The post ‘KICK’ படத்திற்காகப் பாடகரான சந்தானம்..! appeared first on Touring Talkies.
]]>இப்படத்தில், தம்பி ராமையா, பிரம்மானந்தம், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோபாலா, ஒய்.ஜி.மகேந்திரா, மொட்டை ராஜேந்திரன், ஷகிலா, ராகிணி திவேதி, வையாபுரி, சிசர் மனோகர், கிங்காங், முத்துக்காளை, சேஷு, கூல் சுரேஷ், அந்தோணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
எழுத்து, இயக்கம் – பிரசாந்த் ராஜ், தயாரிப்பு – நவீன் ராஜ், தயாரிப்பு மேற்பார்வை – பாக்யா, ஒளிப்பதிவு – சுதாகர் ராஜ், இசை – அர்ஜூன் ஜன்யா, பத்திரிகை தொடர்பு – ஜான்ஸன்.
சிறந்த நகைச்சுவை படமாக உருவாகியுள்ளது இந்த ‘கிக்’ படம். டாம்-ஜெர்ரி மாதிரியான உறவில் இருக்கிறார்கள். ஹீரோவும் ஹீரோயினும். விளம்பர நிறுவனத்தில் பணிபுரிகிற சந்தானம் எப்படியாவது கொஞ்சம் குறுக்கு வழியில்கூட போய் வெற்றியை அடைய துடிக்கிறவர். ஹீரோயின் தான்யா ஹோப், நேர்மையாய் விளம்பரத் துறையில் முன்னேற துடிப்பவர். இரண்டு பேரும் எலியும், பூனையுமாக மோதி கொள்வதுதான் கதை.
நடிகர் சந்தானத்தின் நகைச்சுவையை விரும்பும் மொத்த ரசிகர்களுக்குமான படம் இது. எமோஷன், சென்டிமென்ட், டிராமா அனைத்தும் கலந்து ஜனரஞ்சகமான படமாக இது உருவாகியுள்ளது.
இப்படத்தின் முதல் பாடலுக்கான விளம்பர வீடியோ இன்று வெளியாகியுள்ளது. அதில் ‘சாட்டர்டே இஸ் கம்மிங்கு’(Saturday is cominguu) என்று ஆரம்பிக்கும் பாடலை முதல்முறையாக நடிகர் சந்தானம் சொந்தக் குரலில் பாடியிருக்கிறார். இப்பாடலை கவிஞர் விவேகா எழுதியிருக்கிறார்.
இப்பாடலின் முழு வரிகளுக்கான வீடியோ அக்டோபர் 10-ம் தேதி மாலை 06.03 மணிக்கு வெளியாகவுள்ளது.
The post ‘KICK’ படத்திற்காகப் பாடகரான சந்தானம்..! appeared first on Touring Talkies.
]]>The post “தட்டி விடுறதுக்குத்தான் இங்க ஆள் இருக்காங்க” – சிம்புவின் வருத்தம் appeared first on Touring Talkies.
]]>இந்த விழாவில் படத்தின் நாயகனாக சிம்பு, இயக்குநர் கெளதம் மேனன், தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ், ஒளிப்பதிவாளர், படத் தொகுப்பாளர் ஆண்டனி, நடிகர் நீரஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் நடிகர் சிம்பு பேசும்போது, “இந்தப் படம் இதுவரையிலும் வெளிவராத ஒரு பேட்டர்னில் தயாராகி வந்துள்ளது. அதனால்தான் இந்தப் படம் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்குக் காரணமான இயக்குநர் கெளதமுக்கு எனது மனமார்ந்த நன்றி.
மேலும் இந்தப் படம் நல்ல படம்.. சிறந்த படம் என்று சொல்லி இதனை மக்களிடம் கொண்டு போய் சேர்த்து தமிழ்ச் சினிமா துறையின் வளர்ச்சிக்கும், என்னையும் தட்டிக் கொடுத்திருக்கும் பத்திரிகையாளர்களுக்கு நன்றி. இங்க தட்டி விடுறவங்கதான் அதிகம். ஆனால் மீடியாக்கள் அதைச் செய்யவில்லை. இந்தப் படத்தின் நிறைய விமர்சனங்களை நான் படிச்சேன். அதிகமானோர் இந்தப் படத்தைப் பாராட்டித்தான் எழுதியிருக்காங்க. அவங்க எல்லாருக்கும் எனது நன்றி.
