The post சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படம் 2022 தீபாவளிக்கு வெளியாகிறது appeared first on Touring Talkies.
]]>ஏற்கெனவே கார்த்தியின் ‘சர்தார்’, அஜித்தின் ’61-வது படம்’, ஜெயம் ரவியின் ‘இறைவன்’ ஆகிய படங்களும் இதே தீபாவளிக்கு வரவிருப்பதாகத் தெரிகிறது.
தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘பிரின்ஸ்’. இந்தப் படத்தில் உக்ரைன் நடிகை மரியா நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் வெளியாகும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். மனோஷ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, ரொமான்ஸ் – காமெடி ஜானரில் படம் உருவாகியுள்ளது.
முன்னதாக, இந்தப் படத்தை விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிட படக் குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், தற்போது அந்த தேதி மாற்றப்பட்டு, தீபாவளி அன்று படம் வெளியிடப்படும் என்று நேற்றைக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்றையும் ‘பிரின்ஸ்’ படக் குழு வெளியிட்டுள்ளது.
ஏற்கெனவே தீபாவளிக்கு கார்த்தியின் ‘சர்தார்’, ஜெயம் ரவியின் ‘இறைவன்’ ஆகிய படங்கள் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. கூடவே அஜித்தின் ’61’-வது படமும் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டு வருகிறது.
ஆனால், மேற்கண்ட படங்களின் வருகையால் அஜித்தின் பட வெளியீடு தள்ளிப் போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படம் 2022 தீபாவளிக்கு வெளியாகிறது appeared first on Touring Talkies.
]]>The post “தயாரிப்பாளர்கள் கொடுக்குற சம்பளத்தை வாங்கிக்கிறேன்..” – சிவகார்த்திகேயன் பேட்டி..! appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்திருக்கிறார். அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார்.
இதையொட்டி சிவகார்த்திகேயன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசும்போது,
“இந்தப் படம் மாணவர்களின் பிரச்சனைகளையும், கனவுகளையும் பற்றிப் பேசுகிற படம். இதில் நான் கல்லூரி மாணவனாகவும், பள்ளி மாணவனாகவும் நடித்திருக்கிறேன். பள்ளி மாணவனாக நடிக்க 8 கிலோவரையிலும் எடையைக் குறைத்திருக்கிறேன்.
கல்லூரியில் என்னுடன் படிக்கும் மாணவர்கள் என்னை ‘டான்’ என்று செல்லமாக அழைப்பார்கள். அதனால்தான் படத்திற்கு ‘டான்’ என்று டைட்டில் வைத்துள்ளோம். மற்றபடி இந்தப் படத்தில் நான் தாதாவாக நடிக்கவில்லை. படமும் தாதாக்கள் பற்றிய படமில்லை.
எனது முந்தைய இரண்டு படங்கள் 100 கோடிக்கும் மேல் வசூலித்தது. இதனால்தான் நான் சம்பளத்தை உயர்த்தி விட்டேன் என்கிறார்கள். சம்பளத்தை நான் உயர்த்தவில்லை. எனக்கு எவ்வளவு சம்பளம் தரவேண்டும் என்பதை தயாரிப்பாளர்கள்தான் முடிவு செய்கிறார்கள். அவர்கள் கொடுப்பதை நான் வாங்கிக் கொள்கிறேன்.
தற்போதைய காலக்கட்டத்தில் ஓடிடி தளம் என்பது தவிர்க்க முடியாதது. சிறிய பட்ஜெட் படங்களுக்கு அது மிகப் பெரிய தளம். ஆனால் ஓடிடி படங்களில் நடிக்கவோ, வெப் சீரிசில் நடிக்கவோ மாட்டேன். இப்போது எனது இலக்கு பெரிய திரைதான்.
பெரிய பட்ஜெட் படங்களை திட்டமிட்டு எடுத்தால் கண்டிப்பாக அது லாபம் தரும். பாடல் உரிமம், தொலைக்காட்சி உரிமம், ஓடிடி உரிமம் என சினிமா வியாபாரத்தின் தளம் விரிந்திருக்கிறது.
