The post வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் படத்தின் பெயர் ‘கஸ்டடி’ appeared first on Touring Talkies.
]]>நேர்மையான மற்றும் தீவிரமான ஒரு போலீஸ் அதிகாரியாக நாக சைதன்யா ‘சிவா’ என்ற கதாபாத்திரத்தில் தீமைக்கு எதிரானவராக நிற்கிறார். மேலும் தான் உறுதியாக நம்பும் ஒரு விஷயத்திற்காகவும் எதிர்த்து சண்டையிடுபவராகவும் இருக்கிறார்.
வழக்கமாக வெங்கட் பிரபு படங்களில் இடம்பெறும் டேக் ரசிகர்களிடையே கவனத்தைப் பெறும். அதுபோல, இந்தப் படத்திற்கு ‘A Venkat Prabhu Hunt’ என்ற டேக் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை வெளியாகியுள்ள அனைத்து போஸ்டர்களும் இந்தக் கதை ஒரு ஆக்ஷன் எண்டர்டெயினராக இருக்கும் என்பதையே உறுதிப்படுத்துகிறது.
‘நீ உலகத்தை எப்படி பார்க்க விரும்புகிறாயோ அதற்கான மாற்றமாக நீ இருக்க வேண்டும்’ என்ற மகாத்மா காந்தியின் புகழ் பெற்ற மேற்கோள் நாக சைதன்யாவின் இந்தப் படத்தின் கதாபாத்திரத்தோடு நெருங்கிய தொடர்புடையது.
ஆக்ஷன் எண்டர்டெயினராக உருவாகி வரக்கூடிய இந்த பைலிங்குவல் திரைப்படம் அதிக அளவிலான தயாரிப்பு மதிப்பீடுகளைக் கொண்டது. மாஸ்ட்ரோ இளையராஜா மற்றும் லிட்டில் மாஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்க, பவன் குமார் இந்தப் படத்தை வழங்குகிறார்.
The post வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் படத்தின் பெயர் ‘கஸ்டடி’ appeared first on Touring Talkies.
]]>The post நாக சைதன்யாவின் மிரட்டலான போலீஸ் அதிகாரி வேடம்..! appeared first on Touring Talkies.
]]>நாக சைதன்யாவின் பிறந்த நாள் நவம்பர் 23-ம் தேதி வருவதை ஒட்டி, பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ‘கேப்டன் கூல்’ இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசா சித்தூரி ஆகியோர் இருவரும் படத்தின் ப்ரீ-லுக் வெளியீட்டு தேதியை காணொளியில் அறிவித்துள்ளனர். பார்வையாளர்களை கவரும் விதமான இந்த ப்ரீ-லுக் இன்று வெளியாகியுள்ளது.
இந்த ப்ரீ லுக்கில் நாக சைதன்யா தீவிரமான காவல் துறை அதிகாரியாக வருகிறார். அவரது வேகத்தையும் தீவிரத்தையும் மட்டுப்படுத்தும் விதமாக சக போலீஸ் அதிகாரிகள் துப்பாக்கி மற்றும் ஃபோர்ஸூடன் இந்த ப்ரீ லுக்கில் உள்ளனர். மேலும், நவம்பர் 23 அன்று காலை 10.18-க்கு வெளியாக இருக்கும் முதல் பார்வைக்கான ஆர்வத்தையும் பார்வையாளர்களிடையே ஏற்படுத்தும்விதமாக இந்த ப்ரீ-லுக் அமைந்துள்ளது.
ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீனின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். மாஸ்ட்ரோ இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கின்றனர். அபூரி ரவி படத்திற்கு வசனங்கள் எழுத SR கதிர் ஒளிப்பதிவு செய்கிறார். பவன் குமார் இந்த படத்தை வழங்குகிறார்.
The post நாக சைதன்யாவின் மிரட்டலான போலீஸ் அதிகாரி வேடம்..! appeared first on Touring Talkies.
]]>The post வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் படம் துவங்கியது appeared first on Touring Talkies.
