The post தமிழில் ஆஸ்கருக்குச் சென்ற முதல் தமிழ்ப் படம் எது? appeared first on Touring Talkies.
]]>அதே நேரம் பல படங்கள் ஆஸ்கர் விருது கமிட்டு அனுப்பட்டே வருன்றன. சமீபத்தில் கூட சூர்யா நடித்த “ஜெய் பீம்” திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
இதற்கு முன்பும் கூட பல படங்கள் அனுப்பபட்டது. ஆக இந்த விருதுக்கு அன்புப்படுவதே ஒரு அங்கீகாரம் என்று ஆகவிட்டது.
அதே நேரம், முதன் முதல் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்ட படம் எது என பலருக்குத் தெரியாது.
ஏ.சி.திரிலோகச்சந்தர் இயக்கத்தில் சிவாஜி மூன்று வேடங்களில் நடித்த தெய்வ மகன் படம்தான், தமிழில் இருந்து ஆஸ்கர் விருத்துக்கு அனுப்பப்பட்ட படம். ஆண்டு, 1970. ஆனால் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படவவை எந்த தமிழ்ப்படமும் இல்லை. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, ஆஸ்கர் விருது என்பது தமிழ்த்திரையுலகுக்கு கனவாகவே இருக்கிறது. விரைவில் இந்த கனவு நிறைவேற வேண்டும்.
The post தமிழில் ஆஸ்கருக்குச் சென்ற முதல் தமிழ்ப் படம் எது? appeared first on Touring Talkies.
]]>The post இதுவரை கண்டுபிடிக்கப்படாத சினிமா பார்முலா! appeared first on Touring Talkies.
]]>கே.விஜயன் இயக்கத்தில் சிவாஜி, ரஜினி, மாதவி உள்ளிட்டோர் நடித்து 1986ல் வெளியான திரைப்படம் விடுதலை. இதில் ரஜினி, சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபட்டு, போலீஸான சிவாஜியிடம் சிக்கித் தவிப்பார். சந்திரபோஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட். 1986ல் வெளியான இப்படம் பெரும் வெற்றி பெற்றது.
இயக்குநர் ஷங்கரின் முதல் படமான ஜென்டில் மேன் படத்தில் அர்ஜூன் கதாநாயகனாக நடித்தார். இவருடன் மதுபாலா, கவுண்டமணி உள்ளிட்டோரும் நடித்து இருந்தனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தன.
இந்த படத்தில் கொள்ளைக்காரராக நடித்திருப்பார் அர்ஜூன். இந்தப்படமும் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது.
2011ல் வெளியான மங்காத்தாப படத்தில் அஜீத் மற்றும் அர்ஜூன் இருவரும் இணைந்து கொள்ளையடிப்பார்கள். மற்ற படங்களிலாவது நல்ல நோக்கத்துக்காக நாயகன் கொள்ளை அடிப்பதாக காண்பிப்பார்கள். இப்படத்தில் இவர்கள் தங்களது சுயநலத்துக்காகவே கொள்ளையடிப்பார்கள். ஆனால் படம் பெரிய அளவில் வசூல் செய்தது.
சினிமாவில் லாஜிக் பார்ப்பார்கள். ஆனால் சினிமா வெற்றி பெறுவதற்கு என்ன லாஜிக் என்பதை இதுவரை யாரும் கண்டுபிடிக்கவில்லை!
The post இதுவரை கண்டுபிடிக்கப்படாத சினிமா பார்முலா! appeared first on Touring Talkies.
]]>The post நிஜமாகவே பிரபு அடிவாங்கியது யாரிடம் தெரியுமா appeared first on Touring Talkies.
]]>இப்படத்தின் படப்பிடிப்பு அருணாச்சலம் ஸ்டூடியோவில் நடைபெற்றது. காவல் அதிகாரி வேடத்தில் சிவாஜி நடிக்க, காளி என்ற வேடத்தில் பிரபு நடித்தார். அதில் சண்டை இருவருக்குமான சண்டைக் காட்சியின் போது, பிரபுவை நிஜமாகவே அடித்துவிட்டாராம் சிவாஜி.
இன்னொரு சம்பவம்..
வம்ச விளக்கு என்ற படத்தில் பிரபுவை சிவாஜி பிரம்பால் அடிக்கும் காட்சி. அப்போதும் நிஜமாகவே பிரபவை அடித்துவிட்டார் சிவாஜி.
படப்பிடிப்பு இடைவேளையில், பிரபு உம் என்ற முகத்துடன் இருக்க, “ என்ன பிரச்சினை” என சிவாஜி கேட்டிருக்கிறார். அதற்கு பிரபு “ஒன்றுமில்லை” எனச ொல்லிவிட்டாராம்.
சில வருடங்கள் கழித்து, இந்த சம்பவத்தை செய்தியாளர்களிடம் கூறிய பிரபு “ என் அப்பாவிடம் ஒன்றுமில்லை என்று கூறிவிட்டாலும். வலி தாங்காமல், தனியாக போய் அழுதேன்” என்று சொல்லி சிரித்திருக்கிறார்.
இதை அறிந்த சிவாஜி, “அன்று வலித்தது.. சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தினாய். அதுதான் இன்று சிரிக்கிறாய். வலி இல்லாமல் வெற்றி கிடைக்காது” என கூறியிருக்கிறார்.
நூற்றில் ஒரு வார்த்தை என்பது இதுதான்!
The post நிஜமாகவே பிரபு அடிவாங்கியது யாரிடம் தெரியுமா appeared first on Touring Talkies.
]]>The post எம்.ஜி.ஆர். – சிவாஜி: மோதலும் காதலும்! appeared first on Touring Talkies.