சினிமா இப்போது ஆரோக்கியமாகத்தான் இருக்கிறது. கொரோனா காலத்திற்குப் பிறகு தற்போது மக்கள் தியேட்டருக்கு அதிகமாக வருகிறார்கள். நல்ல படங்களுக்கு ஆதரவு தருகிறார்கள்.
ஒரு படம் எல்லா மொழி பேசும் மக்களால் விரும்பப்படும்போது அது உலகப் படம் ஆகிறது. இந்திய மக்களால் விரும்பப்படும்போது அது பான் இந்தியா படமாகிறது. என்னுடைய அடுத்த படமா ‘அயலான்’ படம் பான் இந்திய படமாக இருக்கும்.
அடுத்து நான் கமல் ஸார் தயாரிப்பில் நடிக்கிறேன். அது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. ரஜினியுடன் நடிக்கப் போவதாக மற்றவர்கள்தான் சொல்கிறார்கள். ஆனால், அது குறித்து யாரும் இதுவரையிலும் என்னிடம் பேசவில்லை. ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு வந்தால் கட்டாயம் நடிப்பேன்…” என்றார் சிவகார்த்திகேயன்.
The post “தயாரிப்பாளர்கள் கொடுக்குற சம்பளத்தை வாங்கிக்கிறேன்..” – சிவகார்த்திகேயன் பேட்டி..! appeared first on Touring Talkies.
]]>The post “புனீத் இனி வரக் கூடிய கலைஞர்களுக்கு முன்னுதாரணம்” – நடிகர் சிவகார்த்திகேயனின் அஞ்சலி appeared first on Touring Talkies.
]]>கடந்த வெள்ளிக்கிழமையன்று பெங்களூரில் திடீர் மாரடைப்பால் காலமான கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரின் உடல் அவருடைய குடும்ப ஸ்டூடியோவான கண்டிரவா ஸ்டூடீயோவில் அவருடைய தாய், தந்தையின் சமாதிக்கு அருகிலேயே புதைக்கப்பட்டது.
தமிழ்த் திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று பெங்களூர் சென்று புனீத்தின் சமாதியில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சிவகார்த்திகேயன், “புனீத்தின் மறைவை இப்போதும் என்னால் நம்ப முடியவில்லை. ஒரு மாதத்துக்கு முன்பு புனீத் ராஜ்குமாருடன் பேசியிருந்தேன். அவர் ஒரு மிகச் சிறந்த மனிதர். சிறந்த ஆன்மா. அவருடைய மறைவு கன்னடம் மட்டுமில்லாமல் இந்தியத் திரையுலகம் முழுவதுக்கும் பெரும் இழப்பு.
அவருக்கு இறப்பு கிடையாது. அவருடைய செய்திருக்கும் நல்ல விஷயங்கள் நினைவு கூறப்படும். இனி வரக் கூடியவர்களுக்கு அவர் ஒரு முன்னுதாரணம். திரையில் மட்டுமல்ல, திரைக்கு பிந்தைய வாழ்க்கைக்கும் அவர் முன்னுதாரணமாக திகழ்வார்.
“பெங்களூரு வந்தால் என்னை சந்திக்க வேண்டும்” என்று என்னிடம் கூறியிருந்தார். நான் இப்போது பெங்களூருவில் இருக்கிறேன். அவரைத்தான் பார்க்க முடியவில்லை. அவருடைய மறைவின் அதிர்ச்சியிலிருந்து இன்னமும் என்னால் வெளியில் வர முடியவில்லை…” என்றார் சிவகார்த்திகேயன்.
The post “புனீத் இனி வரக் கூடிய கலைஞர்களுக்கு முன்னுதாரணம்” – நடிகர் சிவகார்த்திகேயனின் அஞ்சலி appeared first on Touring Talkies.
