The post ரியல் அப்பா – மகன் படங்கள்! appeared first on Touring Talkies.
]]>இந்த வகையில் பார்த்தால், சிவாஜியுடன் – பிரபு நடித்த படங்கள் தான் அதிகம். நீதியின் நிழல், வெள்ளை ரோஜா, சாதனை, நாம் இருவர், நேர்மை, நீதிபதி, இரு மேதைகள் ஆகிய படங்களில் நடிகர் திலகம் சிவாஜியுடன் அவரது மகன் இளைய திலகம் பிரபு நடித்து இருக்கிறார்.
அடுத்து, தியாகராஜன்-பிரசாந்த் இருவரும் இணைந்த படங்கள். க்கும் தான். அதாவது தந்தையின் இயக்கத்தில் பிரசாந்த் பல படங்களில் நடித்துள்ளார். ஆணழகன், ஷாக், பொன்னர் சங்கர், மம்பட்டியான், அந்தகன் ஆகிய படங்கள்.
இந்த வரிசையில் இயக்குனர் டி.ராஜேந்தர் தனது மகன் சிலம்பரசனை தனது படங்களில் நடிக்க வைத்ததையும் மறந்துவிட முடியாது.
எங்க வீட்டு வேலன், பெற்றெடுத்த பிள்ளை, சபாஷ் பாபு, ஒரு வசந்த கீதம் ஆகிய படங்களில் குட்டி சிம்பு நடித்துள்ளார். 2002ல் தந்தை டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான காதல் அழிவதில்லை படத்தின் மூலம் சிலம்பரசன் தமிழ்சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.
அதேபோல தற்போது இளையதளபதி விஜய் தனது மகன் சஞ்சய் உடன் இணைந்து வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு அசத்தலாக ஆடியுள்ளார். பாக்யராஜ் உடன் அவரது மகன் சாந்தனு வேட்டியை மடிச்சுக் கட்டு என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளார்.
அதே போல விக்ரம் மகன் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடித்த படம் மகான்.
பெரும்பாலும் இப்படிப்பட்ட பங்கள் ஒர்க் அவுட் ஆகி வெற்றி பெற்றுள்ளன.
The post ரியல் அப்பா – மகன் படங்கள்! appeared first on Touring Talkies.
]]>The post 3 காதல் ஜோடிகள் சந்திக்கும் எதிர்ப்புகளைப் பற்றிப் பேசும் ‘நண்பா’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>தயாரிப்பாளர் டி.சிவபெருமாள் தனது சிவஞானம் பிலிம் புரொடக்சன் நிறுவனத்தின் சார்பில் இந்த ‘நண்பா’ படத்தைத் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் புதுமுகங்கள் பிரபு – மீனா, ஆகியோருடன் கல்லூரி வினோத், சிசர் மனோகர், மெளலி, ஜானகி, பாபி, கற்பகம், ஜோதிநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படத் தொகுப்பு – துரைராஜ், ஒளிப்பதிவு – ஜெயம், இசை – டென்னிஸ் வல்லபன், சண்டை இயக்கம் – ஆர்.என்.முரளி, நடன இயக்கம் – பவர் சிவா, பாடல்கள் -இளைய கம்பன், மக்கள் தொடர்பு – விஜயமுரளி, கிளாமர் சத்யா, தயாரிப்பு –டி.சிவபெருமாள், கதை திரைக்கதை, வசனம், இயக்கம் – கே.வி.முகி.
இணை பிரியாத மூன்று நண்பர்கள் சாதியைத் தாண்டி, மதத்தைத் தாண்டி, பணத்தைத் தாண்டி மூன்று பெண்களை காதலிக்கிறார்கள். திருமணம் செய்ய முயலும் அந்த மூன்று காதல் ஜோடிகளும் சந்திக்கும் வாழ்வியல் பிரச்சனைகளிலிருந்து தப்பினார்களா..? இந்தச் சமூகம் அவர்களை என்ன செய்தது..? என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
இந்த ‘நண்பா’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
The post 3 காதல் ஜோடிகள் சந்திக்கும் எதிர்ப்புகளைப் பற்றிப் பேசும் ‘நண்பா’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>The post வேலன் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.
