The post நடிகை பிரியாமணியின் திருமண வாழ்வில் சிக்கல்..! appeared first on Touring Talkies.
]]>பெங்களூரைச் சேர்ந்த நடிகை பிரியாமணி 2003-ம் ஆண்டு ‘கண்களால் கைது செய்’ என்ற தமிழ்ப் படத்தில் நடித்து அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடப் படங்களில் நடித்திருந்தார். கடந்த 2007-ம் ஆண்டு இயக்குநர் அமீரின் இயக்கத்தில் உருவான ‘பருத்தி வீரன்’ படத்தில் ‘முத்தழகி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றிருந்தார் பிரியாமணி.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த பிரியாமணி 2017-ம் ஆண்டு திருமணமாகி இரு குழந்தைகளுக்கு தந்தையான முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்குப் பிறகும் படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட பிரபமான ‘தி பேமிலி மேன்’ வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். கடந்த நான்கு வருடங்கள் எந்தப் பிரச்சனையுமில்லாமல் கழிந்த பிரியாமணியின் திருமண வாழ்க்கையில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
“நானும், முஸ்தபாவும் எங்களது இரு குழந்தைகளின் நலன் கருதி இதுவரை சட்டப்படி விவாகரத்து செய்யவில்லை. அதனால், முஸ்தபாவின் இரண்டாவது திருமணம் செல்லாது” என ஆயிஷா கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள முஸ்தபா, “2010-ம் ஆண்டிலேயே நானும், ஆயிஷாவும் பிரிந்துவிட்டோம். 2013-ம் ஆண்டில் சட்டப்படி விவகாரத்தும் பெற்றோம். அதன் பின்புதான் நான் பிரியாமணியை திருமணம் செய்தேன். பிரியாமணியுடன் திருமணம் முடிந்து கடந்த 4 ஆண்டுகளாக என் மகள்களுக்கு நான் தர வேண்டிய ஜீவனாம்சத் தொகையை சரியாகக் கொடுத்து வருகிறேன். நான்காண்டுகள் சும்மாயிருந்துவிட்டு இப்போது தேவையில்லாமல் ஆயிஷா பிரச்சனையை கிளப்புகிறார்..” என கூறியுள்ளார்.
ஆனால், தனது முடிவில் உறுதியாக இருக்கும் ஆயிஷா, “பிரியாமணியை திருமணம் செய்கையில் தானொரு பேச்சிலர் என்றுதான் முஸ்தபா நீதிமன்றத்தில் கூறினார். குழந்தைகள் நலனுக்காக பிரச்சனைகள் தீரும் என இதுவரை காத்திருந்தேன். இனி முஸ்தபா மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்..” என கூறியுள்ளார்.
ஆயிஷாவின் இந்த திடீர் அதிரடி பேட்டியால் பிரியாமணியின் திருமண வாழ்க்கையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நடிகை பிரியாமணி இதுவரையிலும் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
The post நடிகை பிரியாமணியின் திருமண வாழ்வில் சிக்கல்..! appeared first on Touring Talkies.
]]>The post “மதம் மாறச் சொல்லியிருந்தால் திருமணமே செய்திருக்க மாட்டேன்” – நடிகை பிரியாமணி சொல்கிறார் appeared first on Touring Talkies.
]]>ஆனால் இதற்குப் பின்பும், தமிழில் மட்டும் அவருக்கேற்ற கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை என்றாலும் இப்போதும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
இவர் 2017-ம் ஆண்டு முஸ்தபா என்பவரை நான்காண்டு காலமாக காதலித்து மணம் புரிந்து கொண்டார் பிரியாமணி. முஸ்லீமான முஸ்தபாவும், இந்துவான பிரியாமணியும் இப்போதுவரையிலும் அவரவர் மதத்திலேயே வாழ்ந்து வருகிறார்கள்.
இது குறித்து பிரியாமணி பேசுகையில், “திருமணத்திற்கு முன்பேயே என் கணவர் முஸ்தபா என்னிடம் மதம் மாறுவது சம்பந்தமாக ஏதும் பேசவில்லை. கட்டாயப்படுத்தவும் இல்லை. ஒருவேளை என்னிடம் அப்படி மதம் மாறும்படி கேட்டிருந்தால், நிச்சயமாக நான் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டிருக்கவே மாட்டேன்.
முஸ்தபா இப்போதுவரையிலும் என் சுதந்திரத்தை மதிக்கிறார். நாங்கள் இருவரும் அவரவர் மதங்களையும் மதிக்கிறோம். தீவிரமான காதலால் உருவான கல்யாணம் என்பதால் எங்களுக்குள் மதம் தொடர்பான எந்தப் பிரச்சினையும் இதுவரையிலும் எழவில்லை. இரண்டு மதம் சார்ந்த பண்டிகைகளையும் எங்களது வீட்டில் கொண்டாடுவோம்..” என்று சொல்லியிருக்கிறார்.
The post “மதம் மாறச் சொல்லியிருந்தால் திருமணமே செய்திருக்க மாட்டேன்” – நடிகை பிரியாமணி சொல்கிறார் appeared first on Touring Talkies.
]]>