]]>நாக சைதன்யா கதையின் நாயகனாக நடிக்க, நடிகர் அரவிந்த் சுவாமி வில்லனாக நடிக்கிறார். கதையின் மிக முக்கியமான ஆக்ஷன் காட்சிகளுக்காக ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்ஷன் காட்சிகளுக்கான படப்பிடிப்பில் அரவிந்த் சுவாமி இணைந்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகள் மகேஷ் மாத்யூ மாஸ்டரின் மேற்பார்வையில் படமாக்கப்பட்டுள்ளது. நாக சைதன்யா மற்றும் அரவிந்த் சுவாமி இருவரையும் திரையில் இணைந்து பார்ப்பது நிச்சயம் பார்வையாளர்களுக்கு ஆர்வமூட்டக் கூடிய ஒன்றாக அமையும்.
கீர்த்தி ஷெட்டி, சரத்குமார் மற்றும் சம்பத் ராஜ் ஆகியோரும் இந்த ஷெட்யூலில் பங்கேற்று உள்ளனர். விறுவிறுப்பாக இதன் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகிறது. மேலும் இரு மொழிகளிலும் படமாக்கப்பட்டு வருகிறது.
இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் படத்தின் மூலம் நடிகர் நாக சைதன்யா நேரடித் தமிழ்ப் படத்தில் அறிமுகமாகிறார். அதேபோல, இயக்குநர் வெங்கட் பிரபு தெலுங்கில் இயக்குநராக அறிமுகமாகிறார். இசையில் மேதைகளான தந்தை-மகன் இணை ‘இசைஞானி’ இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர்.
நடிகர்கள்: நாகசைதன்யா, கீர்த்தி ஷெட்டி, அரவிந்த் சுவாமி, சரத்குமார், பிரியாமணி, சம்பத் ராஜ், பிரேம்ஜி அமரன், பிரேமி விஷ்வானந்த், வெண்ணிலா கிஷோர் மற்றும் பலர்.
தொழில் நுட்பக் குழு:
கதை, திரைக்கதை, இயக்கம்: வெங்கட்பிரபு,
தயாரிப்பாளர்: ஸ்ரீனிவாசா சித்தூரி,
பேனர்: ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்,
வழங்குபவர்: பவம் குமார்,
இசை: இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா,
வசனம்: அபூரி ரவி,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா (D’One),
டிஜிட்டல் மீடியா: விஷ்ணு தேஜ் புட்டா
The post வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் படம் துவங்கியது appeared first on Touring Talkies.
]]>The post ‘NC 22’ படத்தின் முக்கியமான ஷெட்யூல் மைசூரில் முடிந்தது! appeared first on Touring Talkies.
]]>தற்போது இந்தப் படத்தின் முக்கியமான ஷெட்யூல் மைசூரில் முடிவந்துள்ளது. இதில் நடிகர் நாக சைதன்யாவும் பங்கேற்றிருக்கிறார். மைசூரின் அழகிய இடங்கள் பலவற்றில் படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.
முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் இந்தப் படத்தில் நடித்து வருகிறார் நாக சைதன்யா. மேலும், அவரது சினிமா பயணத்தில் அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு வரக்கூடிய படமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இசையில் மேதமைகளான அப்பா- மகன் இணை ‘மாஸ்ட்ரோ’ இசைஞானி இளையராஜா மற்றும் ‘லிட்டில் மாஸ்ட்ரோ’ யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளனர்.
மதிப்புமிக்க ’ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கீரின்’ பேனரின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார். பவன்குமார் இந்தப் படத்தை வழங்குகிறார். அபூரி ரவி படத்திற்கு வசனம் எழுத, SR கதிர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
The post ‘NC 22’ படத்தின் முக்கியமான ஷெட்யூல் மைசூரில் முடிந்தது! appeared first on Touring Talkies.
]]>The post நாக சைதன்யாவின் படத்தில் அரவிந்த்சாமி, சரத்குமார், ப்ரியாமணி இணைந்தனர் appeared first on Touring Talkies.
]]>ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் பேனரின் கீழ் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசா சித்தூரி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
தற்காலிகமாக NC 22 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார்.
