The post ட்ரீம் வாரியர்ஸ்-கார்த்தி-ராஜூ முருகன் கூட்டணியில் உருவாகும் ‘ஜப்பான்’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>தமிழ் சினிமா இதுவரை பாத்திராத கதாபாத்திரங்கள், அவர்களிருக்கும் பிரச்சினைகள், அறம் சார்ந்த தீர்வு என தனது திரைப்படங்கள் மூலம் படைப்பாற்றலும், சமூகப் பொறுப்பும் சேர்ந்து இயங்க முடியும் என்பதை நிரூபித்து வரும் இயக்குநர் ராஜு முருகன். அப்படி, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க, ராஜு முருகன் இயக்கத்தில் 2016ல் வெளிவந்து தமிழில் சிறந்த படத்திற்கான தேசிய விருதை வென்ற படம் ‘ஜோக்கர்’. தற்போது மீண்டும் இதே கூட்டணி ‘ஜப்பான்’ மூலம் மீண்டும் இணைகிறது.
2007ஆம் ஆண்டு நாயகனாக அறிமுகமானதிலிருந்து ஜனரஞ்சகமான, அதே நேரம் வித்தியாசமானப் படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் கார்த்தி. 2022ஆம் வருடத்தில் 3 அடுத்தடுத்த தொடர் வெற்றிப் படங்களுடன் வாகை சூடியுள்ளார்.
‘சகுனி’, ‘காஷ்மோரா’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘கைதி’, ‘சுல்தான்’ என 5 சூப்பர்ஹிட் திரைப்படங்களைத் தொடர்ந்து 6-வது முறையாக ’ஜப்பான்’ மூலம் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் நாயகனாகியிருக்கிறார். இது அவரது 25வது படம் என்பது இந்தப் படத்தை இன்னும் விசேஷமானதாக்குகிறது.
கார்த்தி ஜோடியாக அனு இம்மானுவேல் முதல் முறையாக இப்படத்தில் நடிக்கவுள்ளார். தெலுங்கில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, நாயகனாகவும் வெற்றி பெற்றவர் நடிகர் சுனில். கடந்த வருடம் அல்லு அர்ஜுன் நடித்து வெளிவந்த ‘புஷ்பா’ படத்தில் ‘மங்களம் சீனு’ என்ற கதாபாத்திரத்தில் வில்லனாகவும் நடித்து மிரட்டியவர். ‘ஜப்பான்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் சுனில்.
25 வருடங்களாகத் தமிழ் திரையுலகில் ஒளிப்பதிவாளராகவும், ‘கோலி சோடா’, ‘கடுகு’ ஆகியத் திரைப்படங்கள் மூலம் இயக்குநராகவும், தனக்கென ஒரு பிரத்யேக அடையாளத்தை உருவாக்கியுள்ள விஜய் மில்டன், ‘ஜப்பான்’ திரைப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
2020ஆம் ஆண்டின் சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை வென்ற ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். ஏற்கனவே கார்த்தி – ஜிவி பிரகாஷ் கூட்டணியில் வெளியான படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அந்த வரிசையில் இந்தப் படத்தையும் வெற்றி பெறச்செய்ய ஜிவி பிரகாஷ்குமார் மும்முரமாகத் தயாராகியுள்ளார்.
‘மாநகரம்’, ‘கைதி’, ‘டாணாக்காரன்’, ‘விக்ரம்’ உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் ஃபிலோமின் ராஜ் படத் தொகுப்புப் பொறுப்பினை ஏற்றுள்ளார். தேசிய விருது வென்ற வினீஷ் மங்கலான் இந்தப் படத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணிபுரியவுள்ளார்.
இந்த ‘ஜப்பான்’ படத்தின் பூஜை செவ்வாய்க்கிழமை (8.11.2022) அன்று காலை காலை சினிமா பிரபலங்கள் வாழ்த்த, சிறப்பான முறையில் நடைபெற்றது. விரைவில் தூத்துக்குடியில் முதல் கட்டப் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது.
மிகப் பெரும் பொருட்செலவில் தயாராகவிருக்கும் இந்தப் படத்தின் முன் தயாரிப்பு, திட்டமிடல் பணிகளை நீண்ட நாட்களாக மிகுந்த கவனத்துடன் மேற்கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் ராஜு முருகன்.
