Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
நடிகை அஞ்சலி – Touring Talkies https://touringtalkies.co Thu, 27 Oct 2022 16:52:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png நடிகை அஞ்சலி – Touring Talkies https://touringtalkies.co 32 32 நடிகை அஞ்சலியின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஜான்ஸி’ இணைய தொடர் https://touringtalkies.co/janshi-web-series-press-meet-news/ Thu, 27 Oct 2022 16:51:46 +0000 https://touringtalkies.co/?p=26146 Tribal Horse Entertainment நிறுவனத்தின் சார்பில் டிஸ்னி + ஹாட் ஸ்டார் தளத்திற்காக, நடிகர் கிருஷ்ணா தயாரித்துள்ள வெப் சீரீஸ் ‘ஜான்ஸி’. இயக்குநர் திருவின் இயக்கத்தில், கணேஷ் கார்த்திக்கின் கதை மற்றும் திரைக்கதையில், நடிகை அஞ்சலி முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் இந்த ஜான்ஸி இணையத் தொடர் 10 எபிசோடுகளைக் கொண்டதாகும். இந்த சீரீஸில் அஞ்சலி, சாந்தினி சௌத்திரி, ராஜ் அர்ஜுன், ஆதர்ஷ் பாலகிருஷ்ணா, ராமேஸ்வரி தல்லூரி, சம்யுக்தா ஹார்நாட், சரண்யா ராமச்சந்திரன், சுரேஷ் சக்ரவர்த்தி, கல்யாண் மாஸ்டர், […]

The post நடிகை அஞ்சலியின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஜான்ஸி’ இணைய தொடர் appeared first on Touring Talkies.

]]>
Tribal Horse Entertainment நிறுவனத்தின் சார்பில் டிஸ்னி + ஹாட் ஸ்டார் தளத்திற்காக, நடிகர் கிருஷ்ணா தயாரித்துள்ள வெப் சீரீஸ் ‘ஜான்ஸி’.

இயக்குநர் திருவின் இயக்கத்தில், கணேஷ் கார்த்திக்கின் கதை மற்றும் திரைக்கதையில், நடிகை அஞ்சலி முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் இந்த ஜான்ஸி இணையத் தொடர் 10 எபிசோடுகளைக் கொண்டதாகும்.

இந்த சீரீஸில் அஞ்சலி, சாந்தினி சௌத்திரி, ராஜ் அர்ஜுன், ஆதர்ஷ் பாலகிருஷ்ணா, ராமேஸ்வரி தல்லூரி, சம்யுக்தா ஹார்நாட், சரண்யா ராமச்சந்திரன், சுரேஷ் சக்ரவர்த்தி, கல்யாண் மாஸ்டர், முமைத் கான் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இயக்கம் – திரு, ஒளிப்பதிவு – அர்வி, இசை – ்ரீசரண் பக்கலா, படத் தொகுப்பு – ஆண்டனி, சண்டைப் பயிற்சி இயக்கம் – யானிக் பென், உடை வடிவமைப்பு  – அனு வர்தன், கலை இயக்கம் – ராஜ் கமல், தயாரிப்பாளர் – கிருஷ்ணா குலசேகரன், தயாரிப்பு நிறுவனம் – Tribal Horse Entertainment, ஓடிடி தளம் – டிஸ்னி + ஹாட் ஸ்டார்.

வாழ்வின் கடந்த கால நினைவுகளை மறந்து போன ஒரு பெண், கடந்த காலத்தின் பின்னிருக்கும் ரகசியங்களை தேடுவதே, இந்த தொடரின் கதை.

இத்தொடர் டிஸ்னி + ஹாட் ஸ்டார் தளத்தில் அக்டோபர் 27-ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி முதலாக பல மொழிகளில் உலகமெங்கும் வெளியாகிறது.