படத்தில் இணைந்துள்ள தொழில் நுட்பக் குழு மற்றும் நடிகர்கள் குறித்தான அறிவிப்பை படக் குழு தற்போது வெளியிட்டுள்ளது.
தங்களுடைய வித்தியாசமான கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்த திறமையான நடிகர்கள் அரவிந்த்சாமி, சரத்குமார், தேசிய விருது பெற்ற நடிகை ப்ரியாமணி ஆகியோர் இந்த ஆக்ஷன் எண்டர்டெயினர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளனர். ப்ரேம்ஜி அமரன், ப்ரேமி விஷ்வானந்த், சம்பத்ராஜ் மற்றும் வெண்ணிலா கிஷோர் ஆகியோரும் இந்தப் படங்களில் இணைந்துள்ள மற்ற முக்கிய நடிகர்களாகும்.
கதை, திரைக்கதை, இயக்கம் : வெங்கட்பிரபு, தயாரிப்பு: ஸ்ரீனிவாசா சித்தூரி, பேனர்: ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன், வழங்குபவர்: பவன்குமார், இசை: மாஸ்ட்ரோ இளையராஜா, லிட்டில் மாஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு: SR கதிர், படத் தொகுப்பு: வெங்கட் ராஜன், வசனம்: அபூரி ரவி, ப்ரொடக்ஷன் டிசைனர்: ராஜீவன், சண்டைப் பயிற்சி இயக்கம் : யானிக் பென், மகேஷ் மாத்யூ, கலை இயக்குநர்: DY சத்யநாராயணா.
நாக சைதன்யா இதுவரை கதாநாயகனாக நடித்த படங்களில் இந்த ‘NC-22’ படம்தான் அதிக பொருட்செலவில் உருவாகி வரக் கூடிய ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் படப்பிடிப்பு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கியது.
The post நாக சைதன்யாவின் படத்தில் அரவிந்த்சாமி, சரத்குமார், ப்ரியாமணி இணைந்தனர் appeared first on Touring Talkies.
]]>The post வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் படம் துவங்கியது appeared first on Touring Talkies.
]]>’NC22’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படம் நடிகர் நாகசைதன்யாவின் முதல் தமிழ் – தெலுங்கு பைலிங்குவல். அதேபோல, இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கும் தெலுங்கில் இயக்குநராக இது முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். இந்தப் படத்தை பவன்குமார் வழங்க உள்ளார்.
தற்போது இளைஞர்களுக்கு பிடித்த கதாநாயகியாக வலம் வரக் கூடிய கீர்த்தி ஷெட்டி, இந்தப் படத்தில் நாகசைதன்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். ’மாஸ்ட்ரோ’ இசைஞானி இளையராஜா மற்றும் ‘லிட்டில் மாஸ்ட்ரோ’ யுவன் ஷங்கர் ராஜா இருவரும் முதல் முறையாக இணைந்து இந்தப் படத்திற்கு இசையமைக்கின்றனர். இவர்கள் இருவருடைய இசையில் வெளியாகும் பாடல்கள் நிச்சயம் இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருப்பதோடு, படத்திற்கும் முக்கிய பலமாக இருக்கும்.
கதை, திரைக்கதை, இயக்கம் : வெங்கட்பிரபு, தயாரிப்பாளர் : ஸ்ரீனிவாசா சித்தூரி, பேனர் : ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன், வழங்குபவர் : பவன்குமார், இசை : ‘மாஸ்ட்ரோ’ இளையராஜா, ‘லிட்டில் மாஸ்ட்ரோ’ யுவன் ஷங்கர் ராஜா, வசனம் : அபூரி ரவி.
இப்படி பல எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் படத்தின் முக்கிய அப்டேட்டாக இந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நாளை துவங்கவுள்ளதாக படக் குழு அறிவித்திருக்கிறது.
இது குறித்து படக் குழுவினர் பேசும்போது, “அக்கினேனி நாகேஸ்வர ராவ் அவர்களின் ஆசியுடன் எங்களின் முக்கிய படைப்பான நடிகர் நாக சைதன்யா – இயக்குநர் வெங்கட் பிரபு இணையும் படத்தின் படப்பிடிப்பு நாளையில் இருந்து தொடங்குகிறது என தெரிவித்து கொள்கிறோம்…” என்று படத்தின் புதிய போஸ்டருடன் இந்த மகிழ்ச்சியான செய்தியை அறிவித்து இருக்கிறார்கள்.