]]>பெஸ்டிவல் நேரங்களில் இப்படியான படங்கள்தான் வசூல் விசயத்தில் சினிமாவை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். கவின் இயக்கத்தில் பிக்பாஸ் முகேன் நடிப்பில் வந்திருக்கும் இந்த ‘வேலன்’ படம் அந்தப் புத்துணர்ச்சியை தருகிறதா? முதலில் கதையைப் பார்ப்போம்.
ஹீரோ முகேன் பள்ளிப் படிப்பில் மிக சுமாரான மாணவன், அதை தன் அப்பா பிரபுவிடம் மறைத்து வருகிறார். ஒரு கட்டத்தில் பள்ளி ஆசிரியர்கள் மூலமாக பிரபுவிற்கு விசயம் தெரிய வருகிறது. மகன் மீது கோபப்படுகிறார் பிரபு.
பின்னர் ஒரு வழியாக படிப்பில் தேறி கல்லூரிக்குள் செல்கிறார் முகேன். அங்கு அவருக்கு ஹீரோயினோடு காதல். அந்தப் பெண் மலையாளி என்பதால் அவருக்கு மலையாளத்தில் ஒரு கடிதம் எழுதி கொடுக்கிறார். அந்தக் கடிதம் மூலம் ஒரு பெருங்குழப்பம் நடக்கிறது.
தம்பி ராமையா தன் பெண்ணுக்கு முகேன் கடிதம் கொடுத்ததாக பிரபுவிடம் சொல்ல, பிரபுவும் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க சம்மதிக்கிறார். எல்லாம் சுபம் என்று பார்த்தால் இந்த இடத்தில் யாரும் எதிர்பாராத ஒரு ட்விஸ்ட் நடக்கிறது.
மேலும் ஹரிஷ் பேரொடிக்கும் பிரபுவிற்கும் இன்னொரு கதை ஒன்று ஓடுகிறது. அடுத்தடுத்து என்ன நடந்தது? காதலித்தப் பெண்ணை முகேன் கைப்பிடித்தாரா? என்பதே இந்த ‘வேலன்’ படத்தின் கதை.
முகேன் புதுமுகம்-அறிமுகம் என்ற எந்தப் பதட்டமும் இல்லாமல் இயல்பாக நடித்துள்ளார். அவரது சிரித்த முகம் எல்லோரும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. சண்டைக் காட்சிகள், எமோஷ்னல் காட்சிகளில்கூட கலங்கடிக்கிறார்.
நாயகிக்கு பெரிய வேலை ஒன்றும் பெரியதாக ஸ்கோப் இல்லை. என்றாலும் கிடைத்த வாய்ப்புகளில் நன்றாக நடித்துள்ளார். பிரபுவிற்கு ஒரு பெரிய மனிதருக்கான கேரக்டர். சிறப்பாகச் செய்து அசத்தி இருக்கிறார். இன்னும் கதையில் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.
தம்பி ராமையா ஒரு சில இடங்களில் மட்டும் சிரிக்க வைக்கிறார். ஹரிஷ் பேரொடியை இயக்குநர் இன்னும் நன்றாகப் பயன்படுத்தி இருக்கலாம். மிகச் சிறப்பாக நடிக்கக் கூடிய நடிகர் அவர்.
படத்தின் முக்கியத் தூணாக இருந்து படத்தை காப்பாற்றி கரை சேர்ப்பவர் சூரிதான். பின்பாதி படத்தை மொத்தமாக தன் தோளில் தூக்கிச் சுமக்கிறார். அவரின் காமெடி ஒரு சில படங்களில்தான் மிக நன்றாக எடுபடும். இந்தப் படத்தில் அது நடந்துள்ளது.