]]>The post நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கவிருக்கும் சிவகார்த்திகேயன் appeared first on Touring Talkies.
]]>இதில், டாக்டர் படம் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. நாளை அக்டோபர் 9-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. அன்றைய தினமே தெலுங்கிலும் இப்படம் ‘வருண் டாக்டர்’ என்ற பெயரில் ரிலீசாகிறது.
இதற்கான புரமோஷன் நிகழ்ச்சி நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் உள்ளிட்ட படக் குழுவினர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், விரைவில் தான் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க இருப்பதாகவும், இதற்காக தெலுங்கு கற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
“அந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக் குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள்” என்றும் அவர் கூறியுள்ளார்.
தனுஷ் நடிக்கவிருக்கும் தெலுங்கு படத்தைத் தயாரிக்கும் ஸ்ரீவெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போகிறதாம். இதே நிறுவனம்தான் தனுஷை வைத்தும் ஒரு படத்தைத் தயாரிக்கவுள்ளது.
இந்தப் படத்தை தெலுங்கில் சமீபத்தில் வெளியாகி ஹிட்டடித்த ‘ஜாதி ரத்னாலு’ என்ற படத்தை இயக்கிய இயக்குநர் அனுதீப் இயக்கப் போகிறாராம்.
The post நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கவிருக்கும் சிவகார்த்திகேயன் appeared first on Touring Talkies.
]]>The post “டாக்டர்’ படத்தின் ‘ஸோ பேபி’ பாடலின் இசை காப்பியாம்” – அனிருத் மீது எழுந்துள்ள விமர்சனம்..! appeared first on Touring Talkies.
]]>நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘டாக்டர்’. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இத்திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது.
இதையொட்டி படத்தின் விளம்பரத்திற்காக படத்தில் இடம் பெற்ற ‘ஸோ பேபி’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. பெரும் பரபரப்பாக விளம்பரம் செய்யப்பட்டதால் இந்தப் பாடல் காட்சியை யூடியூபில் இதுவரையிலும் 1 கோடி பேருக்கும் மேல் பார்த்திருக்கிறார்கள்.
ஆனால், இந்த ‘ஸோ பேபி’ பாடலின் இசை அப்பட்டமான ஒரு ஆங்கில ஆல்பத்தின் காப்பி என்பதை இசை ரசிகர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது குறித்து இணையத்தில் தேடியலைந்து உண்மையான இசை ஆல்பம் எது என்பதையும் கண்டறிந்து சொல்லியிருக்கிறார்கள்.
இந்த இரண்டு இசையும் இந்த வீடியோவில் இருக்கிறது.
அனிருத்தின் இசை காப்பி சர்ச்சையில் மாட்டுவது இது புதிதல்ல. ஏற்கெனவே அவர் இசையமைத்த மிகப் பிரபலமான பாடல்கள் அனைத்துமே ஆங்கில ஆல்பங்களில் இருந்து சுட்டதாகத்தான் இருக்கிறது என்கிறார்கள் இசை ஆர்வலர்கள்.
‘கத்தி’ படத்திற்காக அனிருத் உருவாக்கிய தீமும் ஒரு ஆங்கில பாப் பாடலின் வடிவம்தான்.
இதேபோல் அஜித்தின் ‘வேதாளம்’ படத்திற்காக அனிருத் உருவாக்கிய தீம் இசையும் ஒரு ஆங்கிலப் பாடலின் இசையை காப்பியடித்து உருவாக்கப்பட்டதுதான்.
இதன் உச்சமாக காப்பி விவகாரதில் சிக்கிய அனிருத்தின் ஒரு பாடலை யூடியூப் தளத்தில் இருந்து அந்த நிறுவனமே நீக்கிய சம்பவமும் அரங்கேறியுள்ளது.
