The post “அமீர்-இமான் அண்ணாச்சி கூட்டணி இனிமேல் பேசப்படும்” – சுரேஷ் காமாட்சியின் கணிப்பு appeared first on Touring Talkies.
]]>‘மாநாடு’ என்கிற மிகப் பெரிய வெற்றிப் படத்தை கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் நிறுவனம் மூலம் இந்தப் படத்தை வெளியிடுகிறார்.
படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.
இந்த விழாவில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, “இந்தப் படத்தின் டைட்டில் எனது மனதுக்கு நெருக்கமான, அதேசமயம் இப்போது இருக்கும் சூழலில் தேவையான ஒரு தலைப்பும்கூட. என் படங்களைகூட நான் வெளி நிறுவனங்களிடம் கொடுத்துதான் வெளியிட்டு வருகிறேன். ஆனால் அமீர் மீது கொண்ட மதிப்பால் இந்தப் படத்தை நான் வெளியிடுவது என முடிவு செய்தேன். அவருடன் தொடர்ந்து பயணிக்க விரும்புகிறேன். இது ஒரு தொடக்கம்தான். அரசியலையும், அமீரையும் தவிர்க்கவே முடியாது. சத்யராஜ், கவுண்டமணி போல இந்த படத்திற்கு பிறகு அமீர், இமான் அண்ணாச்சி என ஒரு காமெடி கூட்டணி உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை..” என்று கூறினார்.
The post “அமீர்-இமான் அண்ணாச்சி கூட்டணி இனிமேல் பேசப்படும்” – சுரேஷ் காமாட்சியின் கணிப்பு appeared first on Touring Talkies.
]]>The post “அமீருக்கு செட் பிராப்பர்ட்டி நான்தான்” – நடிகர் இமான் அண்ணாச்சியின் கிண்டல் பேச்சு appeared first on Touring Talkies.
]]>மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’.
‘மாநாடு’ என்கிற மிகப் பெரிய வெற்றிப் படத்தை கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் நிறுவனம் மூலம் இந்தப் படத்தை வெளியிடுகிறார்.
படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகர் இமான் அண்ணாச்சி பேசும்போது, “ஒரு செட் பிராப்பர்ட்டி மாதிரி படப்பிடிப்பின்போது இயக்குநர் அமீருடன் கூடவே பயணிக்கும்விதமாக எனது கதாபாத்திரம் அமைந்துள்ளது. குறிப்பாக இந்த படத்தில் ஒரு சண்டைக் காட்சியை மூன்று நாட்கள் படமாக்கியபோது அமீர் ஒரு பேருந்துக்குள் வசமாக சிக்கிக் கொண்டுபட்ட அவஸ்தைகள், அந்த சமயத்தில் அவருடன் நடைபெற்ற நகைச்சுவை நிகழ்வுகள் எல்லாமே இனிமையானவை. ‘யோகி’ படத்திற்கு பிறகு இந்த ‘உயிர் தமிழுக்கு’ திரைப்படம் அமீருக்கு உலக அளவில் மிகப் பெரிய இடத்தை பெற்றுத் தரும்” என்று கூறினார்.
The post “அமீருக்கு செட் பிராப்பர்ட்டி நான்தான்” – நடிகர் இமான் அண்ணாச்சியின் கிண்டல் பேச்சு appeared first on Touring Talkies.
]]>The post அமீர் நாயகனாக நடிக்கும் ‘உயிர் தமிழுக்கு’ படத்தை சுரேஷ் காமாட்சி வெளியிடுகிறார் appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில் தற்போது இயக்குநர் அமீர் கதாநாயகனாக நடித்துள்ள ‘உயிர் தமிழுக்கு’ என்கிற படத்தை வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா இந்த படத்தை தயாரித்துள்ளதுடன், அவரே இந்த படத்தை இயக்கியும் உள்ளார்.
இந்தப் படத்தில் அமீர், சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணிய சிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
தயாரிப்பு – மூன் பிக்சர்ஸ், வெளியீடு – வி ஹவுஸ் புரொடக்சன், இயக்கம் – ஆதம்பாவா, இசை – வித்யாசாகர், ஒளிப்பதிவு – தேவராஜ், படத் தொகுப்பு ; சார்லஸ், பாடல்கள் – பா.விஜய், வசனம் – பாலமுரளி வர்மன் மற்றும் அஜயன்பாலா, தயாரிப்பு மேற்பார்வை – R.S.வெங்கட், நிர்வாக தயாரிப்பு – B.மகேஷ், பத்திரிகை தொடர்பு – A.ஜான்.
இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
The post அமீர் நாயகனாக நடிக்கும் ‘உயிர் தமிழுக்கு’ படத்தை சுரேஷ் காமாட்சி வெளியிடுகிறார் appeared first on Touring Talkies.
]]>The post “தம்பி ராமையா வீட்டை முற்றுகையிடுவோம்” – சீமான் எச்சரிக்கை..! appeared first on Touring Talkies.
]]>நாயகன் வெற்றி, நாயகி அஸ்வினி சந்திரசேகர், ரோகிணி, மைம் கோபி, கருணாகரன் மற்றும் ரமா என முதல் பாகத்தில் இடம்பெற்ற அனைத்து முக்கிய நட்சத்திரங்களும் இந்த இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளனர். ஒய்.ஜி.மகேந்திரன், நடிகர் நாசரின் சகோதரர் அஹமத், விஜே முபாசிர் உள்ளிட்ட ஒரு சில நடிகர்கள் மட்டும் இந்த இரண்டாம் பாகத்தில் இணைந்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைக்க, பிரவீண் குமார் ஒளிப்பதிவு செய்ய, படத் தொகுப்பை கே.எல்.பிரவீன் கவனித்துள்ளார். வரும்
ஆகஸ்ட் 19-ஆம் தேதி ‘ஆஹா’ தமிழ் ஓடிடி தளத்தில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் படக் குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் கே.பாக்யராஜ், தம்பி ராமையா, சீனு ராமசாமி ஆகியோருடன் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கலந்து கொண்டார். ‘ஜீவி-2’ படத்தின் இசைத் தட்டை சீமான் வெளியிட இயக்குநர் கே.பாக்யராஜ் பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் ‘நாம் தமிழர்’ கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் பேசும்போது, ‘தம்பி ராமையா இங்கு பேசியதுபோல அவர் படங்களில் நடிப்பதை குறைக்கக் கூடாது. அப்படி செய்தால் அவர் வீட்டு வாசலில் முற்றுகையிடுவோம்” என்று அன்புடன் எச்சரிக்கை விடுத்தார். மேலும் அவர் பேசும்போது, “ஆஹா ஓடிடி தளத்தை தமிழிலும் கொண்டுவர வேண்டுமென அவர்கள் நினைத்ததற்காகவே அவர்களை பாராட்டலாம். எல்லோருக்கும் பிரியாணி சாப்பிடத்தான் ஆசை. ஆனால் கூழ்தானே கிடைக்கிறது.
தம்பி சூர்யாவின் ‘ஜெய் பீம்’ திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகவிட்டாலும்கூட ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. தெலுங்கில் வெளியான ‘கொண்டபெல்லம்’ என்கிற படத்தை ஓடிடி தளத்தில்தான் பார்த்தேன்.. அவ்வளவு நேர்த்தியான படம் தியேட்டர்களில் வெளியானதா என்றுகூட தெரியாது. ஆனால் ஓடிடி தளத்தில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதனால் இருக்கும் வாய்ப்பை தயாரிப்பாளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
தம்பி சுரேஷ் காமாட்சி சினிமா மீது தீராத பற்று கொண்டவன். பணத்தை சம்பாதித்து வைத்திருக்கிறானோ இல்லையோ நல்ல நண்பர்களை சேர்த்து வைத்திருக்கிறான். அதில்தான் அவனது வண்டி ஓடுகிறது என்று நினைக்கிறேன்.
சிறிய முதலீட்டு படங்களுக்கு தியேட்டர்களில் இடம் கொடுக்க வேண்டும். தயாரிப்பாளர் வெள்ளப்பாண்டி, தன் மகன் என அறிமுகப்படுத்தாமல் ஒரு தகுதியான கலைஞனைத்தான் அறிமுகம் செய்திருக்கிறார்.
விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு கூட 10 கோடி, 20 கோடி என அரசுகள் போட்டி போட்டு பரிசு வழங்குகின்றனர். ஆனால் விருது வென்று வரும் படைப்பாளிகளுக்கு பாராமுகம் காட்டுகின்றன. சாராயக் கடைகளை அரசாங்கம் நடத்தும்போது ஏன் திரைப்படத்தையும் தயாரிக்கக் கூடாது. நிச்சயமாக ஒரு நாள் தமிழ்த் திரையுலகில் மறுமலர்ச்சி ஏற்படும். அந்த நாளும் வரத்தான் போகிறது..” என்று கூறினார்.
