The post கல்விக்கு எதற்கு கடன்? உண்மையை பேச வரும் ‘காலேஜ் ரோடு’ படம் appeared first on Touring Talkies.
]]>இந்த விழாவில் நடிகர் லிங்கேஷ் பேசும்போது, “நமது மாநிலம் கல்வியை மிக முக்கியமானதாக கருதும் மாநிலம். மாணவர்கள் கல்வி கற்க உணவு கொடுத்து அடிப்படைக் கல்வியை கொடுத்து வருகிறது.
ஆனால் உயர் படிப்புகள் என்று வரும்பொழுது இங்கு பணம் பெரும் முக்கிய பங்காற்றுகிறது. கல்வி கற்க கல்விக் கடன் வாங்கியே பெரும்பான்மையான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.
உயர் படிப்புகளை படிப்பதற்கான திறமையும், தகுதியும் இருந்தும் பணம் இல்லாத காரணத்தால் பலரால் படிக்க முடியாமல் போகிறது.
அதிலும் கல்விக் கடன் வாங்கி படிக்கும் மாணவர்களின் நிலைமை பெரும் துயரமானது. கல்விக் கடன் வாங்குவதிலிருந்து அதை கட்டி முடிக்கும் வரையிலும் மாணவர்களுக்கு இருக்கும் உளவியல் பிரச்சினைகள் ஏராளம்.
இந்தப் படம் அந்தக் கல்விக் கடன்கள் குறித்துதான் விரிவாகப் பேசுகிறது. அதை இளைஞர்களுக்கு பிடிக்கும்விதமாக பொழுதுபோக்கு அம்சங்களோடு பேசியிருக்கிறோம். இந்த காலேஜ் ரோடு படம் சஸ்பென்ஸ் நிறைந்த கலகலப்பான படமாக இருக்கும். கமர்சியல் கலந்த சமூகப் பொறுப்புள்ள படமாக உருவாக்கியிருக்கிறோம்…” என்றார்.
நிகழ்வில் இயக்குநர் ஜெய் அமர்சிங், மற்றும் நடிகர்கள் கலந்து கொண்டனர்.
The post கல்விக்கு எதற்கு கடன்? உண்மையை பேச வரும் ‘காலேஜ் ரோடு’ படம் appeared first on Touring Talkies.
]]>The post இதுவரையிலும் வெளிவராத கதையில் உருவாகியிருக்கும் ‘நாற்கரப் போர்’ படம் appeared first on Touring Talkies.
]]>இதனை தொடர்ந்து கதாநாயகனாக ‘காயல்’, ‘காலேஜ் ரோடு’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். அடுத்தடுத்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது இப்படங்கள்.
தற்பொழுது ஹெச்.வினோத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அறிமுக இயக்குநரான ஸ்ரீவெற்றி இயக்கும் ‘நாற்கரப் போர்’ என்னும் படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். “இந்தப் படம் தனக்கு மிக முக்கியமான படமாக இருக்கும்” என்கிறார் லிங்கேஷ். இந்தப் படத்தில் அபர்நதி கதையின் நாயகியாக நடிக்கிறார்.
“இந்த ‘நாற்கரப் போர்’ படம் தமிழ் சினிமாவில் யாரும் சொல்ல துணியாத கதை. இது வெளிவந்தால் தமிழ் சினிமாவில் நிச்சயமாக பெரும் அதிர்வலை ஏற்படும் என்கிறார்” படத்தின் இயக்குநரான ஸ்ரீவெற்றி.
இந்த ‘நாற்கரப் போர்’ படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
ஶ்ரீவெற்றியின் இயக்கத்தில் ஒளிப்பதிவாளர் திருவின் உதவியாளர் அர்ஜுன் ரவியின் ஒளிப்பதிவில் தற்போது இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றிருக்கிறது.
தமிழ் சினிமா எப்போதும் நல்ல கதைகளை கைவிட்டதில்லை. அந்த வரிசையில் இந்த ‘நாற்கரப் போர்’ படம் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தும்.
தரமான இயக்குனர்களை தமிழ் சினிமா உருவாக்கிக் கொண்டேதான் இருக்கும். அந்த வரிசையில் ஶ்ரீவெற்றி இணைவார் என எதிர்பார்க்கலாம்.
