The post சுசீந்திரன் படத்தின் தலைப்பு அதிரடி மாற்றம்..! appeared first on Touring Talkies.
]]>இயக்குநர் சுசீந்திரன் ‘ஈஸ்வரன்’ படத்திற்குப் பிறகு தற்போது இயக்கி வரும் படத்தில் நடிகர் ஜெய் நாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு ‘சிவா சிவா’ என்று தலைப்பு வைத்திருந்தார்கள். இதன் போஸ்டர்களும் வெளியிடப்பட்டன.
இந்த நிலையில் தற்போது இந்தப் படத்தின் தலைப்பு ‘வீரபாண்டியபுரம்’ என்று மாற்றப்பட்டுள்ளதாம்.
இது குறித்து இயக்குநர் சுசீந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பைனல் மிக்சிங்கில் படத்தை பார்த்த நண்பர்கள், படம் சிறப்பாக அமைந்துள்ளதாக சொன்னார்கள். ஆனால் கிராமம் சார்ந்த படமாக இந்தப் படம் உருவாகியுள்ளதால் படத்தின் தலைப்பும் மண் சார்ந்த கிராமத்து தலைப்பாக இருந்தால் படத்திற்கு சிறப்பாக அமையும் என்று அவர்கள் கூறியதை கருத்தில் கொண்டு தயாரிப்பு தரப்புடன் கலந்தாலோசித்து தற்போது படத்தின் தலைப்பை ‘வீரபாண்டியபுரம்’ என்று மாற்றியுள்ளதாக…” கூறியுள்ளார்.
படத்தின் ட்ரெயிலர் விரைவில் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கு நாயகன் ஜெய்யே முதல் முறையாக இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The post சுசீந்திரன் படத்தின் தலைப்பு அதிரடி மாற்றம்..! appeared first on Touring Talkies.
]]>The post ‘ஈஸ்வரன்’ படத்தின் ஸ்டில்ஸ் appeared first on Touring Talkies.
]]>The post நடிகர் ஜெய் இசையமைத்து நடித்திருக்கும் ‘சிவ சிவா’ திரைப்படம்..! appeared first on Touring Talkies.
]]>இதன் பின்பு ‘சென்னை-600028’ படத்தில் நாயகனாக நடித்து, ‘சுப்ரமணியபுரம்’ மூலமாக பிரபலமான நடிகரானார்.
இதுவரையிலும் 30 படங்களில் நடித்திருக்கும் ஜெய், தற்போது நடித்திருக்கும் புதிய திரைப்படம் ‘சிவ சிவா.’
இந்தப் படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகியுள்ளது. தமிழில் ஜெய்யும், தெலுங்கில் ஆதியும் நாயகர்களாக நடித்துள்ளனர்.
தமிழில் இந்தப் படத்தில் நடித்ததோடு இல்லாமல் இந்தப் படத்திற்கு இசையும் அமைத்திருக்கிறார் ஜெய். ஜெய் பிரபல இசைமைப்பாளர் தேவாவின் தம்பியான சம்பத்தின் தம்பி என்பதால் இசை பாரம்பரியமான குடும்பத்தில் இருந்து வந்தவர். இருந்தாலும் ஜெய் இசையமைக்கும் முதல் படம் இதுதான்.
இந்தப் படத்தில் ஜெய்க்கு ஜோடியாக மீனாட்சி நடித்துள்ளார். மேலும் முக்கியக் கதாபாத்திரங்களில் ஜெயப்பிரகாஷ், காளி வெங்கட், பால சரவணன், அருள்தாஸ், முக்தார்கான் ஆகியோரும் நடித்துள்ளநர்.
வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கவிஞர்கள் வைரமுத்து, யுகபாரதி, ஏகாதசி ஆகியோர் இந்தப் படத்திற்கான பாடல்களை எழுதியுள்ளனர்.
இயக்குநர் சுசீந்திரன் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்டது. தற்போது பின் பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் படம் வெளியாகவுள்ளது.
The post நடிகர் ஜெய் இசையமைத்து நடித்திருக்கும் ‘சிவ சிவா’ திரைப்படம்..! appeared first on Touring Talkies.
