Friday, April 12, 2024

சசிகுமாருடன் இணையும் இயக்குநர் விருமாண்டி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

உண்மைச் சம்பவங்களைப் படமாக்குவது எப்போதுமே அவ்வளவு எளிதான விஷயமல்ல. அந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் பார்க்கும்போது, அவர்களது நினைவுகள் மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும்.

அப்படியொரு உண்மைச் சம்பவத்தை ‘க/பெ ரணசிங்கம்’ என்ற பெயரில் இயக்கி மாபெரும் வெற்றியைப் பெற்றவர் இயக்குநர் விருமாண்டி. அந்தப் படத்தைப் பார்த்த திரையுலக பிரபலங்கள் பலரும் இயக்குநர் விருமாண்டியை வெகுவாகப் பாராட்டினார்கள்.

அதற்குப் பிறகு தனது அடுத்த படத்துக்கான கதையை முடிவு செய்து, திரைக்கதை எழுதி வந்தார் விருமாண்டி. இதுவும் ஒரு உண்மைச் சம்பவம்தான்.

தற்போது பல்வேறு முன்னணி நாயகர்கள் படங்களின் வசூலைக் கொண்டாடி வருகிறோம். அதற்கு எல்லாம் முன்னோட்டமாக 1975-ம் ஆண்டு ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தனது புதிய படத்தின் கதையை எழுதியிருக்கிறார் இயக்குநர் விருமாண்டி.

இந்தக் கதையைக் கேட்டவுடன் பரதன் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஆர்.விஸ்வநாதன் படத்தைத் தயாரிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

படத்தில் நாயகனாக சசிகுமார் நடிக்கவிருக்கிறார். சசிகுமாரும், விருமாண்டியும் இணையும் முதல் படம் இதுவேயாகும்.

இந்தப் படத்துக்குப் பாடலாசிரியராக வைரமுத்து, ஒளிப்பதிவாளராக என்.கே.ஏகாம்பரம், படத் தொகுப்பாளராக டி.சிவாநாதீஸ்வரன், இசையமைப்பாளராக ஜிப்ரான் ஆகியோர் பணிபுரிகிறார்கள்.

உண்மைச் சம்பவங்கள் என்றால் தத்ரூபமாகப் படமாக்க வேண்டும். அதற்குத் திறமையான தொழில் நுட்பக் கலைஞர்கள் இருந்தால் சாத்தியப்படுத்தி விடலாம். இந்தப் படத்தின் தொழில் நுட்பக் கலைஞர்கள் பட்டியலைப் பார்த்தாலே, இதன் நம்பகத்தன்மை எப்படி இருக்கும் என்பது தெளிவாகிறது.

2021 ஏப்ரலில் படப்பிடிப்பைத் தொடங்கி, இந்த ஆண்டு முடிவுக்குள் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

தற்போது சசிகுமாருடன் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகளின் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

- Advertisement -

Read more

Local News