The post மாரி செல்வராஜூடன் மீண்டும் இணையும் தனுஷ்..! appeared first on Touring Talkies.
]]>தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்த செய்தியை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.
அந்தச் செய்தியில், ’கர்ணன்’ படத்தை அடுத்து மீண்டும் மாரி செல்வராஜ் உடன் இணைந்து ஒரு படத்தில் பணிபுரிய உள்ளேன். இந்தப் படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் ஆரம்பமாகிவிட்டன. அடுத்த ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்…” என்று அறிவித்துள்ளார்.
இந்த ட்டீவிட்டுற்கு ‘கர்ணன்’ படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி தாணு ’அளவில்லா ஆனந்தம்’ என்று கமெண்ட் செய்துள்ளார்.
மாரி செல்வராஜ் தற்போது துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அவர் தனுஷ் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம் தனுஷூம் அமெரிக்காவில் இருந்து திரும்பிய பிறகு சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்காக தான் நடிக்கவிருக்கும் இயக்குநர்கள் பாலாஜி மோகன், கார்த்திக் நரேன் ஆகியோரின் படங்களையும் முடித்துவிட்டு இந்தப் படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post மாரி செல்வராஜூடன் மீண்டும் இணையும் தனுஷ்..! appeared first on Touring Talkies.
]]>The post ‘கர்ணன்’ படத்தில் சர்ச்சையான பாடலின் தலைப்பு மாற்றப்பட்டது..! appeared first on Touring Talkies.
]]>வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘பண்டாரத்தி புராணம்’ என்ற பாடலின் வரிகள் அடங்கிய வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இதையடுத்து இந்த ‘பண்டாரத்தி’ என்னும் பெயர் ஒரு சாதியப் பெயர் என்றும், அந்தச் சாதியைச் சேர்ந்தவர்கள் அது களங்கப்படுத்துகிறது என்றும் பலவித கண்டனங்கள் எழுந்தன.
இதன் தொடர்ச்சியாக மதுரை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக 2 வழக்குகள் தொடரப்பட்டன. இந்த “பண்டாரத்தி’ என்ற பெயரை மாற்றாமல் ‘கர்ணன்’ படத்தை வெளியிடக் கூடாது. படத்திற்குத் தடை விதிக்க வேண்டும்…” என்று தங்களது மனுவில் இரண்டு அபேட்சகர்களும் கேட்டிருந்தார்கள்.
நீதிமன்றம் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பி பதில் அனுப்பச் சொல்லியிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் துவங்கும் முன்பேயே அந்த சர்ச்சைக்குரிய பெயரை மாற்றிவிட்டதாக படத்தின் இயக்குநரான மாரி செல்வராஜ் இன்று அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை இது :
‘கர்ணன்’ திரைப்படம் தொடங்கிய நாளிலிருந்து இன்றுவரை நீங்கள் அளித்துவரும் ஆதரவும் நம்பிக்கையும் எனக்கு பெரும் உத்வேகத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது.
ஒரு இளம் இயக்குநரான என் மீதும் நீங்கள் காட்டும் எதிர்பார்ப்பும், மரியாதையும்தான் சினிமா என்னும் மாயக் கலையை எவ்வளவு பொறுப்போடு நான் அணுக வேண்டும் என்பதை எனக்கு கற்றுக் கொடுக்கிறது.
அத்தகைய பொறுப்புணர்ச்சியோடும் கலைத்தன்மையோடும்தான் நான் என் காட்சி படிமங்களை பெரும் சிரத்தையோடு உருவாக்குகிறேன்.
‘பண்டாரத்தி புராணமும்’ அப்படி உருவாக்கபட்டதுதான். சொந்த அத்தையாக, அக்காவாக, ஆச்சியாக, பெரியம்மாவாக… என் நிலத்தோடும், என் இரத்தத்தோடும் கலந்து காலத்தின் தேவதைகளான ‘பண்டாரத்தி’களின் கதைகளைத்தான் நான் என் திரைக்கதையின் கூழாங்கற்களாக சிதறவிட்டு காட்சிப்படுத்தினேன்.
ஆனால், நம் சமூக அடுக்கு முறை உளவியலில் சில பெயர்கள் ஏற்படுத்தும் தாக்கம் என்பது புரிந்து கொள்ள முடியாததாகவும், விலக முடியாததாகவும் இருக்கிறது. அதன் அடிப்படையில் ‘பண்டாரத்தி புராணம்’ பாடலுக்கு ஏற்பட்டிருக்கும் விவாதத்தையும், வருத்தத்தையும், கோரிக்கையையும் முடித்து வைப்பதற்காக இனி ‘பண்டாரத்தி’யை ‘மஞ்சனத்தி’ என்று அழைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம்.
