The post ‘சீயான்’ விக்ரம் – பா.ரஞ்சித் இணையும் ‘தங்கலான்’ படம்..! appeared first on Touring Talkies.
]]>தமிழ் சினிமாவில் சமீபத்திய ஆண்டுகளில் தன் தனி முத்திரையை பதித்த முன்னணி இயக்குநரான பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம்தான் இந்தத் ‘தங்கலான்’.
கோலார் தங்க வயலைக் கதைக் களப் பின்னணியாகக் கொண்டு, ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்தப் படத்தை, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜாவும், நீலம் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித்தும் இணைந்து பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரிக்கிறார்கள்.
இந்தப் படத்தில் ‘சீயான்’ விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் நடிகைகள் பார்வதி, மாளவிகா மோகன், நடிகர்கள் பசுபதி, ஹரி கிருஷ்ணன், அன்பு துரை உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
ஏ.கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். தமிழ் பிரபா இணை கதாசிரியராக பணியாற்ற, கலை இயக்கத்தை எஸ்.எஸ்.மூர்த்தி கையாள, படத் தொகுப்பு பணிகளை ஆர்.கே.செல்வா கவனிக்க, சண்டை காட்சிகளை ஸ்டன்னர் சாம் அமைக்கிறார்.
‘சீயான்-61’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்த இப்படத்திற்கு தற்போது ‘தங்கலான்’ என பெயரிடப்பட்டிருக்கிறது. இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் காணொளி, ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
‘சீயான்’ விக்ரம் ரசிகர்களுக்கு, அவர் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு, தீபாவளி விருந்தாக வெளியாகியிருப்பதால் உற்சாகமடைந்த அவர்கள், இதை தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
The post ‘சீயான்’ விக்ரம் – பா.ரஞ்சித் இணையும் ‘தங்கலான்’ படம்..! appeared first on Touring Talkies.
]]>The post ‘கோப்ரா’ குழுவினரை கோலாகலமாக வரவேற்ற பெங்களூரூ ரசிகர்கள் appeared first on Touring Talkies.
]]>வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி அன்று உலகம் முழுவதும் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகவிருக்கும் ‘கோப்ரா’ திரைப்படத்தை, தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
இந்தக் ‘கோப்ரா’ படத்தை ரசிகர்களிடம் பிரபலப்படுத்துவதற்காக அப்படத்தின் நாயகனான ‘சீயான்’ விக்ரம் தலைமையிலான குழுவினர் நாடு முழுவதும் முக்கிய நகரங்களுக்குச் சென்று ரசிகர்களை சந்தித்து வருகின்றனர்.
திருச்சி, மதுரை, கோவை, சென்னை, கொச்சி ஆகிய இடங்களுக்கு பயணித்த ‘கோப்ரா’ பட குழுவினர். இதன் தொடர்ச்சியாக பெங்களூரூக்கும் சென்றனர்.
அங்கு அவர்களுக்கு பிரம்மாண்டமான முறையில் ரசிகர்கள் திரண்டு வந்து வரவேற்பளித்தனர்.
பெங்களூரூவிலுள்ள ‘நெக்ஸஸ் மால்’ எனும் வணிக வளாகத்தில் நடைபெற்ற ரசிகர்களுடனான சந்திப்பு விழாவில் ‘சீயான்’ விக்ரம், நடிகைகள் ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கட்டுக்கடங்காத அளவிற்கு திரண்ட ரசிகர்களிடம் சீயான் விக்ரம், ‘கோப்ரா’ படத்தை பற்றி விவரித்து பேசினார். அதன் பிறகு அவர்கள் எழுப்பிய வினாவிற்கும் பதிலளித்தார். அதைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடைபெற்றது.
திட்டமிட்டபடி பெங்களூரூவில் ரசிகர்களை சந்தித்த ‘கோப்ரா’ பட குழுவினர், அடுத்த கட்டமாக ஹைதராபாத்திற்கு பயணத்திருக்கிறார்கள்.
The post ‘கோப்ரா’ குழுவினரை கோலாகலமாக வரவேற்ற பெங்களூரூ ரசிகர்கள் appeared first on Touring Talkies.
]]>The post ‘சீயான்’ விக்ரமின் ‘மகான்’ படத்தின் புதிய கானா பாடல் வெளியானது..! appeared first on Touring Talkies.
