The post ஒசாகா தமிழ் திரைப்பட விழாவில் ‘சூரரைப் போற்று’ படத்திற்கு 6 விருதுகள் appeared first on Touring Talkies.
]]>கொரோனா காரணமாக 2 வருடங்களாக நடத்தப்படாமல் இருந்த ‘ஒசாகா தமிழ் தேசிய திரைப்பட விழா’ இந்த வருடம் நடைபெற்றுள்ளது.
இந்த திரைப்பட விழாவில் 2020-ம் வருடத்திற்கான சிறந்த திரைப்படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த விருதுப் பட்டியலில் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் 6 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.
சிறந்த திரைப்படம் – சூரரைப் போற்று
சிறந்த நடிகர் – சூர்யா
சிறந்த இயக்குநர் – சுதா
சிறந்த தயாரிப்பு நிறுவனம் – 2-டி நிறுவனம்
சிறந்த கலை இயக்குநர் – ஜாக்கி
சிறந்த இசையமைப்பாளர் – ஜி.வி.பிரகாஷ்குமார்
என்று முக்கிய விருதுகளை இந்தப் படமே கைப்பற்றியுள்ளது.
மேலும்,
சிறந்த நடிகை – ஐஸ்வர்யா ராஜேஷ் (க.பெ.ரணசிங்கம்)
சிறந்த நகைச்சுவை நடிகர் – ஷா ரா (ஓ மை கடவுளே)
சிறந்த ஒளிப்பதிவாளர் – கே.எம்.பாஸ்கரன் (கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்)
சிறந்த திரைக்கதை ஆசிரியர் – தேசிங்கு பெரியசாமி (கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்)
சிறந்த நடன இயக்குநர் – எம்.ஷெரீப் (சிரிக்கலாம், பறக்கலாம் – கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்)
சிறந்த துணை நடிகர் – காளிதாஸ் ஜெயராம் (பாவக்கதைகள்)
சிறந்த துணை நடிகை – வாணி போஜன் (ஓ மை கடவுளே)
சிறந்த வில்லன் – பிரசன்னா (மாபியா-1)
சிறந்த படத் தொகுப்பாளர் – பூபதி செல்வராஜ் (ஓ மை கடவுளே)
சிறந்த சண்டை பயிற்சி இயக்குநர் – பீட்டர் ஹெயின்-ராம் லஷ்மண் – தர்பார்
சிறந்த கிராபிக்ஸ் – அக்ஸா ஸ்டூடியோஸ் – ஓ மை கடவுளே
சிறந்த ஒலிப்பதிவாளர் – எஸ்.அழகியகூத்தன் – அந்தகாரம்
சிறந்த விமர்சனங்களைப் பெற்ற படம் – செத்தும் ஆயிரம் பொன்
The post ஒசாகா தமிழ் திரைப்பட விழாவில் ‘சூரரைப் போற்று’ படத்திற்கு 6 விருதுகள் appeared first on Touring Talkies.
]]>The post IMDB தர வரிசைப் பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்தது ‘சூரரைப் போற்று’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>பிரபல திரைப்பட ரேட்டிங் மற்றும் தகவல் தளமான ஐஎம்டிபி உலகளவில் அதிக ரேட்டிங் பெற்ற டாப் 1000 திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் 3-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. இப்படத்திற்கு 9.1 ரேட்டிங் புள்ளிகள் கிடைத்துள்ளது. ‘ஷஷாங் ரிடம்ப்ஷன்’ திரைப்படம் 9.3 புள்ளிகளுடன் முதலிடத்தையும், ‘காட்பாதர்’ திரைப்படம் 9.2 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.
விஷ்ணு விஷால் நடித்த ‘ராட்சசன்’ படம் 34-வது இடத்திலும், 58-வது இடத்தில் விஜய் சேதுபதின் ’விக்ரம் வேதா’வும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
‘சூரரைப் போற்று’ திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியானது. இப்படத்தை சூர்யாவின் 2-டி நிறுவனம் தயாரித்திருந்தது. ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது.
தமிழ் மொழியில் மட்டுமல்லாமல், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு அங்கும் கொண்டாடப்பட்டது.