ராஜுமுருகன் – கார்த்தி – ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் என்கிற தனித்துவமான, தரமான கூட்டணியின் மீது இப்போதே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை ‘ஜப்பான்’ கண்டிப்பாக பல மடங்கு விஞ்சும் என நம்பிக்கையுடன் வேலைகளைத் தொடங்கியுள்ளது படக்குழு.
விரைவில் ‘ஜப்பான்’ படத்தின் முதல் பார்வையை (First Look) ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.
The post ட்ரீம் வாரியர்ஸ்-கார்த்தி-ராஜூ முருகன் கூட்டணியில் உருவாகும் ‘ஜப்பான்’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>The post “பொன்னியின் செல்வன்’ படத்தை தமிழ்நாடே கொண்டாடுகிறது” – நடிகர் கார்த்தியின் பெருமிதம்..! appeared first on Touring Talkies.
]]>இந்த விழாவில் நடிகர் கார்த்தி பேசுகையில், ”இந்த ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாள் நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்தும் இன்னும் பசுமையாய் நினைவில் இருக்கிறது.
மேக்கப் போட்ட பிறகு முதல் காட்சி கோயில் ஒன்றில் எடுக்கப்பட்டது முதல் அனைத்து அனுபவமும் மனதில் மறையாமல் இருக்கிறது.
அனைவரும் இணைந்து குடும்பம் போல் ஒன்றிணைந்து பணியாற்றுவது என்பது புதிது. நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள், பணியாளர்கள் என அனைவரும் ஒரு குடும்பமாக பணியாற்றியதும் மறக்க இயலாது. இந்த அனுபவங்கள் எல்லாம் எனக்கு மன நிறைவை அளித்திருக்கிறது.
இதைவிட ‘பொன்னியின் செல்வன்’ படத்தை விளம்பரப்படுத்துவதற்காக குழுவாக ஒவ்வொரு இடத்திற்கும் பயணித்த அனுபவமும் புதிது. இது தமிழ் சினிமாவின் படமல்ல. தமிழ்நாட்டின் படம். இது ஒரு முக்கியமான பதிவு. இதை எடுத்துக்கொண்டு இந்தியா முழுவதும் சென்று, அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.
தற்போது பான் இந்தியா சீசன் என்பதால், இந்த படத்தைப் பற்றி தமிழில் மட்டுமல்லாமல், ஏனைய இந்திய மொழிகள் பேசும் மக்களிடத்திலும் சென்று அறிமுகப்படுத்தினோம்.
ஏனெனில் நம்மிடம் இவ்வளவு அழுத்தமான கதையம்சம் கொண்ட படைப்பு இருக்கிறது. இதனை மற்றவர்களிடத்தில் எடுத்துச் செல்லும்போது தன்னம்பிக்கையும் இருந்தது. அதற்கேற்ற வகையில் ஒவ்வொரு பத்திரிக்கையிலும் இப்படத்தை பற்றிய விமர்சனம் இடம் பெற்றிருந்தது.
இத்தருணத்தில் தமிழ்நாடு, இந்தியா மற்றும் உலகளவில் இருக்கும் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படத்தில் இடம்பெற்ற சிறிய, சிறிய விசயங்களைகூட நுட்பமாக விவரித்து பாராட்டி எழுதி இருந்தனர்.
இதையெல்லாம் வாசிக்கும் பொழுது மகிழ்ச்சியாக இருந்தது. இதன் மூலம் மக்களின் ரசனை மேம்பட்டிருக்கிறது என்பதை அறியும்போது உண்மையில் சந்தோஷமாக இருந்தது.
‘பொன்னியின் செல்வன்’ நாவலை வாசித்து விட்டு, அதனை படமாக திரையரங்குகளில் பார்க்கும்போது மாயாஜாலம் நடத்திய மணி சாருக்கு நன்றி.
லட்சக்கணக்கான வாசகர்களின் மனதில் ஆண்டு கணக்கில் ஊறப் போட்டிருந்த கதாபாத்திரங்களையும், கதையையும் திரையில் கொண்டு வருவது எளிதல்ல. இந்த படைப்பை உருவாக்க வேண்டும் என்று யாரும் மணிரத்னத்தை கட்டாயப்படுத்த முடியாது.
