The post தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவதாக அறிவிப்பு appeared first on Touring Talkies.
]]>தமிழ்ச் சினிமாவின் தற்போது மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கும் தனுஷ் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை 2004-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். 18 ஆண்டுகள் இருவரும் இணைந்து வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு யாத்ரா ராஜா மற்றும் லிங்கா ராஜா என்ற இரு மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் தாங்கள் இருவரும் மனமொத்து பிரிவதாக இன்றைக்கு அறிவித்துள்ளனர். இது குறித்து நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கை இது :
“18 வருடங்கள் நண்பர்கள், தம்பதிகள், பெற்றோர்கள் மற்றும் நலம் விரும்புபவர்கள் என ஒருவரையொருவர் ஒன்றாக இணைத்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது. இன்று நாங்கள் ஒருவரை ஒருவர் பிரியும் இடத்தில் நிற்கிறோம். ஐஸ்வர்யாவும், நானும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும், இருவரும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்கவும்.” என்று அந்த அறிக்கையில் நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.
இந்தத் தம்பதிகள் பற்றிய எந்தவொரு நெகட்டிவ் செய்தியும் எப்போதும் வெளிவந்திருக்காத நிலையில் இந்தத் திடீர் பிரிவுக்கு என்ன காரணம் என்று தெரியாமல் தமிழ்த் திரையுலகத்தினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
The post தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவதாக அறிவிப்பு appeared first on Touring Talkies.
]]>The post சமந்தா வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் மீம்ஸ் appeared first on Touring Talkies.
]]>சமீப நாட்களாக நடிகை சமந்தா தனது கணவரும் தெலுங்குலகின் பிரபல நடிகரான நாக சைதன்யாவை விவகாரத்து செய்யவிருப்பதாக செய்திகள் பரவி வருகின்றன.
ட்விட்டரில் தன் கணவரின் குடும்பப் பெயரான அக்கினேனியை தன் திருமணத்திற்குப் பின்னால் சேர்த்துக் கொண்டிருந்த சமந்தா சென்ற மாதம் திடீரென்று அந்தப் பெயரை நீக்கியதால்தான் இந்த சந்தேகம் மீடியாக்களுக்கு எழுந்தது.
இதனால் தெலுங்கு ஊடகங்கள் சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் விரைவில் விவாகரத்து செய்யவிருக்கிறார்கள். சமந்தா தற்போது தனது தோழி வீட்டில் இருக்கிறார். எனவேதான் அவர் ட்விட்டரில் பெயரை மாற்றியுள்ளதாக செய்திகள் வெளியிட்டன.
ஆனால் இந்த விவகாரம் குறித்து சமந்தாவோ, நாக சைதன்யாவோ இதுவரையிலும் எந்தவிதக் கருத்தும் கூறவில்லை. பேசவில்லை.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடிய தனது மாமனார் நாகர்ஜூனாவுக்கு, “உங்கள் மீதான எனது மரியாதையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எப்பொழுதும் உங்களுக்கு ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்க வேண்டும். பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாமா” எனக் கூறி சமந்தா வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.
இருந்தாலும் இந்த வாழ்த்துக்கு சமந்தாவின் மாமனாரான நாகார்ஜூனா பதில் நன்றி சொல்லாமல் விட்டதினால் டைவர்ஸ் உறுதி போலும் என்று பல ஊடகங்கள் மீண்டும் தங்களது கருத்தை வெளிப்படுத்தின.
இந்நிலையில் ஊடகங்களை கலாய்க்கும்விதமாக மீம்ஸ் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சமந்தா.
அதில் நாய் ஒன்று ஆக்ரோஷமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஊடகங்கள் குறித்து கூறப்படுவது என்றும். அமைதியாக இருக்கும் நாய்களின் புகைப்படத்தை பகிர்ந்து ஊடகத்தின் உண்மை நிலை என்றும் குறிப்பிட்டுள்ளார். சமந்தா,
தனது விவகாரத்து பற்றிய செய்தியை வெளியிட்ட ஊடகங்களை விமர்சிக்கும்விதமாகவே அவர் இந்த பதிவை பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
என்ன இருந்தாலும் ஊடகங்களை நாய் வடிவத்தில் உருவகப்படுத்தி சமந்தா கூறியிருப்பது மீடியாக்களை ஒட்டு மொத்தமாக கேவலப்படுத்தியிருக்கும் செயல் என்று தெலுங்கு பத்திரிகையுலகத்தினர் வருத்தப்படுகிறார்கள்.
