Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
தமிழ்த் திரையுலகம் – Touring Talkies https://touringtalkies.co Fri, 02 Dec 2022 07:07:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png தமிழ்த் திரையுலகம் – Touring Talkies https://touringtalkies.co 32 32 பிரபல தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் முரளிதரன் திடீர் மரணம்..! https://touringtalkies.co/film-producer-muralidharan-paases-away/ Thu, 01 Dec 2022 17:52:53 +0000 https://touringtalkies.co/?p=27943 ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’, ‘அன்பே சிவம்’, ‘புதுப்பேட்டை’ உள்ளிட்ட 28 படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் முரளிதரன் காலமானார். 1994-ம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான ‘அரண்மனை காவலன்’ என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் தயாரிப்பாளர் கே.முரளிதரன். தொடர்ந்து தனது லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சுவாமிநாதன், முரளிதரன் மற்றும் வேணுகோபால் ஆகியோருடன் இணைந்து ‘மிஸ்டர் மெட்ராஸ்’, விஜயகாந்தின் ‘தர்மசக்கரம்’, விஜய் நடிப்பில் ‘பிரியமுடன்’, அஜித் நடிப்பில் ‘உன்னைத் தேடி’, கமலின் ‘அன்பே சிவம்’, ‘சிலபம்பாட்டம்’, […]

The post பிரபல தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் முரளிதரன் திடீர் மரணம்..! appeared first on Touring Talkies.

]]>
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’, ‘அன்பே சிவம்’, ‘புதுப்பேட்டை’ உள்ளிட்ட 28 படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் முரளிதரன் காலமானார்.

1994-ம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான ‘அரண்மனை காவலன்’ என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் தயாரிப்பாளர் கே.முரளிதரன்.

தொடர்ந்து தனது லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சுவாமிநாதன், முரளிதரன் மற்றும் வேணுகோபால் ஆகியோருடன் இணைந்து ‘மிஸ்டர் மெட்ராஸ்’, விஜயகாந்தின் ‘தர்மசக்கரம்’, விஜய் நடிப்பில் ‘பிரியமுடன்’, அஜித் நடிப்பில் ‘உன்னைத் தேடி’, கமலின் ‘அன்பே சிவம்’, ‘சிலபம்பாட்டம்’, ‘புதுப்பேட்டை’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். கடைசியாக ஜெயம் ரவி நடித்து 2015-ம் ஆண்டு வெளியான ‘சகலகலாவல்லவன்’ என்ற படத்தை தயாரித்திருந்தார்.

இதில் தயாரிப்பாளர் சுவாமிநாதன் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக மரணம் அடைந்தார். இந்த நிலையில் முரளிதரன் இன்று தன்னுடைய குடும்பத்தினருடன் கும்பகோணத்தில் உள்ள நாச்சியார் கோவிலுக்கு தரிசனத்திற்காக சென்றார். அப்போது மலை படி ஏறும்போது அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.

அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்குள் அவர் மரணம் அடைந்துவிட்டார். அவருடைய உடல் இன்று இரவு சென்னை கொண்டு வரப்பட்டு நாளை சென்னையில் இறுதி காரியங்கள் நடைபெறவுள்ளது.

முரளிதரன் மறைவுக்கு தமிழ்த் திரைப்பட பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

The post பிரபல தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் முரளிதரன் திடீர் மரணம்..! appeared first on Touring Talkies.

]]>
‘பாசமலர்’ படத்தின் கதை, வசனகர்த்தாவான ஆரூர்தாஸ் காலமானார் https://touringtalkies.co/a-famous-story-dialogue-writer-aarurdoss-paases-away/ Sun, 20 Nov 2022 16:30:00 +0000 https://touringtalkies.co/?p=27334 தமிழ்த் திரையுலகத்தின் மூத்த கதாசிரியரும், எழுத்தாளரும், இயக்குநருமான ஆரூர்தாஸ் இன்று மாலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 91. தமிழ்ச் சினிமாவில் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக கதாசிரியராகப் பணியாற்றியவர் ஆரூர்தாஸ். நாகப்பட்டினத்தில், 1931-ல் எஸ்.ஏ.சந்தியாகு நாடார் -ஆரோக்கியமேரி அம்மாள் தம்பதிக்குப் பிறந்தவர் ஆரூர்தாஸ். திரைத்துறையில் நுழைந்தபோது தான் பிறந்த ஊரான திருவாரூர் பெயரையும், தன் பெயரில் உள்ள ஏசுதாஸில் உள்ள பிற்பாதியை இணைத்து ஆரூர்தாஸ் என பெயர் வைத்துக் கொண்டார்.  முதன்முதலில் 1955-ல் தமிழாக்கப் படமான […]

The post ‘பாசமலர்’ படத்தின் கதை, வசனகர்த்தாவான ஆரூர்தாஸ் காலமானார் appeared first on Touring Talkies.

]]>
தமிழ்த் திரையுலகத்தின் மூத்த கதாசிரியரும், எழுத்தாளரும், இயக்குநருமான ஆரூர்தாஸ் இன்று மாலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 91.

தமிழ்ச் சினிமாவில் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக கதாசிரியராகப் பணியாற்றியவர் ஆரூர்தாஸ்.

நாகப்பட்டினத்தில், 1931-ல் எஸ்.ஏ.சந்தியாகு நாடார் -ஆரோக்கியமேரி அம்மாள் தம்பதிக்குப் பிறந்தவர் ஆரூர்தாஸ். திரைத்துறையில் நுழைந்தபோது தான் பிறந்த ஊரான திருவாரூர் பெயரையும், தன் பெயரில் உள்ள ஏசுதாஸில் உள்ள பிற்பாதியை இணைத்து ஆரூர்தாஸ் என பெயர் வைத்துக் கொண்டார். 

முதன்முதலில் 1955-ல் தமிழாக்கப் படமான `மகுடம் காத்த மங்கை’க்கு வசனம் எழுதினார். பின்னர் சாண்டோ சின்னப்பா தேவரிடம் சேர்ந்து கதை-வசனம் எழுதிய முதல் தமிழ்ப் படம் ஜெமினி கணேசன் நடித்த `வாழ வைத்த தெய்வம்’.