சினிமாத் துறையினர் மட்டுமல்ல ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட அரசு துறையினர், தொழில் துறையினர் என அனைத்து தரப்பினரும் பாராட்டினார்கள்.
ஆஸ்கார் பட்டியலிலும் ’சூரரைப் போற்று’ இடம் பெற்று தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்தது நினைவிருக்கலாம்.
The post IMDB தர வரிசைப் பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்தது ‘சூரரைப் போற்று’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>The post ஆஸ்கர் போட்டியில் நுழைந்தது ‘சூரரைப் போற்று’ திரைப்படம்..! appeared first on Touring Talkies.
]]>சிறந்த படம், நடிகர், நடிகை என 3 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுப் பட்டியலுக்கு ‘சூரரைப் போற்று’ திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சிறந்த நடிகர் பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு சூர்யா பெயரும், சிறந்த நடிகை பிரிவில் அபர்ணா பாலமுரளி பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்தியத் திரையுலகினர் மத்தியில் கொண்டாடப்பட்ட படம் ‘சூரரைப் போற்று’.
சூர்யாவின் அசுரத்தமான நடிப்பு, நாயகியான அபர்ணா பாலமுரளியின் யதார்த்தமான நடிப்பு, இயக்குநர் சுதா கொங்கராவின் துல்லியமான இயக்கம், ஜி.வி.பிரகாஷின் ஆர்ப்பரிக்கும் இசை, நிக்கத் பொம்மியின் சுத்தமான ஒளிப்பதிவு என அனைத்து பிரிவுகளிலும் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியது.
கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான படங்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தமிழ்ப் படம் என்ற அபார சாதனையை இந்த ‘சூரரைப் போற்று’ திரைப்படம் படைத்திருந்தது.
தற்போது ‘சூரரைப் போற்று’ படக் குழுவினரின் அபாரமான உழைப்புக்கு மேலும் பெருமைச் சேர்க்கும் வகையில் இத்திரைப்படம் ஆஸ்கர் போட்டியிலும் களமிறங்கியுள்ளது.
இந்த முறை கரோனா அச்சுறுத்தலால் ஆஸ்கர் போட்டி விதிமுறைகளில் பல மாற்றங்களைச் செய்துள்ளனர். ஓடிடி தளங்களில் வெளியான படங்களும்கூட ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வரிசையில் ஆஸ்கர் போட்டியின் பொதுப் பிரிவில் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் போட்டியிட்டது.
இந்த முதல் கட்டப் போட்டியில் தேர்வான ‘சூரரைப் போற்று’ திரைப்படம் தற்போது பரிந்துரை பட்டியலிலும் இடம் பிடித்திருக்கிறது.
‘சிறந்த படம்’, ‘சிறந்த நடிகர்’, ‘சிறந்த நடிகை’ என்று 3 பிரிவுகளில் ஆஸ்கர் பரிசுக்காக இத்திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டிருப்பது தமிழ்த் திரையுலகத்திற்கே பெருமை சேர்க்கும் விஷயமாகும்.
இதுவரையிலும் வேறு எந்தத் திரைப்படமும் இந்தப் பரிந்துரை பட்டியலுக்குக் கூட வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
The post ஆஸ்கர் போட்டியில் நுழைந்தது ‘சூரரைப் போற்று’ திரைப்படம்..! appeared first on Touring Talkies.
]]>The post ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கிறது சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம்..! appeared first on Touring Talkies.
]]>கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான படங்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தமிழ்ப் படம் என்ற அபார சாதனையை இந்த ‘சூரரைப் போற்று’ திரைப்படம் படைத்திருந்தது.
தற்போது ‘சூரரைப் போற்று’ படக் குழுவினரின் அபாரமான உழைப்புக்கு மேலும் பெருமைச் சேர்க்கும் வகையில் இத்திரைப்படம் ஆஸ்கர் போட்டியிலும் களமிறங்கியுள்ளது.
