The post சசிகுமாரின் ‘காரி’ படம் நவம்பர் 25-ம் தேதி வெளியாகிறது appeared first on Touring Talkies.
]]>சர்தார் படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லக்ஷ்மண் குமார் தயாரித்துள்ள இந்த ‘காரி’ படத்தை அறிமுக இயக்குநரான ஹேமந்த் இயக்கியுள்ளார்.
படத்தின் கதாநாயகியாக புதிய வரவான மலையாள நடிகை பார்வதி அருண் நடித்துள்ளார். சசிகுமாருடன் மோதும் வில்லனாக நடிகர் ஜேடி சக்கரவர்த்தி நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ரெடின் கிங்ஸ்லி, ஆடுகளம் நரேன், இயக்குநர் பாலாஜி சக்திவேல், நாகி நீடு, பிரேம் குமார், பிக்பாஸ் புகழ் சம்யுக்தா, அம்மு அபிராமி, ராம்குமார், தேனி முருகன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
எல்லை தெய்வமான காரியின் பெயரில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தக் ‘காரி‘ திரைப்படம் வரும் வரும் நவம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
The post சசிகுமாரின் ‘காரி’ படம் நவம்பர் 25-ம் தேதி வெளியாகிறது appeared first on Touring Talkies.
]]>The post “புராணப் படத்தை இயக்கப் போகிறேன்” – நடிகர்-இயக்குநர் சசிகுமார் அறிவிப்பு appeared first on Touring Talkies.
]]>நடிகர் சசிகுமார் இது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில், “நான் விரைவில் ஒரு இதிகாச படத்தை இயக்கவிருக்கிறேன். அந்தப் படத்திற்கான திரைக்கதையை ‘ஈசன்’ படம் வெளியானதற்கு பின்பு எழுதி முடித்தேன். இப்பொழுது வெளிவந்த ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘பாகுபலி’க்கு முன்னரே அந்தப் படத்திற்கான பணிகள் தொடங்கியது. ஆனால் படத்தின் செலவு மிகவும் அதிகமாக இருந்ததால், அந்தக் காலகட்டத்தில் இந்தப் படத்தினை எடுக்க முடியவில்லை. ஆனால், விரைவில் இந்தப் படத்தினை இயக்குவேன்.” என்று தெரிவித்தார்.
The post “புராணப் படத்தை இயக்கப் போகிறேன்” – நடிகர்-இயக்குநர் சசிகுமார் அறிவிப்பு appeared first on Touring Talkies.
]]>The post சசிகுமாருடன் இணையும் இயக்குநர் விருமாண்டி appeared first on Touring Talkies.
]]>அப்படியொரு உண்மைச் சம்பவத்தை ‘க/பெ ரணசிங்கம்’ என்ற பெயரில் இயக்கி மாபெரும் வெற்றியைப் பெற்றவர் இயக்குநர் விருமாண்டி. அந்தப் படத்தைப் பார்த்த திரையுலக பிரபலங்கள் பலரும் இயக்குநர் விருமாண்டியை வெகுவாகப் பாராட்டினார்கள்.
அதற்குப் பிறகு தனது அடுத்த படத்துக்கான கதையை முடிவு செய்து, திரைக்கதை எழுதி வந்தார் விருமாண்டி. இதுவும் ஒரு உண்மைச் சம்பவம்தான்.
தற்போது பல்வேறு முன்னணி நாயகர்கள் படங்களின் வசூலைக் கொண்டாடி வருகிறோம். அதற்கு எல்லாம் முன்னோட்டமாக 1975-ம் ஆண்டு ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தனது புதிய படத்தின் கதையை எழுதியிருக்கிறார் இயக்குநர் விருமாண்டி.
இந்தக் கதையைக் கேட்டவுடன் பரதன் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஆர்.விஸ்வநாதன் படத்தைத் தயாரிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
படத்தில் நாயகனாக சசிகுமார் நடிக்கவிருக்கிறார். சசிகுமாரும், விருமாண்டியும் இணையும் முதல் படம் இதுவேயாகும்.
இந்தப் படத்துக்குப் பாடலாசிரியராக வைரமுத்து, ஒளிப்பதிவாளராக என்.கே.ஏகாம்பரம், படத் தொகுப்பாளராக டி.சிவாநாதீஸ்வரன், இசையமைப்பாளராக ஜிப்ரான் ஆகியோர் பணிபுரிகிறார்கள்.
உண்மைச் சம்பவங்கள் என்றால் தத்ரூபமாகப் படமாக்க வேண்டும். அதற்குத் திறமையான தொழில் நுட்பக் கலைஞர்கள் இருந்தால் சாத்தியப்படுத்தி விடலாம். இந்தப் படத்தின் தொழில் நுட்பக் கலைஞர்கள் பட்டியலைப் பார்த்தாலே, இதன் நம்பகத்தன்மை எப்படி இருக்கும் என்பது தெளிவாகிறது.
2021 ஏப்ரலில் படப்பிடிப்பைத் தொடங்கி, இந்த ஆண்டு முடிவுக்குள் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.
தற்போது சசிகுமாருடன் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகளின் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
The post சசிகுமாருடன் இணையும் இயக்குநர் விருமாண்டி appeared first on Touring Talkies.
]]>The post தீபாவளிக்கு வரத் தயாராக இருக்கும் ‘எம்.ஜி.ஆர். மகன்’ திரைப்படம்..! appeared first on Touring Talkies.
]]>ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘எம்.ஜி.ஆர். மகன்.’
இந்தப் படத்தில் சசிகுமார் நாயகனாகவும், மிருணாளினி ரவி நாயகியாகவும் நடித்துள்ளனர். நாயகிக்கு இதுதான் முதல் தமிழ்த் திரைப்படம். மேலும், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரகனி, சிங்கம் புலி, நிவேதிதா ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்தப் படத்துக்கு வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய, அந்தோணி தாசன் இசையமைத்திருக்கிறார். விவேக் ஹர்ஷன் படத் தொகுப்புப் பணிகளையும், துரைராஜ் கலை இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளனர். சரவணன் தயாரிப்பு நிர்வாகியாகவும், சித்தார்த், செந்தில்குமார் ஆகியோர் நிர்வாகத் தயாரிப்பாளர்களாகப் பணிபுரிந்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் பொன்ராம்.
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’. ‘சீமராஜா’ ஆகிய படங்களுக்குப் பிறகு பொன்ராம் இயக்கும் 4-வது திரைப்படம் இது.
சென்சாரில் இத்திரைப்படத்திற்கு ‘யு’ சர்டிபிகேட் கிடைத்துள்ளது. இந்த மாதத்திற்குள்ளாக தியேட்டர்களை திறக்க அரசு அனுமதித்துவிட்டால், அடுத்த மாதம் தீபாவளி தினத்தன்று இத்திரைப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post தீபாவளிக்கு வரத் தயாராக இருக்கும் ‘எம்.ஜி.ஆர். மகன்’ திரைப்படம்..! appeared first on Touring Talkies.
]]>