முதல்முறையா எனது படத்தின் KDM கீ, முதல் நாளே தியேட்டர்களுக்கு போய்ச் சேர்ந்தது இந்தப் படத்துலதான். எனக்கே ஆச்சரியமா இருந்தது. என்னை நானே கிள்ளிப் பார்த்துக்கிட்டேன். இது என் படம்தானான்னு..! பொதுவா ஒருத்தர் கீழே விழுந்தா மெது, மெதுவாத்தான் எழுந்திருக்க முடியும். நான் இப்போ அப்படித்தான் இந்தப் படம் மூலமாக நான் எழுந்திருச்சிருக்கேன்னு நினைக்கிறேன்.
படத்துல நடிச்சவங்க எல்லாருமே சிறப்பா நடிச்சிருந்தாங்க. நீரஜ்கூட நல்லா நடிச்சிருந்தாரு. நானே திகைச்சுட்டேன். ஷூட்டிங்கப்ப லைட்டே இருக்காது. ஓகே.. லைட் ரெடி பண்ணிட்டு கூப்பிடுவாங்கன்னு உக்காரும்போது “ஸார்.. ஷாட் ரெடி”ன்னு சொல்வாங்க. “இன்னும் லைட்டே போடலையே?”ன்னு கேட்டா.. “அவ்ளோதான் ஸார் லைட்டு”ன்னு சொன்னாங்க. எனக்கு அப்போ ஆச்சரியமா இருந்துச்சு. ஆனால் இப்போ படத்தைப் பார்க்கும்போது ரொம்பவும் பிரமிப்பா இருக்கு. ஒளிப்பதிவாளருக்கு ஒரு நன்றி.
‘மல்லிப் பூ’ பாடல் காட்சியைப் படமாக்கும்போதே கவுதமிடம், “இந்தப் பாட்டுக்கு தியேட்டர்ல செம ரெஸ்பான்ஸ் வரப் போகுது பாருங்க” என்று சொன்னேன். சொன்னது போலவே இப்போது இந்தப் பாடலை ரசிகர்கள் கொண்டாடுறாங்க. இசையமைப்பாளர் ரஹ்மான் ஸாருக்கு நன்றி. அதோட படத்தை சரியான முறைல வெளியிட்டு உதவி செய்த ரெட் ஜெயன்ட் நிறுவனத்துக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் மிக்க நன்றி.
இந்தப் படத்தோட இரண்டாம் பாகத்தோட கதை எப்படியிருக்கும்ன்னு தெரியலை. ஆனால் கொஞ்சம் என்னோட பேன்ஸ் கொண்டாடுற மாதிரி, ஜனரஞ்சகமான கதையா தேர்வு செஞ்சு கவுதம் வைச்சா நல்லாயிருக்கும். ரசிகர்களுக்கும் பிடிச்ச மாதிரியிருக்கணும். இருக்கும்னு நம்புறேன்.
இந்தப் படத்துலதான் என் உடம்பை வைச்சு யாரும் கிண்டல் பண்ண முடியலைன்னு நினைக்குறேன். இனியும் பண்ணாதீங்க. எப்போதுமே ஒருத்தரோட உடம்பை வைச்சு கிண்டல் செய்வது தவறு…” என்று அட்வைஸ் செய்து முடித்தார் நாயகன் சிலம்பரசன்.
The post “தட்டி விடுறதுக்குத்தான் இங்க ஆள் இருக்காங்க” – சிம்புவின் வருத்தம் appeared first on Touring Talkies.
]]>The post “என்னை கல்யாணம் பண்ணனும்” – சிம்பு வீட்டு முன்பாக போராட்டம் நடத்திய சின்னத்திரை நடிகை appeared first on Touring Talkies.