]]>அப்போது எம்.ஜி.ஆர். தி.மு.க.விலும், சிவாஜி காங்கிரஸிலு் இருந்தனர்.
1971 தேர்தல் தேர்தலில் அவரவர் அவரவர் கட்சிக்காக தமிழ்நாடு முழுதும் சென்று பிரச்சாரம் செய்தனர்.
அப்போது பொதுக்கூட்ட மேடை ஒன்றில், சிவாஜி. `என் அளவுக்கு உன்னால் நடிக்க முடியுமா?’ என்று எம்.ஜி.ஆரை நோக்கி கேள்விக்கணை விடுத்தார். அடுத்த ஒரு மேடையில் பதிலுக்கு எம்.ஜி.ஆர்., “என் படங்கள் அளவுக்கு உன் படம் வசூலாகுமா?’ என்று காட்டமாக கேட்டார்.
இதனால் இருவரின் ரசிகர்கலும் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது.
இரண்டு கட்சி தலைவர்களும் இருவரையும் சமாதானப்படுத்த. முன்பைவிட, இருவரும் நெருக்கமான நண்பர்கள் ஆனார்கள்.
மோதலுக்குப் பின் காதல்!
The post எம்.ஜி.ஆர். – சிவாஜி: மோதலும் காதலும்! appeared first on Touring Talkies.
]]>The post “நடிக்கமாட்டேன்!” என்று சிவகுமார் முடிவெடுக்க இவர்தான் காரணம்! appeared first on Touring Talkies.
]]>பிறகு சிவாஜிக்கு வேண்டியவரையும் சிவகுமாரையும் தனது வீட்டுக்கு அழைத்தார் சிவாஜி. அங்கு மினி தியேட்டர் இருந்தது.
அதில்தான் நடித்த, அன்னையின் ஆணை படத்தை திரையிட்டு காண்பித்து இருக்கிறார் சிவாஜி.
அதில் மாமன்னம் அசோகனாக நடிப்பில் மிரட்டியிருப்பார்.
பிறகு சிவகுமாரிடம், “நீ நடிக்க போறீயா? இல்லை பொம்மை போட போறீயா” என கேட்க.. மிரண்டு போயிருந்த சிவகுமார், “நடிக்கலை.. ஓவியம் வரையவே போகிறேன்” என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.
ஓவியக் கலை படித்து முடித்த சிவகுமாருக்கு, நடிப்பில்தான் ஆர்வம். ஆகவேதான் சொந்த ஊரைவிட்டு சென்னைக்கு வந்தார். இங்கு நடிகர் திலகம் சிவாஜிக்கு வேண்டிய ஒருவரின் உதவியால் சிவாஜி நடித்த படத்தின் படப்பிடிப்பை பார்த்தார். அதுதான் முதன் முதல் பார்த்த படப்பிடிப்பு.
பிறகு சிவாஜிக்கு வேண்டியவரையும் சிவகுமாரையும் தனது வீட்டுக்கு அழைத்தார் சிவாஜி. அங்கு மினி தியேட்டர் இருந்தது.
அதில்தான் நடித்த, அன்னையின் ஆணை படத்தை திரையிட்டு காண்பித்து இருக்கிறார் சிவாஜி.
அதில் மாமன்னம் அசோகனாக நடிப்பில் மிரட்டியிருப்பார்.
பிறகு சிவகுமாரிடம், “நீ நடிக்க போறீயா? இல்லை பொம்மை போட போறீயா” என கேட்க.. மிரண்டு போயிருந்த சிவகுமார், “நடிக்கலை.. ஓவியம் வரையவே போகிறேன்” என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.
மீண்டும் அவருக்குள் நடிப்பு ஆசை கிளறவே திரைப்படங்களில் நடித்தார். பிறகு சிவாஜி கணேசனுடனேயே நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post “நடிக்கமாட்டேன்!” என்று சிவகுமார் முடிவெடுக்க இவர்தான் காரணம்! appeared first on Touring Talkies.
]]>The post நடிகர் திலகத்திடமே அதிரடி காட்டிய இயக்குநர்! appeared first on Touring Talkies.
]]>ஒரு முறை இயக்குநர் வாசுவுக்கு, சிவாஜியை இயக்கும் வாய்ப்பு வந்தது. சிவாஜியிடம் கதை சொல்ல அவரது வீட்டுக்குச் சென்றார் வாசு.
வாசுவை கதை சொல்லச் சொன்ன சிவாஜி, அருகில் இருந்த டி.வி.யில் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்தார். அவ்வப்போது, வாசு சொல்வதற்கு ம் கொட்டிக்கொண்டு இருந்தார்.
திடீரென கதை சொல்வதை வாசு நிறுத்திவிட்டார். ஏன் என்று சிவாஜி கேட்க, “டிவி பார்த்துக்கொண்டே கதை கேட்டால் மனதில் பதியாது.. அதற்காகத்தான்” என்று இழுத்திருக்கிறார் வாசு.
டென்சன் ஆன சிவாஜி, “ யாரைப் பார்த்து இப்படிச் சொல்லுறே.. தூங்கிட்டு இருக்கிறப்போ கதை சொன்னாலும் மனசுல பதிய வச்சுக்குவேன்” என சொல்ல, தொடர்ந்து கதை சொல்லி இருக்கிறார் வாசு. பிறகு சிவாஜி, “என்னைப் பார்த்து தயங்காமல், டிவியை நிறுத்திட்டு கதையைக் கேள்னு சொன்னியே.. அதைப் பாராட்டுறேன். அதான் உன் கம்பீரம்” என சொல்லி பாராட்டி இருக்கிறார்.
The post நடிகர் திலகத்திடமே அதிரடி காட்டிய இயக்குநர்! appeared first on Touring Talkies.
]]>