The post “அமீர்-இமான் அண்ணாச்சி கூட்டணி இனிமேல் பேசப்படும்” – சுரேஷ் காமாட்சியின் கணிப்பு appeared first on Touring Talkies.
]]>‘மாநாடு’ என்கிற மிகப் பெரிய வெற்றிப் படத்தை கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் நிறுவனம் மூலம் இந்தப் படத்தை வெளியிடுகிறார்.
படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.
இந்த விழாவில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, “இந்தப் படத்தின் டைட்டில் எனது மனதுக்கு நெருக்கமான, அதேசமயம் இப்போது இருக்கும் சூழலில் தேவையான ஒரு தலைப்பும்கூட. என் படங்களைகூட நான் வெளி நிறுவனங்களிடம் கொடுத்துதான் வெளியிட்டு வருகிறேன். ஆனால் அமீர் மீது கொண்ட மதிப்பால் இந்தப் படத்தை நான் வெளியிடுவது என முடிவு செய்தேன். அவருடன் தொடர்ந்து பயணிக்க விரும்புகிறேன். இது ஒரு தொடக்கம்தான். அரசியலையும், அமீரையும் தவிர்க்கவே முடியாது. சத்யராஜ், கவுண்டமணி போல இந்த படத்திற்கு பிறகு அமீர், இமான் அண்ணாச்சி என ஒரு காமெடி கூட்டணி உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை..” என்று கூறினார்.
The post “அமீர்-இமான் அண்ணாச்சி கூட்டணி இனிமேல் பேசப்படும்” – சுரேஷ் காமாட்சியின் கணிப்பு appeared first on Touring Talkies.
]]>The post “அமீருக்கு செட் பிராப்பர்ட்டி நான்தான்” – நடிகர் இமான் அண்ணாச்சியின் கிண்டல் பேச்சு appeared first on Touring Talkies.
]]>மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’.
‘மாநாடு’ என்கிற மிகப் பெரிய வெற்றிப் படத்தை கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் நிறுவனம் மூலம் இந்தப் படத்தை வெளியிடுகிறார்.
படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகர் இமான் அண்ணாச்சி பேசும்போது, “ஒரு செட் பிராப்பர்ட்டி மாதிரி படப்பிடிப்பின்போது இயக்குநர் அமீருடன் கூடவே பயணிக்கும்விதமாக எனது கதாபாத்திரம் அமைந்துள்ளது. குறிப்பாக இந்த படத்தில் ஒரு சண்டைக் காட்சியை மூன்று நாட்கள் படமாக்கியபோது அமீர் ஒரு பேருந்துக்குள் வசமாக சிக்கிக் கொண்டுபட்ட அவஸ்தைகள், அந்த சமயத்தில் அவருடன் நடைபெற்ற நகைச்சுவை நிகழ்வுகள் எல்லாமே இனிமையானவை. ‘யோகி’ படத்திற்கு பிறகு இந்த ‘உயிர் தமிழுக்கு’ திரைப்படம் அமீருக்கு உலக அளவில் மிகப் பெரிய இடத்தை பெற்றுத் தரும்” என்று கூறினார்.
The post “அமீருக்கு செட் பிராப்பர்ட்டி நான்தான்” – நடிகர் இமான் அண்ணாச்சியின் கிண்டல் பேச்சு appeared first on Touring Talkies.
]]>The post “நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தில் ஆனந்த்ராஜ்தான் ஹீரோ” – பரபரப்பை கிளப்பிய அமீர் பட இயக்குநர் appeared first on Touring Talkies.
]]>‘மாநாடு’ என்கிற மிகப் பெரிய வெற்றிப் படத்தை கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் நிறுவனம் மூலம் இந்தப் படத்தை வெளியிடுகிறார்.
இந்தப் படத்தில் கதையின் நாயகனாக அமீர், கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன், இவர்களுடன் ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய, அசோக் சார்லஸ் படத் தொகுப்பை மேற்கொண்டுள்ளார். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இந்த படத்திற்கு இசையமைத்திருப்பதன் மூலம் வெற்றிகரமாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் வித்யாசாகர்.
பாடல்களை பா.விஜய் எழுத, அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் வசனங்களை பாலமுரளி வர்மன் மற்றும் அஜயன்பாலா இருவரும் இணைந்து எழுதியுள்ளனர்.
படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆதம்பாவா பேசும்போது, “வெளி கம்பெனி படமொன்றில் அமீர் நடிப்பது இதுவே முதல் தடவை. பெரும்பாலும் அவரை கதையின் நாயகன் என்று சொல்கிறார்கள். அவர் கதையின் நாயகன் அல்ல. கதாநாயகன்தான்.
இந்த படத்தை தயாரித்து இந்த நிலைக்கு கொண்டு வர நிறைய காலதாமதம் ஆனது உண்மைதான். அதேசமயம் இந்த படம் உருவாகும்வரை என்னை அவர் நம்பினார். அவரை நான் நம்பினேன். இந்தப் படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிடுவதன் மூலம் இன்னும் பெரிய அளவிற்கு இந்தப் படம் பேசப்படும்.
இந்தப் படத்தில் ஆக்ஷன், காமெடி என அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் இருக்கின்றன. இந்த படத்தில் நடிகர் ஆனந்தராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தில்கூட ஹீரோ ஆனந்தராஜ்தான். அந்த அளவுக்கு சிறப்பாக நடித்துள்ளார். இந்தப் படத்திலும் அவரது கதாபாத்திரம் பேசப்படும்…” என்று கூறினார்.
The post “நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தில் ஆனந்த்ராஜ்தான் ஹீரோ” – பரபரப்பை கிளப்பிய அமீர் பட இயக்குநர் appeared first on Touring Talkies.
]]>The post அமீர் நாயகனாக நடிக்கும் ‘உயிர் தமிழுக்கு’ படத்தை சுரேஷ் காமாட்சி வெளியிடுகிறார் appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில் தற்போது இயக்குநர் அமீர் கதாநாயகனாக நடித்துள்ள ‘உயிர் தமிழுக்கு’ என்கிற படத்தை வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா இந்த படத்தை தயாரித்துள்ளதுடன், அவரே இந்த படத்தை இயக்கியும் உள்ளார்.
இந்தப் படத்தில் அமீர், சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணிய சிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
தயாரிப்பு – மூன் பிக்சர்ஸ், வெளியீடு – வி ஹவுஸ் புரொடக்சன், இயக்கம் – ஆதம்பாவா, இசை – வித்யாசாகர், ஒளிப்பதிவு – தேவராஜ், படத் தொகுப்பு ; சார்லஸ், பாடல்கள் – பா.விஜய், வசனம் – பாலமுரளி வர்மன் மற்றும் அஜயன்பாலா, தயாரிப்பு மேற்பார்வை – R.S.வெங்கட், நிர்வாக தயாரிப்பு – B.மகேஷ், பத்திரிகை தொடர்பு – A.ஜான்.
இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
The post அமீர் நாயகனாக நடிக்கும் ‘உயிர் தமிழுக்கு’ படத்தை சுரேஷ் காமாட்சி வெளியிடுகிறார் appeared first on Touring Talkies.
]]>