ஆனால் மணி சார்தான், “நான் கூடுதல் சுமையை தூக்குவேன். இதனை தூக்குவதற்கு மகிழ்ச்சியுடன் சம்மதிக்கிறேன்” என்று சொல்லி, பொறுப்பை உணர்ந்து எங்களை எல்லாம் ஒருங்கிணைத்து வழி நடத்தி உலகில் உள்ள அனைவரும் கொண்டாடும் வகையில் ஒரு படைப்பை வழங்கியிருக்கிறார். அதற்காக அவருக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றி…” என்றார்.
The post “பொன்னியின் செல்வன்’ படத்தை தமிழ்நாடே கொண்டாடுகிறது” – நடிகர் கார்த்தியின் பெருமிதம்..! appeared first on Touring Talkies.
]]>The post ‘சர்தார்’ இயக்குநர் மித்ரனுக்கு ஃபார்ச்சூனர் கார் பரிசளித்தார் நடிகர் கார்த்தி appeared first on Touring Talkies.
]]>தீபாவளி வெளியீடாக பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மன்குமார் தயாரிப்பில் நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் P.S.மித்ரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘சர்தார்’. உளவாளி கதை, மக்களுக்கான அரசியல், கமர்ஷியல் மசாலா, காமெடி என சரியான விகிதத்தில் அனைத்தும் அமைந்ததில் ரசிகர்களிடம் உலகமெங்கும் பெரும் வரவேற்பை பெற்ற இப்படம், மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
இரண்டு வாரங்களை கடந்த பிறகு தற்போது இப்படத்திற்கு தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் P.S.மித்ரனுக்கு தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லக்ஷ்மன்குமார் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் ஒன்றை பரிசளித்துள்ளார். நடிகர் கார்த்தி இந்த பரிசினை இயக்குநருக்கு வழங்கினார்.
‘விருமன்’, ‘பொன்னியின் செல்வன்’ படங்களை தொடர்ந்து தீபாவளி ரிலீசாக வெளியான ‘சர்தார்’ இந்த வருடத்தில் கார்த்தியின் வெற்றி வரிசையில் ஹாட்ரிக் வெற்றியாக இடம் பிடித்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.
‘சர்தாரின்’ இந்த பிரம்மாண்டமான வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது ரசிகர்களை மேலும் உற்சாகம் கொள்ள வைத்துள்ளது.
The post ‘சர்தார்’ இயக்குநர் மித்ரனுக்கு ஃபார்ச்சூனர் கார் பரிசளித்தார் நடிகர் கார்த்தி appeared first on Touring Talkies.
]]>The post “சர்தார் படத்தின் 2-ம் பாகம் நிச்சயமாக உருவாகும்” – நடிகர் கார்த்தி அறிவிப்பு appeared first on Touring Talkies.
]]>சர்தார் படத்தின் சக்ஸஸ் மீட் நிகழ்ச்சி நேற்று மாலை தி.நகர் ஜி.ஆர்.டி. கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகர் கார்த்தி பேசும்போது, “தனிப்பட்ட நபர் முன்னேற வேண்டும் என்றில்லாமல் ஒரு குழுவாக பணியாற்றிய அனுபவம் எனக்கு அனைத்து படங்களிலும் கிடைத்தது. நானும், தயாரிப்பாளர் லக்ஷ்மனும் எல்.கே.ஜி.-யில் இருந்து நண்பர்கள். அனைத்து அழுத்தத்தையும் தாங்கிக் கொண்டு சிரித்துக் கொண்டே இருப்பார்.
இப்படத்தின் கதையை சாதாரணமாக கூறிவிடலாம். ஆனால், காட்சிப்படுத்துவது மிகவும் சிரமம். ஒவ்வொரு காட்சியும் மென்மேலும் சிறப்பாக வருவதற்கு அனைவரும் குழுவாக இருந்து பணியாற்றினார்கள்.
இயக்குநர் மித்ரன் ஒவ்வொரு காட்சிக்கும் என்ன தேவையோ அதைக் கேட்டு வாங்கிக் கொள்வார். உதாரணத்திற்கு பாகிஸ்தான் ராணுவ தளத்தை அமைப்பது எளிதல்ல. பார்க்கும்போதே பயம் வர வேண்டும்.
