The post “பான் இண்டியாவுக்கென படம் எடுப்பது பைத்தியக்காரத்தனம்” – இயக்குநர் அமீர் அதிரடி பேச்சு appeared first on Touring Talkies.
]]>‘மாநாடு’ என்கிற மிகப் பெரிய வெற்றிப் படத்தை கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் நிறுவனம் மூலம் இந்தப் படத்தை வெளியிடுகிறார்.
படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.
இந்த விழாவில் படத்தின் நாயகனான இயக்குநர் அமீர் பேசும்போது, “இந்தப் படத்தை பார்ப்பவர்கள் என் மீதுள்ள தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு படமாக மட்டும் பாருங்கள். இந்த படம் மொழியை பற்றி பேசும் படமே தவிர மொழிப் பிரச்சினையை பற்றியது அல்ல.
சமீப காலமாக இந்தி திணிப்பு, வட மாநில மக்களின் வருகை என தமிழ் மொழிக்கு எதிரான அநீதிகள் நடப்பதால் இந்த தலைப்பு தற்போது அவசியமாகிறது. நேரடி அரசியலுக்கு வரும் தகுதியை நான் இன்னும் வளர்த்து கொள்ளவில்லை. அதே சமயம் அரசியல் பேசிக்கிட்டேதான் இருக்கணும்.
நான் எப்போதும் கதையின் நாயகனாகத்தான் இருப்பேன். சினிமா என்பது இயக்குநரின் மீடியம். நாயகர்களால்தான் சினிமா என்கிற பிம்பத்தை நான் உடைக்க விரும்புகிறேன். அதேசமயம் ஒரு ரசிகனாக நடிகர்களை கொண்டாடுவோம்.
‘பான் இந்தியா’ கலாச்சாரம் இப்போது வருவதற்கு முன்பே மணிரத்னத்தின் ‘ரோஜா’, ‘பம்பாய்’ ஆகிய படங்கள் அதை சாதித்து காட்டிவிட்டன. இந்தியில் இருந்தும் ‘ஷோலே’, ‘ஹம் ஆப் கே’ போன்ற படங்கள் எல்லாம் இங்கே ஒரு வருடம் ஓடின. ‘கிழக்கு சீமையிலே’, ‘பருத்தி வீரன்’, ‘சுப்பிரமணியபுரம்’ படங்கள் எல்லாம் அந்தந்த மாநிலத்திற்கு ஏற்ற படம். அதனால் பான் இந்தியாவுக்கு என ஒரு படம் எடுப்போம் என்பதே ஒரு பைத்தியக்காரத்தனம்தான்…” என்றார்.
The post “பான் இண்டியாவுக்கென படம் எடுப்பது பைத்தியக்காரத்தனம்” – இயக்குநர் அமீர் அதிரடி பேச்சு appeared first on Touring Talkies.
]]>The post தமிழ்ச் சினிமா குறித்து ஒரே மேடையில் நடிகர் அருண் பாண்டியன், இயக்குநர் அமீர் கருத்து மோதல்..! appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை, வடபழனி கிரீன் பார்க் ஓட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில்தான் நடிகர் அருண்பாண்டியனும், இயக்குநர் அமீரும் கருத்து மோதலில் ஈடுபட்டு பரபரப்பை உண்டாக்கினார்கள்.
தற்போது தமிழ்ச் சினிமா மோசமான நிலைமையில் இருப்பதாக நடிகர் அருண் பாண்டியனும், “அப்படியெல்லாம் இல்லை. இந்தியாவிலேயே தமிழ்ச் சினிமாதான் அனைத்திலும் முன்னணியில் இருப்பதாக…” இயக்குநர் அமீரும் இந்த மேடையிலேயே பதிலுக்குப் பதில் பேசினார்கள்.