தமிழ்த் திரையுலகில் இரு துருவங்களாக விளங்கிய எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் இருவருடனும் நெருங்கிய நட்பு கொண்டு, இருவருக்குமே ஒரே நேரத்தில் பல படங்களுக்குக் கதை-வசனம் எழுதியிருக்கிறார்.

எம்.ஜி.ஆர். நடித்த தாய் சொல்லைத் தட்டாதே’, ‘தாயைக் காத்த தனயன்’, ‘அன்பே வா’, ‘குடும்பத் தலைவன்’, ‘நீதிக்குப் பின் பாசம்’, ‘வேட்டைக்காரன்’, ‘தொழிலாளி’, ‘தனிப்பிறவி’, ‘தாய்க்குத் தலைமகன்’, ‘ஆசைமுகம்’, ‘பெற்றால்தான் பிள்ளையா’…

சிவாஜிகணேசன் நடித்த ‘பாசமலர்’, ‘படித்தால் மட்டும் போதுமா’, ‘பார் மகளே பார்’, ‘பார்த்தால் பசி தீரும்’, ‘புதிய பறவை’, ‘இரு மலர்கள்’, ‘தெய்வ மகன்’, ‘பைலட் பிரேம்நாத்’, ‘நான் வாழவைப்பேன்’, ‘விஸ்வரூபம்’, ‘தியாகி’, ‘விடுதலை’, ‘குடும்பம் ஒரு கோவில்’, ‘பந்தம்’, ‘அன்புள்ள அப்பா’….

ஜெமினிகணேசன் நடித்த ‘வாழ வைத்த தெய்வம்’, ‘சவுபாக்கியவதி’, ‘திருமகள்’, ‘பெண் என்றால் பெண்’ உள்ளிட்ட படங்களுக்கு வசனம்‌ எழுதி, தான்‌ பங்காற்றிய படங்களுக்கு செழுமை சேர்த்தவர்‌ ஆரூர்தாஸ்.

500 திரைப்படங்களுக்கும் மேல் கதை-வசனம் எழுதி, தேசிய அளவில் சாதனை படைத்துள்ளார். `பெண் என்றால் பெண்’ என்னும் படத்துக்குக் கதை-வசனம் எழுதியதோடு, அதை இயக்கியும் உள்ளார்.

‘இதுதாண்டா போலீஸ்’, ‘பூ ஒன்று புயலாகிறது’, ‘பாரத் பந்த்’ என்று தெலுங்கில் வெற்றி பெற்ற பல படங்களுக்கும் தமிழ் வசனங்களை எழுதி அந்தப் படங்களை வெற்றி பெற வைத்தவர் ஆரூர்தாஸ்.

1972-ல் `கலைமாமணி’ விருது, 1996-ல் அறிஞர் அண்ணா விருதான `கலைவித்தகர்’ விருது என்று பல விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்புதான் திரைத்துறையில் இவரது சாதனையை கவுரவிக்கும் விதமாக கலைஞர் நினைவு கலைத்துறை வித்தர் விருது வழங்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் இந்த விருதை அவரது இல்லத்திற்கே சென்று வழங்கினார்.

கடந்த சில ஆண்டுகளாக வயது மூப்பின் காரணமாக வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தவர் இன்று மாலை 6.40 மணியளவில் தன் வீட்டிலேயே காலமானார்.

திரு.ஆரூர்தாஸ் மறைவுக்கு தமிழ்த் திரையுலகத்தின் மூத்த நடிகர், நடிகைகளும், இயக்குநர்களும், கதாசிரியர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சென்னை, தி.நகரில் உள்ள ஆரூர்தாஸின் இல்லத்தில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்கு திங்கள் அன்று நண்பகல் 12 மணியளவில் நடைபெறுகிறது.

The post ‘பாசமலர்’ படத்தின் கதை, வசனகர்த்தாவான ஆரூர்தாஸ் காலமானார் appeared first on Touring Talkies.

]]>
“இந்தியாவில் உண்மையை மட்டும் படமாக்க முடியாது” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் வருத்தம் https://touringtalkies.co/you-cant-film-only-the-truth-in-india-director-rk-selvamani-regrets/ Fri, 28 Oct 2022 15:39:29 +0000 https://touringtalkies.co/?p=26186 “இன்றைக்கு இந்தியாவில் ஆபாசப் படம்கூட எடுக்கலாம். ஆனால் உண்மையை மட்டும் படமாக்க முடியாது…” – என்று இயக்குநர் ஆர்.கே.செல்வமணி குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது, “இந்த விழா எங்கள் சங்கத்தில் நடப்பது மகிழ்ச்சி. இந்தியாவில் சட்ட அமைப்பு எல்லாம் வெளிநாடுகளைக் காட்டிலும் நன்றாகவே இருக்கிறது. ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதிலும், கடைப்பிடிப்பதிலும்தான் இங்கு சிக்கல் இருக்கிறது. அந்த நிலை மாற வேண்டும். இந்தப் படம் மிக சிக்கலான பிரச்சனையை பேசுகிறது. இது எந்தப் பக்கத்தில் இருந்து […]

The post “இந்தியாவில் உண்மையை மட்டும் படமாக்க முடியாது” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் வருத்தம் appeared first on Touring Talkies.

]]>
“இன்றைக்கு இந்தியாவில் ஆபாசப் படம்கூட எடுக்கலாம். ஆனால் உண்மையை மட்டும் படமாக்க முடியாது…” – என்று இயக்குநர் ஆர்.கே.செல்வமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது, “இந்த விழா எங்கள் சங்கத்தில் நடப்பது மகிழ்ச்சி. இந்தியாவில் சட்ட அமைப்பு எல்லாம் வெளிநாடுகளைக் காட்டிலும் நன்றாகவே இருக்கிறது.

ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதிலும், கடைப்பிடிப்பதிலும்தான் இங்கு சிக்கல் இருக்கிறது. அந்த நிலை மாற வேண்டும். இந்தப் படம் மிக சிக்கலான பிரச்சனையை பேசுகிறது. இது எந்தப் பக்கத்தில் இருந்து பேசுகிறது என்பதே முக்கியம்.