]]>விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘7சி’ என்ற தொடரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், ‘யாரடி நீ மோகினி’, ‘புதுப்புது அர்த்தங்கள்’ போன்ற தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர்.
இந்த ஸ்ரீநிதி கடந்த சில நாட்களாக சிம்புவை முன் வைத்து பல சர்ச்சைகளில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் சிம்பு குறித்து மீம் ஒன்றை பதிவிட்டிருந்த ஸ்ரீநிதி, “ஒரு நாள் எல்லாருக்கும் திருமணம் ஆகிருக்கும். நானும் சிம்புவும் மட்டும்தான் சிங்கிளா இருப்போம்…” என அதில் குறிப்பிட்டிருந்தார்.
இதைப் படித்த ஒருவர், “நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமே..?” என்று கமெண்ட் போட, “இதுவும் நல்லாத்தான் இருக்கு..” என பதிலளித்திருந்தார் ஸ்ரீநிதி.
இது பேச்சோடு பேச்சாக அப்படியே இணையத்திலேயே இருக்கும் என்று நினைத்தால் நிலைமை சீரியஸாகிவிட்டது.
நடிகை ஸ்ரீநிதி இதை சீரியஸாகவே எடுத்துக் கொண்டு நடிகர் சிம்புவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளக் கோரி அவரது வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்டதாக அவரது அவருடைய இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் இது குறித்து ஸ்ரீநிதி குறிப்பிட்டிருப்பது இதுதான் :
“சிம்பு எனக்காக இத்தனை ஆண்டுகள் சிங்கிளாக இருந்திருக்கிறார் என்பதை என்னால நம்பவே முடியல. இன்னைக்குத்தான் புரிஞ்சது சிம்பு. எல்லாரும் எங்களை சேர்த்து வைங்க ப்ளீஸ்..! எனக்கு லேட்டாதான் புரிஞ்சது. ஆனால் புரிஞ்சிருச்சு. சிம்புவைத் தவிர வேறு யாரையும் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். ஜல்லிக்கட்டுக்கு மட்டும்தான் போராட்டமா? லவ்வுக்கெல்லாம் போராட்டம் இல்லையா..?
இப்போது என் போனில் 4 சதவீதம்தான் சார்ஜ் உள்ளது. ப்ளீஸ் வாங்க. பர்ஸ்ட்டு சிம்பு வேணும். நெக்ஸ்ட் தண்ணி வேணும். கோவமா இருக்காரு. அவரை மட்டும் புரிஞ்சிக்கனுமா? நம்மள புரிஞ்சிக்கமாட்டாரா? ப்ளீஸ் வாங்க. வந்து சேர்த்து வைங்க.
இப்போ கத்துறதுக்கு என்கிட்ட எனர்ஜி இல்ல. எனக்கு அவ்ளோ ஒர்த்து இருக்குன்னு இவ்ளோ வருஷமா எனக்கே தெரியல.. புரிய வச்சிட்டாரு சிம்பு..! வேணும், அவரை இப்பவே நான் பார்க்கணும்…” என்று எழுதியுள்ளார்.
“பைத்தியம் முத்திருச்சு” என்று இணையத்தளவாசிகள் இதற்கு பதில் கமெண்ட் எழுதியிருக்கிறார்கள்.
The post “என்னை கல்யாணம் பண்ணனும்” – சிம்பு வீட்டு முன்பாக போராட்டம் நடத்திய சின்னத்திரை நடிகை appeared first on Touring Talkies.
]]>The post “சிம்பு பின்னாளில் பெரிய ஆளாக வருவார்” – 1990-களில் நடிகர் ரஜினியின் கணிப்பு..! appeared first on Touring Talkies.
]]>நடிகர் சிம்புவின் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் ‘மாநாடு’ படம் வரும் நவம்பர் 26-ம் தேதியன்று திரைக்கு வருகிறது.
இதையொட்டி இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று காலை சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் பேசும்போது, நடிகர் சிம்பு சிறு வயதில் ஆடிய நடனத்தைப் பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினி பெரிதும் பாராட்டியதாகக் குறிப்பிட்டார்.
தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் பேசும்போது, “நாங்கள் ‘பணக்காரன்’ படம் எடுத்துக் கொண்டிருந்த சமயத்தில் பக்கத்து செட்டில் ஒரு சின்னப் பையன் பிரமாதமாக டான்ஸ் ஆடுறான் என சொன்னார்கள்.. எல்லோரும் அங்கே போய் பார்த்துவிட்டு வந்து இப்படி பாராட்டுவதை பார்த்து உடனே ரஜினி சார் ரொம்பவே ஆர்வமாகி, “வாங்க.. நாமளும் பார்த்துட்டு வரலாம்” என கூறினார்.
அங்கே குழந்தை நட்சத்திரமான சிம்புவின் நடனத்தை பார்த்து வியந்து “என்ன மாதிரி திறமையா இருக்கான் பாருங்க.. பின்னாடி பெரிய ஆளா வருவான்…” என ரஜினி அப்போதே சிம்புவைக் கணித்து பாராட்டினார்.
நானும் அப்போது இருந்து சிம்புவின் வளர்ச்சியை கவனித்து வருகிறேன்.. அவர் இன்னும் மிகப் பெரிய உயரத்திற்கு செல்வார்” என கூறினார்.
The post “சிம்பு பின்னாளில் பெரிய ஆளாக வருவார்” – 1990-களில் நடிகர் ரஜினியின் கணிப்பு..! appeared first on Touring Talkies.
]]>The post ‘பத்து தல’ படப்பிடிப்பில் இணைந்திருக்கும் கெளதம் கார்த்திக் appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய இயக்குநரான கிருஷ்ணா இயக்குகிறார்.
சிம்புவும், கௌதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்கும் இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர், கலையரசன் இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
கொரோனா காரணமாக பத்து தல படத்தின் படப்பிடிப்பு தாமதமான நிலையில், 26.08.2021 அன்று இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் துவங்கியுள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் கௌதம் கார்த்திக் நடித்து வருவதாக தெரிகிறது.
The post ‘பத்து தல’ படப்பிடிப்பில் இணைந்திருக்கும் கெளதம் கார்த்திக் appeared first on Touring Talkies.
]]>The post ஆர்.கே.செல்வமணிக்கு எதிராகத் திரும்பிய தயாரிப்பாளர்கள் சங்கம் appeared first on Touring Talkies.
]]>நடிகர் சிம்பு நடிப்பில் நேற்றைக்குத் துவங்கியிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பிற்கு பெப்சி அமைப்பு ஒத்துழைப்பு கொடுத்ததே இதற்குக் காரணமாம்.
நடிகர் சிம்பு மீது பல்வேறு தயாரிப்பாளர்கள் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள்.
அன்பானவன் அடங்காவதன் அசராதவன் படத்திற்காக சிம்புவிடம் நஷ்ட ஈடு கேட்டுக் கொண்டிருக்கிறார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன். 6 வருடங்களுக்கு முன் கொடுத்த 1 கோடி ரூபாய் அட்வான்ஸை திருப்பிக் கொடுக்கும்படி கேட்டிருக்கிறார் தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ். இது நம்ம ஆளு படத்தின் வெளியிட்டீன்போது பண உதவி செய்த வகையில் 3.50 கோடி ரூபாயை தனக்குத் தர வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவரான முரளி ராமசாமியே கேட்டிருக்கிறார்.
இத்தனை பிரச்சினைகளையும் தாண்டி சிம்பு தனது படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த முறை அவருக்குக் கடிவாளம் போட்டு பணத்தைத் திரும்பப் பெற்றுவிடலாம் என்று நினைத்த தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் சென்ற வாரமே சிம்புவின் புதிய படத்திற்கு பெப்சி தொழிலாளர்களை அனுப்பக் கூடாது என்று கடிதம் அனுப்பியது.