]]>‘எவன்டா எனக்கு கஸ்டடி..’ எனத் தொடங்கும் இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்கிறார். பாடலுக்கு இசை அமைத்து, சந்தோஷ் நாராயணன் பாடியிருக்கிறார்.
இந்தப் பாடல் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கில் ‘யெவ்வர்ரா மனகி கஸ்டடி..’ என்றும், மலையாளத்தில் ‘இனி ஈ லைப்ஃபில்..’ என்றும், கன்னடத்தில் ‘யவனோ நமகே கஸ்டடி..’ என்றும் வெளியாகியிருக்கிறது.
இந்த ‘மகான்’ படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரித்திருக்கிறார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தில் சீயான் விக்ரமுடன் துருவ் விக்ரம், பாபி சிம்ஹா, சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் நாயகனான ‘மகான்’ தனக்கென சில இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு தனி மனித சுதந்திரத்துடன் லட்சிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இந்தச் சூழலில் அவரது குடும்பத்தைவிட்டு அவர் வெளியேற வேண்டிய சூழல் உருவாகிறது. கோடீஸ்வரனாக வேண்டும் என்ற தனது கனவு நனவான பிறகு, தன்னுடைய சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள வாரிசு இல்லையே என்று உணர்கிறார். அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி நல்லதொரு தந்தையாக வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் தொடர்ந்தாரா.. என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
குடும்ப சென்டிமெண்ட் கலந்து பரபரப்பான அதிரடி மிகுந்த படைப்பாக இந்த ‘மகான்’ திரைப்படம் உருவாகியிருக்கிறது.
எதிர்பாராத தொடர் நிகழ்வுகளின் வழியாக நாயகனது வாழ்க்கை எப்படி பயணிக்கிறது என்பதை ஆக்சன் திரில்லருடன் விவரிக்கிறது ‘மகான்’ படத்தின் திரைக்கதை.
இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 10-ம் தேதி முதல் அமேஸான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியிடப்படுகிறது.
தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் ‘மகான்’ வெளியாகிறது. கன்னடத்தில் இந்த படத்திற்கு ‘மகா புருஷா’ என பெயரிடப்பட்டிருக்கிறது.
The post ‘சீயான்’ விக்ரமின் ‘மகான்’ படத்தின் புதிய கானா பாடல் வெளியானது..! appeared first on Touring Talkies.
]]>The post ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் விக்ரமை இயக்குகிறார் இயக்குநர் பா.ரஞ்சித் appeared first on Touring Talkies.
]]>இதையடுத்து ஸ்டூடியோ கிரின் தயாரிப்பில் நடிகர் விக்ரம் நடிக்கவிருக்கும் ஒரு புதிய படத்தை இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கவுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அதை உறுதி செய்யும்விதமாக இருவரும் சேர்ந்து நிற்கும் புகைப்படம் வெளியாகியிருக்கிறது.
நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்த ‘மகான்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இந்த அறிவிப்பு மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
The post ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் விக்ரமை இயக்குகிறார் இயக்குநர் பா.ரஞ்சித் appeared first on Touring Talkies.
]]>The post ‘அந்நியன்’ திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார் இயக்குநர் ஷங்கர் appeared first on Touring Talkies.
]]>200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றிருந்தது.
இந்தப் படத்திற்காக நடிகர் விக்ரம் அம்பியாகவும், அந்நியனாகவும் மல்டி ஸ்பிலிட் பெர்சனாலாட்டி என்னும் மருத்துவ ரீதியிலான குணத்தைக் கொண்டவராக சிறப்பாக நடித்திருந்தார். இது அவரது சிறந்த படங்களில் ஒன்றாக இன்றளவும் இருந்து வருகிறது.
இத்திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக் ஆகிறது. படத்தை இயக்கப் போவது சாட்சாத் இயக்குநர் ஷங்கர்தான். விக்ரம் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பது ரன்வீர் சிங் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான ஜெயந்திலால் கடா தயாரிக்கிறார்.
இந்தப் படம் பற்றிய அறிவிப்பை நேற்றைக்கு தனது டிவீட்டர் பக்கத்தில் இயக்குநர் ஷங்கர் வெளியிட்டுள்ளார்.