இந்த போஸ்டரில் நாக சைதன்யாவின் படம் தொடர்பான எந்தவொரு லுக்கும் வெளியாகவில்லை. பதிலாக நாக சைதன்யா நின்று கொண்டிருக்கும்படி அவரது நிழல் உருவம் இருக்க, அவரை நோக்கி பல ரெட் டார்கெட்டுகள் இருக்கும்படி கருப்பு – சிவப்பு வண்ணத்தில் வைப்ரண்ட்டாக இந்த போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது.
The post வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் படம் துவங்கியது appeared first on Touring Talkies.
]]>The post “சமந்தாவை நேரில் பார்த்தால்..?” நாக சைதன்யா சொன்ன பதில் appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில் ‘லால் சிங் சத்து’ படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் நாக சைதன்யாவிடம் சமந்தா பற்றி கேள்வியெழுப்பட்டது.
“சமந்தாவை இப்போது நேரில் சந்தித்தால் என்ன செய்வீர்கள்?” என்று பத்திரிகையாளர் ஒருவர் கேட்டபோது, அதற்குப் பதிலளித்த நாக சைதன்யா, “ஹாய் சொல்லி அணைத்துக் கொள்வேன்..” என்று பதிலளித்தார்.
மேலும் தனது கையில் போடப்பட்டிருக்கும் டாட்டூவைப் பற்றிப் பேசிய நாக சைதன்யா, “என் கைகளிலுள்ள டாட்டூவைப் போல் எனது ரசிகர்கள் பலர் போட்டிருப்பதை சமீப நாட்கள் நான் பார்க்கிறேன். எனது திருமண நாளைத்தான் நான் டாட்டூவாகப் போட்டிருக்கிறேன். இதனால் யாரும் அந்த டாட்டூவை போட வேண்டாம். ஏனென்றால் சில விஷயங்கள் வரும் காலத்தில் மாறலாம் இல்லையா. ஏன் நானேகூட இந்த டாட்டூவை மாற்றலாம். அதனால் ரசிகர்கள் டாட்டூ போட விரும்பினால் நான் போட்டிருப்பது போன்ற டாட்டூவைத் தேர்வு செய்ய வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டார்.
The post “சமந்தாவை நேரில் பார்த்தால்..?” நாக சைதன்யா சொன்ன பதில் appeared first on Touring Talkies.
]]>The post “முதல்ல உங்க குடும்பத்தை பாருங்க” – வதந்தியாளர்களுக்கு நடிகை சமந்தா அட்வைஸ் appeared first on Touring Talkies.
]]>நடிகை சமந்தா தனது கணவரான நாக சைதன்யாவிடமிருந்து பிரிந்து தனியே வாழ்ந்து வருகிறார். என்றாலும் இன்னமும் முறைப்படி இருவரும் விவகாரத்து கோரி வழக்கு தொடரவில்லை.
இந்த நிலையில் நாக சைதன்யாவுக்கும் பிரபல பாலிவுட் நடிகையான சோபிதா துலிபலாவுக்கும் இடையில் காதல் மலர்ந்திருப்பதாக தெலுங்கு பத்திரிகைகளில் செய்திகள் ரெக்கை கட்டி பறந்து வருகின்றன.
இந்தச் செய்திகளை இப்படி பரப்புரை செய்து வருவதே சமந்தாவின் ரசிகர்கள்தான் என்று நாக சைதன்யாவின் ரசிகர்கள் திடீர் என்று போர்க் கொடி தூக்க.. இரு தரப்பு ரசிகர்களிடையேயும் டிவிட்டரில் பெரும் சண்டையே நடந்து வருகிறது.
இந்த நிலையில் இது குறித்து நடிகை சமந்தா கருத்துத் தெரிவித்துள்ளார்.