இந்தியாவில் எந்தக் கதையை வேண்டுமானாலும் படமெடுக்கலாம். ஆபாசமாகவும் படமெடுக்கலாம். ஆனால், உண்மையை மட்டும் எடுக்க கூடாது. என் படத்திற்கு அதுதான் நடந்தது. உண்மை பலரை சுடும்.

இந்தக் காலத்தில் சமூக வலைதளங்கள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. போனில் இருக்கும் அனைத்தும் வேறொருவரால் கண்காணிக்கப்படுகிறது. இதை இளைய தலைமுறைக்கு சொல்லித் தர வேண்டும். இந்தப் படம் அந்த விசயத்தையும் பேசும் என நம்புகிறேன்..” என்றார்.

The post “இந்தியாவில் உண்மையை மட்டும் படமாக்க முடியாது” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் வருத்தம் appeared first on Touring Talkies.

]]>
“தமிழ் சினிமாவில் பழைய பார்முலாக்கள் இனிமேல் செல்லாது” – இயக்குநர் பாண்டிராஜ் கருத்து https://touringtalkies.co/old-formulas-no-longer-work-in-tamil-cinema-director-pandiraj-opinion/ Mon, 17 Oct 2022 07:36:23 +0000 https://touringtalkies.co/?p=25539 “இனிமேல் பழைய பார்முலாபடி தமிழ் சினிமாவில் படங்களை உருவாக்க முடியாது” என்று இயக்குநர் பாண்டிராஜ் கருத்து தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்று வரும் உலகத் திரைப்பட விழாவின் 3-ம் நாள் நிகழ்ச்சியில் பேசும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இயக்குநர் பாண்டிராஜ் இந்த நிகழ்ச்சியில் பேசும்போது, “கொரோனா காலத்துக்குப் பிறகு தமிழ் சினிமா ரசிகர்களின் சினிமா பற்றிய பார்வைகள் நிறையவே மாறியிருக்கின்றன. சகாய விலையில் கிடைக்கும் இணையத் தொடர்பின் காரணமாக பல்வேறு […]

The post “தமிழ் சினிமாவில் பழைய பார்முலாக்கள் இனிமேல் செல்லாது” – இயக்குநர் பாண்டிராஜ் கருத்து appeared first on Touring Talkies.

]]>
இனிமேல் பழைய பார்முலாபடி தமிழ் சினிமாவில் படங்களை உருவாக்க முடியாது” என்று இயக்குநர் பாண்டிராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்று வரும் உலகத் திரைப்பட விழாவின் 3-ம் நாள் நிகழ்ச்சியில் பேசும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இயக்குநர் பாண்டிராஜ் இந்த நிகழ்ச்சியில் பேசும்போது, “கொரோனா காலத்துக்குப் பிறகு தமிழ் சினிமா ரசிகர்களின் சினிமா பற்றிய பார்வைகள் நிறையவே மாறியிருக்கின்றன. சகாய விலையில் கிடைக்கும் இணையத் தொடர்பின் காரணமாக பல்வேறு இணையத் தளங்களிலும், ஓடிடி தளங்களிலும் நிறைய வெளிநாட்டுப் படங்களைத் தேடித் தேடிப் பார்க்கிறார்கள்.

அவர்கள் வேறு, வேறு திரையனுபவங்களை பெற்று என்னைப் போன்ற இயக்குநர்களைவிடவும் அட்வான்ஸான சிந்தனையில் இருக்கிறார்கள். எனவே இனிமேல் படத்தின் தொடக்கத்தில் பாட்டு, அடுத்து ஒரு சண்டை காட்சி, அப்புறம் பாட்டு என பழைய பார்முலாபடி இனி திரைப்படம் எடுக்க முடியாது. புதிய புதிய கதைகளையும், திரைக்கதையையும் அவர்களுக்குத் தந்தாக வேண்டும். அப்போதுதான் அவர்களை வழக்கம்போல எங்களால் கவர முடியும். நிலைமை இப்போது இப்படி மாறியிருக்கிறது.

பல படங்களில் நடிக்கத் தேர்வாகாமல் ஒதுக்கப்பட்டவர்களைக் கொண்டுதான் சுசீந்திரன் ‘வெண்ணிலா கபடிக் குழு’ படத்தை எடுத்தார். பெரும்பாலானவர்கள் அதில் புதுமுகங்கள்தான். அந்தப் படம் நல்ல வெற்றியைத் தந்தது.

ஒரு ஊரில் 200 உணவகங்கள் இருந்தாலும், சில கடைகளுக்குத்தான் பிராண்ட் நேம் கிடைத்திருக்கிறது. அதுபோல, சில ஈர்ப்புகள் திரைப்படங்களுக்கும் தேவையாக இருக்கின்றன.

அரசியல் கட்சியினர், தொண்டர்கள் பலரும் திரைப்பட போஸ்டர்களைப் பார்க்க மாட்டார்கள். திரைப்பட ரசிகர்கள் அரசியல் போஸ்டர்களைப் பார்க்க மாட்டார்கள். எனவே, இனிமேல் அனைத்து தரப்பினரையும் ஈர்க்கும் வகையில் படங்களுக்கு தலைப்பிடவும், போஸ்டரை வடிவமைக்கவும் வேண்டும். ‘பசங்க’ படம் எடுக்கும்போதும், ‘மெரினா’ படம் எடுக்கும்போதும் முன்பே தலைப்பு தயாராகவில்லை. படம் எடுத்துக் கொண்டிருக்கும்போதுதான் இரு படங்களுக்கும் தலைப்பை வைத்தோம். அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.

இது போன்ற திரைப்பட விழாக்களை நடத்துவதுபோல, தமுஎகச போன்ற அமைப்புகள் சிறிய பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகளை உருவாக்கலாம்….” என்றார்.

The post “தமிழ் சினிமாவில் பழைய பார்முலாக்கள் இனிமேல் செல்லாது” – இயக்குநர் பாண்டிராஜ் கருத்து appeared first on Touring Talkies.

