The post கோவை சரளாவை ‘பாப்பா’ என்றழைத்த நடிகர் கமல்ஹாசன் appeared first on Touring Talkies.
]]>சென்னையில் சத்யம் திரையரங்கத்தில் இன்று காலையில் நடைபெற்ற ‘செம்பி’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில்தான் இந்தச் சம்பவம் நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசும்போது, “கோவை சரளாவை எல்லோரும் ‘அக்கா’, ‘அம்மா’ என்று கூப்பிடுகிறார்கள். நான் எப்படி கூப்பிடுவது என்று தெரியவில்லை. சரளா பாப்பாவை எனக்கு நன்றாக தெரியும். இதில் நன்றாகவும் நடித்துள்ளார். எட்டு வயது பாப்பாவை போல அவர் தயக்கமில்லாமல் நடித்துள்ளார். பலருக்கு கேமரா ஆன் பண்ணியவுடன் அழுகை, சிரிப்பு எதுவும் வராது. நான் நடிப்பு வாய்ப்பு தேடிய காலத்தில் என்னையே பலர் திட்டியிருக்கிறார்கள்.
“என்ன சார் கோவணத்தையெல்லாம் கட்டிக்கிட்டு..?” என சொன்னார்கள். ஆனால் இப்போது அதை கொண்டாடுகிறார்கள். அதைக் கேட்க சந்தோஷமாக இருக்கிறது. ஒரு படம் பெரிய படமா சின்ன படமா என்பது காலம் கடந்து பேசப்படுவதில்தான் இருக்கிறது. இப்போது ‘16 வயதினிலே’ படத்தை பேசுகிறார்கள், அதுதான் பெரிய படம். “இத்தனை கோடியில் எடுத்தோமே அது என்ன படம்..?” எனக் கேட்டால் அது பெரிய படம் இல்லை..
இந்தப் படத்தை நான் பார்த்துவிட்டேன். கொடைக்கானலில் மிக நல்ல லொகேஷன்களில் எடுத்திருக்கிறார் பிரபு சாலமன். அஷ்வின் நன்றாக நடித்திருக்கிறார். தம்பி ராமையா அசால்ட்டாக நடித்திருக்கிறார். நான் ரசித்து பார்த்தேன். நாஞ்சில் சம்பத்தின் நடிப்பும் பிரமாதமாக இருந்தது. கேமரா வொர்க் மிக அற்புதமாக இருந்தது. அனைவருக்கும் என் வாழ்த்துகள்.
தப்பு நடக்கும்போது நாம் கேள்வி கேட்க தயங்குவதை தைரியமாக பேசியுள்ளதென்பதால் எனக்கு மிகவும் பிடித்த படம் இது. ரசிகர்கள் நல்ல படத்தை பாராட்ட வேண்டும். படம் நல்லாயில்லை என்றாலும் தைரியமாக சொல்ல வேண்டும். அப்போதுதான் சினிமா வளரும்.
நல்ல படத்திற்கு என் ஆதரவு எப்போதும் இருக்கும். பெரும் திறமையாளர்கள் என் கண் முன்னால் வாய்ப்பில்லாமல் அழிந்து போயிருக்கிறார்கள். அதனால் நல்லவற்றை பாராட்ட தயங்காதீர்கள். கற்றுக் கொள்ள தயாராக இருங்கள்.
இது நல்ல படம். இது வெற்றிப் படம் என்பதை ரசிகர்களே முடிவு செய்வார்கள். இந்த ‘செம்பி’ மிகப் பெரிய வெற்றியைப் பெறும்.” என்று வாழ்த்தினார்.
The post கோவை சரளாவை ‘பாப்பா’ என்றழைத்த நடிகர் கமல்ஹாசன் appeared first on Touring Talkies.
]]>The post ‘இந்தியன்-2’ படத்தில் கமலுடன் கார்த்திக் நடிக்கிறாரா..? appeared first on Touring Talkies.
]]>லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த ‘இந்தியன்-2’ படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், விவேக், ரகுல் ப்ரீத் சிங்க், பிரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி, மனோபாலா, சித்தார்த் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த ‘இந்தியன்-2’ படம் பலவித சர்ச்சைகளுக்குப் பிறகு, நீதிமன்ற வழக்குகளுக்குப் பிறகு அடுத்த மாதம் மீண்டும் துவங்கவுள்ளது.
படத்தில் ஏற்கெனவே நடித்து வந்த நடிகை காஜல் அகர்வால் படம் துவங்கி பாதியில் நின்ற பிறகு திருமணமாகி குழந்தையும் பெற்றுவிட்டார். ஆனாலும் அவர் மீண்டும் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளதாக அவரே தெரிவித்துள்ளார்.