இந்த முறை கரோனா அச்சுறுத்தலால் ஆஸ்கர் போட்டி விதிமுறைகளில் பல மாற்றங்களைச் செய்துள்ளனர். ஓடிடி தளங்களில் வெளியான படங்களும்கூட ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வரிசையில் ஆஸ்கர் போட்டியின் பொதுப் பிரிவில் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் போட்டியிடுகிறது.
இந்தப் போட்டியில் தேர்வாகி பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றால், அடுத்தக் கட்டமாக இறுதித் தேர்வுப் போட்டி பட்டியலிலும் இந்தப் படம் இடம் பெறும். அதனைத் தொடர்ந்து யார் வெற்றியாளர் என்பதை ஆஸ்கர் மேடையில் அறிவிப்பார்கள்.
தற்போது இந்தப் பொதுப் பிரிவுப் போட்டியில் திரையிடலுக்காக அகாடமி திரையிடல் அறையில் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் அப்லோட் செய்யப்பட்டுள்ளது.
இந்த அறையில் உள்ள படத்தை ஆஸ்கர் குழு உறுப்பினர்கள் பலரும் பார்த்து எந்தெந்த பிரிவில் இந்தப் படத்தைத் தேர்வு செய்யலாம் என்பதை முடிவு செய்வார்கள்.
“உலகத் திரையுலகினரின் பாராட்டுகளை அள்ளிய ‘சூரரைப் போற்று’ திரைப்படம், ஆஸ்கர் குழு உறுப்பினர்களின் பாராட்டுகளையும் அள்ளும் என்பதில் படக் குழுவினர் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர்…” என்று கூறினார் படத்தின் இணை தயாரிப்பாளரான இராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன்.
The post ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கிறது சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம்..! appeared first on Touring Talkies.
]]>The post சூரரைப் போற்று – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.
]]>அப்படியான எதிர்பார்ப்புகளை மாஸ் சண்டைக் காட்சிகளை வைத்து பூர்த்தி செய்தால் படத்தின் எதார்த்தம் கெட்டுவிடும். வரலாற்றை அப்படியே எடுத்தால் படம் டாக்குமென்ட்ரி ஆகிவிடும். மிகக் காத்திரமாக திரைக்கதை அமைத்தால் மட்டுமே இரண்டையும் பேலன்ஸ் செய்ய முடியும்.
இந்த ‘சூரரைப் போற்று’ படத்தில் அப்படியான மாஸ் திரைக்கதை அமைத்து வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் சுதா கொங்கரா.
அடித்தட்டு நிலையில் வாழும் மதுரை மாவட்டம் சோழவந்தான் கிராமத்தானான நெடுமாறன் என்ற சூர்யா, எப்படி சுற்றமும் சமூகமும் போற்றும்படியான விமான சேவையை அமைக்கிறார் என்பதுதான் கதை.
‘டெக்கான் ஏர்லைன் நிறுவனர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் சூரியா நடிக்கிறார்’ என்ற செய்தி வரும்போதே எதிர்பார்ப்பு எகிறியது. அந்த எதிர்பார்ப்பிற்கு துளியும் வஞ்சனை செய்யாமல் அசத்தி இருக்கிறார் சூர்யா.
சமீப ஆண்டுகளாக அவருடைய படங்களில் ஒரேவிதமான மாடுலேசன் அவரது பாடி லாங்வேஜில் தெரிகிறது என்ற விமர்சனத்தை இப்படத்தில் அடித்து நொறுக்கி இருக்கிறார் சூர்யா. மிகத் தேர்ந்த நடிப்பு. கங்ராட்ஸ்!
சூர்யாவிற்கு அடுத்து…. ஏன் சில இடங்களில் சூர்யாவையே தூக்கிச் சாப்பிடுகிறார் அபர்ணா பாலமுரளி. சூர்யாவை காதலனாக.. கணவனாக… அவர் ஏற்கும் தருணங்கள் எல்லாம் ‘வாவ்’ ரகம்.
வில்லனாக வரும் பரேஷ், நண்பர்களாக வரும் விவேக் பிரசன்னா, கிருஷ்ணகுமார் படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் காளி வெங்கட், கருணாஸ், ‘பூ’ ராமு என படத்தில் சிங்கிள் ஷாட் கேரக்டர்களும் படத்துடன் பக்காவாக மிங்கிள் ஆகிறார்கள்.