The post “தம்பி ராமையா வீட்டை முற்றுகையிடுவோம்” – சீமான் எச்சரிக்கை..! appeared first on Touring Talkies.
]]>The post சமுத்திரக்கனி – தம்பி ராமையா கூட்டணியில் உருவாகும் ‘ராஜா கிளி’ படம்..! appeared first on Touring Talkies.
]]>‘சாட்டை’, ‘அப்பா’, சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய ‘வினோதய சித்தம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் சமுத்திரக்கனி – தம்பி ராமையா கூட்டணியில் இந்தப் படம் உருவாகிறது. ஒரே ஒரு சிறிய மாற்றமாக இந்தப் படத்தை தம்பி ராமையா இயக்குகிறார்.
சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக சுவேடா ஷ்ரிம்ப்டன், மியாஸ்ரீ சவுமியா ஆகியோர் நடிக்கின்றனர். நடிப்பும் அதேசமயம் தமிழ் வசனங்களை அழகாக உச்சரிக்க தெரிந்த நடிகையும் இந்தப் படத்திற்கு தேவை என்பதால் ஆடிஷனில் கலந்துகொண்ட பல பெண்களில் இருந்து மிகப் பொருத்தமான தேர்வாக இந்தப் படத்திற்குள் சுவேடா ஷ்ரிம்ப்டன் நுழைந்துள்ளார்.
மேலும் முக்கிய வேடங்களில் பி எம்.எஸ்.பாஸ்கர், பழ.கருப்பையா, இளவரசு, ஆடுகளம் நரேன், பிரவின்.G, இயக்குநர் மூர்த்தி, ‘கும்கி’ அஸ்வின், ரேஷ்மா, வெற்றிக்குமரன், ‘கும்கி’ தரணி, தீபா, பாடகர் கிரிஷ், ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
தயாரிப்பு – சுரேஷ் காமாட்சி, இயக்கம் – தம்பி ராமையா, இசை – தினேஷ், ஒளிப்பதிவு – கோபிநாத், படத் தொகுப்பு – R.சுதர்ஷன், கலை இயக்கம் – உமேஷ் ஜே.குமார், சண்டை பயிற்சி இயக்கம் – ஸ்டண்ட் சில்வா, நடன இயக்கம் – சாண்டி, ஆடை வடிவமைப்பு – நவதேவி, தயாரிப்பு மேற்பார்வை – ஜெகதீஷ் ஜெகன், பிரவின்.G, Ksk செல்வா மற்றும் மாலிக், பத்திரிகை தொடர்பு – A.ஜான்.
‘தில்’, ‘தூள்’, ‘கில்லி’ முதல், சமீபத்தில் வெளியான ‘யானை’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் பணியாற்றிய கோபிநாத் இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார்..
‘மாநாடு’ என்கிற வெற்றி படத்தை தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற 44-வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியின் கலை இயக்குநராக பணியாற்றியுள்ள உமேஷ் ஜே. குமார் கலை வடிவமைப்பு செய்கிறார்.
இசையமைப்பாளர் தமனிடம் சீடராக பணியாற்றிய தினேஷ் இசையமைக்கிறார்.
‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’, ‘ஒத்த செருப்பு’ ‘மிக மிக அவசரம்’ ஆகிய படங்களுக்கு படத் தொகுப்பாளராக பணியாற்றிய ஆர்.சுதர்சன் படத் தொகுப்பை மேற்கொள்கிறார்.
தம்பி ராமையாவின் மகன் உமாபதி இந்த படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றுகிறார்.
இந்தப் படம் குறித்து இயக்குநர் தம்பி ராமையா கூறும்போது, “இந்தப் படத்தை வி ஹவுஸ் நிறுவனத்தில் நான் இயக்குவதற்கு காரணமே, சுரேஷ் காமட்சி வெறும் தயாரிப்பாளர் மட்டுமல்ல ஒரு மிகச் சிறந்த இயக்குநரும்கூட.
சமீப காலத்தில் தமிழ் சினிமாவில் கதை அறிவு கொண்ட தயாரிப்பாளர்களாக இருக்கும் வெகு சிலரில் சுரேஷ் காமாட்சியும் ஒருவர். கிட்டத்தட்ட 12 இயக்குநர்களிடம் இந்தக் கதையை கூறிவிட்டு, அதன் பின்னர் இந்த படத்தை தயாரிக்கிறார் சுரேஷ் காமாட்சி.