இந்த ‘இந்தியன்-2’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் விவேக் திடீரென்று மரணமடைந்துவிட்டதால் அவர் சம்பந்தப்பட்ட போர்ஷன்களை மீண்டும் வேறு நடிகரை வைத்து படமாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
தற்போது கிடைத்துள்ள தகவலின்படி நடிகர் கார்த்திக். நடிகர் விவேக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தெரிகிறது.
மேலும் ‘இந்தியன்’ முதல் பாகத்தில் நடித்திருந்த நெடுமுடி வேணு இறந்துவிட்டதால் அவரது கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரத்தை நடிக்க வைக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர்-13ம் தேதியிலிருந்து சென்னையில் துவங்கவுள்ளது. இதற்காக பிரசாத் லேப்பிலும், ஈ.வி.பி. பிலிம் சிட்டியிலும் புதிதாக செட்டுகள் போடப்பட்டு வருகின்றன.
The post ‘இந்தியன்-2’ படத்தில் கமலுடன் கார்த்திக் நடிக்கிறாரா..? appeared first on Touring Talkies.
]]>The post திரையுலகில் 13 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் ஸ்ருதிஹாசன் appeared first on Touring Talkies.
]]>இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி என பன்மொழி திரைப்படங்களில் நடித்து இதுவரையிலும் பதின்மூன்று ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார்.
கமல்ஹாசன் – சரிகா தம்பதிகளுக்கு மூத்த வாரிசாக பிறந்தவர் நடிகை ஸ்ருதிஹாசன். கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘ஹே ராம்’ எனும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தாலும், 2009-ம் ஆண்டில் நடிகர் இம்ரான்கான் ஜோடியாக ‘லக்’ என்னும் இந்திப் படத்தில் நடிகையாக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்த அவர், சூர்யா நடிப்பில் வெளியான ‘ஏழாம் அறிவு’ எனும் படத்தின் மூலம் தமிழிலும் நடிகையாக அறிமுகமானார். இதனை அடுத்து ‘3’, ‘பூஜை’, ‘புலி’, ‘வேதாளம்’, ‘சிங்கம் 3’, ‘லாபம்’ ஆகிய தமிழ் படங்களில் நடித்திருக்கும் இவர் திரையுலகில் பணியாற்ற தொடங்கி தனது பதின்மூன்றாவது ஆண்டை நிறைவு செய்திருக்கிறார்.
இதற்காக தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, காணொளி ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில் அவர் பேசும்போது, “திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி பதிமூன்று ஆண்டுகளை அற்புதமான ஆண்டுகளாக நான் நிறைவு செய்திருக்கிறேன். இதற்காக என் வாழ்நாள் முழுவதும் ரசிகர்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிக் கொண்டே இந்த பதின்மூன்று ஆண்டு நிறைவை இன்றைக்கு நான் உற்சாகத்துடன் கொண்டாடுகிறேன்.
என்னுடைய திரையுலக வாழ்க்கை, ஒரு மாயாஜாலமிக்கது. திரைப்படத்தில் நடிப்பேன் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. ஏதேனும் எனக்கு விருப்பமான துறையில் பணியாற்ற வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணமாக இருந்தது. அதே தருணத்தில் எனக்கு விருப்பமான வேலையை எப்படி நேசிக்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொண்டேன்.
மாயாஜாலம் மிக்கதாக கடந்த பதிமூன்று ஆண்டுகள் கழிந்தது. ஒரே ஒரு படத்தில்தான் நடிப்பேன் என நினைத்திருந்தேன். அதே தருணத்தில் நான் நடிகையாக இருக்க வேண்டும் என்றும் நினைக்கவில்லை. பிறகு அதனை நேசிக்க கற்றுக் கொண்டேன்.
சினிமா என் வாழ்க்கையில் மிகப் பெரிய மகிழ்ச்சியாக மாறியுள்ளது. இதற்கு நான் உண்மையில் நன்றி உள்ளவளாக இருக்கும் வகையில் வாழ்க்கை என்னை மாற்றி அமைத்திருக்கிறது.
வெற்றி, தோல்விகளை எப்படி எதிர்கொள்வது என்பதையும், நம்பிக்கையுடன் எப்படி பணியாற்றுவது என்பதையும், கதைகளை கேட்பதிலும், அதனை தேர்ந்தெடுப்பதிலும் அதிலுள்ள நேர்மறையான விசயங்களை பாராட்டுவது எப்படி என்பதனையும் கற்றுக் கொண்டேன். இதனை இதற்கு முன் கற்றுக் கொண்டதில்லை.