படத்தில் சும்மா எட்டிப் பார்க்கும் ஒரு அட்மாஸ்பியர் கேரக்டரும் ஸ்கோர் பண்ணுகிறது. இது திரைக்கதை ஆசிரியரின் அபார டச்.
ஒரு சாதாரணன் சரித்தரம் படைக்கும் வழக்கமான மோட்டிவேசன் கதை மாதிரி தெரிந்தாலும், படத்தில் பல எதார்த்தங்களை பட் பட் என போட்டு உடைத்துள்ளார் இயக்குநர்.
ஒரு எளியவன் வலியவன் முன் போட்டியிட்டாலோ.. வாழ நினைத்தாலோ அதற்கு அதிகாரத்தின் துணை கொண்டு வலியவன் என்னவெல்லாம் செய்வான் என்ற உண்மையை மிக அற்புதமாக காட்டியிருக்கிறார் இயக்குநர்.
படத்தின் ஆகப் பெரும் பலமாக ஜீவி பிரகாஷுன் பின்னணி இசையும், பாடல்களும் இருக்கின்றன. ஒளிப்பதிவு மதுரை சோழவந்தான் கிராமத்தையும் அதன் அழகியலையும் அழகாக காட்டியதோடு.. விமான ஓடுதளங்களையும் துல்லியமாக பதிவு செய்துள்ளது.
படத்தின் வசனங்கள் எல்லாமே நறுக்குத் தெறித்தாற் போல செம்ம ஷார்ப். கணவன் மனைவி இடையே உள்ள சிறுசிறு ஈகோ, அவர்களுக்குள் உள்ள அர்ப்பணிப்பு ஆகியவற்றை மிகச் சிறப்பாக படமாக்கியுள்ளார் சுதா கொங்கரா.
படத்தின் ஆழமான விசயங்கள் நீர்த்துப் போகக் கூடாது என்பதற்காக சில கமர்சியல் விசயங்களை சேர்ப்பது இயல்புதான். சில இடங்களில் சில காட்சிகளில் சின்ன சின்ன தொய்வு இருந்தாலும் ‘சூரரைப் போற்று’ தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படம்.
காரணம், இப்படம் அந்த அளவுக்கு வாழ்க்கை மீதான நம்பிக்கையை படம் பார்ப்பவர்களிடத்தில் விதைத்திருக்கிறது.
படக் குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!
The post சூரரைப் போற்று – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.
]]>The post ‘சூரரைப் போற்று’ படத்தில் 18 வயது பையனாக நடித்திருக்கும் சூர்யா appeared first on Touring Talkies.
]]>சூர்யாவின் நடிப்பு, இயக்குநர் சுதா கொங்காராவின் துல்லியமான இயக்கம், ஜி.வி.பிரகாஷின் மிரட்டலான இசை என அனைத்துமே இந்த எதிர்பார்ப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.
தீபாவளி கொண்டாட்டமாக வரும் நவம்பர் 12-ம் தேதி 200-க்கும் அதிகமான நாடுகளில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.
இதையொட்டி நாயகன் சூர்யா பேட்டியளித்துள்ளார்.
அது இங்கே :
“எனக்கு வருடா வருடம் ராக்கி கட்டிவிடும் சகோதரி இயக்குநர் சுதா கொங்கரா. நண்பர்களுக்குள் வியாபாரம் என்று வரும்போது, கருத்து வேறுபாடு வந்துவிடுமோ என நினைத்து நட்பாகவே இருப்போமே என்று கூறி அவரிடம் சினிமா பற்றிப் பேசாமல் தவிர்த்தது உண்டு. படம் பண்ணுவோம் என்று சீரியஸாக உட்கார்ந்து பேசியதே கிடையாது.
ஆனால், ‘இறுதிச் சுற்று’ படத்தைப் பார்த்த பின்பு என் கேரியர் முடிவதற்குள் இவரோடு சேர்ந்து ஒரு படம் செய்துவிட வேண்டும் என்று உறுதி செய்தேன். அப்படி செய்த படம்தான் இந்த ‘சூரரைப் போற்று’ திரைப்படம்.