பெருந்திணைக் காதலை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படம் ஒரு வாழ்வியல் கதை என்பதால், ஒரு மனிதனின் சுயசரிதை என்பதால் இதை நானே இயக்குவதுதான் சரியாக இருக்கும் என மீண்டும் டைரக்சனில் இறங்கியுள்ளேன்.
இந்த கதையில் நிகழ்வதெல்லாம் சாத்தியமா என்றால், இது நிஜத்தில் நடைபெற்ற சம்பவங்களை மையப்படுத்திதான் உருவாகிறது. படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது ஒரு மனிதனின் வாழ்க்கையை பார்த்துவிட்டு வெளியே வந்த உணர்வு ஏற்படும்.
எல்லா தரப்பு வயதினருக்குமான கதாபாத்திரங்கள் இந்த படத்தில் சுழன்று கொண்டே இருக்கும். படம் பார்ப்பவர்கள் இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்துடனும் தங்களை தொடர்புபடுத்தி பார்த்துக் கொள்ள முடியும்.
இந்தப் படம் 50 சதவீதம் கதை, 50 சதவீதம் நடிப்பு என சரிவிகித கலவையாக உருவாகியுள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் அப்படியே பவுண்டட் ஸ்கிரிப்ட் ஆக உருவாகியுள்ள இந்தக் கதையை யாராவது படமாக்கத் தூக்கிக் கொண்டு ஓடினால், இதைப் படித்தவுடன் அதைவிட அதிகமான வேகத்தில் கொண்டு வந்து எடுத்து இடத்திலேயே வைத்து விடுவார்கள்.. அந்த அளவுக்கு கதையையும், நடிப்பையும் மட்டுமே பிரதானமாகக் கொண்டு இந்தக் கதை உருவாகியுள்ளது…” என்றார்.
The post சமுத்திரக்கனி – தம்பி ராமையா கூட்டணியில் உருவாகும் ‘ராஜா கிளி’ படம்..! appeared first on Touring Talkies.
]]>The post “மாநாடு’ படத்தின் வசூல் கணக்கு எங்கே?” கேள்வியெழுப்பும் தயாரிப்பாளர்..! appeared first on Touring Talkies.
]]>தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிகர் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்ற படம் ‘மாநாடு’.
‘மாநாடு’ படம் தியேட்டரில் ரிலீசான முதல் நாளே ரூ.10 கோடி வசூலை பெற்றதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தொடர்ந்து சில நாட்கள் தொடர்ந்து ‘மாநாடு’ படத்தின் தினசரி வசூலை ட்விட்டரில் பகிர்ந்து வந்தார் சுரேஷ் காமாட்சி.
இதே மாநாடு படத்தின் 25-வது நாளில் இந்த படம் 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்ததாகவும் தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டது. அதற்கு பிறகு ‘மாநாடு’ படம் பற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இருந்தாலும் தியேட்டர்களில் மாநாடு படம் இன்னமும் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த ‘மாநாடு’ படம் வெளியாகி இன்றுடன் 75 நாட்கள் ஆகிறது. இப்போதுகூட இந்தப் படத்தின் வசூல் கணக்கு தயாரிப்பாளரான தன்னிடம் தரப்படவில்லையென்று இந்தப் படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி வேதனையுடன் தனது டிவீட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், “நாளை 75-வது நாள் ‘மாநாடு’. ‘ரோகிணி’யில் கோலாகலம் காண்கிறது. 75 நாட்கள் ஆகியும் இன்னமும் விநியோகஸ்தர்கள் கணக்கு ஒப்படைக்கவில்லை. ஒரு வெற்றிப் படத்திற்கே இந்த நிலைன்னா… மற்ற படங்களின் நிலையை என்ன சொல்ல..? இப்படி இருந்தால் எப்படி தொழில் செய்ய…?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
தோல்வியடைந்தாலும் பிரச்சினை.. வெற்றியடைந்தாலும் பிரச்சினை.. சினிமாவுலகத்தில் நிஜத்தில் நடப்பதுதான் என்ன..? யாருக்கும் தெரியவில்லை..!
The post “மாநாடு’ படத்தின் வசூல் கணக்கு எங்கே?” கேள்வியெழுப்பும் தயாரிப்பாளர்..! appeared first on Touring Talkies.
]]>The post ராம் இயக்கும் படத்தில் நிவின் பாலியுடன் நடிக்கிறார் சூரி..! appeared first on Touring Talkies.