]]>
நிர்வாணப் போராட்டம் நடத்தியது ஏன்? – நடிகை ஸ்ரீரெட்டியின் விளக்கம் https://touringtalkies.co/why-did-the-naked-protest-commentary-by-actress-srireddy/ Fri, 14 Oct 2022 13:28:10 +0000 https://touringtalkies.co/?p=25407 பிரபல தெலுங்கு நடிகையான ஸ்ரீரெட்டி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஹைதராபாத்தில் உள்ள தெலுங்கு பிலிம் சேம்பர் முன்பாக நடுரோட்டில் டாப்லெஸாக போராட்டம் நடத்தி இந்தியா முழுவதையும் கலவரப்படுத்தினார். சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் என்று பலரும் தன்னை படுக்கையில் பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டினார் ஸ்ரீரெட்டி. தன்னை ஏமாற்றியவர்களாக தமிழ், தெலுங்கு திரையுலகத்தின் முக்கியஸ்தர்களின் பெயர்களையெல்லாம் வெளியிட்டு அதிர வைத்தார் ஸ்ரீரெட்டி. இதனால் நாளை ஸ்ரீரெட்டி யாரை […]

The post நிர்வாணப் போராட்டம் நடத்தியது ஏன்? – நடிகை ஸ்ரீரெட்டியின் விளக்கம் appeared first on Touring Talkies.

]]>
பிரபல தெலுங்கு நடிகையான ஸ்ரீரெட்டி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஹைதராபாத்தில் உள்ள தெலுங்கு பிலிம் சேம்பர் முன்பாக நடுரோட்டில் டாப்லெஸாக போராட்டம் நடத்தி இந்தியா முழுவதையும் கலவரப்படுத்தினார்.

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் என்று பலரும் தன்னை படுக்கையில் பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டினார் ஸ்ரீரெட்டி.

தன்னை ஏமாற்றியவர்களாக தமிழ், தெலுங்கு திரையுலகத்தின் முக்கியஸ்தர்களின் பெயர்களையெல்லாம் வெளியிட்டு அதிர வைத்தார் ஸ்ரீரெட்டி.

இதனால் நாளை ஸ்ரீரெட்டி யாரை கை காட்டப் போகிறாரோ.. என்ன சொல்லப் போகிறாரோ? யாரை காலி பண்ண போகிறாரோ என பீதியில் இருந்தது கோலிவுட் சினிமாவும், டோலிவுட் சினிமாவும்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை ஷகிலாவின் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஸ்ரீரெட்டி தான் ஆடையை கழட்டி போராட்டம் நடத்தியது ஏன் என்பதை மனம் திறந்து பேசியுள்ளார்.

“சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருகிறேன், போட்டோஷூட் நடத்த வேண்டும் வாருங்கள் என அழைப்பார்கள். அதைக் காட்டுங்கள், இதைக் காட்டுங்கள், அப்படி காட்டுங்கள், இப்படி காட்டுங்கள், டிரெஸை தூக்குங்கள், பேண்ட்டை இறக்குங்கள் என அவர்களுக்கு என்னவெல்லாம் ஆசையோ அதையெல்லாம் செய்துவிட்டு, என் உடம்பையும் பார்த்துவிட்டு அனுப்பி விடுவார்கள். ஆனால் வாய்ப்பு மட்டும் கொடுக்க மாட்டார்கள்.

வாய்ப்பு கொடுப்பதாக கூறி அழைப்பவர்களும் தயாரிப்பாளரிடம் அட்ஜெஸ்ட் செய்ய வேண்டும். அவர் கேட்பதையெல்லாம் செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். அப்படி செய்தபோதும்கூட வாய்ப்பு கொடுக்காமல் ஏமாற்றி விடுகிறார்கள். டாப் நடிகர்கள், டாப் இயக்குநர்கள்கூட படுக்கையில் என்னை பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றி விட்டார்கள்.

அவர்கள் எல்லோரும் பார்த்த என் உடம்பை எனக்கு நியாயம் கேட்டு காட்டினேன். அவர்கள் என்னை பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றியது மட்டும் சரி.. நான் செய்தது தவறா? எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் ஆடைகளை அவிழ்த்து போராட்டம் நடத்தினேன்..” என கூறியுள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி.

The post நிர்வாணப் போராட்டம் நடத்தியது ஏன்? – நடிகை ஸ்ரீரெட்டியின் விளக்கம் appeared first on Touring Talkies.

]]>
2 லட்சம் ரூபாய்+5 பவுன் தங்கப் பதக்கம் பெறப் போகும் கலைஞர்கள் https://touringtalkies.co/2-lakh-rupees-5-pound-gold-medal-for-the-artists/ Sat, 03 Sep 2022 07:24:41 +0000 https://touringtalkies.co/?p=24248 தமிழக அரசின் சார்பில், 2009 முதல் 2014-ம் ஆண்டு வரையிலான திரைப்பட விருதுகள் வழங்கும் விழா கலைவாணர் அரங்கில் நாளை மாலை நடைபெறுகிறது. இது குறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “தமிழக அரசின் திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் மற்றும் எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நாளை (செப்.4) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இவ்விழாவில் அமைச்சர்கள் பங்கேற்று […]

The post 2 லட்சம் ரூபாய்+5 பவுன் தங்கப் பதக்கம் பெறப் போகும் கலைஞர்கள் appeared first on Touring Talkies.

]]>
தமிழக அரசின் சார்பில், 2009 முதல் 2014-ம் ஆண்டு வரையிலான திரைப்பட விருதுகள் வழங்கும் விழா கலைவாணர் அரங்கில் நாளை மாலை நடைபெறுகிறது.

இது குறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் மற்றும் எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நாளை (செப்.4) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இவ்விழாவில் அமைச்சர்கள் பங்கேற்று விருதுகள், பரிசுகளை வழங்குகின்றனர்.