இதையொட்டி இத்தொடரின் குழுவினர் கலந்து கொள்ள பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் பத்திரிக்கையாளர் முன் திரையிடல் நிகழ்ச்சி நேற்று பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இவ்விழாவில்  நடிகர் ஆதித்யா  பேசும்போது, “என்னுடைய ஃபர்ஸ்ட் புராஜக்ட்டுக்கு கிருஷ்ணா சார்தான் புரொடியூசர். அவர் என் ஷோ ரீல் பார்த்து அரை மணி நேரம் பாராட்டினார். ஒரு நடிகராக இருந்து கொண்டு அடுத்தவரை பாராட்ட பெரிய மனம் வேண்டும். அவர் கூப்பிட்டபோது நான் யோசிக்கவே இல்லை. உடனே ஒப்புக் கொண்டேன். தெலுங்கில் நானே டப் பண்ணியிருக்கேன். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.” என்றார்.

எழுத்தாளர் கணேஷ் கார்த்திக் பேசும்போது, “இந்தக் கதையை எழுதிவிட்டு பலரிடம் சொல்லிக் கொண்டிருந்தபோதுதான் கிருஷ்ணா சாரை சந்தித்தேன். அவர் கேட்டவுடன் “இதை நாம் பண்ணலாம்” என்றார். இயலாமை கொண்ட ஒரு பெண்ணின் கோபம்தான் இந்தக் கதை.

மிகவும் அர்ப்பணிப்போடு உருவாக்கியுள்ளோம். திரு சாரிடம் இத்தொடரில் வேலை பார்த்து நிறைய கற்றுக் கொண்டேன். அஞ்சலி கேமரா முன் வந்துவிட்டால் அப்படியே கதாப்பாத்திரமாக மாறிவிடுவார். மிக திறமைசாலி. என்னுடைய திரை வாழ்வின் ஆரம்ப பயணம்  இந்த ‘ஜான்ஸி’. உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்…” என்றார்.

இயக்குநர் திரு பேசும்போது, “கிருஷ்ணா ஒரு நாள் எனக்கு போன் செய்து இந்தக் கதையைப் பற்றி சொன்னார். முதலில் வெப் சீரிஸாக எடுக்க நிறைய தயக்கம் இருந்தது. இதை எப்படி எடுக்க முடியும் என பயமாக இருந்தது. மிகப் பெரிய ஸ்கேலில் எடுக்க வேண்டிய கதை இது.

எல்லோரும் சேர்ந்து அதை குறிப்பிட்ட பட்ஜெட்டில் 10 எபிஸோடில் எடுத்துள்ளோம். இதில் மிகப் பெரிய ப்ளஸ் திரைக்கதைதான். மிக அட்டகாசமாக எழுதியிருந்தார். பார்க்கும்போது உங்களுக்கு தெரியும். கிருஷ்ணாவுடன் நடிகராக அவரை இயக்குவேன் என நினைத்தேன். ஆனால், அவர் புரடியூசராக இருக்கும் படைப்பில் வேலை பார்த்திருக்கிறேன். என்னை அவ்வளவு நன்றாக பார்த்துக் கொண்டார்.

ஒளிப்பதிவாளர் மிக அட்டகாசமாக செய்துள்ளார். ஜீகே மிக சிறந்த இயக்குநராக வருவார். அஞ்சலி இதில் அதிரடி ஆக்சன் பண்ணியிருக்கார். எல்லோரும் கடினமாக உழைத்துள்ளார்கள். இந்தப் படைப்பு கண்டிப்பாக உங்களை ஆச்சரியப்படுத்தும் நன்றி.” என்றார்.

நடிகரும், தயாரிப்பாளருமான கிருஷ்ணா பேசும்போது, “இந்த வருடம் எனக்கு படம் எதுவும் வரவில்லை என்பதால் உங்களை சந்திக்க முடியவில்லை. ஆனால் அடுத்ததாக பெல்பாட்டம்’ வருகிறது.

எனக்கு தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும் என்பது கனவு. இது எங்கள் நிறுவனத்தின் மூன்றாவது படைப்பு. ஹாட் ஸ்டாரில் இந்த கதையை சொன்னவுடன் ஒப்புக் கொண்டார்கள். ஜீகேயிடம் இதை பெரிய இயக்குநர் செய்தால் நல்லாயிருக்கும் என்றவுடன்  ஜீகே ஒப்புக் கொண்டார். திருவிடம், ஜீகே “ஒரு எபிஸோடாவது டைரக்ட் பண்ணணும்” என்றேன். அவரும் பெருந்தன்மையாக “ஓகே” என்றார்.