எனக்கு கிடைத்து வரும் அன்பு மற்றும் பாராட்டிற்கு நான் மிகவும் நன்றி உள்ளவளாக இருக்கிறேன். பதிமூன்று ஆண்டுகளாக என் மீது மாறாத அன்பு காட்டி வரும் அனைவருக்கும் என்னுடைய பணிவான நன்றி நன்றி நன்றி.” என குறிப்பிட்டிருக்கிறார்.
நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் ‘சலார்’ எனும் திரைப்படத்திலும், மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் ‘வால்டர் வீரய்யா’ எனும் திரைப்படத்திலும், நட்சத்திர நடிகர் பாலகிருஷ்ணா நடித்து வரும் பெயரிடப்படாத படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post திரையுலகில் 13 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் ஸ்ருதிஹாசன் appeared first on Touring Talkies.
]]>The post கேரளாவில் ‘விக்ரம்’ படம் செய்த சாதனை..! appeared first on Touring Talkies.
]]>லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் நடித்த ‘விக்ரம்’ படம் கடந்த ஜூன் 3-ம் தேதியன்று வெளியானது. உலகம் முழுவதும் படம் வெளிவந்த நாள் முதல் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
பெரும்பாலான திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் திரையரங்குக் காட்சிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் வசூலும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இத்திரைப்படம் கேரளாவில் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
படம் வெளியான வெள்ளிக்கிழமை அதைத் தொடர்ந்த சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் கேரளாவில் இந்தப் படம் 15 கோடியே 72 லட்சம் ரூபாயை வசூலித்துள்ளது.
மேலும் திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாள்களிலும் மேலும் 6 கோடியே 57 லட்சம் ரூபாயை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் முதல் 5 நாள்களில் கேரளாவில் மட்டும் இந்த விக்ரம் படம் 22 கோடியே 29 லட்சம் ரூபாயை வசூலித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இதன் மூலமாக கேரளாவில் மிக அதிக வசூலைப் பெற்ற தமிழ்ப் படம் என்கிற பெருமையை இந்த ‘விக்ரம்’ படம் அடைந்துள்ளது.
ரசிகர்களின் வரவேற்பு இப்போதும் அதிகமாக இருப்பதால் கேரளாவில் இந்தப் படம் இன்னும் கூடுதல் வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post கேரளாவில் ‘விக்ரம்’ படம் செய்த சாதனை..! appeared first on Touring Talkies.
]]>The post “காதலரை ஏன் திருமணம் செய்யவில்லை” – நடிகை ஸ்ருதிஹாசனின் பதில்..! appeared first on Touring Talkies.
]]>நடிகர் கமலஹாசனின் மகளான நடிகை ஸ்ருதிஹாசன், டாட்டூ கலைஞரான சாந்தனு என்பவருடன் லிவிங் டூ கெதரில் தன்னுடைய மும்பை வீட்டில் வசித்து வருகிறார்.
சமீபத்திய ஒரு பேட்டியில் ஸ்ருதிஹாசனிடம் “காதலருடன் ஒன்றாக வசித்து வந்தும், ஏன் நீங்கள் இருவரும் இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை..?” என்ற கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு ஸ்ருதிஹாசன் பதிலளிக்கையில், “எங்கே போனாலும் என்னோட மேரேஜ் பத்திதான் கேக்குறாங்க.. உண்மையில் எனக்குத் திருமணம் அப்படீங்கற வார்த்தையில் எனக்கு பெரிசா நம்பிக்கை இல்லை. பயம் மட்டுமே இருக்கிறது. அதனாலேயே, அந்த உறவுக்குள் நுழைய நான் அதிகம் யோசித்து வருகிறேன்.
இத்தனைக்கும் என்னுடைய வாழ்க்கையில் சாந்தனு உள்ளே வந்ததும் நிறைய விஷயங்கள் மாறி இருக்கிறது. நான் இப்போது ஆசிர்வதிக்கப்பட்டவளாகவே உணர்கிறேன். எங்கள் இரண்டு பேருக்கும் இடையில் நிறைய விஷயங்கள் ஒத்து போகிறது.
அதற்காக எனது அம்மா, அப்பாவின் திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்துவிட்டதன் காரணமாக நான் இப்படி யோசிக்கிறேன்னு அர்த்தமில்லை..” என்றார்.
The post “காதலரை ஏன் திருமணம் செய்யவில்லை” – நடிகை ஸ்ருதிஹாசனின் பதில்..! appeared first on Touring Talkies.