அந்த ட்வீட்டில், “இந்த நேரத்தில், என்னை விட யாரும் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள். இந்தப் படத்தின் மூலம் மிகப் பெரிய சினிமா அனுபவத்தை மீண்டும் கொண்டு வருவார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்..” என்றும் இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
The post ‘அந்நியன்’ திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார் இயக்குநர் ஷங்கர் appeared first on Touring Talkies.
]]>The post அப்பாவுக்கு சிம்ரன்-மகனுக்கு வாணி போஜன் – சூப்பர் செலக்சன் appeared first on Touring Talkies.
]]>செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனத்தில் சார்பில் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இந்தப் படத்தில் முதலில் சிம்ரன் இணைந்தார். விக்ரமும், சிம்ரனும் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில்தான் இணைகிறார்கள்.
ஏற்கெனவே இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த அனிருத் திடீரென்று படத்தில் இருந்து விலகிவிட.. அவருக்குப் பதிலாக சந்தோஷ் நாராயணன் சந்தோஷமாக இந்தப் படத்தில் இணைந்தார்.
தற்போது புதிய செய்தியாக வாணி போஜனும் இந்தப் படத்தில் நடிக்கிறாராம். வாணி போஜன் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே வாணி போஜன் தமிழில் ‘பகைவனுக்கு அருள்வாய்’, ‘கேசினோ’, ‘தாழ் திறவா’ மற்றும் ‘2டி நிறுவனம்’ தயாரிக்கும் ஒரு திரைப்படம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post அப்பாவுக்கு சிம்ரன்-மகனுக்கு வாணி போஜன் – சூப்பர் செலக்சன் appeared first on Touring Talkies.
]]>The post ‘கர்ணன்’ படத்தைக் கை விட்டாரா விக்ரம்..? appeared first on Touring Talkies.
]]>80 கோடி பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டு இப்போது 300 கோடியைத் தொட்டிருக்கும் இந்தக் ‘கர்ணா’ திரைப்படத்தை பாலிவுட்டின் பிரபலமான நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
இந்தப் படம் 2018-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டபோதே இந்தப் படத்தில் தான் நடிக்கப் போவதாக அறிவித்திருந்தார் நடிகர் விக்ரம்.
சில நாட்கள் இந்தப் படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார். அப்போது அறிமுக வீடியோவுக்காக சில, பல காட்சிகளும் படமாக்கப்பட்டன.
ஆனால், அதன் பிறகு பல முறை அந்தப் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போடப்பட்டு வந்த நிலையில், இப்போது விக்ரம் பல்வேறு படங்களின் படப்பிடிப்பில் சிக்கியிருப்பதால் ‘கர்ணா’ படத்தில் அவரால் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாம்.
இப்போது விக்ரம் ‘கோப்ரா’, ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் தன் மகனுடன் நடிக்கும் படம் என்று பல படங்களில் நடித்து வருகிறார்.
‘கோப்ரா’ படத்துக்காக ரஷ்யாவில் 10 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்ளச் சென்றிருக்கிறார். அது முடிந்து இந்தியா திரும்பியவுடன் மீண்டும் இதே படத்துக்காக கொல்கத்தா மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருக்கிறது.
இதற்கடுத்து தன் மகன் துருவ் விக்ரமுடன் அவர் இணைந்து நடிக்கும் அவரது 60 வது படத்தின் படப்பிடிப்பிலும் அவர் கலந்து கொள்கிறார். இந்தப் படம் மார்ச் முதல் வாரத்தில் துவங்கவிருக்கிறது. இதற்காக விக்ரம் மொத்தமாக 30 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம்.
இதை முடித்துவிட்டு ஏப்ரல் மாதம் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் மீண்டும் நடிப்பதற்காக விக்ரம் சென்றாக வேண்டிய கட்டாயம் இருப்பதால் ‘கர்ணன்’ படத்தில் விக்ரம் நடிப்பது சந்தேகமே என்கிறது கோடம்பாக்கம் வட்டாரம்.
The post ‘கர்ணன்’ படத்தைக் கை விட்டாரா விக்ரம்..? appeared first on Touring Talkies.
]]>The post ‘கோப்ரா’ படத்தில் விக்ரமுடன் இணைந்து நடிக்கும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் appeared first on Touring Talkies.