இதையொட்டி நடந்த பேச்சுவார்த்தையின்போதும் நேரில் வந்து கலந்து கொண்ட இயக்குநர் செல்வமணி தயாரிப்பாளர் சங்கம் என்ன முடிவெடுக்கிறதோ அதைத் தான் ஏற்றுக் கொள்வதாகச் சொல்லிவிட்டு வந்தார்.
ஆனால் இரண்டே நாளில் பல்டியடித்து சிம்புவின் புதிய பட ஷூட்டிங்கிற்கு பெப்சியின் மூலமாக ஓகே சொன்னார் செல்வமணி. இதனால் அதிர்ந்து போன தயாரிப்பாளர் சங்கத்தினர் செல்வமணியிடம் கேட்டதற்கு “ஷூட்டிங்கிற்கு பிளான் பண்ணிட்டாங்களாம். இப்போ நிறுத்தினால் தயாரிப்பாளருக்கு நிறைய நஷ்டம் வரும். ஒரு ஷெட்யூல் போகட்டும். அதன் பின்பு பேசித் தீர்ப்போம்..” என்று மென்மையாகப் பதில் சொன்னாராம்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர் சங்கத்தினர் நேற்று மாலை அவசர செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார். இதில் செல்வமணி பெப்சியின் தலைவர் பதவியில் இருக்கும்வரையிலும் அதற்கு எந்தவித ஒத்துழைப்பும் கொடுக்கப் போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.
திரையுலகத்தில் முதன்மையான சங்கமே தயாரிப்பாளர் சங்கம்தான். அவர்களில்லாமல் தொழிலாளர்கள் இல்லை. இப்போது அவர்களே தொழிலாளர் சங்கத்தின் தலைமைக்கு எதிராகத் திரும்பியிருப்பதால் நிலைமை என்னவாகும் என்பது தெரியவில்லை.
The post ஆர்.கே.செல்வமணிக்கு எதிராகத் திரும்பிய தயாரிப்பாளர்கள் சங்கம் appeared first on Touring Talkies.
]]>The post ‘மஹா’ படத்தை வெளியிட தடை கோரி படத்தின் இயக்குநரே வழக்கு தொடுத்துள்ளார்..! appeared first on Touring Talkies.
]]>எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வி.மதியழகன் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘மகா’.
இந்தப் படத்தில் ஹன்சிகா மோத்வானி கதையின் நாயகியாக நடிக்கிறார். இத்திரைப்படம் ஹன்ஸிகா நடிக்கும் 50-வது திரைப்படமாகும்.
ஹன்ஸிகாவின் முன்னாள் காதலரான நடிகர் சிம்பு இந்தப் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். மேலும் ஸ்ரீகாந்த், தம்பிராமையா, கருணாகரன் உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இது இவருக்கு 25-வது படமாகும்.
‘Magnetizing, Alluring, Hidden & Aggressive’ ஆகியவை இந்த ‘MAHA’ படத்தின் தலைப்பின் முதல் எழுத்துக்களை குறிப்பவை. படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்களில் ஹன்சிகா மோத்வானியின் ஸ்டில்ஸுக்கு பொருத்தமாகவும் இவை அமைந்திருந்தன.
அந்தப் போஸ்டரில் நடிகை ஹன்சிகா மோத்வானி காவி உடையில் கஞ்சா புகைப்பதுபோல போஸ் கொடுத்திருந்தார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில்கூட ஒரு வழக்கு பதிவாகியுள்ளது.
தற்போது படம் முழுவதும் முடிவடைந்து திரைக்கு வரத் தயாராக இருக்கிறது. ஆனால் கொரோனா லாக் டவுன் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், ஓடிடி தளத்தில் இந்தப் படத்தைத் திரையிடும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரி அந்தப் படத்தின் இயக்குநரே நீதிமன்றத்தை அணுகியிருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
படத்தின் இயக்குநர் யு.ஆர்.ஜமீல் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “தனக்கு இந்தப் படத்தை இயக்குவதற்காக தனக்கு 24 லட்சம் ரூபாய் சம்பளமாக பேசப்பட்டதாகவும் ஆனால் இதுவரையிலும் தனக்கு 8 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே தரப்பட்டுள்ளதால், இன்னமும் 15 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பாக்கியாக தர வேண்டியிருக்கிறது.