]]>The post “ரஜினியும், நானும் நல்ல நட்பில்தான் இருக்கிறோம். ரசிகர்கள்தான் அடித்துக் கொள்கிறார்கள்” – நடிகர் கமல்ஹாசன் பேச்சு appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா மற்றும் பலர் நடித்துள்ளனர். கிரிஸ் கங்காதரனின் ஒளிப்பதிவில், அனிருத் இசையமைத்திருக்கிறார்.
இந்தப் படத்தின் டிரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகர் சிலம்பரசன், கமல்ஹாசன், அக்ஷரா ஹாசன், விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், பார்த்திபன், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், நரேன், காளிதாஸ் ஜெயராம், நடிகைகள் ராதிகா, லிஸி மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய கமல்ஹாசன், “உயிரே உறவே வணக்கம். தமிழ்நாட்டை பொருத்தவரை சினிமாவும், அரசியலும் ஒட்டிப் பிறந்தவை. அதைத்தான் நானும் செய்கிறேன். நான் முழுமையான அரசியல்வாதியும் இல்லை; நடிகனும் இல்லை.
நான் முதன்முதலில் அரசியலுக்கு போகிறேன் என்று சொன்னபோது சிம்புவின் அப்பா டி.ஆர். என்னை தேடி வந்து என்னை கட்டி பிடித்து கேவி, கேவி அழுதார். ‘எப்படி சார் நீங்கள் இதை செய்யலாம்?’ என்று கேட்டார்.
என் தகுதிக்கு மீறிய புகழை மக்களான நீங்கள் கொடுத்து இருக்கிறீர்கள். அதை நான் திருப்பிக் கொடுக்க வேண்டும். நான் பணத்துக்காக நடிக்க வந்திருந்தால் இது நடந்திருக்காது.
நான் சிறு வயதில் சிவாஜி, எம்.ஜி.ஆர். அலுவலகத்திற்கெல்லாம் சென்று வெளியில் நின்றிருக்கிறேன். அப்படி இருந்தவனுக்கு நீங்கள் என்ன இடம் கொடுத்தாலும் அது பெரியதுதான். ஐந்து வயதில் வந்தவனை இன்னும் நீங்கள் தோளில் இருந்து இறக்கவில்லை.
எங்கள் திறமைகள் பளிச்சிட திரையரங்குகள் முதல் சாளரம். சாட்டிலைட் வந்தபோது சினிமா கெட்டு விடும் என்று எதிர்த்தபோது எதிர் குரல் கொடுத்தவன் நான். ஓடிடியை முன்பே கணித்தவன் நான். இவை எல்லாம் வருவதால் திரையரங்குகளில் கூட்டம் குறையாது. இதற்கு உதாரணம் காலண்டரில் வெங்கடாசலபதி படம் போடுவதால் திருப்பதியில் கூட்டம் குறையாது.
இந்த ஒலி, கரவொலி எல்லாம் கேட்பதற்கு என் தாய், தந்தை இல்லை. சந்திரஹாசனாவது இருந்திருக்கலாம். சாருஹாசன் எங்கோ இருந்து 92 வயதில் கேட்டுக் கொண்டிருப்பார்.
இயக்குநர் ரஞ்சித் உங்கள் எதிர்ப்பார்ப்புக்கான விதையை தூவி விட்டுச் சென்றிருக்கிறார். நிச்சயம் அது நடக்கும். இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் வெளியிடுவது பற்றிப் பலரும் கேட்டார்கள்.
ஸ்டாலின் அரசியலில் அந்தப் பக்கம் நிற்கிறார். நான் இந்த பக்கம் நிற்கிறேன். நடுவில் ட்ராபிக் செல்கிறது. அரசியல் வேறு நட்பு வேறு. முதல்வருக்கும் எனக்குமான நட்பு. கலைஞரிடம் ஆரம்பித்த உறவு, அவரது பேரன் உதயநிதி வரை தொடர்கிறது.
எனக்கு திரையுலகத்தில் போட்டியாளர் ரஜினி. ஆனால் இன்றுவரையிலும் நாங்கள் நண்பர்கள். இளம் வயதில் நாங்கள் ஏதும் எதிராக பேசி இருக்கலாம். ஆனால், எங்கள் நட்பு எப்படி இருக்க வேண்டும். எப்படி பயணப்பட வேண்டும் என்பதை 25 வயதில் முடிவு செய்தவர்கள் நாங்கள். இப்போதுவரையிலும் நானும், ரஜினியும் நல்ல நட்போடுதான் இருக்கிறோம், நீங்கள் ரசிகர்கள்தான் அடித்துக் கொள்கிறீர்கள்.