இவ்விழாவில் 2009 முதல் 2014-ம் ஆண்டு வரை தேர்வு செய்யப்பட்ட சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசு ரூ.2 லட்சம், 2-ம் பரிசு ரூ.1 லட்சம், 3-ம் பரிசு ரூ.75 ஆயிரம், சிறந்த படம் சிறப்பு பரிசு ரூ.75 ஆயிரம் என 23 தயாரிப்பாளர்களுக்கு ரூ.26.25 லட்சத்துக்கான காசோலை, சிறந்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் என 160 பேருக்கு தலா 5 பவுன் தங்கப் பதக்கம் வழங்கப்படுகிறது.

சின்னத்திரை விருதுகள் 2009 முதல் 2013-ம் ஆண்டுவரை சிறந்த நெடுந்தொடர்களின் தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசு ரூ.2 லட்சம், 2-ம் பரிசு ரூ.1 லட்சம், சிறந்த வாழ்நாள் சாதனையாளர்களுக்கு தலாரூ.1 லட்சம் என ரூ.25 லட்சத்துக்கான காசோலையும், சிறந்த கதாநாயகன் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என 81 பேருக்கு 3 பவுன் தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது.

தமிழக அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் 2008-09-ம் கல்வியாண்டு முதல் 2013-14-ம் கல்வியாண்டுவரை பயின்றவர்கள் தயாரித்த சிறந்த குறும் படங்களின் மூலம் சிறந்த இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், ஒலிப்பதிவாளர்கள், படத் தொகுப்பாளர்கள், படம் பதனிடுபவர்கள் என 30 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.1.50 லட்சத்துக்கான காசோலை, ஒரு பவுன் தங்கப் பதக்கம் ஆகியவை வழங்கப்படுகிறது.

மொத்தம் 314 பேருக்கு ரூ.52.75ஆயிரம் மதிப்புள்ள காசோலை, தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

விருதைப் பொறுத்தவரை, 2009-ம் ஆண்டில் சிறந்த படங்களுக்கான முதல் 3 பரிசை ‘பசங்க’, ‘மாயாண்டி குடும்பத்தார்’, ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ ஆகியவையும், சிறந்த நடிகராக கரணும், சிறந்த நடிகையாக பத்மப்பிரியாவும், சிறந்த இயக்குநராக வசந்தபாலனும் தேர்வாகியுள்ளனர். 2010-ம் ஆண்டில், ‘மைனா’, ‘களவாணி’, ‘புத்ரன்’ ஆகிய படங்களும், சிறந்த நடிகராக விக்ரம், நடிகையாக அமலாபால், இயக்குநராக பிரபு சாலமனும் தேர்வாகியுள்ளனர்.

2011-ம் ஆண்டில் ‘வாகை சூட வா’, ‘தெய்வத்திருமகள்’, ‘உச்சிதனை முகர்ந்தால்’ ஆகிய படங்களும், சிறந்த நடிகராக விமல், நடிகையாக இனியா, நடிகருக்கான சிறப்பு பரிசுக்கு சிவகார்த்திகேயன், நடிகையாக அனுஷ்கா, இயக்குநராக ஏ.எல்.விஜய் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

2012-ம் ஆண்டில் ‘வழக்கு எண் 18/9’, ‘சாட்டை’, ‘தோனி’ ஆகிய படங்களும், நடிகர் நடிகைகளாக ஜீவா,லட்சுமிமேனனும், சிறப்பு பரிசாக விக்ரம் பிரபு, சமந்தாவும், இயக்குநராக பாலாஜி சக்திவேலும் தேர்வாகியுள்ளனர்.

2013-ம் ஆண்டுக்கு ‘ராமானுஜன்’, ‘தங்க மீன்கள்’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ ஆகிய படங்கள், நடிகர், நடிகையாக ஆர்யா, நயன்தாரா, சிறப்பு பரிசை விஜய் சேதுபதி மற்றும் நஸ்ரியா நசிம், இயக்குநராக ராம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

2014-ம் ஆண்டில் ‘குற்றம் கடிதல்’, ‘கோலிசோடா’, ‘நிமிர்ந்து நில்’ ஆகிய படங்களும், சிறந்த நடிகராக சித்தார்த், நடிகையாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் சிறந்த இயக்குநராக ராகவனும் தேர்வாகியுள்ளனர்..” என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

The post 2 லட்சம் ரூபாய்+5 பவுன் தங்கப் பதக்கம் பெறப் போகும் கலைஞர்கள் appeared first on Touring Talkies.

]]>
“என் மூச்சு உள்ளவரையிலும் நடிப்பேன்..” – நடிகர் நாசர் அறிவிப்பு https://touringtalkies.co/actor-naasar-statement-about-his-acting-career/ Sat, 02 Jul 2022 08:31:25 +0000 https://touringtalkies.co/?p=22971 நடிகர் நாசர் சினிமாவை விட்டு விலகப் போவதாக கடந்த சில தினங்களாக அனாமதேய சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. அந்த செய்தியில், “நடிகர் நாசருக்கு வயதான காரணத்தால் அவரால் தற்போதெல்லாம் நடிக்க இயலவில்லை” என்றும், “ஏற்கனவே ஒப்புக் கொண்ட மற்றும் அட்வான்ஸ் தொகை பெற்றுக் கொண்ட படங்களில் மட்டுமே நடித்து வருவதாகவும் அது முடிந்தவுடன் நடிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கப் போவதாகவும்” செய்திகள் வெளியாகின. பொதுவாகவே நாசர், பெரிய பட்ஜெட் படங்கள், முன்னணி நாயகர்கள், பெரிய கதாநாயகர்கள், […]

The post “என் மூச்சு உள்ளவரையிலும் நடிப்பேன்..” – நடிகர் நாசர் அறிவிப்பு appeared first on Touring Talkies.

]]>
நடிகர் நாசர் சினிமாவை விட்டு விலகப் போவதாக கடந்த சில தினங்களாக அனாமதேய சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் அடிபட்டுக் கொண்டிருக்கிறது.

அந்த செய்தியில், “நடிகர் நாசருக்கு வயதான காரணத்தால் அவரால் தற்போதெல்லாம் நடிக்க இயலவில்லை” என்றும், “ஏற்கனவே ஒப்புக் கொண்ட மற்றும் அட்வான்ஸ் தொகை பெற்றுக் கொண்ட படங்களில் மட்டுமே நடித்து வருவதாகவும் அது முடிந்தவுடன் நடிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கப் போவதாகவும்” செய்திகள் வெளியாகின.