முதலில் நடிகர் அருண் பாண்டியன் பேசும்போது, “இங்கு இயக்குநர் சரவணன் பேசும்போது,‘ தமிழ் சினிமாவின் பொற்காலம் இது’ என தவறான தகவலை சொல்லி இருக்கிறார். தமிழ் சினிமாவின் பொற்காலம் என்பது, இயக்குநர் பாரதிராஜா படம் இயக்கிய காலம்… நாங்கள் நடித்த காலம்.. என அதனைத்தான் குறிப்பிடவேண்டும். தற்போது எல்லாம் மாறிவிட்டது.
தமிழ் சினிமா எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது என குறிப்பிட வேண்டுமென்றால், இன்று தமிழகத்தில் வேற்று மொழி படங்கள்தான் அதிக வசூலை குவிக்கின்றன. சமீபத்தில் வெளியான அஜித் படம் மற்றும் விஜய் படம் ஆகிய இரண்டு படங்களிலும் அதிகமானப் பணம் படத்திற்காக செலவழிக்கப்படவில்லை. தங்களுடைய சம்பளமாக எடுத்துக் கொண்டனர். தயாரிப்பு செலவின் 90 சதவீதத்தை ஊதியமாக கேட்டால் எப்படி படத்தை உருவாக்க முடியும்.
இந்த மேடையை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு, இந்தப் போக்கினை வன்மையாக கண்டிக்கிறேன். நாங்கள் படம் எடுக்கும்பொழுது மொத்த தயாரிப்புச் செலவில் 10 சதவிகிதம்தான் சம்பளம். மீதி 90 சதவிகிதம் படத் தயாரிப்பிற்காக இருக்கும். இதனால்தான் அந்தக் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் நல்ல, நல்ல கதைகளுடன் படங்கள் வெளிவந்து வெற்றியைத் தொட்டன.
இந்த ‘ஆதார் ’படத்தில் கருணாஸ் சம்பளம் வாங்கவில்லை. படத்தின் தயாரிப்பாளரை நாங்கள் யாரும் சந்திக்கவே இல்லை. இந்த மேடையில்தான் முதன்முதலாக சந்திக்கிறோம்.
தமிழ் சினிமா ஒரு மோசமான திரை உலகம். இருப்பினும் இந்த சினிமா மீது நம்பிக்கை வைத்து, புதிய தயாரிப்பாளர் ஒருவர் வந்திருக்கிறார் என்றால், அவரை மனதார பாராட்டுகிறேன். இந்தப் படத்திற்கு நாங்கள் உண்மையாக உழைத்திருக்கிறோம். அதனால் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும்…” என்றார்.
இதற்குப் பிறகு பேச வந்த நடிகரும், இயக்குநருமான அமீர், “அருண் பாண்டியன் இங்கே பேசும்போது நிறைய புள்ளி விவரங்களை சொல்லிவிட்டு, தமிழ் சினிமா தற்போது பின் தங்கி இருக்கிறது என குறிப்பிட்டார்.
நடிகர்களுக்கு படத்தின் பட்ஜெட்டில் 80 அல்லது 90 சதவிகிதத் தொகையைச் சம்பளமாக தர வேண்டியிருக்கிறது என சொன்னார். ஏன் கொடுக்கிறார்கள் என்பதை நான் கேட்கவில்லை. ஆனால், அவர் பேசும்போது ஒரு வார்த்தையை பயன்படுத்தினார். அதை தவறுதலாகத்தான் பயன்படுத்தியிருப்பார் என நினைக்கிறேன். ‘தமிழ் சினிமா எல்லா வகையிலும் பின் தங்கி இருக்கிறது’ என சொன்னார். இதை நான் ஏற்க மறுக்கிறேன்.