என் காரை தொட்டுப் பார்த்த ரசிகராக இருந்த லோகேஷ் என்னை இயக்கி இருப்பது எனக்குத்தான் பெருமை. இந்த வெற்றி கூட்டணி தொடரும். விஜய்சேதுபதி நான் 22 வயதில் வேலை செய்ததுபோல அவர் இப்போது 44 வயதில் செய்து கொண்டிருக்கிறார். நான் அந்த வயதில் ஒரு வருடத்தில் எத்தனை படங்கள் நடித்தேனோ, அது போல விஜய் சேதுபதியும் இப்போது ஓடிக் கொண்டிருக்கிறார்.
இந்தப் படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அபாயகரமானதாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும். அதற்கு காரணம் அன்பறிவு. அனிருத் இசையில் ‘பத்தல பத்தல’ வெற்றி இதுபோல் எனக்கு இதுவரையிலும் கிடைத்ததில்லை. மூன்று மொழிகளிலும் நானே இந்தப் பாடலை பாடி இருக்கிறேன்.
நான்கு ஆண்டுகளுக்கு பிறகு என் படத்தின் விழா நடைபெறுகிறது. இதற்கு காரணம் நான் மட்டும் அல்ல; நீங்களும்தான். இன்னும் பல வேலைகள் உள்ளன. சினிமாவும் அரசியலும் ஒட்டி பிறந்ததே.
நான் முழு நேர நடிகன் கிடையாது. சில நேரம் நடிக்காமல் இருந்ததால் பல இன்னல்களை சந்தித்துள்ளேன். விழுந்தாலும் எழுந்துவிடுவார் என்று கூறுவார்கள். எழுப்பிவிட்டது நீங்கள்தான்..! இந்த அரசியல் களத்தில் மாற்றத்தை நாம் இணைந்து ஏற்படுத்த வேண்டும்.
நான் political cultrist என்று என்னை குறிப்பிட்டு கொள்வேன். மொழி போராட்டங்கள் சுதந்திர காலத்தில் இருந்தே இந்தியாவில் நடந்து வருகிறது. இந்தியாவின் அழகே பன்முகம்தான்.
அப்படியென்றால், “இந்தி ஒழிக என்று சொல்கிறீர்களா..?” என்று கேட்காதீர்கள். நான் இந்தியும், தமிழும் சுமாராகத்தான் பேசுவேன். எந்த மொழியையும் “ஒழிக” என்று சொல்ல மாட்டேன். ஆனால், “தமிழ் வாழ்க” என்று சொல்வது என் கடமை.
இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை. அது நுண்ணுர்வு சம்பந்தப்பட்டது. இது அனைவருக்கும் இருக்க வேண்டும். அனைத்து மொழிகளும் கற்று கொள்ள வேண்டும். ஆனால், நம் தாய் மொழியை விட்டு கொடுக்கக் கூடாது.
இந்த படம் வெல்லும் என அனைவரும் நம்பிக்கையாக சொல்வதற்கு காரணம், இதில் வலுவான அணி அமைந்திருக்கிறது. படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்துக் கொடுத்த தம்பி சூர்யாவுக்கு நன்றி..” என்று படக் குழுவில் அனைவரையும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார் நடிகர் கமல்ஹாசன்.
The post “ரஜினியும், நானும் நல்ல நட்பில்தான் இருக்கிறோம். ரசிகர்கள்தான் அடித்துக் கொள்கிறார்கள்” – நடிகர் கமல்ஹாசன் பேச்சு appeared first on Touring Talkies.
]]>The post நடிகர் ஐசரி வேலனின் சிலையை நடிகர் கமல்ஹாசன் திறந்து வைத்தார் appeared first on Touring Talkies.
]]>இன்று சென்னை அடையாறில் அமைந்துள்ள Dr.எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற மறைந்த முன்னாள் தமிழக இந்து அறநிலையத் துறை துணை அமைச்சரும், திரைப்பட கலைஞர் அமரர் திரு. ஐசரி வேலன் அவர்களின் 35-வது நினைவு நாள் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பத்மபூஷன் கமல்ஹாசன் அவர்கள் அமரர் ஐசரி வேலன் அவர்களின் திருவுருவ சிலையை திறந்து வைத்தார்.
வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் மற்றும் வேல்ஸ் கல்வி குழுமத்தின் தலைவருமான டாக்டர். ஐசரி கே. கணேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் ‘இலவச குடும்ப சுகாதார அட்டை’ வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து நலிந்த நாடக நடிகர்களுக்கு வேல்ஸ் இலவச குடும்ப சுகாதார அட்டையுடன் புத்தாடைகளை வழங்கினார் உலக நாயகன் Dr.கமலஹாசன் அவர்கள்.