பொதுவாகவே நாசர், பெரிய பட்ஜெட் படங்கள், முன்னணி நாயகர்கள், பெரிய கதாநாயகர்கள், என்று இல்லாமல் அறிமுக நாயகர்கள், அறிமுக கலைஞர்கள் நடிக்கும் சிறிய பட்ஜெட் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருபவர். 

சின்ன கலைஞர்கள் என்று பாரபட்சம் பார்க்காமல் யார் கேட்டாலும் அது சிறிய கதாபாத்திரமாகவே இருந்தாலும் அதை ஏற்று நடித்து கொண்டிருக்கிறார் நடிகர் நாசர்.

இந்தியா முழுவதிலும் அனேக மொழிகளில் நடித்து வரும் நடிகர் நாசரை பற்றி இப்படி ஒரு செய்தி வருவது உண்மை இல்லை என்று அவரே விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் நாசர் இது குறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் நடிகனாகத்தான் வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்ட பின், அதைத் தீவிரமாக எடுத்துக் கொண்டு முறையாகப் பயிற்சி பெற்றுதான் சினிமாவிற்கு வந்தேன்.

மேலும், சமீபமாக வலைத் தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கும் என் தொழிலிலிருந்து ஓய்வு என்ற செய்தி என்னால் சொல்லப்பட்டது அல்ல; புனைவு. நான் நடித்துக் கொண்டிருப்பேன்; நடிப்பேன். அடையாளம் இல்லாதவர்கள் வலைத் தளங்களில்  பதிவிடுவதைவிட மக்களால் நம்பப்படுகின்ற நான் மதிக்கின்ற பொறுமையோடும் நட்போடும் பழகுகின்ற ஊடகங்களே அதை வெளியிடுவதுதான்  எனக்குப் பெரிதும் வருத்தமளிக்கிறது.

நான் அனைவரிடமும் எளிதாக தொடர்பு கொள்ளும்விதத்தில்தான் நான் பழகியிருக்கிறேன். சொந்த விஷயம் ஆகட்டும்.. தொழில் சார்ந்த விஷயம் ஆகட்டும்,  சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதல் அல்லது விளக்கம் இல்லாது தயவு செய்து தவறான செய்திகளை பதிவு செய்ய வேண்டாம். என் மூச்சு இருக்கும்வரையிலும் நான் நடித்துக் கொண்டேதான் இருப்பேன்…” என்று கூறியுள்ளார்.

The post “என் மூச்சு உள்ளவரையிலும் நடிப்பேன்..” – நடிகர் நாசர் அறிவிப்பு appeared first on Touring Talkies.

]]>
திரைப்பட துறையின் வளர்ச்சிக்காக NFDC-யின் புதிய திட்டம்..! https://touringtalkies.co/nfdc-new-scheme-for-tamil-film-industry/ Sat, 18 Jun 2022 13:24:11 +0000 https://touringtalkies.co/?p=22726 தமிழ் திரைப்படத் துறையின் நிலை மற்றும் திறனை மதிப்பிட்டு அறிக்கை அளிக்க தேசிய திரைப்பட வளர்ச்சி கழக இயக்குநர் திரு.ராஜேஷ் கண்ணா அவர்களின் புதிய முயற்சி. தமிழ்த் திரைப்படத் துறையின் தற்போதைய நிலை, எதிர்கால சாத்தியக் கூறுகள்  பற்றிய ஆய்வு மற்றும் ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காக நேஷனல் ஃபிலிம் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் (NFDC) எனும் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் இயக்குநர் திரு.ராஜேஷ் கண்ணா ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். என்.எஃப்.டி.கிரியேட்டர் எகானமி (NFT Creator Economy) சார்பாக […]

The post திரைப்பட துறையின் வளர்ச்சிக்காக NFDC-யின் புதிய திட்டம்..! appeared first on Touring Talkies.

]]>
தமிழ் திரைப்படத் துறையின் நிலை மற்றும் திறனை மதிப்பிட்டு அறிக்கை அளிக்க தேசிய திரைப்பட வளர்ச்சி கழக இயக்குநர் திரு.ராஜேஷ் கண்ணா அவர்களின் புதிய முயற்சி.

தமிழ்த் திரைப்படத் துறையின் தற்போதைய நிலை, எதிர்கால சாத்தியக் கூறுகள்  பற்றிய ஆய்வு மற்றும் ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காக நேஷனல் ஃபிலிம் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் (NFDC) எனும் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் இயக்குநர் திரு.ராஜேஷ் கண்ணா ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்.

என்.எஃப்.டி.கிரியேட்டர் எகானமி (NFT Creator Economy) சார்பாக இந்த ஆய்வு மற்றும் ஆராய்ச்சியை ஆரக்கள் மூவிஸ் மேற்கொள்ளும்.

என்.எஃப்.டி. கிரியேட்டர் எகானமி’ என்பதுஆரக்கிள் மூவீஸின்’ தாய் நிறுவனமாகும். ‘ஆரக்கிள் மூவிஸ்’ இந்தியாவின் முதல் என்.எஃப்.டி.சி.யின் திரைப்பட சந்தையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்படத் துறையின் வருவாய் தரப்பு பங்குதாரர்களான தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் ஆகியோரை நேரடியாக சந்தித்து இந்த ஆய்வு நடத்தப்படும். அவர்களின் கருத்துகள் தொகுக்கப்பட்டு அறிக்கையாக NFDCயிடம் கொடுக்கப்படும்.

இந்த அறிக்கை பின் வரும் காரணங்களுக்காக பயன்படுத்தப்படும்:

* தமிழ்த் திரைப்படத் துறையின் தற்போதைய ஆரோக்கியத்தையும் ஆற்றலையும் உறுதிப்படுத்துதல்.

* வருவாய் இழப்பை அடையாளம் கண்டு சரி செய்தல்.

* தயாரிப்பில் உள்ள மற்றும் இன்னும் வெளியிடப்படாத திரைப்படங்களின் தரவுத்தளத்தை உருவாக்குதல்.