மேலும், இந்தப் படத்தின் ஒரிஜினல் கதாசிரியரான தனக்கே தெரியாமல் கதைகளில் மாற்றம் செய்து உதவி இயக்குநர் ஒருவரின் இயக்கத்தில் படத்தில் மேலும் சில காட்சிகளை படமாக்கி இணைத்திருக்கிறார்கள். இதனால் தனக்கு இழப்பீடாக 10 லட்சம் ரூபாய் தர வேண்டும். அதுவரையிலும் படத்தை ஓடிடியில் வெளியிட தடை விதிக்க வேண்டும்..” என்று இயக்குநர் ஜமீல் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு படத்தின் தயாரிப்பாளர், படத்தின் உதவி இயக்குநர், படத் தொகுப்பாளர் மூவருக்கும் உத்தரவு பிறப்பித்து வழக்கையும் தள்ளி வைத்துள்ளார்.
The post ‘மஹா’ படத்தை வெளியிட தடை கோரி படத்தின் இயக்குநரே வழக்கு தொடுத்துள்ளார்..! appeared first on Touring Talkies.
]]>The post ‘மாநாடு’ படத்தின் முதல் பாடல் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டது. appeared first on Touring Talkies.
]]>இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாநாடு’.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் எம்.நாதனும், இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜாவும் பணியாற்றுகிறார்கள்.
இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்தது. இன்னும் ஓரிரு நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கி இருக்கிறது. இதனை எங்கு படமாக்கலாம் என்று திட்டமிட்டு வருகிறது படக் குழு.
இதுவரை முடிக்கப்பட்ட காட்சிகளுக்கான இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
அரசியல் பின்னணியில் உருவாகி வரும் இந்தப்படத்தில் அப்துல் காலிக் என்கிற கதாபாத்திரத்தில் சிலம்பரசன் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தின் முதல் பாடல் ரம்ஜான் தினத்தன்று வெளியாகும் என்று ஏற்கெனவே படக் குழுவால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த மே 9-ம் தேதியன்று, படத்தின் இயக்குநரான வெங்கட் பிரபுவின் தாயார் மணிமேகலை உடல் நலக் குறைவு காரணமாகக் காலமானார்.
இதைத் தொடர்ந்து ‘மாநாடு’ படக் குழுவினர் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் வெங்கட் பிரபுவின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தனர். இதே நேரத்தில் மாநாடு படத்தின் முதல் பாடல் வெளியீட்டையும் ஒத்தி வைத்துள்ளதாக அந்தப் படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, “நம் இஸ்லாமிய உறவுகள் கொண்டாடும் ரம்ஜான் தினத்தன்று வெளியிடுவதாக இருந்த நமது #மாநாடு படத்தின் first single நமது இயக்குநர் வெங்கட் பிரபு அவர்களின் தாயாரின் மறைவின் வருத்தத்தில் பங்கு கொள்ளும் பொருட்டு இன்னும் சில நாட்கள் தள்ளி வெளியாக உள்ளது என்பதை வருத்தமுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்னொரு தேதியில் first sigle வெளியிடுவோம். அதற்கான அறிவிப்பை விரைவில் தெரிவிப்போம். நண்பர்களின் துக்கத்தில் பங்குகொள்வோம். கொண்டாட்டத்தையும் தாண்டி கவனமாக இருங்கள். விரைந்து மீள்வோம். நன்றி சகோதரர்களே..” என்று குறிப்பிட்டுள்ளார்.
The post ‘மாநாடு’ படத்தின் முதல் பாடல் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டது. appeared first on Touring Talkies.
]]>The post கே.வி.ஆனந்தின் படத்தில் நடிக்கவிருந்தது நடிகர் சிம்புவா..? appeared first on Touring Talkies.