சமீப காலமாக தியாகம் என்பதை கேள்விப்படவில்லை. ஆனால், நாட்டிற்காக தியாகம் செய்தவர் வெளியே தெரியாமல் இருக்கிறார். அதை ஒரு படத்திலேயே அடக்கி, தீவிரமாக கொடுத்த மித்ரனுக்கு நன்றி. மித்ரனும், ரூபனும் பெரிய மேஜிக் செய்திருக்கிறார்கள்.
மேலும், ஒவ்வொரு வேடத்திற்கு மேக்கப் போடும் போது சிரமமாக இருக்கும். அதை கலைக்கும்போது முகம் எரியும். இதைவிட பெரிய ஜாம்பவான்கள் அதிகமாக கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என்று என் கோபத்தை நானே கட்டுப்படுத்திக் கொள்வேன்.
எனக்காவது 6 மணி நேரம் தூக்கம் கிடைக்கும். ஆனால், ஜார்ஜ்க்கு அதுகூட இருக்காது. அனைவரின் குடும்பத்தாரும் ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார்கள். அனைவரின் உழைப்பை வெளியேத் தெரியும்படி செய்த மித்ரனுக்கு நன்றி.
படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக அதிகமாக கோபப்பட்டேன். அதுவும், மேக்கப் போட்டால் ஹல்க் மாதிரி கோபம் வரும். ஆனால், அது எல்லாமே படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காகத்தான்.
ஜிவியின் இசை தத்ரூபமாக இருந்தது. லைலா மேடம் மிகவும் சந்தோஷப்பட்டார். ரஜிஷா மற்றும் ராஷியும் மகிழ்ச்சியடைந்தார்கள். குட்டி பையன் ரித்துவை அனைவரும் பாராட்டுகிறார்கள். முனீஷ்காந்த் அருமையான நடிகர். அவரால் எந்த சந்திப்பிலும் கலந்து கொள்ள முடியவில்லை. நாங்கள் கேட்டதற்காக ஒரு பாடலுக்கு நடனமாடி கொடுத்த மைனாவிற்கு நன்றி. நிச்சயமாக இந்தப் படத்தின் 2-ம் பாகம் தயாராகும்..” என்றார்.
The post “சர்தார் படத்தின் 2-ம் பாகம் நிச்சயமாக உருவாகும்” – நடிகர் கார்த்தி அறிவிப்பு appeared first on Touring Talkies.
]]>The post ராஜூ முருகன் படத்தின் கேரக்டர் பற்றிய ரகசியத்தை உடைத்த கார்த்தி appeared first on Touring Talkies.
]]>இது குறித்து அவர் பேசும்போது, “தற்போது, ‘கைதி-2’ படம் லைன் அப்பில் இருக்கிறது. அதற்கடுத்து ராஜுமுருகன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க போகிறேன். அந்த படத்தில் இருக்கும் கதாபாத்திரத்தை மற்ற நடிகர்கள் தேர்ந்தெடுத்து நடிப்பார்களா என்று தெரியாது. ஏனென்றால், அதுவொரு சிக்கலான கதாப்பாத்திரம். என் கையில் கிடைத்திருக்கிறது. அதை கச்சிதமாகப் பயன்படுத்தப் போகிறோம்..” என்றார்.
The post ராஜூ முருகன் படத்தின் கேரக்டர் பற்றிய ரகசியத்தை உடைத்த கார்த்தி appeared first on Touring Talkies.
]]>The post ஹாட்ரிக் ஹிட் அடிக்கப் போகும் கார்த்தியின் ‘சர்தார்’ appeared first on Touring Talkies.
]]>‘இரும்புதிரை’, ‘ஹீரோ’ வித்தியாசமான கதை களங்களுக்கு பிறகு மூன்றாவது படமாக கார்த்தியுடன் கை கோர்த்திருக்கிறார் இயக்குர் பி.எஸ்.மித்ரன்.
படம் பற்றிப் பேசிய இயக்குநர் பி.எஸ்.மித்ரன், “சர்தார்’ என்றால் பெர்சிய மொழியில் ‘படைத் தலைவன்’ என்று பொருள். இந்த ‘சர்தார்’ படம் ஒரு ஸ்பை த்ரில்லர் கதையைக் கொண்டது.
