Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
டாப்ஸி – Touring Talkies https://touringtalkies.co Wed, 15 Sep 2021 05:53:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png டாப்ஸி – Touring Talkies https://touringtalkies.co 32 32 “என் மகன் அவனாகவே சினிமாவைக் கற்றுக் கொண்டான்” – சொல்கிறார் இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் https://touringtalkies.co/my-son-learned-cinema-on-his-own-says-director-r-sundarajan/ Tue, 14 Sep 2021 17:35:15 +0000 https://touringtalkies.co/?p=17920 தனது மகனான அறிமுக இயக்குநர் தீபக் சுந்தர்ராஜனுக்கு தான் எதையும் கற்றுக் கொடுக்கவில்லை என்றும், அவனே உதவி இயக்குநராகப் படங்களில் பணியாற்றி சினிமா இயக்கத்தைக் கற்றுக் கொண்டதாகக் கூறியுள்ளார் தமிழ்ச் சினிமாவின் மூத்த இயக்குநரான ஆர்.சுந்தர்ராஜன். ‘பயணங்கள் முடிவதில்லை’, ‘குங்குமச் சிமிழ்’, ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘நான் பாடும் பாடல்’, ‘அம்மன் கோவில் கிழக்காலே’, ‘மெல்லத் திறந்தது கதவு’, ‘தழுவாத கைகள்’, ‘ராஜாதி ராஜா’, ‘திருமதி பழனிச்சாமி’, ‘என் ஆச மச்சான்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் […]

The post “என் மகன் அவனாகவே சினிமாவைக் கற்றுக் கொண்டான்” – சொல்கிறார் இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் appeared first on Touring Talkies.

]]>
தனது மகனான அறிமுக இயக்குநர் தீபக் சுந்தர்ராஜனுக்கு தான் எதையும் கற்றுக் கொடுக்கவில்லை என்றும், அவனே உதவி இயக்குநராகப் படங்களில் பணியாற்றி சினிமா இயக்கத்தைக் கற்றுக் கொண்டதாகக் கூறியுள்ளார் தமிழ்ச் சினிமாவின் மூத்த இயக்குநரான ஆர்.சுந்தர்ராஜன்.

பயணங்கள் முடிவதில்லை’, ‘குங்குமச் சிமிழ்’, ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘நான் பாடும் பாடல்’, ‘அம்மன் கோவில் கிழக்காலே’, ‘மெல்லத் திறந்தது கதவு’, ‘தழுவாத கைகள்’, ‘ராஜாதி ராஜா’, ‘திருமதி பழனிச்சாமி’, ‘என் ஆச மச்சான்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் ஆர்.சுந்தர்ராஜன்.

இவரது மகன் தீபக் சுந்தர்ராஜன். இவர்தான் விஜய் சேதுபதி, டாப்ஸி, ராதிகா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் ‘அனபெல் சேதுபதி’ படத்தின் இயக்குநராவார்.

இந்த ‘அனபெல் சேதுபதி’ படம் உலகமெங்கும் வரும் செப்டம்பர் 17 அன்று டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள இப்படத்தின் முன்னோட்டமாக, இயக்குநர் சுந்தர்ராஜனும், அவரது மகனும் அறிமுக இயக்குநருமாகிய,  தீபக் சுந்தர்ராஜனும் இணைந்து பத்திரிக்கையாளர் இன்று மாலை சந்தித்தனர்.

இந்நிகழ்வில் இயக்குநர் R சுந்தர்ராஜன் பேசும்போது, “நான் சினிமாவுக்கு வந்து 40 வருடங்கள் ஆகிவிட்டது. எனது ஆரம்ப கால படங்களுக்கு விமர்சனம் தந்த பத்திரிக்கையாளர்கள் பலர் இங்கு வந்துள்ளனர். எனது திரைப் பயணத்திற்கு ஆதரவும், பாராட்டும் தந்த பத்திரிக்கையாளர்கள், என் மகனுக்கும் அதே ஆதரவை தந்து வளர்த்து விட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

எனக்கு இந்தப் படத்தின் கதை எதுவும் தெரியாது. இந்தப் படம் பற்றியும் எதுவும் தெரியாது,  அவனே வளர்ந்து வரட்டும் என்று அவன் விசயத்தில் நான் தலையிடவில்லை.

அவன் சினிமாவிற்குள்தான் போக வேண்டும் என்று கேட்டபோது ஏ.எல்.விஜய்யிடம் சேர்த்துவிட்டேன். அவரிடத்தில்தான் இயக்குதலை அவன் கற்றுக் கொண்டான். நான் எதையும் அவனுக்குச் சொல்லித் தரவில்லை.

தயாரிப்பாளர் டபுள் பாஸிட்டிவ் பார்த்து விட்டு நன்றாக வந்திருப்பதாக எனக்கு போன் செய்து சொன்னார். அதைக் கேட்டபோது சந்தோஷமாக இருந்தது.

நான் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றவில்லை. அதனால் எனக்கு கடைசி படம்வரையிலும் ஒவ்வொரு படத்திலும் ஒரு தடுமாற்றம் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் என் மகனிடம் அது இல்லை.