தேவதைகள் எந்த பெயரில் அழைக்கப்பட்டாலென்ன…? பெயர் மாறுவதால் அவர்கள் காட்டும் மாட வெளிச்சம் குறைந்துவிடப் போகிறதா என்ன..?
இனி ஏம ராஜாவின் மாட விளக்காக ‘மஞ்சனத்தி’ இருப்பாள். இனி ஏமன் ‘கர்ணனை’ ஆட வைப்பதற்காக ‘மஞ்சனத்தி புராண’த்தை பாடுவான்; ‘கர்ணனும்’ ஆடுவான்.
ஆதரவளித்த அனைவருக்கும் நன்றியும் ப்ரியமும்…
எப்போதும்… காதலே பிரபஞ்ச மாடத்தின் வெளிச்சம்…” என்று குறிப்பிட்டுள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
நல்ல முடிவுதான். அடுத்த மாதம் படம் வெளியாகும் சூழலில் பிரச்சினையை இழுத்துக் கொண்டே போவதற்குப் பதிலாக சமரசம் செய்து கொள்வதுதான் இப்போதைய நிலையில் எந்தவொரு திரைப்படத்திற்கும் நல்லது.
The post ‘கர்ணன்’ படத்தில் சர்ச்சையான பாடலின் தலைப்பு மாற்றப்பட்டது..! appeared first on Touring Talkies.
]]>The post மேலவளவு முருகேசன் கொலை சம்பவம்தான் ‘கர்ணன்’ படத்தின் கதையா..? appeared first on Touring Talkies.
]]>இந்தப் படம் மேலவளவு கிராமப் பஞ்சாயத்தின் தலைவரான முருகேசன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி வருவதாகச் சொல்லப்படுகிறது.
சமீபத்தில் வெளியான இத்திரைப்படத்தின் ஒரு பாடல் காட்சியில் இதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.
இந்தப் படத்தில் இடம் பெறும் ‘கண்டா வரச் சொல்லுங்க’ என்ற பாடலின் விஷூவல் காட்சிகளை ஸ்லைடுகளாக அமைத்து, அந்தப் பாடல் காட்சியை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்கள் படக் குழுவினர்.
இந்தப் பாடல் காட்சியில்தான் ஒரு பிரேமில் மேலவளவு பஞ்சாயத்து தலைவராக இருந்த முருகேசனின் முகம் வரையப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் இருக்கும் மேலூர் வட்டம், மேலவளவு ஊராட்சியின் தலைவராக இருந்து உயர் சாதி இந்துக்களால் படுகொலை செய்யப்பட்டவர் முருகேசன்.
இவர் தலித் மக்களுக்காக போராடியவர். 1996-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அந்த மேலவளவு ஊராட்சி தலித் தொகுதியாக அறிவிக்கப்பட்டதால், அதில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார்.
இதையொட்டி அந்தக் கிராமத்தில் வேறு சாதியினருக்கும், தலித் சமூகத்தினருக்கும் இடையில் பல்வேறு மோதல்கள் ஏற்பட்டன. தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. பின்பு மீண்டும் உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலில் தேர்தல் நடத்தப்பட்டு 1996-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதியன்று முருகேசன் அந்த ஊராட்சியின் தலைவராகத் தேர்வானார்.
அதன் பின்பு ஒரு நாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றுவிட்டு ஊர் திரும்பிய முருகேசனையும், அவருடன் வந்த 7 பேரையும் ஒரு கும்பல் படுகொலை செய்தது. இந்தக் கொலையின்போது முருகேசனின் தலையை மட்டும் துண்டித்து எடுத்துச் சென்று அரை கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கிணற்றில் வீசியிருந்தார்கள்.
பின்பு இந்தக் கொடூரச் செயலைச் செய்த குற்றவாளிகள் கைது செய்யப்பட்டாலும் பல்வேறு அரசியல் அழுத்தங்களுக்குப் பிறகும் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்பு பத்தாண்டுகள் கழித்து அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தை மையமாக வைத்துதான் ‘கர்ணன்’ திரைப்படம் உருவாகி வருவதாகச் சொல்லப்படுகிறது.
ஏற்கெனவே, “இந்தப் படம் ஜாதி கலவரத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது. இதைத் தடை செய்ய வேண்டும்” என்று நடிகர் கருணாஸ் தலைமையிலான முக்குலத்தோர் புலிப்படை சார்பில் தமிழக அரசிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
The post மேலவளவு முருகேசன் கொலை சம்பவம்தான் ‘கர்ணன்’ படத்தின் கதையா..? appeared first on Touring Talkies.