]]>’டிமாண்டி காலனி, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அஜய் ஞானமுத்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்தப் படத்தில் 12 வித்தியாசமான வேடங்களில் விக்ரம் நடித்திருக்கிறார். இதே படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதானும் நடித்து வருகிறார்.
இர்பான் பதானின் பிறந்த நாளையொட்டி அவருக்கு ‘கோப்ரா’ படக் குழுவினர் சார்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து டிவிட்டரில் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அப்போது ‘கோப்ரா’ படத்தில் இர்பான் பதானின் கேரக்டர் பெயரையும் வெளியிட்டு அவரை வாழ்த்தியிருக்கிறார். கூடவே பதானுக்கென்றே தனியாக போஸ்டரையும் அந்தப் படக் குழு வெளியிட்டுள்ளது.
இந்தக் ‘கோப்ரா’ படத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சர்வதேச போலீஸ் துறையின் அதிகாரியாக ‘அஸ்லான் எல்மாஸ்’ என்கிற கதாபாத்திரத்தில் இர்பான் பதான் நடிக்கிறார் என்ற தகவலை அஜய் ஜானமுத்து தெரிவித்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த நிலையில், சமீபத்தில் இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் தொடங்கியிருக்கின்றன.
The post ‘கோப்ரா’ படத்தில் விக்ரமுடன் இணைந்து நடிக்கும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் appeared first on Touring Talkies.
]]>The post இயக்குநர் பாலாவின் ‘வர்மா’ ஓ.டி.டி.யில் வெளியாகிறது..! appeared first on Touring Talkies.
]]>நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து பாலா இயக்கிய ‘வர்மா’ படத்தை ஓடிடியில் வெளியிடுவதாக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.
நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிய ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் தமிழாக்கத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்தப் படத்தை இயக்குநர் பாலா இயக்கினார். படத்தின் பெயர் ‘வர்மா’. பாலாவின் படம் என்பதால் இந்தப் படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், பாலா எடுத்த படத்தை பார்த்த தயாரிப்பாளருக்கு அது பிடிக்கவில்லை. அர்ஜூன் ரெட்டியின் கதையை தமிழுக்கு ஏற்றாற்போல் பாலா கொஞ்சம் மாற்றியிருந்தார். இது தொடர்பாக அவருக்கும், தயாரிப்பாளருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு கடைசியில் படத்தை வெளியிட முடியாது என்று தயாரிப்பாளர் மறுத்துவிட்டார்.
அதே கதையை வேறொரு இயக்குநரை வைத்து மீண்டும் ஷூட் செய்வதாக அறிவித்தார். தயாரிப்பாளரின் இந்த முடிவுக்கு நடிகர் விக்ரமும் சம்மதம் தெரிவிக்க பாலா உருவாக்கிக் கொடுத்த ‘வர்மா’ திரைப்படம் அப்போதைக்கு மூலைக்குப் போனது.
பின்னர் பாலாவுக்கு பதிலாக கிரிசாயா என்பவரை இயக்குநராக வைத்து ‘ஆதித்ய வர்மா’ என்ற பெயரிலேயே மீண்டும் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. பாலா இயக்கிய படத்தில் இருந்து எந்த காட்சியையும் பயன்படுத்தாமல் படத்தை எடுத்தனர். துருவ்வின் தோற்றத்தையும் மாற்றினர். கதாநாயகிகளாக பனிட்டா சந்து, பிரியா ஆனந்த் ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்த படம் கடந்த நவம்பர் மாதம் திரைக்கு வந்தது. ஆனால் படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை.
இந்த நிலையில் பாலா இயக்கி அமைதியாக மூலையில் முடங்கிக் கிடந்த ‘வர்மா’ படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட தயாரிப்பாளர் முடிவெடுத்துள்ளார். இதன்படி வருகிற 6-ம் தேதி ‘வர்மா’ திரைப்படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் இப்போதைக்கு இந்தியா தவிர்த்து மற்றைய நாடுகளில் படம் ஒளிபரப்பாகும். இந்தியாவில் இருப்பவர்கள் பார்ப்பதற்கு சில மாதங்களாகும் என்கிறார்கள்.
The post இயக்குநர் பாலாவின் ‘வர்மா’ ஓ.டி.டி.யில் வெளியாகிறது..! appeared first on Touring Talkies.
]]>