இங்கு வந்து பாடல்கள், டிரெய்லரையெல்லாம் பார்த்தபோது அவனிடம் முதல் படம் என்ற தயக்கம் எதுவும் இல்லாமல், தெளிவாக செய்திருப்பது கண்டு மகிழ்ச்சியடைந்தேன். என் மகனுக்கு உங்கள் ஆதரவை தாருங்கள்…” என்று கேட்டுக் கொண்டார். 

The post “என் மகன் அவனாகவே சினிமாவைக் கற்றுக் கொண்டான்” – சொல்கிறார் இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் appeared first on Touring Talkies.

]]>
கங்கனாவைத் தொடர்ந்து டாப்ஸியும் தயாரிப்பாளராகிறார் https://touringtalkies.co/following-kangana-actress-taapsee-is-also-a-producer/ Thu, 15 Jul 2021 06:40:28 +0000 https://touringtalkies.co/?p=16182 தற்போது முன்னணி நடிகைகளே சொந்தப் படம் எடுக்கவும் தயங்குவதில்லை. திருமணமான பின்பு கணவருடன் இணைந்து படம் தயாரிப்பவர்களைவிடவும் நடித்துக் கொண்டிருக்கும்போதே தயாரிப்பாளராகும் பாணி அதிகமாகிக் கொண்டிருக்கிறது. பாலிவுட்டில் ஏற்கெனவே நடிகை கங்கனா ரனாவத்தும் தயாரிப்பாளராகிவிட்டார். இப்போது அவருடைய வரிசையில் அவருடைய நேரடி எதிரியான டாப்ஸியும் தயாரிப்பாளராகிறாராம். தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு ‘அவுட்சைடர்ஸ் பிலிம்ஸ்’ எனப் பெயரிட்டுள்ளார். தான் நடிக்கும் த்ரில்லர் படமொன்றை முதல் தயாரிப்பாக அறிவிக்கத் திட்டமிட்டுள்ளார் டாப்ஸி. இது குறித்து டாப்ஸி சொல்லும்போது, “கடந்த ஆண்டோடு […]

The post கங்கனாவைத் தொடர்ந்து டாப்ஸியும் தயாரிப்பாளராகிறார் appeared first on Touring Talkies.

]]>
தற்போது முன்னணி நடிகைகளே சொந்தப் படம் எடுக்கவும் தயங்குவதில்லை. திருமணமான பின்பு கணவருடன் இணைந்து படம் தயாரிப்பவர்களைவிடவும் நடித்துக் கொண்டிருக்கும்போதே தயாரிப்பாளராகும் பாணி அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

பாலிவுட்டில் ஏற்கெனவே நடிகை கங்கனா ரனாவத்தும் தயாரிப்பாளராகிவிட்டார். இப்போது அவருடைய வரிசையில் அவருடைய நேரடி எதிரியான டாப்ஸியும் தயாரிப்பாளராகிறாராம்.

தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு ‘அவுட்சைடர்ஸ் பிலிம்ஸ்’ எனப் பெயரிட்டுள்ளார். தான் நடிக்கும் த்ரில்லர் படமொன்றை முதல் தயாரிப்பாக அறிவிக்கத் திட்டமிட்டுள்ளார் டாப்ஸி.

இது குறித்து டாப்ஸி சொல்லும்போது, “கடந்த ஆண்டோடு இந்தியத் திரைத்துறையில் நான் குதித்து கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இதில் நான் மிதப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் இதில் நீந்தவும் கற்றுக் கொள்வேன் என்று எனக்குத் தெரியாது.

ஒரு பிரபலமான நபராக வேண்டும் என்ற கனவு இல்லாமல் இருந்த என்னைப் போன்ற ஒருவர் மீது அதீத அன்பையும், நம்பிக்கையையும் வைத்த அனைவருக்கும் நான் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்.

இது அவர்களுக்குத் திருப்பிச் செலுத்த வேண்டிய நேரம். ஏனெனில் மிகப் பெரிய சக்தி கிடைக்கும். கூடவே மிகப் பெரிய பொறுப்பும் சேர்ந்து கொள்கிறது. எனவே, என்னை வாழ்த்துங்கள். காரணம் வெளியிலிருந்து பார்ப்பதற்குத் தோற்றம்தான் முக்கியம். தற்போது ‘அவுட்சைடர் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் மூலமாக ஒரு தயாரிப்பாளராக என் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருக்கிறேன்,…” என்று குறிப்பிட்டுள்ளார்.

தெலுங்கில் நாயகியாக அறிமுகமாகி பிரபலமானவர் டாப்ஸி. தற்போது பாலிவுட்டில் முன்னணி நாயகியாக வலம் வரும் டாப்ஸி ‘ராஷ்மி ராக்கெட்’, ‘லூப் லபேடா’, ‘டூபாரா’, ‘சபாஷ் மிது’ உள்ளிட்ட சில இந்திப் படங்களில் நடித்து வருகிறார்.

The post கங்கனாவைத் தொடர்ந்து டாப்ஸியும் தயாரிப்பாளராகிறார் appeared first on Touring Talkies.

]]>