The post “பெருந்தன்மை உதயநிதி!” : மகிழ் திருமேனி சொல்லும் சம்பவம் appeared first on Touring Talkies.
]]>இது குறித்த ஒரு சம்பவத்தை வார இதழ் ஒன்றில் முதன் முதலாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
அவர், “முதலில் உதயநிதியிடம்தான் தடம் கதையைச் சொன்னேன். அவருக்கு அந்தக் கதை பிடித்து இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவர் நடிக்க முடியவில்லை. அதன் பிறகு அருண் விஜய் நடிக்க முடிவானது. படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்த நேரம்.
அப்போது உதயநிதியிடம் இருந்து அழைப்பு வந்தது. “தடம் படத்தை ஆரம்பிக்கலாம்” என்றார்.
நான், “மன்னிக்கணும் சார்.. வேறு நிறுவனத்துக்கு வாக்கு கொடுத்து விட்டேன்” என்றேன். அவரது ரீயாக்சன் எப்படி இருக்குமோ என்று நினைத்தேன்.
ஆனால் அவரே ஒரே வார்த்தையில், “சிறப்பாக செய்யுங்கள். அடுத்த படத்தில் இணைவோம்” என்றார்.
அதே போல தடம் படம் முடிவடைந்ததும், என்னை அழைத்து இந்த படத்துக்கான அட்வான்ஸ் அளித்தார்.
அந்த அளவுக்கு பெருந்தன்மையான மனிதன் உதயநிதி” என்றார் மகிழ் திருமேனி.
The post “பெருந்தன்மை உதயநிதி!” : மகிழ் திருமேனி சொல்லும் சம்பவம் appeared first on Touring Talkies.
]]>The post நடிகர் திலகத்திடமே அதிரடி காட்டிய இயக்குநர்! appeared first on Touring Talkies.
]]>ஒரு முறை இயக்குநர் வாசுவுக்கு, சிவாஜியை இயக்கும் வாய்ப்பு வந்தது. சிவாஜியிடம் கதை சொல்ல அவரது வீட்டுக்குச் சென்றார் வாசு.
வாசுவை கதை சொல்லச் சொன்ன சிவாஜி, அருகில் இருந்த டி.வி.யில் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்தார். அவ்வப்போது, வாசு சொல்வதற்கு ம் கொட்டிக்கொண்டு இருந்தார்.
திடீரென கதை சொல்வதை வாசு நிறுத்திவிட்டார். ஏன் என்று சிவாஜி கேட்க, “டிவி பார்த்துக்கொண்டே கதை கேட்டால் மனதில் பதியாது.. அதற்காகத்தான்” என்று இழுத்திருக்கிறார் வாசு.
டென்சன் ஆன சிவாஜி, “ யாரைப் பார்த்து இப்படிச் சொல்லுறே.. தூங்கிட்டு இருக்கிறப்போ கதை சொன்னாலும் மனசுல பதிய வச்சுக்குவேன்” என சொல்ல, தொடர்ந்து கதை சொல்லி இருக்கிறார் வாசு. பிறகு சிவாஜி, “என்னைப் பார்த்து தயங்காமல், டிவியை நிறுத்திட்டு கதையைக் கேள்னு சொன்னியே.. அதைப் பாராட்டுறேன். அதான் உன் கம்பீரம்” என சொல்லி பாராட்டி இருக்கிறார்.
The post நடிகர் திலகத்திடமே அதிரடி காட்டிய இயக்குநர்! appeared first on Touring Talkies.
]]>