விமான போக்குவரத்தை வைத்து இதற்கு முன்பு இந்தியாவில் யாரும் இவ்வளவு பெரிய படமெடுத்தது கிடையாது. ஆகையால், இதில் நிறைய விஷயங்கள் முதல் முயற்சியாக இருந்தது. இதனால், இந்தப் படத்தை நாமே தயாரிக்கலாம் என்று முடிவெடுத்தேன்.
இந்தப் படத்தின் கதைக் கரு ‘SIMPLY FLY’ என்ற புத்தகத்தில் உள்ள ஐடியாவாக இருந்தாலும், அதனை 44 பக்கக் கதையாகக் கொடுத்தார் சுதா கொங்கரா. இந்தக் கதையைக் கேட்டவுடன் ஏன் நாம் இதில் நடிக்கக் கூடாது எனத் தோன்றியது. அதற்குக் காரணம் சுதாவின் எழுத்தில் இருந்த வீரியம்தான்.
அவ்வளவு பெரிய விமான போக்குவரத்து துறையில் எப்படி ஒருவர் 1 ரூபாய்க்கு டிக்கெட் விற்றார். அவருடைய சவாலான வாழ்க்கை நம்மிடம் வரும்போது, எப்படி நடிக்காமல்விட முடியும்…?
அப்போதிலிருந்து கதையில் பல மாறுதல்கள், ஒவ்வொரு காட்சிக்குமான மெனக்கிடல் என நானும் இயக்குநருடன் கூடவே பயணித்தேன். இந்த அனுபவம் எனக்கு வேறு எந்தவொரு படத்திலும் கிடைத்ததே கிடையாது.
இந்தியாவின் முகத்தையே ஒரு சிலர்தான் மாற்றினார்கள். அதில் முக்கியமானவர் கேட்பன் கோபிநாத். ஏனென்றால் விமான போக்குவரத்து துறையை அப்படியே மாற்றினார். அவரைப் பற்றிய விஷயங்களில் எதை எல்லாம் வைத்து கதையாக சொல்லலாம் என யோசித்து சுவாரசியமான திரைக்கதையாக எழுதியிருக்கிறார் இயக்குநர் சுதா.
ஒரு ஊருக்கு போக்குவரத்து எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்குமே புரியும். ஒரு போக்குவரத்தின் மூலம் நினைத்த இடத்துக்கு போக முடிகிறது என்றால் மட்டுமே கல்வி, தொழில் அனைத்திலுமே மாற்றம் உண்டாகும். எல்லா வகையான போக்குவரத்தும் நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் கோபிநாத்தின் உயரிய நோக்கம்.
மாட்டு வண்டி, ஆட்டோ, பஸ் என இருக்காமல் விமான பயணமும் எளிய மனிதர்களுக்கு எளிதாக கிடைத்ததாக இருக்க வேண்டும். ‘ஒருவருக்கு தான் கண்ட கனவில் எந்தளவுக்கு வைராக்கியம் இருந்தால் அது சாத்தியப்படும்’ என்று சொல்கிற படமாகவும் இந்த ‘சூரரைப் போற்று’ திரைப்படம் இருக்கும்.
இந்தப் படமே மதுரையில்தான் தொடங்கும். படத்தின் கதையே நீங்கள் கேட்ட மக்களிடமிருந்துதான் தொடங்கும். ஆகையால், எந்த தரப்பு மக்கள் பார்த்தாலும் இது கண்டிப்பாக அந்நியப்பட்ட கதையாக இருக்காது.
சில படப்பிடிப்புகளில்தான் ‘நம் மனதுக்குப் பிடித்த விஷயத்தை செய்து கொண்டிருக்கிறோம்’ எனத் தோன்றும். ‘நந்தா’, ‘பிதாமகன்’, ‘மெளனம் பேசியதே’, ‘காக்க காக்க’ உள்ளிட்ட சில படப்பிடிப்புகளில் எனக்கு அப்படித் தோன்றியது. ‘மறுபடியும் ஒரு புதிய அனுபவத்துக்குள் போகிறோம்; புதுசா ஒரு கற்றல் நடக்குது’ என்று சொல்வது மாதிரி அமைந்தது இந்தப் படம்.