]]>இயக்குநர் கே.வி.ஆனந்தின் இறப்புக்காக அஞ்சலி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் சிம்பு. அந்த அறிக்கையில்தான் இதனைக் குறிப்பிட்டுள்ளார் நடிகர் சிம்பு.
“தொடர்ச்சியான மரணங்கள் அதிர்ச்சியைத் தருகிறது. மரணம் எதிர்பாராத ஒன்றுதான் என்றாலும், நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பவர்களை, நம்மோடு தினமும் தொடர்பில் இருப்பவர்களை எதிர்பாராமல் இழப்பது அதிர்ச்சியளிக்கிறது.
அதிர்ந்து பேசாத நல்ல மனிதர் கே.வி.ஆனந்த் அவர்கள். அவருடைய ‘கோ’ படத்தில் நான் நடித்திருக்க வேண்டியது. அப்போதிருந்த சூழலில் தவிர்க்கும்படியாகிவிட்டது.
சமீபத்தில் மிக அருமையான கதை ஒன்றை எனக்குச் சொல்லியிருந்தார். “நாம் சேர்ந்து படம் பண்ணலாம்” எனச் சொல்லியிருந்தேன்.
ஒளிப்பதிவாளர்கள் இயக்குநராகி வெற்றி பெற்றவர்களில் கே.வி.ஆனந்த் அவர்கள் மிக முக்கியமானவர். நிச்சயம் பேசப்படும் நிறையப் படங்களை அவர் தொடர்ந்து தந்திருப்பார்… அவசரமாகப் பயணித்துவிட்டார் இறைவனிடம். திரைத்துறைக்கு அவரின் மறைவு பேரிழப்பு..” என்று சிம்பு தன்னுடைய அஞ்சலியைப் பதிவு செய்திருக்கிறார்.
இயக்குநர் கே.வி.ஆனந்த் கடைசியாக இயக்கிய திரைப்படம் ‘காப்பான்’. இந்தப் படம் 2019-ம் ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதியன்று வெளியானது. ‘லைகா நிறுவனம்’ தயாரித்திருந்த இத்திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைக் குவிக்கவில்லையென்றாலும்.. நஷ்டமாகாமல் தப்பித்தது.
தனது அடுத்தப் படத்திற்கான கதையை 2020-ம் ஆண்டில் இருந்து எழுதத் தொடங்கிய கே.வி.ஆனந்த் நடுவில் வந்த கொரோனா முதல் அலையால் அதனைத் தொடர முடியாமல் இருந்தார்.
அதன் பிறகு கொரோனா கொஞ்சம் ஓய்ந்திருந்த பிறகு சென்னைக்கு அருகேயிருக்கும் தனது பண்ணை வீட்டில் தனது உதவியாளர்களுடன் இணைந்து கதை டிஸ்கஷன் செய்து ஒரு கதையைத் தயார் செய்துவிட்டார்.
அந்தக் கதைக்கேற்ற நாயகர்களையும், தயாரிப்பாளரையும் பிடிப்பதற்காகத்தான் இந்தக் கொரோனா காலக்கட்டத்தில் மிகவும் அலைந்து கொண்டிருந்தார். ஹீரோக்கள் அனைவருமே மிகவும் பிஸியாக இருக்க… கொரோனா பயத்தினால் பெரிய பட்ஜெட்டில் படத்தைத் தயாரிக்க தயாரிப்பாளர்களும் முன் வராமல் இருக்க.. இவருடைய பிராஜெக்ட் தள்ளிப் போடப்பட்டுக் கொண்டே வந்தது.
இந்த நிலையில்தான் கே.வி.ஆனந்தின் மரணமும் நிகழ்ந்திருக்கிறது. இப்போது சிம்பு சொல்லியிருக்கும் தகவலின்படி கே.வி.ஆனந்த் தனது அடுத்தப் படக் கதையை சிம்புவிடம்தான் சொல்லியிருப்பார் என்று தெரிகிறது. தொடர்ந்து “நேற்றுவரை என்னுடன் தொடர்பில் இருந்தவர்…” என்று சிம்பு சொல்லியிருப்பதால், கே.வி.ஆனந்த் தேர்ந்தெடுத்து வைத்திருந்த நாயகன் சிம்புதான் என்றும் தெரிகிறது.