]]>The post “கர்ணன்’ தலைப்பை மாற்றுக”-தனுஷிடம் சிவாஜி சமூக நலப் பேரவை வேண்டுகோள்..! appeared first on Touring Talkies.
]]>நடிகர் தனுஷ் அடுத்து நடித்து வரும் படங்களில் ஒன்றுதான் ‘கர்ணன்’. இந்தப் படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டது.
தற்போது இந்தப் படத்திற்கு ‘கர்ணன்’ என்று தலைப்பு வைத்தமைக்காக நடிகர் திலகம் ‘சிவாஜி சமூக நலப் பேரவை’ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்தப் படத்தின் நாயகனான தனுஷூக்கு ‘சிவாஜி சமூக நலப் பேரவை’யின் தலைவரான சந்திரசேகர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில்…
‘நடிகர் திலகம்’ சிவாஜி அவர்களின் லட்சோபலட்ச ரசிகர்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் ‘கர்ணன்’ என்றாலே நினைவில் நிற்பது நடிகர் திலகத்தின் ‘கர்ணன்’ திரைப்படம்தான்.
ஒரு திரைப்படத்தின் பெயரை மீண்டும் பயன்படுத்த சட்டப்படி இடமிருந்தாலும், நியாயப்படி, மனசாட்சிப்படி. சில திரைப்படங்களின் பெயர்களை மீண்டும் பயன்படுத்தாமல் தவிர்க்கப்படவேண்டும். ஏனெனில். அந்தப் பெயர்களே திரைப்படத்தின் கதைக் களத்தைத் தாங்கி கால காலத்திற்கும் நிலைத்து நிற்கக் கூடியதாக இருக்கும்..
அந்த வகையில்தான் தாங்கள் நடித்து ஏற்கனவே ‘திருவிளையாடல்’ என்ற தலைப்பில் திரைப்படம் வெளிவரவிருந்தபோது எதிர்ப்பு தெரிவித்தோம். அதன் பிறகு ‘திருவிளையாடல் ஆரம்பம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு அத்திரைப்படம் வெளிவந்தது.
அதே சமயத்தில். தாங்கள் நடித்து வெளிவந்த ‘உத்தமபுத்திரன்’ திரைப்படத்திற்கு நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். அதுபோலவே. ‘ஆண்டவன் கட்டளை’, ‘ ராஜா’, ‘பச்சை விளக்கு’ என்று ‘நடிகர் திலகம்’ நடித்த படங்களின் பெயரிலேயே மீண்டும் பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அது போன்ற சமூகப் படங்களின் பெயர்களை மீண்டும் வைப்பதற்கு யாரும் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கப் போவதில்லை.
ஆனால், ‘சரஸ்வதி சபதம்’. ‘ திருவிளையாடல்’, ‘கர்ணன்’, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘கப்பலோட்டிய தமிழன்’ போன்ற குறிப்பிட்ட தலைப்புகள் மீண்டும் பயன்படுத்தப்படக் கூடாது. ஏனெனில், இந்தத் திரைப்படத் தலைப்புகளுக்கு இருக்கும் தனித்துவம் அப்படி..!
‘கர்ணன்’ என்றாலே கொடுப்பவன். கொடை வள்ளல்தான். ஆனால். தாங்கள் நடிக்கும் திரைப்படத்தின் கதையோ உரிமைக்காகப் போராடும் ஒருவருடைய கதை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது,
மகாபாரதக் கதையையே மீண்டும் உருவாக்குகிறோம். அதில் ‘கர்ணன்’ கதாபாத்திரம் வருவதால் இந்தப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது என்றால் பரவாயில்லை. ஒரு சமூகத் திரைப்படத்திற்கு ‘கர்ணன்’ என்று பெயரிட்டு அதில் தாங்கள் நடிப்பது ஏற்கத்தக்கதல்ல.
இது லட்சோபலட்ச ‘நடிகர் திலகம்’ ரசிகர்களுக்கு மட்டுமல்ல, மகாபாரதத்தை நேசிக்கும் கோடிக்கணக்கானவர்களின் மனதையும் புண்படுத்தக் கூடியதாகவும் அமையும்.
எனவே. ‘கர்ணன்’ என்ற தலைப்பினை மாற்றி அமைத்திடவேண்டுமென ‘நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவை’ சார்பில் கேட்டுக் கொள்கிறேன்…” என்று குறிப்பிட்டுள்ளார்.
The post “கர்ணன்’ தலைப்பை மாற்றுக”-தனுஷிடம் சிவாஜி சமூக நலப் பேரவை வேண்டுகோள்..! appeared first on Touring Talkies.
]]>