அஞ்சலி போன்ற திறமையான நடிகர்களை பல மொழிகளிலும் இருந்து கூட்டி வந்திருக்கிறோம். “இந்தப் படத்தில் எனக்கு எதாவது வேஷம் கொடுங்க” என்று கேட்டேன். ஆனால் கடைசிவரை தரவில்லை. இந்தத் தொடர் மிக நன்றாக வந்துள்ளது. முக்கியமாக இத்தொடருக்கு பெரும் ஒத்துழைப்பு தந்த டிஸ்னி + ஹாட் ஸ்டாருக்கு நன்றி. இது எங்கள் மனதுக்கு மிகவும் பிடித்தப் படைப்பு..” என்றார்.

The post நடிகை அஞ்சலியின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஜான்ஸி’ இணைய தொடர் appeared first on Touring Talkies.

]]>
“அஞ்சலியுடன் காதலா..?”-குழப்பமாக பதில் சொன்ன நடிகர் ஜெய் https://touringtalkies.co/actor-jai-explained-about-his-co-star-anjali/ Mon, 16 Aug 2021 11:33:25 +0000 https://touringtalkies.co/?p=17066 நடிகர் ஜெய்யும், நடிகை அஞ்சலியும் காதலிப்பதாகவும், இருவரும் திருமணம் செய்யவிருப்பதாகவும் தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருந்த நிலையில் இப்போது இருவருமே சைலண்ட் மோடுக்கு சென்றுவிட்டார்கள். காதல் பிரிவா.. அல்லது அமைதியா என்ற கேள்விக்கு இருவருமே பதில் சொல்லாமல் தவிர்த்து வந்த நிலையில் ஜெய் மட்டும் இதற்குப் பதிலளித்துள்ளார். அவர் அளித்துள்ள பதிலில், “நான் படங்களில் காதல் நாயகனாக நடிப்பதால்தான் இப்படியெல்லாம் என்னைச் சுற்றி வதந்திகள் பரவி வருகின்றன. எனக்கு இளைஞர்கள் வட்டாரத்தில்தான் நிறைய ரசிகர், ரசிகைகள் இருக்கிறார்கள். […]

The post “அஞ்சலியுடன் காதலா..?”-குழப்பமாக பதில் சொன்ன நடிகர் ஜெய் appeared first on Touring Talkies.

]]>
நடிகர் ஜெய்யும், நடிகை அஞ்சலியும் காதலிப்பதாகவும், இருவரும் திருமணம் செய்யவிருப்பதாகவும் தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருந்த நிலையில் இப்போது இருவருமே சைலண்ட் மோடுக்கு சென்றுவிட்டார்கள்.

காதல் பிரிவா.. அல்லது அமைதியா என்ற கேள்விக்கு இருவருமே பதில் சொல்லாமல் தவிர்த்து வந்த நிலையில் ஜெய் மட்டும் இதற்குப் பதிலளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள பதிலில், “நான் படங்களில் காதல் நாயகனாக நடிப்பதால்தான் இப்படியெல்லாம் என்னைச் சுற்றி வதந்திகள் பரவி வருகின்றன. எனக்கு இளைஞர்கள் வட்டாரத்தில்தான் நிறைய ரசிகர், ரசிகைகள் இருக்கிறார்கள். இதனால்தான் இந்த இமேஜ் எனக்கு ஏற்பட்டுள்ளது.

நான் காதலில் விழுந்ததெல்லாம் சினிமாவுக்குள் வந்த பின்புதான். ஒண்ணு, ரெண்டுன்னா சொல்லலாம். நிறைய இருக்கு. அதனால் எல்லாத்தையும் சொல்ல முடியாது. நான் நிறைய பேர்களைக் காதலித்தேன். இப்போது அவர்களின் பெயர்களைச் சொன்னால் அவர்களின் கணவர்கள் சண்டைக்கு வந்துவிடுவார்கள். அவர்கள் எல்லாருக்குமே இன்று குழந்தைகள் இருக்கிறார்கள்.