The post இதுவரையிலும் வெளிவராத கதையில் உருவாகியிருக்கும் ‘நாற்கரப் போர்’ படம் appeared first on Touring Talkies.
]]>The post 2 படங்களில் நாயகனாக நடிக்கும் நடிகர் லிங்கேஷ்..! appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தை M.P.Entertainment நிறுவனம் தயாரித்துள்ளது. அறிமுக இயக்குநரான ஜெய் அமர்சிங் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். தற்போது இந்தப் படம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது.
விரைவில் திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தில் இசையமைப்பாளராக பா.இரஞ்சித்தின் கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் குழுவில் பணியாற்றிய ஆப்ரோ இசையமைத்திருக்கிறார்.
இந்தப் படம் மாணவர்களின் கல்விக் கடன் மற்றும் அதன் பின்னால் இருக்கும் அரசியல், சமூக பிரச்சினைகள் பற்றி திரில்லர் காமெடி கலந்த கதையமைப்போடு உருவாக்கியுள்ளது.
இந்தப் படத்தை சமீபத்தில் பார்த்த இயக்குநர் பா.இரஞ்சித், நாயகன் லிங்கேஷை பெரிதும் பாராட்டியிருக்கிறார். “மாணவர்களின் கல்விக் கடன் குறித்த அரசியலைப் பேசினாலும் கமர்சியலாகவும் இருக்கிறது. மாணவர்களுக்கு இந்தப் படம் நிச்சயமாகப் பிடிக்கும்…” என்று கூறி குழுவினருக்கு வாழ்த்துக்கள் சொல்லியிருக்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித்.
இதனால் மகிழ்ச்சியான ‘காலேஜ் ரோடு’ படக் குழுவினர் தற்போது படத்தை வெளியிடும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நடிகர் லிங்கேஷ் ‘காயல்’ என்ற இன்னொரு படத்திலும் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ காயத்ரி, பாடகர் ஸ்வாகதா கிருஷ்ணன், அனுமோல் மற்றும் பலர் நடித்துள்ளனர். எழுத்தாளரும், இயக்குநருமான தமயந்தியின் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
இந்தப் படம் சமூகத்தின் அழுத்தத்தால் மனிதனின் இயல்பான காதலும், அதன் பொருட்டு நடக்கும் சிக்கல்களையும் உணர்வுப்பூர்வமாக பேசுவதுபோல் உருவாகியுள்ளது.
இந்தக் ‘காயல்’ படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
“கதையின் நாயகனாக நடிக்க ஆரம்பித்துவிட்டீர்கள். இனி கதாநாயகனாக மட்டும்தான் நடிப்பீர்களா..?” என்கிற கேள்விக்கு. “நான் ஒரு நடிகன். நடிக்க வந்திருக்கிறேன். இதில் எந்த வேடம் கொடுத்தாலும் நடிப்பதுதான் என்னைப் போன்ற ஒரு நடிகனின் கடமை. இரண்டு படங்களில் கதா நாயகனாக நடிக்க வாய்ப்பு வந்தது.. நடித்தேன்.
இனிமேல் வில்லன் வேடம் வந்தாலும் நடிப்பேன். கதைதான் கதாபாத்திரங்களை தீர்மானிக்கிறது, அந்த கதாபாத்திரங்களில் நமக்கு எது பொருத்தமாக இருக்கிறதோ, அதைத்தான் இயக்குநர்கள் நமக்கு கொடுக்கப் போகிறார்கள்.
எனக்குப் பொருத்தமானதாக இருக்கும்பட்சத்தில் எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் நான் நடிப்பேன். மொத்தத்தில் நான் ஒரு நல்ல நடிகனாக இருக்க வேண்டும். நான் எப்போதும் இயக்குநர்களின் நடிகனாக இருக்கவே ஆசைப்படுகிறேன்…” என்றார் லிங்கேஷ்.
The post 2 படங்களில் நாயகனாக நடிக்கும் நடிகர் லிங்கேஷ்..! appeared first on Touring Talkies.
]]>