‘கோலமாவு கோகிலா’ படத்துக்காக அனிருத் இசையமைத்த ‘எனக்கு கல்யாண வயசுதான்’ பாடலின் இசையும் ஒரு ஆங்கில பாடலின் இசைதான். இது தொடர்பாக அந்த ஆங்கிலப் பாடலை வெளியிட்ட நிறுவனம் யுடியூப் நிறுவனத்திடம் புகார் செய்ததையடுத்து இந்தப் பாடல் யுடியூப் தளத்தில் இருந்து நீக்கப்பட்டது.
கமல்ஹாசன் அடுத்து சொந்தமாகத் தயாரிக்கும் ‘விக்ரம்-2’ படத்திலும் முந்தைய ‘விக்ரம்’ படத்திற்காக இசைஞானி இளையராஜா இசையமைத்த இசையையே கொஞ்சம் மாற்றியமைத்து புதுசு போல கொடுத்திருந்தார் அனிருத்.
இந்த வரிசையில் தற்போது ‘டாக்டர்’ படத்தின் இந்த ‘ஸோ பேபி’ பாடலும் காப்பியாக அமைந்துவிட்டது தமிழ் இசையுலகத்தில் அனிருத்திற்கு மிகப் பெரிய அவமானத்தைக் கொடுத்திருக்கிறது.
The post “டாக்டர்’ படத்தின் ‘ஸோ பேபி’ பாடலின் இசை காப்பியாம்” – அனிருத் மீது எழுந்துள்ள விமர்சனம்..! appeared first on Touring Talkies.
]]>The post சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம் மே 13-ம் தேதி வெளியாகிறது..! appeared first on Touring Talkies.
]]>சிவகார்த்திகேயனின் SK Productions நிறுவனமும், தயாரிப்பாளர் கொடாப்பாடி J.ராஜேஷ் அவர்களின் K.J.R. Studios நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘டாக்டர்.’
இப்படத்தில் ப்ரியங்கா அருள் மோகன் நாயகி பாத்திரத்தில் நடிக்க, வினய் ராய் வில்லன் பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, மிலிந்த் சோமன், அருண் அலெக்ஸாண்டர், சுனில் ரெட்டி, ரெட்டின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இசை – அனிருத், ஒளிப்பதிவு – விஜய் கார்த்திக் கண்ணன், படத் தொகுப்பு – R.நிர்மல், உடைகள் வடிவமைப்பு – பல்லவி சிங், கலை இயக்கம் – D.R.K.கிரண். ‘கோலமாவு கோகிலா’ படத்தின் இயக்குநரான நெல்சன் திலீப்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இத்திரைப்படம் சென்ற வருடக் கடைசியில் வெளியாகியிருக்க வேண்டியது. தியேட்டர்களில் 50 சதவிகிதப் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற உத்தரவினால் சுதாரித்து பின் வாங்கியது.
பின்பு ‘மாஸ்டர்’ படம் ரிலீஸாகி அதன் ரிசல்ட்டை பார்த்த பின்பு வெளியிடலாம் என்று காத்திருந்தார்கள். ‘மாஸ்டரின்’ ரிசல்ட் சக்ஸஸாக வர கோடை விடுமுறையில் இதனைக் கொண்டு வரலாம். அதுதான் சிவகார்த்திகேயனின் ரசிகர்களை தியேட்டர்களுக்கு இழுக்க சரியாக இருக்கும் என்று எண்ணி மார்ச் 26-ம் தேதியன்று வெளியாகும் என்று அறிவித்தார்கள்.
ஆனால் திடீரென்று தமிழக சட்டப் பேரவைக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டதால் மார்ச் 26-ம் தேதி வெளியாகவிருந்த ‘டாக்டர்’ படத்தை மீண்டும் ஒத்தி வைத்தார்கள்.
இப்போது சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடந்து முடிந்த பிறகு மே 13, ரம்ஜான் தினத்தன்று இத்திரைப்படத்தைத் திரையரங்குகளுக்குக் கொண்டு வருவதாக அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
The post சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம் மே 13-ம் தேதி வெளியாகிறது..! appeared first on Touring Talkies.