படத்தில் எல்லா ஷாட்களுமே ஒரு பெரிய படத்தைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவது பெரிய ப்ளஸ். அதற்கு காரணமான கேமராமேன் பாராட்டுக்குரியவர். பின்னணி இசையும், பாடல்களும் படத்தை கமர்சியல் களத்திற்குள் கொண்டு செல்ல உதவியிருக்கிறது.
என்னதான் பக்கா கமர்சியல் படம் என்றாலும் இவ்வளவு லாஜிக் மீறல் இருக்க வேண்டுமா..? பிரபுவிடம் முகேன் தனது காதலைச் சொல்லத் தயங்குவதற்கான காரணம் அழுத்தமாகச் சொல்லப்படவில்லை. இடைவேளைக்குப் பிறகு காமெடியில் கவனம் செலுத்திய இயக்குநர் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். ஆனால் பேமிலியோடு சென்று இந்த ‘வேலனை’ ஒரு முறை பார்த்து வரலாம்.
RATING : 3 / 5
The post வேலன் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.
]]>The post “சின்னத்தம்பி-2’ படத்தை இப்போது எடுக்கலாமா..?” என்ற கேள்விக்கு பதிலளித்த குஷ்பூ..! appeared first on Touring Talkies.
]]>இதையடுத்து சில நாட்களுக்கு முன்பாக குஷ்பூ போலவே தனது அடையாளமாகவே இருந்த உடல் பருமனைக் குறைத்து சிக்கென்று அழகாகி குஷ்பூவுக்கே போட்டியாகிவிட்டார் நடிகர் பிரபு.
இப்படி இவர்கள் இருவருமே போட்டி போட்டிக் கொண்டு உடல் எடையைக் குறைத்துக் கொண்டு அதையும் போட்டோ எடுத்து அனுப்பியதைக் கண்டு பத்திரிகையாளர்களும் கொஞ்சம் ஷாக்காகித்தான் போனார்கள்.
ஏனெனில் பிரபு எப்போதும் தன்னுடைய புகைப்படங்களை தானே வெளியிட மாட்டார். ஆனால் இளைத்த காளையாக இருக்கும் தனது புதிய போட்டோவை அவரே வெளியிட்டதைப் பார்த்து ஒருவேளை.. இது குஷ்பூவின் போட்டோவுக்கு பதிலடியாக இருக்குமோ என்ற சந்தேகம் அனைவருக்குமே வந்திருக்கிறது.
இருந்தாலும் இப்படி இவர்கள் இருவருமே மறுபடியும் ஹீரோ, ஹீரோயின் ரேன்ச்சுக்கு மல்லுக் கட்டி நிற்பதால் இவர்களது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்ற ‘சின்னத்தம்பி’ படத்தின் அடுத்தப் பாகத்தை ஆரம்பிக்கலாமே என்று ரசிகர்களும் நினைத்த ஆரம்பித்துவிட்டனர்.
1991-ம் வரும் வெளியான தமிழ்ச் சினிமாவில் அனைத்து ரெக்கார்டுகளையும் முறியடித்துவிட்டு பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. மேலும் இப்படம் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் மறு உருவாக்கம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ரசிகர் ஒருவர் டிவிட்டரில் பிரபு மற்றும் குஷ்புவின் புகைப்படத்தைப் பகிர்ந்து, “இயக்குநர் வாசு சார், சந்திரமுகி இரண்டாம் பாகத்துக்கு முன், சின்னத்தம்பி இரண்டாம் பாகம் எடுக்கலாம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த நடிகை குஷ்பு சிரிப்பது போன்ற ஸ்மைலியை இதற்கான பதிலாக அளித்துள்ளார்.
உண்மையில் ‘சின்னத் தம்பி-2’ படத்தை இப்பொழுது எடுத்தால் நிச்சயமாக ஜெயிக்கும் என்பதே தமிழ்த் திரையுலக ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.
The post “சின்னத்தம்பி-2’ படத்தை இப்போது எடுக்கலாமா..?” என்ற கேள்விக்கு பதிலளித்த குஷ்பூ..! appeared first on Touring Talkies.
]]>