* தரமான முடிக்கப்படாத திரைப்படங்களை அடையாளம் காணுதல்.

“இந்த முயற்சிக்கு தயாரிப்பாளர்கள் ஆதரவளிக்க வேண்டும்” என்று தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குநர் ராஜேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர்களின் ஆதரவுடன் மட்டுமே இந்த திட்டம் வெற்றிகரமாக அமையும்இந்த முயற்சி தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்என்று அவர் மேலும் கூறினார்.

ஆரக்கிள் மூவீஸ் இணை நிறுவனரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஜி.கே.திருநாவுக்கரசு கூறுகையில், “NFDC இந்த ஆராய்ச்சியை செய்வதற்கு எங்களுடன்  இணைந்திருப்பதில் நாங்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறோம்.

இந்த முயற்சி சுவாரஸ்யமானது. இது தயாரிப்பாளர்களின் வருவாயை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த திரைத்துறையின் வளர்ச்சிக்கும் உதவும். தற்போதைய சூழ்நிலையில் தமிழ்த் திரையுலகம் எந்த நிலையில் உள்ளது என்பது பற்றிய சிறந்த யோசனையையும் இது தரும்.

இந்த முயற்சியில் வெற்றி அடைய தொழில் நுட்பம் கை கொடுக்கும். தொழில் நுட்பத்தின் உதவியுடன், வெளிவரத் தயாராக உள்ள திரைப்படங்களின் எண்ணிக்கையைக் கண்காணிப்பது எளிதாக இருக்கும். தமிழ் சினிமாவில் அதிக வருவாய் ஈட்டவும் தொழில் நுட்பம் உதவும்என்று ஆரக்கிள் மூவிஸ் நிறுவனர் மற்றும் தொழில் நுட்ப தொழில் முனைவோர் செந்தில் நாயகம் தெரிவித்தார்.

The post திரைப்பட துறையின் வளர்ச்சிக்காக NFDC-யின் புதிய திட்டம்..! appeared first on Touring Talkies.

]]>
“தமிழ்ப் படங்களில் அதிகமாக நடிக்காதது ஏன்..?” – நடிகை ல‌ஷ்மி மஞ்சுவின் பதில் https://touringtalkies.co/actress-lakshmi-manchus-interview-about-her-tamil-carrier/ Sun, 12 Dec 2021 09:06:46 +0000 https://touringtalkies.co/?p=19788 தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன் பாபுவின் மகளும் பிரபல தெலுங்கு நடிகை மற்றும் தயாரிப்பாளரான ல‌ஷ்மி மஞ்சு, தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருவதோடு இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். எந்த வேடமாக இருந்தாலும் அதில் கச்சிதமாக பொருந்தக் கூடிய நடிகைகளில் ல‌ஷ்மி மஞ்சு மிக முக்கியமானவர். அதனால்தான் அவர் பல மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ’மறந்தேன் மன்னித்தேன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ல‌ஷ்மி மஞ்சு, […]

The post “தமிழ்ப் படங்களில் அதிகமாக நடிக்காதது ஏன்..?” – நடிகை ல‌ஷ்மி மஞ்சுவின் பதில் appeared first on Touring Talkies.

]]>
தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன் பாபுவின் மகளும் பிரபல தெலுங்கு நடிகை மற்றும் தயாரிப்பாளரான ல‌ஷ்மி மஞ்சு, தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருவதோடு இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

எந்த வேடமாக இருந்தாலும் அதில் கச்சிதமாக பொருந்தக் கூடிய நடிகைகளில் ல‌ஷ்மி மஞ்சு மிக முக்கியமானவர். அதனால்தான் அவர் பல மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

’மறந்தேன் மன்னித்தேன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ல‌ஷ்மி மஞ்சு, அப்படத்தை தொடர்ந்து மணிரத்னத்தின் ‘கடல்’, ராதாமோகன் இயக்கிய ‘காற்றின் மொழி’ ஆகிய படங்களில் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தார்.

தற்போது, மோகன்லாலுடன் ‘மான்ஸ்டர்’ என்ற மலையாளப் படத்தில் நடித்து வரும் ல‌ஷ்மி மஞ்சு, தமிழ்ப் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். பிக் பாஸ் தர்ஷன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் படத்தின் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் போலீஸ் வேடத்தில் ல‌ஷ்மி மஞ்சு நடித்து வருகிறார்.

சில தமிழ்ப் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்காதது ஏன் என்ற கேள்விக்கு சமீபத்தில் பதில் சொல்லியிருக்கிறார் நடிகை லஷ்மி மஞ்சு.

இதற்கு ல‌ஷ்மி மஞ்சு பதில் அளிக்கும்போது, “நான் எப்போதுமே தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வமாகத்தான் இருக்கிறேன். இதுவரையிலும் என்னைத் தேடி வந்த எந்த ஒரு தமிழ்ப் பட  வாய்ப்பையும் நான் நிராகரித்ததில்லை. அதேபோல், இப்படிதான் நடிப்பேன்.. இப்படிப்பட்ட வேடத்தில்தான் நடிப்பேன் என்று நான் சொன்னதும் இல்லை. நல்ல வேடமாக இருந்தால், எந்த வேடமாக இருந்தாலும் நான் நடிக்க ரெடியாகவே இருக்கிறேன்.

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை, என்னை பலர் அணுகாததற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்கிறது. அதாவது, நான் ஒரு பெரிய நடிகரின் மகளாக இருப்பதால்தான் என்னை ஒரு நடிகையாக அணுக யோசிக்கிறார்கள். நான் எப்படி நடந்து கொள்வேனோ, என்னை வைத்து எப்படி படமாக்குவது என்றெல்லாம் யோசிக்கிறார்கள் போலிருக்கிறது.

ஆனால், என்னை பொருத்தவரை நான் நடிகையாக ஒரு படத்தில் கமிட் ஆகிவிட்டால், நடிகையாக மட்டுமே இருப்பேனே தவிர நடிகர் மோகன்பாபுவின் மகளாகவோ அல்லது ஒரு தயாரிப்பாளராகவோ நடந்து கொள்ள மாட்டேன். இதுவரை அப்படித்தான் இருக்கிறேன், இனியும் அப்படித்தான் இருப்பேன்.