மறுபடியும் நான் நேசிக்கும் சினிமாவை ரொம்பவும் ரசித்த அனுபவம், இந்த ‘சூரரைப் போற்று’ படப்பிடிப்பில்தான் கிடைத்தது.
‘சூரரைப் போற்று’ படத்தின் படப்பிடிப்பு 60 நாட்கள்தான் நடைபெற்றது. ஒவ்வொரு நாளுமே இதுவரை பண்ணாத ஒரு விஷயத்தை செய்து கொண்டிருக்கிறேன் என நினைத்தேன். அது ரொம்பவே ப்ரஷ்ஷாகவும், சந்தோஷமாகவும் இருந்தது.
இயக்குநர் சுதாவால் என்னை வைத்து கோபிநாத்தின் கதாபாத்திரத்தைப் பார்க்க முடிந்தது. இது ரொம்பவும், அழகான ஒரு பயணமாக இருந்தது. இயக்குநராக அவருடன் பணி புரிந்தது என்னால் மறக்க முடியாத ஒரு அனுபவம்.
பாட்டு, சண்டைக் காட்சி என்பதெல்லாம் இல்லாமல் வெறும் கதையை எமோஷனல் காட்சிகள் மூலமாகவே எந்தளவுக்கு நம்ப வைக்க முடியும் என்பதை இந்த ‘சூரரைப் போற்று’ உருவானவிதத்தின் மூலம் தெரிந்து கொண்டேன்.
சுதா இயக்கத்தில் என்னையே நான் வித்தியாசமாக பார்த்தேன். சுதா என்னிடம், ‘சிரிக்காதே’ என்று அடிக்கடி சொல்வார். படம் முழுக்க சிரிக்காமல் நடிப்பதுதான் எனக்குப் பெரிய சவாலாக இருந்தது. ஒரு நடிகராக சுதாவின் இயக்கத்தைப் பற்றி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
இதில் மனைவியிடம் ‘12 ஆயிரம் ரூபாய் கடன் தர்றீயா?’ என்று கேட்கும் அளவுக்கு உடைந்து போய், தரையோடு தரையாக இருப்பது மாதிரியான ஒரு கேரக்டர் எனக்கு.
நான் பிரமாதமான நடிகரெல்லாம் கிடையாது. என்னால் கேமிரா முன்னால் உடனேயெல்லாம் நடிக்க முடியாது. ஒரு படத்தில் நடிக்கும்போது, அந்தக் கதாபாத்திரமாக வாழ வேண்டும் என்று சொல்வார்கள்.
திடீரென்று சுதா என்னை ‘இந்தப் படத்தில் 18 வயது பையனாக நடிக்க வேண்டும்’ என்று சொன்னார். கடைசிவரை ‘வேறு யாரையாவாது வைத்து செய்துவிடுங்கள். எனக்கு 45 வயதாகப் போகிறது’ என்று சொன்னேன். ஆனால் அவர் விடாப்பிடியாக என்னையவே நடிக்க வைத்துவிட்டார்.
மீசை, தாடியுடன் எல்லாம் நடிக்க வேண்டிய காட்சிகளை படமாக்கிவிட்டு, அடுத்த நாளே 18 வயது பையனாக நடிக்க வேண்டியதிருந்தது. ஆகையால், ஒரே சமயத்தில் அதற்காக தயாராகிக் கொண்டிருந்தேன்.
வருடம் முழுக்க 80% உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது, இந்தக் கதாபாத்திரத்துக்கு 100% உடற் பயிற்சி செய்ய வேண்டியதிருந்தது. அவ்வளவுதான். அதுவும், முதல் நாள் படப்பிடிப்பில் முகத்தில் கிராபிக்ஸுக்காக மார்க் எல்லாம் வைத்தார்கள். ஆனால், அதன் பின்பு நானே அந்த வயதுக்குப் பொருத்தமாகத்தான் இருக்கிறேன் என்று சொல்லி விட்டுவிட்டார்கள்.
