The post ஜோதிகாவுக்கு கதை சொன்ன மம்முட்டி! appeared first on Touring Talkies.
]]>தற்போது ஜோ பேபி இயக்கத்தில மம்முட்டியுடன் ‘காதல்- தி கோர்’ படத்தில் இணைந்து நடிக்கிறார்.
12 ஆண்டுக்குப் பிறகு ஜோதிகா நடிக்கும் மலையாள படம் இது.
படத்தின் கதையை, இயக்குநர் ஜோ பேபி சொன்னவுடன், “படத்தில் ஜோதிகா நடித்தால் நன்றாக இருக்கும்” என்று சொல்லி இருக்கிறார். இயக்குநர் ஜோ பேபியோ, “அவர் ஒப்புக்கொள்வாரா” என தயக்கத்துடன் கேட்டு இருக்கிறார்.
உடனே ஜோதிகாவுக்கு அலைபேசிய மம்முட்டி, கதையின் அவுட் லைனை சொல்லி இருக்கிறார். அதோடு, “இதில் நீங்கள் சிறப்பாக நடிக்க நிறைய வாப்புகள் இருக்கின்றன. இயக்குநரிடம் முழு கதையையும் கேளுங்கள்” என்றும் கூறியிருக்கிறார்.
பிறகு இயக்குநர் வந்து கதையைக் கூறவே ஜோகிதாக மகிழ்ச்சியுடன் நடிக்க ஒப்புக்கொண்டார்.
The post ஜோதிகாவுக்கு கதை சொன்ன மம்முட்டி! appeared first on Touring Talkies.
]]>The post மம்மூட்டிக்கு ஜோடியாக நடிக்கும் ஜோதிகா..! appeared first on Touring Talkies.
]]>இந்தப் புதிய படத்தை Mammootty Kampany மற்றும் Wayfarer Films ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படத்திற்கு காதல் – தி கோர் என பெயரிட்டுள்ளனர்.
இந்தப் படத்தினை மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன ‘The Great Indian Kitchen’ படத்தினை இயக்கிய இயக்குநரான Jeo Baby இயக்கவுள்ளார்.
இந்தப் படத்தில் நடிகை ஜோதிகா ஹீரோயினாக நடிக்கவுள்ளார். இவர் முதல் முறையாக மம்மூட்டியுடன் ஜோடி சேருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் அறிவிப்பு போஸ்டரை ஜோதிகாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று வெளியிட்டுள்ளனர்.
நடிகர் மம்மூட்டியும் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்தச் செய்தியை வெளியிட்ட கையோடு ஜோதிகாவுக்கு பிறந்த நாள் வாழ்த்தையும் சொல்லியிருக்கிறார்.
The post மம்மூட்டிக்கு ஜோடியாக நடிக்கும் ஜோதிகா..! appeared first on Touring Talkies.
]]>The post சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது..! appeared first on Touring Talkies.
]]>பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளம் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஷான் ரால்டன் இசையமைத்திருக்கிறார். ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் இணை தயாரிப்பு செய்திருக்கிறார். இயக்குநர் டி.ஜே.ஞானவேல் எழுதி இயக்கியுள்ளார்.
அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கும் இந்தத் திரைப்படத்தை இன்னும் அதிகம் எதிர்பார்க்க வைக்கும் ஒரு விஷயம், இந்தப் படத்தின் நாயகனாக, வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருப்பதுதான்.
இந்த மோஷன் போஸ்டர், படத்தின் களம் எதைப் பற்றியது என்பதற்கான ஆழமான ஒரு முன்னோட்டத்தைத் தருகிறது. உயர்ந்த ஆளுமைகளின் உருவப் படங்கள் நிறைந்திருக்கும் நீதிமன்றத்தைச் சுற்றிய ஒரு மெய்நிகர் பயணத்தை இது காட்டுகிறது. மேலும் இந்தப் படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் பற்றிய ஒரு பார்வையையும் இந்த போஸ்டர் காட்டுகிறது.
இந்தப் படத்தைக் காணக் காத்திருக்கும் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகம் தூண்டும்விதமாக இந்த போஸ்டர் அமைந்துள்ளது.
வரும் தீபாவளி தினமான நவம்பர் 2-ம் தேதி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ‘ஜெய் பீம்’ திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது.
The post சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது..! appeared first on Touring Talkies.
]]>The post சூர்யா, ஜோதிகா நடிப்பில் சத்தமேயில்லாமல் உருவாகி வரும் புதிய திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில் சூர்யா ஒரு திரைப்படத்தை சத்தம் இல்லாமல் துவக்கி, அதில் நடித்துக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் படத்தில் ஜோதிகாதான் கதையின் நாயகியாக நடிக்கிறாராம். ஆனாலும், இந்தப் படத்தில் இருக்கும் ஒரு முக்கியமான வக்கீல் கதாபாத்திரத்தில்தான் சூர்யா நடிக்கிறாராம். இந்தப் படத்திற்காக இதுவரையிலும் 20 நாட்கள் தொடர்ச்சியாக கால்ஷீட் கொடுத்து நடித்திருக்கிறார் சூர்யா. சரவணன் என்ற புதுமுக இயக்குநர் இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.
சைலன்ட்டாக படத்தைத் தயாரித்து வெளியிடுவது சூர்யாவின் வழக்கம் இல்லையே என்றாலும், இந்தப் படம் பற்றிய முழு விவரங்கள் தெரிய வரும்போது அமைதிக்கான காரணமும் தெரியும் என்கிறார்கள் படவுலகினர்.
இந்தப் படத்தில் சூர்யா நடிப்பதினால் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் ஷூட்டிங்கும் தள்ளிப் போயிருக்கிறது. அதேசமயம் இந்தப் பாண்டிராஜ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ஹீரோயின் வேட்டை தொடர்ந்து கொண்டிருக்கிறதாம். அது முடிந்தால்தான் ஷூட்டிங் துவங்கும் என்கிறது சன் பிக்சர்ஸ் வட்டாரம்.
The post சூர்யா, ஜோதிகா நடிப்பில் சத்தமேயில்லாமல் உருவாகி வரும் புதிய திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>