இந்தியாவிற்கே புதிய பாணியிலான சினிமாவைக் கற்றுக் கொடுத்தது தமிழ் சினிமா. ஒரு நாளும் தமிழ் சினிமா பின் தங்காது. ‘ஆர்.ஆர்.ஆர்.’, ‘கே.ஜி.எஃப்.’ போன்ற படங்களை வைத்து தமிழ் சினிமாவை எடை போடாதீர்கள். ஏனென்றால் நாங்கள் அந்த காலத்திலேயே ‘சந்திரலேகா’ என்ற பிரமாண்டமான படைப்பை உருவாக்கி இருக்கிறோம்.
‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘நாடோடி மன்னன்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’ போன்ற படைப்புகளுக்கு நிகராக இதுவரை வேறு எந்த மொழிப் படங்களும் உருவாகவில்லை. தமிழில் இதுவரையிலும் வெளியாகியிருக்கும் சமூகப் படைப்புகளுக்கு இணையாகவோ எளிமையான படைப்புகளுக்கோ வேற்று மொழி படங்கள் எதுவும் ஈடு இணையாக இல்லை. அதனால், தமிழ் சினிமா எப்போதும் இந்திய சினிமாவிற்கு முன்னோடிதான்.
ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ப வணிக சினிமாவாக மாறும்போது தமிழ்ச் சினிமாவில் பல மாற்றங்கள் ஏற்படும். ‘16 வயதினிலே’, ‘கிழக்கு சீமையிலே’ போன்ற படங்கள் வெளியானபோதும் வணிக சினிமா இருந்திருக்கிறது. ஆனால் அவை ஒரு போதும் இவைகள் வெளியாவதற்கு தடையாக இருந்ததில்லை என்பதை முக்கியமாக பார்க்க வேண்டும்.
தமிழ் சினிமாவில் பணியாற்றிய கலைஞர்கள்தான் இன்று வேற்று மொழிப் படங்களில் பணியாற்றுகிறார்கள். இயக்குநர் ராஜமவுலியே ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் விளம்பர நிகழ்வில், “தமிழ் சினிமா “எங்களது தாய் வீடு” என்று சொல்லியிருக்கிறார். இங்கு கற்றுக் கொள்ள வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது என்றும், எங்களுக்கு தமிழ் சினிமா பிரமிப்பை தருகிறது..” என்றும் சொன்னார்.
அதனால் தமிழ் சினிமாவில் முன்னேற்றத்திற்கு கலைஞர்களும், தொழில் நுட்பக் கலைஞர்கள் என்றைக்கும் அயராது பாடுபட்டுக் கொண்டிருப்பார்கள்…” என்றார்.
The post தமிழ்ச் சினிமா குறித்து ஒரே மேடையில் நடிகர் அருண் பாண்டியன், இயக்குநர் அமீர் கருத்து மோதல்..! appeared first on Touring Talkies.
]]>The post “வீர வசனம் பேசும் நடிகர்களே போராட வாருங்கள்”-இயக்குநர் அமீர் அழைப்பு appeared first on Touring Talkies.
]]>அவர் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை இது :
“வாழ்க ஜனநாயகம்.! ஒழிக சர்வாதிகாரம்!! ஜெய் தமிழ்நாடு!!!
இந்தியா. பல்வேறு கலாசாரங்களை, தேசிய இனங்களை, மொழிகளை உள்ளடக்கிய ‘உலகின் மாபெரும் ஜனநாயக நாடு’ என்பதால் மட்டுமே, சர்வதேச அரங்கில் மிகப்பெரும் மரியாதையையும், பெருமையையும் பெற்றுத் திகழ்கிறது.
இந்த மரியாதையையும், பெருமையையும் தகர்க்கும்விதமாக, ‘தேசப் பற்று’ என்கின்ற ஒரு போலியான பிம்பத்தின் மூலம் நம் தேசத்தின் பன்முகத் தன்மையை மாற்றத் துடிக்கும் இப்போதைய ஒன்றிய அரசு, கடந்த ஏழு ஆண்டுகளாக கொஞ்சம், கொஞ்சமாக அதற்கான வேலைகளை மிகுந்த திட்டமிடலோடு செய்து வருகிறது.