அஞ்சலியைப் பற்றியே எல்லாரும் என்னிடம் கேள்வி கேட்கிறார்கள். அவருக்கும், எனக்கும் காதலா என்பது பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. அவர் தற்போது அவரது வேலையைப் பார்க்கிறார். நான் எனது வேலையைப் பார்க்கிறேன். நாங்கள் இருவருமே தற்போது சுதந்திரப் பறவைகள். ஆனால் நிச்சயமாக நான் காதல் திருமணம்தான் செய்வேன்..” என்று சொல்லி முடித்திருக்கிறார்.

The post “அஞ்சலியுடன் காதலா..?”-குழப்பமாக பதில் சொன்ன நடிகர் ஜெய் appeared first on Touring Talkies.

]]>
கன்னடத்துக்குத் தாவினார் இயக்குநர் விஜய் மில்டன் https://touringtalkies.co/director-vijay-milton-directs-a-kannada-movie-with-sivarajkumar/ Fri, 20 Nov 2020 05:00:00 +0000 https://touringtalkies.co/?p=10205 ‘கோலி சோடா’ மூலம் தமிழ் சினிமாவில் டைரக்டராக, தனக்கென்று ஒரு அடையாளத்தைப் பெற்றவர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன். அந்த அடையாளத்தோடு தற்போது கன்னட திரையுலகில் ஒரு இயக்குநராக காலடி எடுத்து வைக்கிறார். இவர் இயக்கவிருக்கும் முதல் படத்தை விஜய் மில்டனின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ரஃப் நோட் நிறுவனம், பெங்களூரை சேர்ந்த கிருஷ்ணா கிரியேஷன்ஸ் பட நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. தனது முதல் படத்திலேயே கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான சிவராஜ் குமாரை இயக்கும் வாய்ப்பைப் […]

The post கன்னடத்துக்குத் தாவினார் இயக்குநர் விஜய் மில்டன் appeared first on Touring Talkies.

]]>
‘கோலி சோடா’ மூலம் தமிழ் சினிமாவில் டைரக்டராக, தனக்கென்று ஒரு அடையாளத்தைப் பெற்றவர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன். அந்த அடையாளத்தோடு தற்போது கன்னட திரையுலகில் ஒரு இயக்குநராக காலடி எடுத்து வைக்கிறார்.

இவர் இயக்கவிருக்கும் முதல் படத்தை விஜய் மில்டனின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ரஃப் நோட் நிறுவனம், பெங்களூரை சேர்ந்த கிருஷ்ணா கிரியேஷன்ஸ் பட நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது.

தனது முதல் படத்திலேயே கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான சிவராஜ் குமாரை இயக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் விஜய் மில்டன்.

இப்படத்தில் சிவராஜ் குமாருக்கு  ஜோடியாக  அஞ்சலி நடிக்கிறார். கன்னடத்தில் இப்பொழுது பிரபலமாக பேசப்பட்டு வரும் நடிகர் டாலி தனஞ்செயா இன்னொரு வேடத்தில் நடிக்கிறார். மேலும் ப்ரதீவ், உமாஸ்ரீ மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார் எஸ்.டி.விஜய் மில்டன். படத்துக்கு ஜெ.அனூப் சீலின் இசையமைக்கிறார். பிரகாஷா புட்டசாமி கலை இயக்குநராக பணிபுரிகிறார். சுப்ரீம் சுந்தர் சண்டை பயிற்சி செய்கிறார். மக்கள் தொடர்பு – ஜான்சன்.

இப்படத்தின் பூஜை பெங்களூரில் நேற்று நடந்தது. வரும் நவம்பர் 23-ம் தேதி முதல்  இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் உள்ள இசைக் கல்லூரியில் ஆரம்பமாகிறது. படப்பிடிப்பு பெங்களூரில் 40 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.

The post கன்னடத்துக்குத் தாவினார் இயக்குநர் விஜய் மில்டன் appeared first on Touring Talkies.