]]>The post மின்னல் வேகத்தில் சுசீந்திரனின் படத்தில் நடித்து முடித்த சிம்பு..! appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில், சிம்புவை வைத்து சுசீந்திரன் ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியானபோதே.. சிம்புவை வைத்தா…? ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்துவிடுவாரா..? படம் முடிஞ்சிருமா..? சிம்பு வந்திருவாரா..? என்றெல்லாம் கேலிகளும், கிண்டல்களும் கோடம்பாக்கத்தில் பறந்து வந்தன.
ஆனால், இது பற்றி எதையும் கண்டு கொள்ளாமல் சிம்புவைத் திண்டுக்கல்லுக்குத் தூக்கிக் கொண்டு போன சுசீந்திரன் சொன்னதுபோலவே… எண்ணி முப்பதே நாட்களில் மொத்தப் படத்தையும் முடித்துவிட்டு சென்னைக்கு வந்துவிட்டார். வந்த கையோடு அடுத்த நாளே சிம்புவை டப்பிங்கும் பேச வைத்துவிட்டாராம்.
இப்படி சிம்பு, சுசீந்திரனிடம் சமர்த்துப் பிள்ளையாக மாறியதன் மர்மம் என்ன என்பது தெரியாமல் முழிக்கிறார்கள் கோடம்பாக்கத்து கிசுகிசு மன்னர்கள்.
இதற்கிடையில் நாளை நவம்பர் 9-ம் தேதி துவங்குவதாக இருந்த ‘மாநாடு’ ஷூட்டிங் ஒரு நாள் தள்ளிப் போய் 10-ம் தேதி துவங்குகிறதாம். இதுகூட சுசீந்திரன் படத்திற்காக சிம்பு, டப்பிங் பேசி முடிக்கத்தானாம்.
பாண்டிச்சேரியில் வரும் 10-ம் தேதி துவங்கும் ‘மாநாடு’ ஷூட்டிங் தொடர்ச்சியாக 40 நாட்கள் நடைபெறும் என்று தெரிகிறது. இதில் முதல் 15 நாட்கள் சிம்பு தொடர்ச்சியாக நடிப்பாராம். அடுத்து ஒரு 15 நாட்கள் இடைவெளிவிட்டு சிம்புவுக்கு விடுமுறை தரப்பட்டுள்ளதாம்.
இந்த விடுமுறைக்குக்கூட இன்னொரு காரணம் சொல்கிறார்கள். ’மாநாடு’ படத்தின் இயக்குநரான வெங்கட் பிரபு, நடிகர் அசோக் செல்வனை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறாராம்.
அந்தப் படத்தின் பாதி நாட்கள் ஷூட்டிங் இப்போதே முடிந்துவிட்டதாம். இன்னும் ஒரு 15 நாட்கள் கிடைத்தால் இந்தப் படம் முடிந்துவிடுமாம். இதனால் ‘மாநாடு’ படத்தின் இடையில் கிடைக்கும் அந்த 15 நாள் இடைவெளியில் அசோக் செல்வனின் படத்தை இயக்கி முடிப்பார் வெங்கட் பிரபு என்கிறது ‘மாநாடு’ வட்டாராம்.
The post மின்னல் வேகத்தில் சுசீந்திரனின் படத்தில் நடித்து முடித்த சிம்பு..! appeared first on Touring Talkies.
]]>The post சிம்பு நடிக்கவிருக்கும் படத்தின் இயக்குநர் மாற்றப்பட்டார்..! appeared first on Touring Talkies.
]]>இந்த நிலையில் அடுத்து அவர் நடிக்கவிருக்கும் படத்தின் இயக்குநர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார் என்பதும் உறுதியாகத் தெரிய வந்துள்ளது.
நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபுவின் ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதத் துவக்கத்தில் பாண்டிச்சேரியில் துவங்கவுள்ளது.
இந்த இடைவெளியில் மிக சீக்கிரமாக முடிவு செய்யப்பட்ட இயக்குநர் சுசீந்திரனின் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் மின்னல் வேகத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது.