மேலும், பிரபல மக்கள் தொடர்பாளர் ஜான் சொல்லும் ஒரு விஷயமும் கே.வி.ஆனந்த் படம் இயக்க வேண்டும் என்பதில் எவ்வளவு ஆர்வமாக இருந்தார் என்பதைச் சொல்கிறது.
பாலிவுட்டில் இருந்து கோடம்பாக்கத்தில் கால் பதிக்கும் பொருட்டு ஒரு மிகப் பெரிய பட்ஜெட் பிடிக்கும் கதையுடன் வந்த ஒரு மிகப் பெரிய நிறுவனம் தமிழில் அந்தப் படத்தை இயக்குவதற்காக இயக்குநர்களைத் தேடிக் கொண்டிருந்தது.
அந்த நேரத்தில் இந்த வாய்ப்பு குறித்து ஜான், கே.வி.ஆனந்திடம் போனில் பேசியபோது, “நான் இப்போதுதான் 2 வருட காலம் செலவழித்து ஒரு கதையைத் தயார் செய்து படப்பிடிப்புக்குப் போகும் அளவுக்கு தயாராக இருக்கிறேன். இப்போது புதிதாக ஒரு கதையை கேட்டு அதை உள் வாங்கி.. அதைத் திரைக்கதையாக்கி ரெடியாகவே ஒரு வருடமாகிவிடும். அதனால் அந்த பிராஜெக்ட் எனக்கு வேண்டாம்..” என்று மறுத்திருக்கிறார்.
அந்த அளவுக்கு தனது கதையின் மீது நம்பிக்கை வைத்து காத்திருந்தவரைத்தான் காலம் கருணை காட்டாமல் அழைத்துச் சென்றுவிட்டது.
இந்தக் கொரோனாவுக்கு ஒரு அழிவு காலம் வந்திடாதோ..?
The post கே.வி.ஆனந்தின் படத்தில் நடிக்கவிருந்தது நடிகர் சிம்புவா..? appeared first on Touring Talkies.
]]>The post 6 நிமிட காட்சியில் ஒரே டேக்கில் நடித்து அசத்திய சிம்பு appeared first on Touring Talkies.
]]>மேலும், ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திரசேகர், எஸ்.ஏ.சந்திரசேகர், அஞ்சனா கீர்த்தி, உதயா, மனோஜ் கே. பாரதி, பிரேம்ஜி, கருணாகரன், மகத், டேனியல் போப், உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். உமேஷ் ஜே குமார் கலையை கவனிக்க, ஸ்டண்ட் சில்வா சண்டைப் பயிற்சியைக் கையாள, மதன் கார்க்கி பாடல்கள் எழுத, நடனம் அமைக்கிறார் ராஜூ சுந்தரம். வாசுகி பாஸ்கர் ஆடை வடிவமைப்பினை கவனித்துக் கொள்கிறார்.
அரசியல் பின்னணியில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ‘அப்துல் காலிக்’ என்கிற கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நேற்றைய படப்பிடிப்பின்போது, சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்டோர் நடிக்கும் காட்சியை படமாக்கினார் வெங்கட் பிரபு. படத்தின் மிக முக்கியமான, கிட்டத்தட்ட ஆறு நிமிடம் நீளமாகக் கொண்ட இந்த காட்சியில், ஒரே டேக்கில் நடித்து அசத்தினார் சிம்பு.
சிம்பு சிங்கிள் டேக் நடிகர் என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால் ஆறு நிமிட காட்சியை கூட, ஒரே டேக்கில் அவர் நடித்து முடித்ததை கண்டு அசந்துபோன படக் குழுவினர், காட்சி படமாக்கப்பட்டு முடிந்ததும்… உடனே கை தட்டல் மூலமாக நடிகர் சிம்புவுக்கு தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
The post 6 நிமிட காட்சியில் ஒரே டேக்கில் நடித்து அசத்திய சிம்பு appeared first on Touring Talkies.
]]>