன்படுத்தி வருகிறேன். 3-வதாக இருந்த போனில்தான் நானும், பாலசந்திர குமாரும் பேசி வந்தோம். அதை எனது வக்கீல் மூலம் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி உள்ளேன். நீதிமன்றம் கேட்டு கொண்டால் அந்த போனை சமர்பிக்கிறேன்.
இந்த வழக்கை விசாரிக்கும் டிஎஸ்பி பைஜூ பவுலோசும், பாலசந்திரகுமாரும் பல முறை போனில் பேசி உள்ளனர். 2 பேரும் சேர்ந்துதான் என்னை சிக்க வைக்க சதி திட்டம் தீட்டி உள்ளனர். எனவே டிஎஸ்பியின் செல்போனை வாங்கி பரிசோதித்தால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும்…” என்று திலீப் குறிப்பிட்டுள்ளார்.
The post மஞ்சு வாரியருடன் திலீப் ரகசிய பேச்சு – கோர்ட்டில் வெளியான தகவல்..! appeared first on Touring Talkies.
]]>The post நடிகை கடத்தப்பட்ட வழக்கு – காவ்யா மாதவன் கோர்ட்டில் சாட்சியம் அளித்தார் appeared first on Touring Talkies.
]]>2018-ம் ஆண்டு புகழ் பெற்ற மலையாள நடிகையொருவர் நள்ளிரவில் ஷூட்டிங் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது சிலரால் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டார்.
இந்த வழக்கில் மலையாள சினிமாவுலகத்தின் மிகப் பெரிய நடிகர்களில் ஒருவரான திலீப்பும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் இந்த வழக்கில் 8-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
நடிகை காவ்யா மாதவனுடன் திலீப் சற்று நெருக்கமாக இருந்த ஒரு தருணத்தை அவர்களுக்கே தெரியாமல் புகைப்படம் எடுத்த பாதிக்கப்பட்ட நடிகை, அதனை அப்போது திலிப்பீன் மனைவியான நடிகை மஞ்சு வாரியருக்கு செல்போனில் அனுப்பியதாகவும், இதனாலேயே திலீப்-மஞ்சு வாரியருக்கு இடையில் பிரச்சினை எழுந்து கடைசியில் அது விவகாரத்தில் முடிவடைந்தது.
இந்தக் கோபத்தில்தான் திலீப் அந்த நடிகையை ஆள் வைத்து இப்படி துன்புறுத்தியதாக போலீஸ் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கில் மலையாளத் திரையுலகத்தில் இருந்து 50 நடிகர், நடிகைகள்வரையிலும் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரும் தங்களது சாட்சியங்களை அளித்துவிட்டார்கள்.
நடிகைகள் மஞ்சு வாரியர், சம்யுக்த வர்மா, ரிமி டோமி, நடிகர்கள் முகேஷ், சித்திக், லால் மற்றும் சிலரும் இதுவரையிலும் சாட்சியம் அளித்துள்ளனர்.
நடிகை மஞ்சு வாரியர் அளித்துள்ள சாட்சியத்தில் “தன் கணவர் திலீப்பும், காவ்யா மாதவனும் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை தனக்கு பாதிக்கப்பட்ட நடிகை அனுப்பியதால் திலீப் அவர் மீது கோபமாக இருந்தார்..” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதேபோல் பலரும் இந்தச் சம்பவத்தால்தான் திலீப்புக்கும் அந்த நடிகைக்கும் இடையில் முன் விரோதம் ஏற்பட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார்கள். ஆனால் திலீப்தான் பாதிக்கப்பட்ட நடிகையை துன்புறுத்த ஆட்களை அனுப்பினாரா என்பது எங்களுக்குத் தெரியாது என்றும் தெரிவித்தார்களாம்.
கொரோனா லாக் டவுன் காரணமாக சிறிது காலம் தடைபட்டிருந்த வழக்கு விசாரணை தற்போது மும்முரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இன்றைக்கு இந்த வழக்கில் சாட்சி சொல்ல நடிகர் திலிப்பீன் மனைவியும் நடிகையுமான காவ்ய மாதவன் கோர்ட்டில் ஆஜரானார்.
அப்போது அவர், பாதிக்கப்பட்ட நடிகைதான் தானும் திலீப்பும் பேசிக் கொண்டிருந்த புகைப்படத்தை மஞ்சு வாரியருக்கு அனுப்பி வைத்ததாக திலீப் தான் திருமணமாகி வந்த பின்பு தன்னிடம் தெரிவித்ததாகக் கூறியிருக்கிறார்.
இந்த வழக்கில் இன்னும் பல சாட்சிகளிடம் விசாரிக்க வேண்டியிருக்கிறது. மூன்றாண்டுகளுக்கு முன்பு துவங்கிய இந்த வழக்கு பல்வேறு காரணங்களினால் இப்படி இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.
இந்த வருடம் நிச்சயமாக தீர்ப்பு வந்துவிடும் என்று கேரளாவே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது.
The post நடிகை கடத்தப்பட்ட வழக்கு – காவ்யா மாதவன் கோர்ட்டில் சாட்சியம் அளித்தார் appeared first on Touring Talkies.
]]>