]]>
‘நிசப்தம்’ படத்திற்காக ரசிகர்களிடத்தில் ‘ஸாரி’ கேட்ட நடிகர் மாதவன் https://touringtalkies.co/actor-madhavan-apoligize-about-nishapdham-movies-failture/ Sun, 11 Oct 2020 06:25:16 +0000 https://touringtalkies.co/?p=8590 ஒரு மிகப் பெரிய நடிகர் தான் நடித்த திரைப்படம் தோல்வி என்பதை பகிரங்கமாக ஒத்துக் கொள்வது என்பதெல்லாம் சாதாரண விஷயமல்ல. அவ்வளவு சீக்கிரமாக யாரும் தோல்வியை ஒத்துக் கொள்ள மாட்டார்கள். சில வருடங்கள் கழித்து.. அல்லது அவர்களது நினைவுகளை பத்திரிகைகளில் எழுதும்போதுதான் இது பற்றிக் குறிப்பிடுவார்கள். ஆனால், இப்போதுதான் படம் வெளியாகி ஒரு வாரத்திற்குள்ளாகவே படம் சரியாக போகவில்லை ஒத்துக் கொள்கிறேன் என்று ஒரு நடிகர் பகிரங்கமாக சொல்லியிருப்பது நடந்திருக்கிறது. இதனைச் செய்திருப்பவர் நடிகர் மாதவன். மாதவன், […]

The post ‘நிசப்தம்’ படத்திற்காக ரசிகர்களிடத்தில் ‘ஸாரி’ கேட்ட நடிகர் மாதவன் appeared first on Touring Talkies.

]]>
ஒரு மிகப் பெரிய நடிகர் தான் நடித்த திரைப்படம் தோல்வி என்பதை பகிரங்கமாக ஒத்துக் கொள்வது என்பதெல்லாம் சாதாரண விஷயமல்ல. அவ்வளவு சீக்கிரமாக யாரும் தோல்வியை ஒத்துக் கொள்ள மாட்டார்கள். சில வருடங்கள் கழித்து.. அல்லது அவர்களது நினைவுகளை பத்திரிகைகளில் எழுதும்போதுதான் இது பற்றிக் குறிப்பிடுவார்கள்.

ஆனால், இப்போதுதான் படம் வெளியாகி ஒரு வாரத்திற்குள்ளாகவே படம் சரியாக போகவில்லை ஒத்துக் கொள்கிறேன் என்று ஒரு நடிகர் பகிரங்கமாக சொல்லியிருப்பது நடந்திருக்கிறது. இதனைச் செய்திருப்பவர் நடிகர் மாதவன்.

மாதவன், அனுஷ்கா, அஞ்சலி நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் உருவான திரைப்படம் ‘நிசப்தம்’. 35 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஏற்பட்ட லாக்டவுனில் சிக்கியதால் தியேட்டர்களுக்கு வர முடியவில்லை.

கடைசியாக சென்ற வாரம்தான் அமேஸான் பிரைம் வீடியோ என்னும் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. வெளியான முதல் நாளிலிருந்தே அந்தப் படத்திற்கு சரியான வரவேற்பில்லை. காரணம் சரியான கதை, திரைக்கதை இல்லாததுதான். இந்தப் படத்துக்கா இவ்வளவு பில்டப்பு என்பது போல ரசிகர்கள் கருதியதால் படம் அப்படியே அமுங்கிப் போனது.

இந்த எதிர்பாராத தோல்வியை உணர்ந்த படத்தின் நாயகன் மாதவன் தனது ரசிகர்களிடத்தில் இதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து டிவிட்டரில் அவர் வெளியிட்ட செய்தியில் “நிசப்தம்’ படத்தைப் பெரிதாக எதிர்பார்த்தேன். பட்.. சரியாக வரவில்லை.. ஸாரி…” என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமும் மூன்று வேளையும் நிசப்தம் படத்திற்கு தனது டிவிட்டரில் விளம்பரம் செய்து கொண்டிருந்த மாதவன், இப்போது அதனை நிறுத்திவிட்டு அடுத்து அவரும் ஷ்ரத்தா ஶ்ரீநாத்தும் நடித்து வெளியாகக் காத்திருக்கும் ‘மாறா’ படத்திற்கான பிரமோஷனை ஆரம்பித்துவிட்டார் என்பது கொசுறு செய்தி.

The post ‘நிசப்தம்’ படத்திற்காக ரசிகர்களிடத்தில் ‘ஸாரி’ கேட்ட நடிகர் மாதவன் appeared first on Touring Talkies.

]]>