உளவாளி என்பது நமக்கு தெரிந்ததெல்லாம் நாடுவிட்டு நாடு நடப்பதுதான். ஆனால், நம்மைச் சுற்றியே அவ்வளவு உளவாளிகள் இருக்காங்க. உளவுங்கிறது நாட்டோட ராணுவ ரகசியம் தெரிஞ்சுக்கிற வேலை மட்டுமில்லை. நமக்கு பக்கத்தில் இருக்கிற ஒரு டீக்கடை பையனிலிருந்துகூட அதை ஆரம்பிக்கலாம்.
ரொம்ப சிம்பிளான இடத்திலிருந்து தொடங்கி மிகப் பெரிய இடம் நோக்கி இன்டர்நேஷனல்வரைக்கும் உளவு போகுது. இதில் உலக அரசியலும் உள்ளது. இது சாமானியனை எப்படி பாதிக்கிறது என்பது பற்றிய கதைதான் இது.
நம் அடையாளம். நாம் செய்யும் செயல்கள்தான். உளவாளிகளும் அப்படித்தான். அலெக்ஸாண்டர், ஹிட்லர் உட்பட பெரும்பாலானோர் வரலாற்றின் முக்கியமான சாதனைகளுக்கு பின்னாடி முக்கிய காரணமாக இருப்பது உளவாளிகள்தான்.
கார்த்தி, ‘சிறுத்தை’யில் ரத்னவேல் பாண்டியனாக விரைப்பும், ஜாலியாக இரண்டிலும் வந்தார். இதில் ஜாலியான போலீஸ்காரன். அலப்பறையாக இருக்கும். வயதான அப்பாவாக கார்த்தி கன கச்சிதம். இளமை, வயதானவர் இருவருக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருக்கும்.
அந்த மேக்கப்பை போடுவதற்கே மூன்று மணி நேரமாகும். மேக்கப்பை போட்டு டயலாக் பேசி நடிப்பதே கஷ்டம். இதில், கூடவே ஆக்ஷன் வேறு இருக்கும். அதுவும் ரொம்ப கஷ்டம். இப்படி மெனக்கிட்டு நடித்து கேரக்டருக்கு உயிர் கொடுத்துள்ளார் கார்த்தி.
ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன்னு இரண்டு பேருக்கும் முக்கிய கதாபாத்திரம். மற்றொரு முக்கிய கேரக்டரில் லைலா நடிச்சிருக்காங்க.
கார்த்தியின் படங்களிலேயே பெரும் பொருட் செலவில் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார் தயாரிப்பாளர் எஸ்.லட்சுமண்குமார். வரும் தீபாவளியன்று இப்படம் வெளியாகிறது…” என்றார்.
நடிகர் கார்த்தியின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘விருமன்’, ‘பொன்னியின் செல்வன்-1’ படங்களின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து இந்த ‘சர்தார்’ படமும் வெற்றியடைந்து ஹாட்ரிக் வெற்றியை கார்த்தி பெறுவார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
The post ஹாட்ரிக் ஹிட் அடிக்கப் போகும் கார்த்தியின் ‘சர்தார்’ appeared first on Touring Talkies.
]]>The post “மாணவர்கள் கவனம் சிதறாமல் படித்து முன்னேற வேண்டும்” – நடிகர் சிவக்குமார் அறிவுரை..! appeared first on Touring Talkies.
]]>மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது 100-வது படத்தின்போது, சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார் சிவகுமார். தகுதியான மாணவ, மாணவிகளை அடையாளம் கண்டு, தனது அறக்கட்டளை மூலம் பாராட்டி வருகிறார்.
இந்த ஆண்டுக்கான, ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’யின் 43-ம் ஆண்டு நிகழ்வு, சென்னை நுங்கம்பாக்கம் அலையன்ஸ் பிரான்சேஸ் ஆஃப் மெட்ராஸ் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000/- வீதம் மொத்தம் ரூ.2,50,000/- (இரண்டு லட்சம் ஐம்பதாயிரம் மட்டும்) பரிசளிக்கப்பட்டது. இத்துடன் திண்டிவனம் கல்வி மேம்பாட்டு குழு நடத்தும், ஏழை மாணவர்களுக்கான, ‘தாய்தமிழ் பள்ளிக்கு’ ஒரு லட்சமும், மூத்த ஓவிய கலைஞர் ராமு அவர்களுக்கு ரூ.50,000/- நன்கொடையாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், வரவேற்புரை முடிந்ததும் மாணவர்களுக்குப் பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பரிசு பெற்ற மாணவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவகுமார், “1979-ஆம் ஆண்டு, மே மாதம் தொடங்கப்பட்ட இந்த ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’ தொடர்ந்து, ப்ளஸ் டூ தேர்வில் சிறந்த உயர்ந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறது.