]]>‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள்’, ‘பேரன்பு’ உள்ளிட்ட பல உணர்வுப்பூர்வமான படங்களைக் கொடுத்த இயக்குநர் ராம் இயக்கி வரும் இந்தப் படத்தில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நிவின்பாலி கதாநாயகனாக நடித்து வருகிறார். ‘ரிச்சி’ படத்தைத் தொடர்ந்து அவர் தமிழில் நேரடியாக நடிக்கும் இரண்டாவது படம் இது.
இந்தப் படத்தில் கதாநாயகியாக அஞ்சலி நடிக்கிறார். தற்போது இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகர் சூரியும் இணைந்துள்ளார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்து வருகிறார். கலை இயக்கத்தை உமேஷ் ஜே.குமார் கவனிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே தனுஷ்கோடியில் துவங்கி அதன் பிறகு கேரளாவில் வண்டிப் பெரியார், வாகமன் ஆகிய இடங்களிலும் நடைபெற்றது.
தற்போது சென்னையில் கும்மிடிப்பூண்டியில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் ஃபிலிம் சிட்டியில் மிகப் பெரிய ரயில் செட் ஒன்று வடிவமைக்கப்பட்டு, அதில் நிவின்பாலி, சூரி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
‘மாநாடு’ படத்தில் பிரமிப்பை ஏற்படுத்திய கலை இயக்குநர் உமேஷ், இந்த படத்திற்காக அழகிய ரயில் செட்டை தத்ரூபமாக வடிவமைத்துள்ளார்.
இன்று இந்தப் படப்பிடிப்புத் தளத்திற்கு இயக்குநர் மிஷ்கின் திடீரென்று வருகை தந்து படக் குழுவினரை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.
மேலும் இயக்குநர் ராம், நிவின் பாலி மற்றும் சூரி உள்ளிட்ட படக் குழுவினருடன் உரையாடி படப்பிடிப்புத் தளத்தை தனது வருகையால் கலகலப்பாக்கினார் இயக்குநர் மிஷ்கின்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடர்ந்து நடைபெற உள்ளது.
The post ராம் இயக்கும் படத்தில் நிவின் பாலியுடன் நடிக்கிறார் சூரி..! appeared first on Touring Talkies.
]]>The post “ஜாமீன்தாரர் சொத்துக்கு சொந்தம் கொண்டாட முடியுமா?”-டி.ராஜேந்தருக்கு பாரதிராஜா கேள்வி appeared first on Touring Talkies.
]]>‘மாநாடு’ படத்தின் சேட்டிலைட் உரிமை, ஓடிடி உரிமை விற்பனையாவதில் ஏற்பட்ட சிக்கல்களால் படத்தின் வெளியீடு கடைசி நிமிடத்தில் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் அந்தச் சிக்கல்கள் சரி செய்யப்பட்டன.
படத்தின் சேட்டிலைட் உரிமை விற்காமல் இருந்ததால் டி.ராஜேந்தர் ரூ.5 கோடி பொறுப்பேற்க வேண்டும். அல்லது ரூ.5 கோடிக்குக் குறைவாக விற்றால் அதற்கான மீதித் தொகைக்கும் தொகையையும் டி.ராஜேந்தரே ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்ற நிபந்தனையுடன் பைனான்சியர் உத்தம் சந்த் படத்தை வெளியிட சம்மதம் தெரிவித்தார். இதற்கு உடன்பட்டு டி.ராஜேந்தரும் கையெழுத்திட்டார். இதன் பிறகுதான் ‘மாநாடு’ படம் வெளியானது.
இந்நிலையில், தன்னிடம் தெரிவிக்காமலேயே பைனான்சியர் உத்தம் சந்த் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இருவரும் படத்தின் சேட்டிலைட் உரிமையைத் தனியார் தொலைக்காட்சிக்கு விற்க முற்படுவதாகக் கூறி டி.ராஜேந்தர் அவர்கள் இருவர் மீதும் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான பாரதிராஜா, தற்போது டி.ராஜேந்தருக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் அவர் எழுதியிருப்பது இதுதான் :
”தங்கள் மகன் சிலம்பரசன் நடித்து எங்கள் உறுப்பினர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெளியான ‘மாநாடு’ திரைப்படம் சம்பந்தமாகத் தயாரிப்பு நிலையிலும், வெளியீட்டு நிலையிலும் தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் பல முறை தலையிட்டுப் படம் சுமுகமாக வெளியாக உதவியது தாங்கள் அறிந்ததே.
படம் நன்முறையில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்று இன்று சிலம்பரசனின் வியாபாரமும், அவர் மீதான நம்பகத்தன்மையும் வெகுவாக உயர்ந்துள்ளது மகிழ்ச்சி. வாழ்த்துகள்.