இந்நிகழ்ச்சியில் யிரத்திற்கும் மேற்பட்ட நடிகர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய கமலஹாசன் அமரர் திரு. ஐசரி வேலன் அவர்கள் உடனான நட்பு குறித்தும், திரைப்படங்களில் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தொடர்ந்து உதவி வரும் டாக்டர். ஐசரி கே.கணேஷ் அவர்களை வாழ்த்தி, பாராட்டினார்.
அதனை தொடர்ந்து அமரர் திரு. ஐசரி வேலன் அவர்களுடன் நடித்த நடிகர் பிரபு, நடிகை லதா, இயக்குனர் RK செல்வமணி, நடிகர் பாக்கியராஜ், நடிகர் கவுண்டமணி, நடிகர் செந்தில், நடிகை ஜெயசித்ரா, நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா, நடிகர் S.V.சேகர், தயாரிப்பாளர் K ராஜன், நடிகை ராதிகா, நடிகர் ராஜேஷ், நடிகை குட்டி பத்மினி, நடிகை பூர்ணிமா பாக்கியராஜ், நடிகர் பிரசாந்த், நடிகர் சின்ன ஜெயந்தி உள்ளிட்ட முன்னனி நடிகர், நடிகைகள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்களது திரைப்பட அனுபவங்கள் குறித்தும் அவர் செய்த சேவைகள் குறித்தும் பகிர்ந்து கொண்டனர்.
மேலும் டாக்டர். ஐசரி கே. கணேஷ் அவர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் தமது தந்தை அமரர் திரு ஐசரி வேலன் அவர்களின் நினைவு நாளான மே 14-ம் தேதி ஆண்டு தோறும் நலிந்த நாடக நடிகர்கள் மற்றும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு விருந்து மற்றும் புத்தாடைகள் வழங்கி சேவை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
The post நடிகர் ஐசரி வேலனின் சிலையை நடிகர் கமல்ஹாசன் திறந்து வைத்தார் appeared first on Touring Talkies.
]]>The post “சில நேரங்களில் சில மனிதர்கள் தலைப்பினை தர மாட்டோம்” – ஜெயகாந்தனின் வாரிசுகள் அறிவிப்பு appeared first on Touring Talkies.
]]>கடந்த சில நாட்களுக்கு முன்பாக கமலா திரையரங்கில் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், “சில நேரங்களில் சில மனிதர்கள்” மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய நாவலின் தலைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. ” ஜெயகாந்தனின் இந்த தலைப்பை பயன்படுத்த அருகதை உண்டா எனக் கேட்பார்கள். கண்டிப்பாக ஜெயகாந்தன் கேட்மாட்டார். எனது திரைப்படமான ‘குருதிப் புனல்’ எனும் தலைப்பு கொண்ட நாவலை, எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதியுள்ளார். தலைப்பு குறித்து அவரிடம் கேட்கையில், “குருதிப் புனல் எனும் வார்த்தை கம்பராமாயணத்தில் உள்ளது. அது எல்லாருக்கும் சொந்தம்…” என்று இந்திரா பார்த்தசாரதி கூறினார் என்றார் கமல்ஹாசன்.
இந்த நிலையில் இந்தத் தலைப்பினை விட்டுத் தருவதாக இல்லை என்று எழுத்தாளர் ஜெயகாந்தனின் வாரிசுகள் அறிவித்துள்ளனர்.
ஏனெனில் இதே தலைப்பில் 1977-ம் ஆண்டு இதே கதையை ஜெயகாந்தனே படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படத்தில் சிறப்பாக நடித்தமைக்காகத்தான் நடிகை லட்சுமி சிறந்த நடிகைக்கான இந்திய அரசின் ‘ஊர்வசி’ விருதினைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் ஜெயகாந்தனின் மகளும், எழுத்தாளருமான ஜா.தீபலஷ்மி இது குறித்து தனது முக நூல் பக்கத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு பகிரங்கமாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில்,
“மதிப்புக்குரிய கமல்ஹாசன் அவர்களுக்கு,
ஜெயகாந்தனின் புதல்வர்கள் ஜெ.காதம்பரி, ஜெ.ஜெயசிம்மன், ஜெ.தீபலட்சுமி ஆகியோர் எழுதுவது.
தமிழ் இலக்கிய உலகில் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ ஒரு மைல் கல்.