இதன் படப்பிடிப்புக்கு முன்பேயே அனைத்து விஷயங்களையும் பேசி முடிவு செய்துவிட்டோம். ஆகையால் அனைத்து காட்சிகளுமே ஒரு டேக், 2 டேக்தான். சுதாவும் ரொம்பவே உணர்ச்சிமிக்க இயக்குநர். அவர் கண்களில் கண்ணீர் வரும்போதுதான் சில காட்சிகள் ஓகே ஆகும்.
இந்தப் படத்தில் மொத்தம் 96 கதாபாத்திரங்கள் இருக்கிறார்கள். ஒரு வசனம் பேசக் கூடிய கதாபாத்திரமாக இருந்தாலும், அவர்களை அலுவலகத்துக்கு வரவழைத்து ஸ்கிரீன் டெஸ்ட் செய்துள்ளார் சுதா.
க்ளைமேக்ஸுக்கு முந்தைய காட்சியில் ஒரு டிரைவர் வசனம் பேசி நடிக்க வேண்டிய காட்சி இருந்தது. அந்த டிரைவரைகூட ஒரு நடிகராக, ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக பார்க்க முடியவில்லை. அவர் பேசிய வசனம் படத்தை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தியது மாதிரி இருந்தது. அந்தளவுக்கு ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் மெனக்கிட்டுள்ளார் சுதா.
இதுவரை யாருமே விமானப்படை தளத்தில் போய் படப்பிடிப்பு செய்தது கிடையாது. பழுதடைந்த ஓடாத விமானத்தில்தான் படப்பிடிப்பு செய்திருப்பார்கள். ஆனால், நாங்கள் நிஜமான பயணிகள் விமானம், ஜெட் விமானங்களில் எல்லாம் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். பாலிவுட்டில் முக்கியமான தயாரிப்பாளர்களுக்குகூட அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. ஆனால், எங்களுக்குக் கிடைத்தது.
அந்த அனுமதி என்பது ஒரு பெரிய நடைமுறை. படத்தைப் பார்த்துவிட்டு அவர்கள் எதுவுமே சொல்லவில்லை. ஒவ்வொரு அலுவலகத்திலும் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லி, இறுதியில் சான்றிதழ் கிடைத்தது. என்னுடைய தனிப்பட்ட கருத்துகளுக்கும், படத்தின் சான்றிதழ் தாமத்துக்கும் சம்பந்தமில்லை.
புகழுக்காகவோ, நாமளும் இந்தத் துறையில் இருக்கிறோம் என்பதற்காக நான் எப்போதும் சினிமாவில் நடிக்க மாட்டேன். தயாரிக்க மாட்டேன். நாம் எடுக்கின்ற ஒவ்வொரு படமும் திரையுலகத்திலோ அல்லது மக்களிடையோ ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன்… இதுவே எனது கொள்கை..” என்று சொல்லி முடித்தார் நடிகர் சூர்யா.
The post ‘சூரரைப் போற்று’ படத்தில் 18 வயது பையனாக நடித்திருக்கும் சூர்யா appeared first on Touring Talkies.
]]>The post ‘சூரரைப் போற்று’ எப்போது வெளியாகும்..? – நாயகன் சூர்யா விளக்கம்…! appeared first on Touring Talkies.
]]>சூர்யா நடித்த ‘சூரரைப் போற்று’ திரைப்படம், வரும் அக்டோபர் 30-ம் தேதி அமேஸான் ஓடிடி தளத்தில் வெளியாவதாக இருந்தது. சில காரணங்களால், அது தள்ளிப் போவதாக நேற்றைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி சூர்யா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
“இது வழக்கமாக நாம் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு கடிதம் அல்ல. சில நேரம் எனது சூழல் இதற்கு முன் சந்தித்திராத வகையில் அமையும்.