“பெண் பற்றிய வதந்திகள் உண்மையாக இருக்க வேண்டும். ஆண் பற்றிய வதந்தி பெண்களால் விதைக்கப்பட்டதாக இருக்க வேண்டும். வளருங்கள்… சம்பந்தப்பட்டவர்கள் நகர்ந்து விட்டார்கள். நீங்களும் நகருங்கள். உங்கள் வேலைகளில் கவனம் செலுத்துங்கள். உங்கள் குடும்பத்தை கவனியுங்கள்.. போங்கள்…” என்று கோபமாக எழுதியுள்ளார் நடிகை சமந்தா.
நாக சைதன்யாவுடன் கிசுகிசுக்கப்படும் நடிகை ஷோபிதா துலிபலா சமீபத்தில் வெளிவந்த தெலுங்குப் படமான ‘மேஜர்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சில ஹிந்தி, மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்.
The post “முதல்ல உங்க குடும்பத்தை பாருங்க” – வதந்தியாளர்களுக்கு நடிகை சமந்தா அட்வைஸ் appeared first on Touring Talkies.
]]>The post “கணவரை பிரிகிறேன்” – சமந்தா அதிகாரப்பூர்வ அறிவிப்பு appeared first on Touring Talkies.
]]>நடிகை சமந்தாவிற்கும், அவரது கணவருக்கும் இடையில் கடந்த சில மாதங்களாகவே பிரச்சினைகள் ஓடிக் கொண்டிருப்பதாகச் செய்திகள் வெளிவந்து கொண்டேயிருந்தன.
இந்தச் செய்திக்கு ஆதாரம் அளிப்பதைப் போல அதுவரையிலும் சமந்தா அக்கினேனி என்ற குடும்பப் பெயரில் டிவிட்டர் ஐடியில் இருந்த சமந்தா திடீரென்று தனது பெயரில் இருந்த அக்கினேனியை நீக்கிவிட்டார். இதையடுத்து சமந்தா அந்தக் குடும்பத்தில் இருந்து விலகப் போவதாகச் செய்திகள் எட்டுத் திக்கும் பரவின.
இதற்கு அச்சாரமாக நாகார்ஜூனாவின் பிறந்த நாளைக்கு சமந்தா வாழ்த்துத் தெரிவிக்க.. சமந்தாவைத் தவிர மற்றவர்களுக்கு நாகார்ஜூனா நன்றி தெரிவித்ததும்.. லவ் ஸ்டோரி படம் தொடர்பான பேட்டியில் பத்திரிகைகள் தனது பெர்ஸனல் லைபை தோண்டித் துருவுவதாக நாக சைதன்யா புலம்பினாலும் டைவர்ஸ் பற்றியோ, பிரிவு பற்றியோ ஒரு வார்த்தைகூட சொல்லாதது இந்தச் செய்தி உண்மைதான் என்பதை ஊர்ஜிதப்படுத்தியது.
இன்றைக்கு சமந்தா தனது டிவீட்டர் பக்கத்தில் இந்தச் செய்தி உண்மைதான் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தேவிட்டார்.
சமந்தா வெளியிட்டிருக்கும் செய்தியில், “நானும் சைதன்யாவாவும் கணவன்-மனைவி என்ற உறவில் இருந்து விலகுகிறோம். அவரவர் பாதையில் செல்லப் போகிறோம். நாங்கள் இருவரும் கொண்டிருந்த நட்பு என்றென்றும் விலக்க முடியாத ஒரு பந்தமாகத் தொடரும்.
எங்களுடைய இந்த வித்தியாசமான காலக்கட்டத்தில் அடுத்தக் கட்ட நகர்விற்கு எங்களுடைய ரசிகர்களும், நலம் விரும்பிகளும், பத்திரிகையாளர்களும் எங்களுக்கு உறுதுணையாய் இருக்க வேண்டும்..” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுக்குய்யா இம்புட்டு காதல், கல்யாணம் அலப்பறை கொடுத்தீங்க..!!?
The post “கணவரை பிரிகிறேன்” – சமந்தா அதிகாரப்பூர்வ அறிவிப்பு appeared first on Touring Talkies.
]]>