இந்த வெற்றிக்குப் பின்னால் இதன் தயாரிப்பாளரும், நிதியாளரும் எவ்வளவு இடர்களைத் தாங்கி நின்றார்கள் என்பதை நீங்கள் உட்பட மொத்தத் திரையுலகமும் அறியும். அப்படிப்பட்ட தயாரிப்பாளர், நிதியாளர் இருவர் மீதும் தாங்கள் வழக்குத் தொடுத்துள்ள செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம்.
‘மாநாடு’ வெளியீட்டுக்கு முந்தைய நாள் மொத்தத் திரையுலகமும் படம் வெளியாக பிரதிபலன் பாராமல் உதவ முன் வந்தது இன்றும் நாம் ஒரு குடும்பமாக இருப்பதற்குச் சான்று.
படத்தின் தொலைக்காட்சி உரிமம் விற்கப்படாததால் அதன் மீதான கடன் தொகைக்கு யாராவது உத்தரவாதம் கொடுத்தால் பணம் தனது கைக்கு வரத் தாமதமானாலும் பரவாயில்லை, படத்தை வெளியாக அனுமதிப்பதாக நிதியாளர் பெரிய மனதுடன் ஒப்புக் கொண்டதால்… தாங்கள் தங்களது மகனின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு உத்தரவாதம் தர முன் வந்தீர்கள். படம் நன்முறையில் வெளியாகி பெரும் வெற்றியடைந்து, தொலைக்காட்சி உரிமமும் நல்ல விலைக்கு விற்று, இன்று தயாரிப்பாளரே கடனைத் திருப்பித் தருகிறார்.
ஆனால் திடீரென்று தொலைக்காட்சி உரிமம் எனக்கு சொந்தம் என நீங்கள் கூறியிருப்பது மிகத் தவறான முன் உதாரணம் ஆகும். ஜாமீன்தாரர் சொத்துகளுக்கு உரிமம் கோர முடியுமா..? திரைத் துறையில் மதிப்புமிக்க கலைஞர், ஒரு பாரம்பரியமான வியாபார அமைப்பின் பொறுப்பில் இருப்பவர் இவ்வாறு செய்வது நியாயமா..?
ஒரு அமைப்பில் மிக முக்கியப் பொறுப்பு வகிக்கும் தாங்கள் தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் தெரியாமலே தெலுங்கில் பிரஸ் மீட் வைத்து கீதா ஆர்ட்ஸ் மூலமாக படத்தை வெளியிட முயன்றது எந்தவிதத்தில் நியாயம்..? நீங்கள் அதன் சாதக பாதகங்களை அறியாதவரா..?
இதையெல்லாம் சகித்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் நஷ்ட ஈடு கேட்டு உங்கள் மீது வழக்குத் தொடுத்தால் உங்கள் நிலை என்னவாகும்..?
வியாபாரக் குளறுபடிகளை ஏற்படுத்தியதோடு மட்டுமில்லாமல், வழக்குப் போட்டும் ஒரு தயாரிப்பாளரை மன உளைச்சலுக்குள்ளாக்கி இருப்பதை தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது…”
இவ்வாறு அந்தக் கடிதத்தில் இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
The post “ஜாமீன்தாரர் சொத்துக்கு சொந்தம் கொண்டாட முடியுமா?”-டி.ராஜேந்தருக்கு பாரதிராஜா கேள்வி appeared first on Touring Talkies.
]]>The post ‘மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர், பைனான்ஸியர் மீது டி.ராஜேந்தர் வழக்கு தொடர்ந்தார் appeared first on Touring Talkies.
]]>தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பில் நடிகர் சிம்புவின் நடிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி இப்போதுவரையிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘மாநாடு’.
இந்தப் படத்தின் கடைசி நேர வெளியீட்டின்போது பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன. அப்போது சிம்புவின் அப்பாவான நடிகர், இயக்குநர் டி.ராஜேந்தர் தானே முன் வந்து சில கோடிகளுக்குத்தான் பொறுப்பேற்றுக் கொள்வதாகக் கூறியதையடுத்து விடியற்காலை காட்சி மட்டும் ரத்தான நிலையில் அன்றைக்கு ‘மாநாடு’ படம் உலகம் முழுவதும் வெளியானது.