சனாதனம் அதுவரை எழுதி வைத்திருந்த விதியை, பழக்கி வைத்திருந்த சமூகத்தை கேள்வி கேட்டு புதிய பார்வையையும், வெளிச்சத்தையும் தந்த ‘அக்கினிப் பிரவேசம்’ சிறுகதையின் தொடராக எழுந்த நாவல் அது. தமிழ்ச் சமூகத்தில் பெரும் விவாதங்களையும், உரையாடல்களையும் எழுப்பிய கதை அது.
அதன் தனித்துவத்தைப் போற்றுவதும், காப்பாற்றுவதும் தமிழ் இலக்கிய உலகின் பொறுப்பும், கடமையும் ஆகும் என நினைக்கிறோம். எழுத்தாளர் ஜெயகாந்தனையும், அவரது எழுத்துக்களையும் உண்மையாக மதிப்பவர்களும், நேசிப்பவர்களும், ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ எனும் தலைப்பை வேறொரு கதைக்கோ, சினிமாவுக்கோ தலைப்பாக மீண்டும் பயன்படுத்த மாட்டார்கள் என நம்புகிறோம்.
மேலும் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்பது ஒரு பழைய திரைப்படத்தின் தலைப்பு மட்டுமல்ல. இலக்கிய வாசகர்களாக இல்லாதவர்களுக்கும்கூட ‘ஜெயகாந்தன்’ என்ற பெயரும் அதன் தொடர்ச்சியாய்ச் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற சொற்றொடரும் பிரிக்க இயலாதபடி நினைவில் பதிந்து போனவை. அதனாலும் வேறு எந்தப் படைப்புக்கும் அத்தலைப்பைப் பொருத்திப் பார்க்க மனம் ஒப்பவில்லை.
‘இல்லாதவர்கள் பாவம், எடுத்துக் கொள்கிறார்கள்..’
அவர் கதையையோ, பாத்திரப் படைப்பையோ யாராவது அவர் அனுமதியின்றித் திரைப்படங்களில் பயன்படுத்திவிட்டதாகத் தெரியவரும் போது அப்பா இப்படித்தான் பெருந்தன்மையோடு சொல்வார். அவரே சம்மதித்தாலும் நாம் அதைச் செய்யலாமா என்பதுதான் இங்கு தார்மீக ரீதியாக எழும் கேள்வி.
2009-ல் அப்பாவின் சம்மதத்தைப் பெற்றுத்தான் ‘உன்னைப் போல் ஒருவன்’ தலைப்பை எடுத்துக் கொண்டீர்கள் என்பதை அறிவோம். ஆனால், அதன் விளைவாக இன்று இணையதளத்தில் 1965-ல் வெளியாகி தேசிய விருது, பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் பாராட்டப்பட்டு, அன்றைய சோவியத் யூனியனில் திரையிடல் போன்ற பல சிறப்புகளைப் பற்ற ஜெயகாந்தனின் ‘உன்னைப் போல் ஒருவன்’ குறித்த அனைத்துத் தடயங்களும் 2009 திரைப்படத்தின் டிஜிட்டல் சுவடுகளால் மறைக்கப்பட்டு விட்டன என்பதை நீங்கள் அறிவீர்களா?
அதே நிலை சாகித்ய அகாதெமியின் விருது பெற்ற, நடிகை லட்சுமிக்கு ‘ஊர்வசி’ விருது பெற்றுத் தந்த, இன்றளவும் பலரால் பேசப்பட்டு விரும்பி ரசிக்கப்படுகிற ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவலுக்கும், திரைப்படத்துக்கும் ஏற்படக் கூடாது என்று நாங்கள் உறுதியோடு இருக்கிறோம்.
‘காப்புரிமை’ என்பது பொருள் ஈட்டுவதற்காகக் கொடுக்கப்பட்ட உரிமை அல்ல. சொல்லப் போனால் அது இரண்டாம்பட்சமானது. காப்புரிமை என்பது படைப்பாளியின் படைப்புகளையோ, அதன் தலைப்புகளையோ வேறொருவர் எடுத்துத் திரித்து வெளியிடுவதைத் தடுத்துக் காப்பது.
ஜெயகாந்தனின் மக்களான எங்களிடம் அந்த உரிமை இருக்கும்வரை இம்மாதிரியான செயல்களைச் சுட்டிக்காட்டி அவை நடைபெறாவண்ணம் தடுப்பதும் எங்கள் கடமையாகிறது.
ஆகவே, தங்கள் தயாரிப்பில் வெளிவர இருக்கும் புதிய திரைப்படத்துக்கு ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற தலைப்பைத் தயவு செய்து மாற்றி வேறு தலைப்பு வைக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.