The post சமந்தா வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் மீம்ஸ் appeared first on Touring Talkies.
]]>The post மலையாள நடிகர் முகேஷிடம் விவாகரத்து கேட்கிறார் அவரது 2-வது மனைவி..! appeared first on Touring Talkies.
]]>மலையாளத்தில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நாயகனாக நடித்தவர் முகேஷ். தற்போது 64 வயதாகும் முகேஷ் இதுவரையிலும் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தற்போது குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் முன்னணி நடிகராக இருக்கிறார். தமிழில் ‘மனைவி ஒரு மாணிக்கம்’, ‘ஜாதி மல்லி’, ‘ஐந்தாம் படை’, ‘பொன்னர் சங்கர்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார்,
இவருக்கும், பிரபல நடிகை சரிதாவுக்கும் 1988-ல் காதல் திருமணம் நடந்தது. பின்னர் இவர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடைசியில் 2011-ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தனர். அப்போது, முகேஷ் ஒரு குடிகாரர் என்றும், பல பெண்களுடன் தொடர்பு வைத்து இருக்கிறார் என்றும் சரிதா குற்றம் சாட்டியிருந்தார்.
பின்னர் பரத நாட்டிய கலைஞர் மெத்தில் தேவிகாவை 2013-ல் முகேஷ் 2-வது திருமணம் செய்து கொண்டார். மெத்தில் தேவிகாவும் அப்போது முதல் திருமணம் செய்து டைவர்ஸ் செய்திருந்தார். முதல் திருமணம் மூலமாக தேவிகாவுக்கு ஒரு மகனும் இருந்தார். இந்தச் சூழலில்தான் இவர்களது திருமணம் நடைபெற்றிருந்தது.
தற்போது இந்தத் திருமணமும் தோல்வியில் முடிந்திருக்கிறதாம். முகேஷிடம் இருந்து தனக்கு விவகாரத்து வேண்டும் என்று கேட்டு மெத்தில் தேவிகா தற்போது குடும்ப நலக் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
முகேஷ் தற்போது கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார். கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது முகேஷுக்காக வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார் தேவிகா. அந்த அளவுக்கு அன்னியோன்யமாக இருந்த இவர்களின் உறவு எப்படி 2 மாதங்களில் முடிவுக்கு வந்தது என்று தெரியவில்லை.
இது குறித்து மெத்தில் தேவிகா கூறும்போது, “நான் விவாகரத்துக்கு விண்ணப்பித்திருப்பது உண்மைதான். இதற்கான காரணம் தனிப்பட்ட முறையிலானது. அதை வெளியில் சொல்ல விரும்பவில்லை. முகேஷ் இந்த விவகாரத்தில் அவருடைய முடிவைச் சொல்லவில்லை.
நான் மிகுந்த கஷ்டத்திற்கிடையில்தான் இந்த முடிவை எடுத்துள்ளேன். இதனை அமைதியான முறையிலேயே எதிர்கொள்ள நினைத்துள்ளேன்.
முகேஷின் அரசியல் வாழ்க்கை காரணமாகத்தான் நான் இதை வெளிப்படையாக சொல்ல வேண்டியிருக்கிறது. நான் இதற்கா முகேஷை குற்றம் சொல்ல விரும்பவில்லை. அவருடைய அரசியல் மற்றும் சினிமா வாழ்க்கையுடனும் தொடர்புபடுத்த விரும்பவில்லை.
அவர் மீதான கோபத்தில் அவரிடமிருந்து நான் விலகிச் செல்லவில்லை. தேர்தல் முடிவுகளுக்காகத்தான் இத்தனை நாட்களாகக் காத்திருந்தேன். முகேஷ் மீது வன்முறை புகார்கள் எதையும் நான் விவகாரத்து மனுவில் சொல்லவில்லை. அப்படியெதுவும் நடக்கவில்லை.
ஆனால், முகேஷ் நல்ல கணவர் இல்லை. 8 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தும் அவரை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இன்னும் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் அவரை புரிந்து கொள்ள முடியாது. எனவேதான் பிரிய முடிவு செய்தேன். எனக்கு முகேஷ் மீது எந்த கோபமும் இல்லை. விவாகரத்து என்பது தனிப்பட்ட முறையில் நான் எடுத்த முடிவு..’’ என்று கூறியுள்ளார்.
The post மலையாள நடிகர் முகேஷிடம் விவாகரத்து கேட்கிறார் அவரது 2-வது மனைவி..! appeared first on Touring Talkies.
]]>