30 ஆண்டுகள் என் பொறுப்பில் இயங்கிய அறக்கட்டளையை, அதற்குப் பிறகு அகரம் ஃபவுண்டேஷன் பொறுப்பேற்று சிறப்பாக கல்விப் பணி செய்து வருகிறது. சிறிய அளவில் ஏழை மாணவர்களுக்கு செய்த உதவியை, என்னுடைய பிள்ளைகள் இப்போது நல்ல முறையில் செய்து வருகிறார்கள்.
கிராமங்களில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்கள் படிக்க எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். கல்வி ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை எந்தளவு உயர்த்தும் என்பதையும் நான் அனுபவப்பூர்வமா உணர்ந்திருக்கேன். என்னைப் போல ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து நன்றாகப் படிக்கிற பிள்ளைகளுக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்வதில் மிகுந்த மனநிறைவு அடைகிறேன். தடைகளைத் தாண்டி பெற்ற முதல் வெற்றி இது. இன்னும் போக வேண்டிய பயணம் வெகுதூரம் உள்ளது. மாணவர்கள் தங்களுடைய கவனம் சிதறாமல், தொடர்ந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.’’ என்று கூறினார்.
The post “மாணவர்கள் கவனம் சிதறாமல் படித்து முன்னேற வேண்டும்” – நடிகர் சிவக்குமார் அறிவுரை..! appeared first on Touring Talkies.
]]>The post “விருமன்’ படத்தின் வெற்றியை நான் எதிர்பார்க்கவில்லை” – பிரகாஷ்ராஜின் ஆச்சரியம்..! appeared first on Touring Talkies.
]]>இந்த மாபெரும் வெற்றிக்கு துணை நின்ற நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களின் குடும்பங்களை கொண்டாடும் வகையில், ‘விருமன்’ படத்தின் வெற்றி விழா, சென்னை வி.ஜி.பி. கோல்டன் பீச் ரிசார்ட்ஸில் நேற்று மாலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் நடிகர் பிரகாஷ் ராஜ் பேசும்போது, “இதைவிட வேறு என்ன வேண்டும்? இந்தப் படத்தின் கதையைக் கேட்டுவிட்டு படப்பிடிப்புக்கு செல்லும்போது கார்த்தியிடம் “தம்பி நல்லபடியா செய்வோம்” என்று கூறினேன். முத்தையா கதை சொல்லும்போது அழுது கொண்டே சொல்வார்.
இந்தப் படத்தை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அதற்கும் மேலே அன்பை காட்டி இருக்கிறார்கள். இங்கிருக்கும் கூட்டம் போலவே படப்பிடிப்பிலும் கூட்டமாகவே இருந்தோம். இதற்காக ராஜாவிற்கு நன்றி.
பெரிய குடும்பம், நல்ல சாப்பாடு, எல்லோரிடமும் அன்பு. இவைகளோடு நல்லபடியாக முடிவடைந்திருக்கிறது. கார்த்தி, சூர்யா, பத்திரிகையாளர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றி. அனைவரின் நகைச்சுவைக்கும் நன்றி. லவ் யூ ஆல்…” என்றார்.
The post “விருமன்’ படத்தின் வெற்றியை நான் எதிர்பார்க்கவில்லை” – பிரகாஷ்ராஜின் ஆச்சரியம்..! appeared first on Touring Talkies.
]]>The post ‘விருமன்’ படம் 4 நாட்களில் 35 கோடி வசூல் – விநியோகஸ்தர் சக்திவேலன் தகவல் appeared first on Touring Talkies.
]]>இந்த மாபெரும் வெற்றிக்கு துணை நின்ற நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களின் குடும்பங்களை கொண்டாடும் வகையில், ‘விருமன்’ படத்தின் வெற்றி விழா, சென்னை வி.ஜி.பி. கோல்டன் பீச் ரிசார்ட்ஸில் நேற்று மாலை நடைபெற்றது.