தற்போது ‘மாநாடு’ படத்திற்கு பைனான்ஸ் உதவி செய்த உத்தம்சந்த் மற்றும் ‘மாநாடு’ படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி இருவருக்கும் எதிராக சிம்புவின் தந்தையான டி.ராஜேந்தர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
அவர் தாக்கல் செய்திருக்கும் மனுவில், “சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி அவர்கள் தயாரிப்பில் உருவான “மாநாடு” திரைப்படம் கடந்த நவம்பர் மாதம் 25-ம் தேதி வெளியாகி உலகமெங்கும், மற்றும் தமிழகமெங்கும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பது யாவரும் அறிந்ததே.
ஆனால், அந்தத் திரைப்படம் வெளியாவதற்கு முந்தைய தினம் நவம்பர் 24-ம் தேதி படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி அவர்கள், ‘மாநாடு’ படத்திற்கு ஏகப்பட்ட பைனான்ஸ் பிரச்சனை, பணச் சிக்கல் இருப்பதாகவும்… வேறு வழியில்லாததால் பெருத்த மன வலியோடு ‘படம் நாளைய தினம் வெளியாகாது. படத்தின் வெளியீட்டை தள்ளி வைக்கிறேன்’ என்று அதிரடியாக டிவிட்டரில் டிவிட்செய்தார்.
இந்த நிலையில் ‘மாநாடு’ படத்தை வெளியிட காத்திருந்த உலகெங்கிலும் மற்றும் தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய திரையரங்க உரிமையாளர்களும் படத்தை வாங்கியிருந்த பட விநியோகதர்கள் பலரும் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பின் பொது செயலாளராகவும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட விநியோகஸ்தர் சங்கத் தலைவராகவும் இருக்கக் கூடிய டி.ராஜேந்தர் அவர்களை தொடர்பு கொண்டு எப்படியாவது தலையிட்டு இந்த இக்கட்டான சூழ்நிலையில் விநியோகஸ்தர்களுக்கும் ‘மாநாடு’ வெளியிட உள்ள திரையரங்க உரிமையாளர்களுக்கும் கை கொடுக்க வேண்டும். என்று கோரிக்கை விடுத்தவண்ணம் இருந்தனர்.
அந்தக் கோரிக்கையை ஏற்று டி.ராஜேந்தர் அவர்களும், சிம்புவின் தாயாரும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் இருக்கும் உஷா ராஜேந்தர் அவர்களும் படத்தை வெளிக்கொண்டு வர களம் இறங்கி அன்று விடிய, விடிய கொட்டும் மழையையும் மிறி போராடினார்கள்.
25-ம் தேதி காலை வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்ட 5 மணி காட்சி பல திரையரங்குகளில் ரத்தாகி ரசிகர்கள் கொந்தளிக்க ஆரம்பித்தனர்.
இந்த பதட்டமான சூழ்நிலையில் படத்தின் பைனான்சியர் உத்தம் சந்த் அவர்களுடைய கணக்கில் ‘மாநாடு’ படத்தின் நெகட்டிவ் மீதான 5 கோடி பாக்கித் தொகையை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தர வேண்டும்.
இந்தப் படத்தின் சாட்டிலைட் விற்காத காரணத்தால் இன்றைய நிலையில் சாட்டிலைட் மதிப்பான 5 கோடி ரூபாய் குறைவாக உள்ளது.
இதை டி.ராஜேந்தர்தான் பொறுப்பேற்று கொண்டு அவரது மகன் சிலம்பரசன் நடித்து ஐசரி கணேஷ் அவா்கள் தயாரிப்பில் உருவாகும் படத்தின் வெளியீட்டின்போது தருவதாக ஒப்புக் கொள்ள வேண்டும்.
மேலும், சாட்டிலைட் உர்மையை விற்று ஒரு வேளை படம் 5 கோடிக்கு கீழே விற்றால் குறைவது எத்தனை கோடியானாலும் அதை டி.ராஜேந்தர்தான் தர வேண்டும் என்று உத்திரவாத கடிதத்தை (கேரண்டி கடிதம்) உத்தம் சந்த் அவர்களே தன் கைப்பட எழுதி டி.ராஜேந்தர் அவர்களிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கையொப்பமிட மற்றும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் திரு.சௌந்தரபாண்டியன் சாட்சி கையொப்பமிட அந்த உத்தரவாத கடிதத்தை பெற்றுக் கொண்டு காலை 8 மணி காட்சிக்குத்தான் ‘மாநாடு‘ படத்தை வெளியிட்டனர்.
ஆனால், இந்தப் படம் வெளியாகாது என்று தயாரிப்பாளர் டிவிட்டரில் அறிவித்த பின்னும் டி.ராஜேந்தரும், அவரது மனைவி உஷா ராஜேந்தரும் போராடியதற்கு பின்னால் எல்லாம் வல்ல இறைவன் அருளால் படம் வெளியாகி வெற்றி பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.