நான் பல மொழிகளில் நடித்து வந்தாலும் தமிழ்த் திரைப்படங்கள் மீது எனக்கு எப்போதும் தனி மரியாதை உண்டு. அதனால், தமிழ்ப் படங்களில் நடிக்க நான் ஆர்வமாக இருக்கிறேன். நல்ல கதையாக இருந்தால், எந்த வேடத்திலும் நடிக்க ரெடி. பெரிய படம், சின்ன படம் என்றெல்லாம் பார்க்க மாட்டேன். அதனால் தமிழ் திரையுலகினர் என்னை எந்தவித தயக்கமும் இன்றி தாராளமாக அணுகலாம். நானும் தமிழ்ப் படங்களில், சவாலான வேடங்களில் நடிக்க மிக ஆர்வமாக இருக்கிறேன்..” என்று தெரிவித்துள்ளார்.

The post “தமிழ்ப் படங்களில் அதிகமாக நடிக்காதது ஏன்..?” – நடிகை ல‌ஷ்மி மஞ்சுவின் பதில் appeared first on Touring Talkies.

]]>
30 வருடங்கள் கடந்தும் பிசியான நடிகராக வலம் வரும் விச்சு விஸ்வநாத் https://touringtalkies.co/actor-vichu-vishwanath-acting-career-news/ Tue, 05 Oct 2021 11:11:22 +0000 https://touringtalkies.co/?p=18522 நவரசமான நடிப்புடன், நகைச்சுவை கலந்து நடித்த பல படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர்  விச்சு விஸ்வநாத். குணச்சித்திர வேடங்களிலும், நகைச்சுவை நடிகராகவும் பல படங்களில் நடித்தவர். 1990-ம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் மணிவண்ணன் இயக்கி வெளியான ‘சந்தனத்தேவன்’ படத்தில்தான் விச்சு விஸ்வநாதன் ஒரு நடிகராக தமிழ்ச் சினிமாவிற்கு இவர் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து கடந்த 30 வருடங்களாகத் தொடர்ந்து 100 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். மேலும் 65-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களிலும் […]

The post 30 வருடங்கள் கடந்தும் பிசியான நடிகராக வலம் வரும் விச்சு விஸ்வநாத் appeared first on Touring Talkies.

]]>
நவரசமான நடிப்புடன், நகைச்சுவை கலந்து நடித்த பல படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர்  விச்சு விஸ்வநாத். குணச்சித்திர வேடங்களிலும், நகைச்சுவை நடிகராகவும் பல படங்களில் நடித்தவர்.

1990-ம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் மணிவண்ணன் இயக்கி வெளியான சந்தனத்தேவன்’ படத்தில்தான் விச்சு விஸ்வநாதன் ஒரு நடிகராக தமிழ்ச் சினிமாவிற்கு இவர் அறிமுகமானார்.

இதைத் தொடர்ந்து கடந்த 30 வருடங்களாகத் தொடர்ந்து 100 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். மேலும் 65-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களிலும் விச்சு விஸ்வநாத் நடித்திருக்கிறார்.

தொடர்ந்து டி.ராஜேந்தருடன் ‘சாந்தி எனது சாந்தி’, அஜீத்துடன் ‘நேசம்’, ‘பவித்ரா’, பிரபுவுடன் ‘உறுதிமொழி’, ‘தேடினேன் வந்தது’, சத்யராஜூடன் ‘அமைதிப்படை’, ‘தாய் மாமன்’, ‘வீரப்பதக்கம்’, கார்த்திக்குடன் ‘உள்ளத்தை அள்ளித் தா’, ‘மேட்டுக்குடி’, ‘உனக்காக எல்லாம் உனக்காக’, கமல்ஹாசனுடன் ‘அன்பே சிவம்’, ரஜினியுடன் ‘அருணாச்சலம்’, ‘வின்னர்’, ‘கிரி’, ‘வீராப்பு’, ‘இதயத்தாமரை’, ‘கலகலப்பு-1, 2’, ‘அரண்மனை-1, 2, 3’ ஆகிய முக்கியமான படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும், நடிகை ராதிகா சரத்குமாருடன் ‘செல்வி’, ‘அரசி’, ‘செல்லமே’ ஆகிய மெகா தொலைக்காட்சித் தொடர்களிலும், குஷ்புவுடன் ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’, ‘நந்தினி’ ஆகிய மெகா தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

30 வருடங்களுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகில் ஒரு நடிகராக தன்னை நிலை நிறுத்தி கொண்டுள்ள நடிகர்  விச்சு விஸ்வநாத் தனது திரைப்பட பயணம் பற்றிக் கூறுகையில், “30 ஆண்டுகளுக்கும் மேலாக நான் இதே தமிழ்த் திரையுலகத்தில் 100-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளேன். நாம் சந்தோஷமாக இருந்தால் அந்த உணர்வு நம்மை சுற்றி உள்ளவர்களிடம் அதனுடைய ஆதிக்கத்தை செலுத்தும் என்று நம்புபவன் நான்.  அதனால்தானோ, என்னவோ நான் குணசித்திரம் கலந்த நகைச்சுவை வேடங்களை தேர்ந்தெடுக்கிறேன்.

தற்போது இயக்குர் சுந்தர்.C இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை-3’ படத்தில் நடித்துள்ளேன். ‘அரண்மனை’யின் முதல் இரண்டு படங்களிலும் வித்தியாசமான தோற்றித்தில் நடித்ததை தொடர்ந்து தற்போது ‘அரண்மனை-3’ படத்திலும் அதே போல் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளேன். எனக்கு இந்த வாய்ப்பை அளித்த இயக்குர் சுந்தர்.C அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி அரண்மனை-3’ படம் அமைந்துள்ளது…” என்றார்.

The post 30 வருடங்கள் கடந்தும் பிசியான நடிகராக வலம் வரும் விச்சு விஸ்வநாத் appeared first on Touring Talkies.

]]>