இந்த விழாவில் விநியோகஸ்தர் சக்திவேலன் பேசும்போது, “எல்லாப் படங்களும் வெற்றியை நோக்கித்தான் பயணிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஒரு சில படங்கள்தான் வெற்றியின் உச்சத்திற்கு போய் நிற்கும். அப்படி ஒரு படம்தான் இந்த ‘விருமன்’.
பி அண்டு சி-யில்தான் பெரிய கூட்டமாக வருவார்கள் என்று நினைத்தோம். முதல் முறையாக லூக்ஸ்-இல் 24 காட்சிகள் போட்டிருந்தார்கள். மல்டிபிளக்ஸ்-இல் 24 காட்சிகளை போடுகிறார்கள் என்று அதிர்ச்சியாக இருந்தது.
வியாழக்கிழமை முதல் திங்கள்கிழமைவரை 90 சதவீத டிக்கெட்டுகள் முன் பதிவாகி இருந்தது. பி அண்டு சி மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழ்நாடே இப்படத்தைப் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்கள் என்று அப்போதே ராஜா அண்ணனிடம் கூறினேன்.
நிறைய படங்களின் வெற்றியே நிறைய பேர்களுடைய உழைப்பால்தான் இருக்கும். உழைப்பாகட்டும்.. இந்த படத்தின் திட்டமாகட்டும்… அதைத் தாண்டிய அன்பு 2D சூர்யா அண்ணன், ராஜசேகர் அண்ணன், கார்த்தி சார், சிவகுமார் ஐயா குடும்பத்தினர் உடைய மனசுக்கு ஒரு வெற்றி இருக்குமல்லவா..? அந்த வெற்றியாகத்தான் இந்த விருமனின் வெற்றியைப் பார்க்கிறேன்.
3 மடங்கு அன்பை வெளிக்காட்டி இருக்கிறார்கள். அதே ஊரை சேர்ந்த ஐந்து குடும்பங்கள் படம் பார்த்துவிட்டு, பெரியண்ணா இந்த கதாபாத்திரம், சின்ன அண்ணன் இந்த கதாபாத்திரம், அப்பா இந்த கதாபாத்திரம் என்று கூறி ஒட்டு மொத்தமாக பேசியதை பத்திரிகையாளர் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டிருந்தார்.
இந்த 4 நாட்களில் 35 கோடியை தாண்டி வசூல் ஆகி இருக்கிறது. இது சாதாரண வெற்றியல்ல; மிகப் பெரிய வெற்றி! எல்லோரும் உழைத்திருக்கிறார்கள். இந்த வெற்றியைக் கொண்டாடுவதற்கு இதைவிட சரியான தருணமோ, சரியான நபர்களோ இல்லை என்று நினைக்கிறேன்…” என்றார்.
The post ‘விருமன்’ படம் 4 நாட்களில் 35 கோடி வசூல் – விநியோகஸ்தர் சக்திவேலன் தகவல் appeared first on Touring Talkies.
]]>The post வசூல் சாதனை படைக்கும் கார்த்தியின் ‘விருமன்’ appeared first on Touring Talkies.
]]>பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம், வெளியிட்ட அனைத்து திரையரங்குகளிலும் முதல் நாள் வசூல், ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்திற்கு கிடைத்த வசூலைவிட மூன்று மடங்கு கூடுதலாகக் கிடைத்துள்ளது.
மேலும் ‘விருமன்’ படத்தின் முதல் 3 நாட்கள் வசூல் 8 கோடியே 20 லட்சம் என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் உற்சாகமடைந்த படத்தை தமிழகம் முழுவதும் வெளியீட்டு உரிமையை பெற்றிருக்கும் சக்தி பிலிம் ஃபேக்டரி சக்திவேலன், படத்தின் நாயகன் கார்த்தி, இயக்குவர் முத்தையா, இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் ஆகியோருக்கு மாலை அணிவித்து வெற்றியைப் பகிர்ந்து கொண்டார்.
கார்த்தி-முத்தையா கூட்டணியில் உருவான ‘விருமன்’ மேலும் பல வசூல் சாதனைகளை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post வசூல் சாதனை படைக்கும் கார்த்தியின் ‘விருமன்’ appeared first on Touring Talkies.
]]>