காட்சி மாறியது. படம் வெற்றி பெற்று ஓடிக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் படத்தின் பைனான்சியர் உத்தம் சந்த் அவர்களும், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்களும் டி.ராஜேந்தர் அவர்களுக்கு தெரிவிக்காமலேயே சில தனியார் தொலைக்காட்சிக்கு சாட்டிலைட் உர்மையை விற்பதற்கு முற்பட்டார்கள்.
இந்த சூழ்நிலையில் சென்னை 20-வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் டி.ராஜேந்தர் ‘மாநாடு’ திரைப்படத்தின் சாட்டிலைட் உர்மை குறித்து வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை விசார்த்த கனம் நீதிபதி அவர்கள் முதல் பிரதிவாதி உத்தம் சந்த் அவர்களும், இரண்டாவது பிரதிவாதியான ‘மாநாடு’ படத்தின் தயாரிப்பாளா் சுரேஷ் காமாட்சி அவர்களும் உரிய பதில் அளிக்குமாறு வழக்கை வரும் டிசம்பர் மாதம் 16-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டிருக்கிறார்.
The post ‘மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர், பைனான்ஸியர் மீது டி.ராஜேந்தர் வழக்கு தொடர்ந்தார் appeared first on Touring Talkies.
]]>The post ‘மாநாடு’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் appeared first on Touring Talkies.
]]>மிக அதிகப் பொருட் செலவில் ‘மாநாடு’ படம் தயாரிக்கப்பட்டிருப்பதால் குறைந்தபட்சம் 500 தியேட்டர்களிலாவது படம் திரையிடப்பட்டால்தான் பெருமளவு போட்ட பணம் திரும்பக் கைக்கு வரும் என்ற சூழல் உள்ளது.
இதனால் தீபாவளி ரேஸில் இருந்து விலக ‘மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முடிவெடுத்திருக்கிறார். இது தொடர்பாக சற்று முன் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை இது :
“திரையுலகத்தினருக்கும், திரைப்பட ரசிகர்களுக்கும் வணக்கம்…
நீடித்த பெரும் கோவிட் சிரமங்களுக்கிடையே சில வருட உழைப்பின் பயனாக அறுவடைக்குக் காத்திருக்கிறான் ‘மாநாடு’. முழுவீச்சில் தயார் செய்து தீபாவளி வெளியீடாக வந்துவிட அனைத்தும் செய்யப்பட்டுவிட்டது.
யாரோடும் போட்டி என்பதல்ல… ஒரு விழா நாளில் மக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களைப் பார்ப்பது வழக்கம். அதைக் கருத்தில் வைத்தே தீபாவளி வெளியீடாக வர முடிவெடுத்தோம்.
போட்டி என்ற ரீதியில் பட வெளியீட்டை நான் ஒருபோதும் பார்ப்பதில்லை. அப்படி பார்ப்பது வியாபார புத்திசாலித்தனமுமல்ல.
நமது ‘மாநாடு’ படம் நன்றாக திருப்தியாக வந்துள்ளது. அதன் மீது மிகப் பெரிய நம்பிக்கையும் உள்ளது. வந்து பார்ப்போம் என இறங்கிவிடலாம்தான். ஆனால் என்னை நம்பி படம் வியாபார ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள் பாதிக்கப்படக் கூடாது.
அதேபோல் விநியோகஸ்தர்களும், திரையரங்க வெளியீட்டிற்காய் பணம் போட்டவர்களும் என் பட வெளியீட்டின் மூலம் இலாபம் காண வேண்டும். நட்டமடையக் கூடாது. சில காரணங்களுக்காக ஏன் என் படமும் அதன் வெற்றியும் பலியாக வேண்டும்??
ஆதலால், நமது ‘மாநாடு’ படம் தீபாவளி வெளியீட்டிலிருந்து வெளியேறுகிறது. சற்று தள்ளி நவம்பர் 25-ம் தேதி படம் வெளியாகும்.
தீபாவளியன்று வெளியாகும் படங்கள் வெற்றி பெற வாழ்த்துகள். பொறுமையாக எங்கள் முடிவை ஏற்கப் போகும் உங்கள் அனைவருக்கும் நன்றிகள்…” என்று அந்த அறிக்கையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி குறிப்பிட்டுள்ளார்.
The post ‘மாநாடு’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் appeared first on Touring Talkies.
]]>