]]>The post சிவகார்த்திகேயன் இப்படியெல்லாம் கேள்வி எழுப்பியவரா..? ரசிகர்கள் அதிர்ச்சி..! appeared first on Touring Talkies.
]]>கடந்த 2012-ம் ஆண்டு மே 24-ம் தேதியன்று தனது டிவீட்டர் பக்கத்தில் ஒரு டிவீட்டை பதிவு செய்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
அந்தப் பதிவில் பெட்ரோல் போட சென்ற சிவாவிடம், அங்கே வேலை செய்பவன் “ஸார். எவ்ளோக்கு ஸார் பெட்ரோல்..?” என்று கேட்க பதிலுக்கு சிவா அவனிடம், “ஒரு ரெண்டு ரூபாய்க்கோ.. நாலு ரூபாய்க்கோ வண்டி மேல தெளிச்சு விடு. வண்டியைக் கொளுத்திட்டுப் போயிடறேன்..” என்று பெட்ரோல் விலை ஏற்றத்தைப் பற்றிச் சொல்வதாக அந்தப் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது ரசிகர்கள் சிவகார்த்திகேயன் இப்படியெல்லாம் நாட்டுப் பற்றுடன் பேசியிருக்கிறாரா என்று ஆச்சரியத்துடன் கேட்கிறார்கள்.
அதோடு, இன்றைக்கு சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 92 ரூபாய் 59 பைசாவாக உள்ளது. இன்றைய பெட்ரோல் விலை உயர்வுக்கு சிவகார்த்திகேயனின் கருத்து என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
The post சிவகார்த்திகேயன் இப்படியெல்லாம் கேள்வி எழுப்பியவரா..? ரசிகர்கள் அதிர்ச்சி..! appeared first on Touring Talkies.
]]>The post தயாரிப்பாளருக்காக கடன் தொகையை ஏற்றுக் கொண்ட சிவகார்த்திகேயன் appeared first on Touring Talkies.
]]>அது கடன் பிரச்சினை.
24 AM Productions நிறுவனத்தின் சார்பில் சிவகார்த்திகேயனை வைத்து ‘ரெமோ’, ‘வேலைக்காரன்’, ‘சீமராஜா’ ஆகிய படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா இப்போது மிகுந்த கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளார்.
இவை அனைத்துமே சிவகார்த்திகேயன் நடித்த மேற்கண்ட மூன்று படங்களுக்காக வாங்கப்பட்ட கடன்கள்தான். இப்போதைய கடன் தொகையில் அசலைவிடவும் வட்டி தொகையே அதிகமாம். வருடங்கள் அதிகமானதால் வட்டியும் அதிகமாகியிருக்கிறது.
இப்போது சிவகார்த்திகேயனும் அடுத்தடுத்து வெளி நிறுவனங்களுக்கு படம் செய்யத் துவங்கிவிட்டதால் இந்தக் கடன்களை எப்படி அடைப்பது என்பது தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜாவின் முன்னாள் நிற்கும் மிகப் பெரிய கேள்வி.
சமீபத்தில் இது குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஆர்.டி.ராஜா தன்னை வைத்து தயாரித்த திரைப்படங்களுக்காக பெற்ற கடன் தொகை முழுவதையும் தானே ஏற்றுக் கொள்வதாகவும் அதற்கு நானே முழுப் பொறுப்பு என்றும் சிவகார்த்திகேயன் சொல்லிவிட்டாராம்.
தன்னால் ஒரு தயாரிப்பாளர் நஷ்டப்படக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் சிவகார்த்திகேயன் செய்த இந்தச் செயல் பாராட்டுக்குரியது என்கிறார்கள் மூத்தத் தயாரிப்பாளர்கள்.
The post தயாரிப்பாளருக்காக கடன் தொகையை ஏற்றுக் கொண்ட சிவகார்த்திகேயன் appeared first on Touring Talkies.
]]>