இப்போது நான் மனந் திறந்த நிலையில் வெளிப்படையாக உங்கள் முன் நிற்கிறேன். பேச விரும்புகிறேன். ஏனென்றால், நீங்கள்தான் என்னை இந்த இடத்திற்குக் கொண்டு வந்து நிற்க வைத்திருக்கிறீர்கள் எல்லா வகையிலும். உங்களது பிரதிபலன் பாராத அன்பும் பாராட்டும், உண்மையும்தான் இந்த தகுதியை எனக்கு வாங்கி கொடுத்திருக்கிறது.
‘சூரரைப் போற்று’ படம் தொடங்கியபோதே இது ஒரு சவாலான முயற்சி என்று அதை எதிர்கொள்வதில் மகிழ்ச்சியாக நாங்கள் உணர்ந்தோம். இதற்கான படப்பிடிப்புத் தளங்கள் இதுவரை காணாதவை. பணி புரிந்த புதிய புதிய படப்பிடிப்பு இடங்கள், சந்தித்த மனிதர்கள், சந்தித்த வெவ்வேறு மொழியினர், பணியாற்றிய திறமைசாலிகள் என அனைத்தும் மறக்க முடியாதவை. அவை வித்தியாசமானவை மட்டுமல்ல குறிப்பிடத்தக்கதாகவும் இருந்தவை.
‘மாறா’ என்ற அந்த உலகத்தில் கொண்டு சேர்க்கும்விதமாக இருந்த அந்த பிரம்மாண்டமான அனுபவத்தை வெறும் வார்த்தைகளால் விளக்கிவிட முடியாது.
படத்தில் விமானப் படை சார்ந்த காட்சிகள் வருவது உங்கள் அனைவருக்கும் தெரியும். அதனால் அது சம்பந்தமாக ஏராளமான நடைமுறைகளும், அனுமதிகளும் பெற வேண்டியிருந்தது. இப்படம் தேசிய பாதுகாப்பு பற்றி பேசுவதால், அது சம்பந்தமாக இந்திய விமானப் படையுடன் நாங்கள் தொடர்பு கொண்டு அணுகி அவர்களது ஒத்துழைப்பையும் பெற வேண்டி இருந்தது.
படத்தை வெளியிடுவதற்கு முன் அவர்களிடம் தடையின்மை சான்றிதழ் பெற வேண்டி இருப்பதால், ‘சூரரைப் போற்று’ பட வெளியீடு சற்றுத் தாமதம் ஆகிறது. இது வழக்கமான நடைமுறைதான் வேறொன்றுமில்லை. கவலை வேண்டாம்.
‘சூரரைப் போற்று’ படம் என் இதயத்திற்கு நெருக்கமான படம். தனிப்பட்ட முறையில் என்னை மிகவும் பாதித்த கதை இது. துரதிஷ்டவசமாக சிறு தாமதம் ஆகிறது.
படம் தாமதம் என்பது எனக்கும் சிறு வலி ஏற்படுத்திடும் விஷயம்தான். ஏனென்றால் அவ்வளவு எதிர்பார்ப்புடன் நீங்கள் இருக்கிறீர்கள். இந்தத் தாமதத்தை எதிர்பார்ப்பைக் கூட்டும் ஒரு அம்சமாக நாம் நேர்நிலையாக எடுத்துக் கொள்வோம்.
இந்த சின்ன இடைவெளியை ‘மாறா’வின் உலகத்தில் நீங்கள் பிரவேசிக்க ஒரு முன் தயாரிப்பு நேரமாக எடுத்துக் கொள்ளலாம். இப்படியொரு பாசிட்டிவாக இந்தத் தடங்கலை எடுத்துக் கொள்வோம்.
விரைவில் ‘சூரரைப் போற்று’ படத்தின் சிறப்பு முன்னோட்டத்தை வெளியிட இருக்கிறோம். இத்துடன் ஒரு அழகான நட்பைப் பற்றிய பாடலையும் வெளியிடுகிறோம். அது நம் நட்புக்கான அர்ப்பணிப்பாகவும், அன்பின் அடையாளமாகவும் இருக்கும்.”
இவ்வாறு சூர்யா கூறியுள்ளார்.
The post ‘சூரரைப் போற்று’ எப்போது வெளியாகும்..? – நாயகன் சூர்யா விளக்கம்…! appeared first on Touring Talkies.
]]>