ஜூலை மாதம் அதன் அறிவிப்பு வந்தவுடனேயே இதற்கான எதிர்ப்பை எழுத்தாளர்கள் பிரபு தர்மராஜ், மலர்வண்ணன், பத்திரிகையாளர் கவின்மலர் உட்படப் பலரும் தெரிவித்திருந்தனர் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.
அப்பாவின் நல்ல நண்பர் என்பது மட்டுமல்லாது ‘உலக நாயகன்’ என்று புகழப்படுகிற சிறந்த கலைஞர் என்ற முறையிலும் நீங்கள் எங்களது இந்த நியாயமான கோரிக்கையை ஏற்றுக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.
இப்படிக்கு,
ஜெ. காதம்பரி
ஜெ. ஜெயசிம்மன்
ஜெ. தீபலட்சுமி
The post “சில நேரங்களில் சில மனிதர்கள் தலைப்பினை தர மாட்டோம்” – ஜெயகாந்தனின் வாரிசுகள் அறிவிப்பு appeared first on Touring Talkies.
]]>The post நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று-தனியார் மருத்துவமனையில் அனுமதி appeared first on Touring Talkies.
]]>நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் அமெரிக்காவில் இருக்கும் சிகாகோ நகருக்குச் சென்று வந்திருந்தார். சிகாகோவில் நமது கதர் ஆடைகளை விற்பனை செய்யும் அங்காடியைத் திறந்து வைக்கவே கமல் அங்கே சென்றிருந்தார்.
இந்தியா திரும்பியவுடனேயே கடந்த சனிக்கிழமையன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் வாராந்திர நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதையடுத்து நேற்று அவருக்கு இருமல் அதிகரித்ததால் உடனடியாக கொரோனா டெஸ்ட் எடு்க்கப்பட்டது. அதில் பாஸிட்டிவ் என்று ரிசல்ட் வந்ததால் உடனடியாக தனியார் மருத்துவமனையில் சேர்ந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.
இது குறித்து அவர் இன்று தனது டிவீட்டர் பக்கத்தில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.
அந்தச் செய்தியில், “அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்..” என்று குறிப்பிட்டுள்ளார்.
கமல்ஹாசன் கொரோனாவை வென்று வீடு திரும்ப வாழ்த்துகிறோம்..!
The post நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று-தனியார் மருத்துவமனையில் அனுமதி appeared first on Touring Talkies.
]]>The post கோர்ட்டின் தடையில்லை என்ற உத்தரவால் களத்தில் குதித்த ஷங்கர் appeared first on Touring Talkies.
]]>‘இந்தியன்-2′ பட பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வதற்காக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பானுமதியை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் ஷங்கர் கலந்து கொண்டாலும் படத்தை உடனடியாக முடித்துக் கொடுக்க முடியாது. அக்டோபரில் துவக்கி அடுத்தாண்டு பிப்ரவரியில்தான் முடித்துத் தர முடியும் என்பதில் தெளிவாக இருக்கிறாராம். ஆனால் லைகா நிறுவனம் இதற்கு ஒத்துக் கொள்ளாமல் இப்போது துவக்கி செப்டம்பர் கடைசிக்குள்ளாக முடித்துக் கொடுக்கத்தான் சொல்லும். நிச்சயம் இதுவும் தோல்வியடையும் என்றுதான் சொல்கிறார்கள்.
அதற்காக சும்மா இருக்க முடியாது என்பதால் ஷங்கர் தான் அடுத்து இயக்கவிருக்கும் ராம் சரண் பட வேலைகளைத் துவக்கிவிட்டார். இதற்காக கோர்ட் தீர்ப்பு வந்த அடுத்த நாளை ஹைதராபாத் பறந்த ஷங்கர் அங்கே நாயகன் ராம் சரணையும், தயாரிப்பாளர் தில் ராஜூவையும் சந்தித்து பட வேலைகள் சம்பந்தமாக பேசியுள்ளாராம்.
மத்தியஸ்தம் தோல்வியில் முடிந்தால் அதே செப்டம்பரில் ராம் சரண் படத்தை ஷங்கர் துவக்கிவிடுவார். பின்பு இந்தப் படத்தை முடித்துவிட்டு வந்து அடுத்தாண்டுதான் ‘இந்தியன்-2’-வைத் துவக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் நடிகர் கமல்ஹாசனும் தனது ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பையும், ‘திரிஷ்யம்-2’ படத்தையும் இந்தாண்டுக்குள்ளாக முடித்துவிடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
லைகா நிறுவனம்தான் பாவம்.. என்ன செய்யப் போகிறார்களோ…?
The post கோர்ட்டின் தடையில்லை என்ற உத்தரவால் களத்தில் குதித்த ஷங்கர் appeared first on Touring Talkies.
]]>