‘மாநாடு’ படத்திற்குப் பின்பு சிம்பு நடிக்கவிருப்பது தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் தயாரிப்பில்.. இந்தப் படம் கன்னடத்தில் சென்ற ஆண்டு வெளியான மப்டி படத்தின் தமிழ் ரீமேக்காகும். இந்தப் படத்தில் கவுதம் கார்த்திக்கும் சிம்புவுடன் இணைந்து நடிக்கிறார்.
இந்தப் படத்தை இயக்கவிருந்த இயக்குநர் நார்தன்தான் தற்போது மாற்றப்பட்டுள்ளாராம். சிம்புவின் படம் துவங்க காலதாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால், இயக்குநர் நார்தனே படத்திலிருந்து விலகிக் கொண்டார்.
இயக்குநர் நார்தன், கன்னடத்தின் ஸ்டார் நடிகரான யாஷ் நடிப்பில் மிகப் பெரிய பொருட்செலவில் கன்னடத்தில் எடுக்கவிருக்கும் புதிய படத்தை இயக்கப் போகிறாராம் என்று உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த இயக்குநருக்குப் பதிலாக இப்போது சிம்புவின் இந்தப் புதிய படத்தை இயக்கவிருப்பது கிருஷ்ணாவாம். இவர், ஞானவேல்ராஜா தயாரித்த முதல் படமான ‘சில்லுன்னு ஒரு காதல்’ மற்றும் ‘நெடுஞ்சாலை’ ஆகிய படங்களை இயக்கியவர். தற்போது ஆரியை வைத்து ‘மானே, தேனே, பேயே’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.
The post சிம்பு நடிக்கவிருக்கும் படத்தின் இயக்குநர் மாற்றப்பட்டார்..! appeared first on Touring Talkies.
]]>The post சிம்புவின் அதிரடி மாற்றம் – தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி..! appeared first on Touring Talkies.
]]>முதலில் ‘மாநாடு’ படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு பின்பு, வழக்கம்போல ‘பிகு’ செய்து கொண்டிருந்த சிம்பு, கடைசியாக நடந்த சில, பல கட்ட கட்டப் பஞ்சாயத்துகளுக்குப் பிறகு படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் கொரோனாவால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. இந்த இடைவெளியில் ச்சும்மா இல்லாத சிம்பு தன்னுடைய உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினார். இதற்காகவே கேரளாவுக்கு இரண்டு முறை சென்று ஆயுர்வேத சிகிச்சையெல்லாம் பெற்று 100 கிலோவில் இருந்து தற்சமயம் 70 கிலோவாக உருமாறியுள்ளார்.
அதோடு, ‘மாநாடு’ படத்திற்கிடையே சுசீந்திரனின் படத்திலும் நடிக்க திடீரென்று ஒத்துக் கொண்டார். அதுலேயும் ஒரே ஷெட்யூலில் 35 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறுவதால் தன்னுடைய போர்ஷன் முழுவதையும் ஒரே கட்டமாக நடித்துக் கொடு்க்கப் போவதாக வாக்குறுதியளித்தவர்.. இன்றைக்கு திண்டுக்கல்லில் அதற்கான படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார்.
இந்தப் படப்பிடிப்பு முடிந்தவுடன் பாண்டிச்சேரியில் அடுத்த மாதம் துவங்கவிருக்கும் ‘மாநாடு’ படத்தின் ஷூட்டிங்கில் தொடர்ந்து நடிக்கப் போகிறாராம் சிம்பு.
இதற்கிடையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கும், மதுரை மீனாட்சி கோவிலுக்கும் ஆன்மீகப் பயணமும் மேற்கொண்டிருக்கிறார்.
சிம்புவிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம்… அவரது ரசிகர்களுக்கும், அவரை வைத்து படமெடுக்கத் தயாராக இருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது.
சுசீந்திரனின் திரைப்படம், ‘மாநாடு’ திரைப்படம் இரண்டும் சிம்புவால் எந்தச் சிக்கலும் இல்லாமல் வெளியானால்.. தயாரிப்பாளர்கள் கூட்டம் சிம்புவை மொய்க்கும் என்பதில் சந்தேகமில்லை.
“இனி எல்லாமே அவருடைய கைகளில்தான் உள்ளது…” என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
The post சிம்புவின் அதிரடி மாற்றம் – தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி..! appeared first on Touring Talkies.
]]>