அந்த வகையில் ஏற்கனவே, மொழி வாரி மற்றும் மதவாரி சிறுபான்மையினர் மீதான அச்சுறுத்தல்கள், ஒடுக்குதல்கள், தாக்குதல்கள் நடந்து வருவதோடு, அதற்கு உறுதுணை செய்யும் CAA, NPR, NRC போன்ற சட்டங்கள், விவசாயிகளை ஒடுக்கும் புதிய வேளாண்மைச் சட்டங்கள் என மக்களுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை நடைமுறைப்படுத்தியும் வருகிறது.
மக்களுக்கு சேவை செய்வதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு, ஆட்சிக்கு வந்த நாள் முதல் மக்களோடு நேரடியாக மோதிக் கொண்டும், மக்களை அலைக்கழித்துக் கொண்டும் இருக்கிறது.
மேலும், மக்களின் உரிமையைப் பறிக்க புதிய சட்டங்களைக் கொண்டு வருவதும், அதை எதிர்த்து மக்கள் போராடுவதும் வாடிக்கையாகி – நெருக்கடிக் காலத்தைப் போல ஒரு புதிய வகையான அனுபவத்தை இந்தியத் துணைக் கண்ட மக்கள் அனைவருக்கும் ஒன்றிய அரசு தந்து கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல.
பாசிச ஒன்றிய அரசின் முகமூடியைக் கிழித்தெறிய முற்பட்ட முற்போக்காளர்களான நரேந்திர தபோல்கர், பன்சாரே, கல்புர்கி மற்றும் கவுரி லங்கேஷ் ஆகியோர் படுகொலை செய்யப் பட்டதற்கே இன்னும் முடிவு தெரியப்படாத நிலையில்,
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை மாற்றியும், பாடத் திட்டங்களின் மூலம் புதிய கட்டுக் கதைகளை புகுத்தியும், தமிழர்களின் போராட்ட வரலாற்றைத் திரித்துச் சொல்லும் ‘பேமிலிமேன்-2’ போன்ற திரைப்படங்கள் வெளிவர அனுமதித்தும்,
தற்புகழ்ச்சி பாடும் வகையில் மாண்புமிகு பிரதமர் மோதியைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப் படங்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் இச்சூழலில்,
இனிவரும் காலங்களில் இந்தியத் திரைப்படங்களின் மூலமாக நாட்டின் உண்மைத் தன்மையையும், மக்களின் எண்ண ஓட்டங்களையும் இந்தியத் திரைப்படப் படைப்பாளிகள் பதிவு செய்துவிடக் கூடாது என்கின்ற சர்வாதிகார நோக்கத்தோடு ‘ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா 2021’-ஐ ஒன்றிய அரசு தற்போது கொண்டு வந்திருக்கிறது என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை.
இப்புதிய சட்டத் திருத்த மசோதாவின் சரத்துகளில், முக்கியமாக ‘மத்திய திரைப்படத் தணிக்கைக் குழுவினரால் வழங்கப்பட்ட சான்றிதழை, ஒன்றிய அரசு நினைத்தால் ரத்து செய்யலாம்’ என்ற திருத்தம் ஆளும் பா.ஜ.க., அரசின் சர்வாதிகாரத் தன்மையை மிகத் தெளிவாக நமக்குக் காட்டுகிறது.
ஏற்கனவே, அரசுத் துறைகளை தனியாருக்குத் தாரை வார்ப்பதும், கருப்புச் சட்டங்களை மக்கள் மீது திணிப்பதும், பாதாள, பதுங்கும் அறைகளுடன் கூடிய ‘சென்ட்ரல் விஸ்டா’ என்ற புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை கட்டுவதும், அதிபர் தலைமையிலான ஒற்றை ஆட்சி முறையை நோக்கிய நகர்தலே என்பதே வரலாறு நமக்கு உணர்த்தும் படிப்பினையாகும்.
இதுபோன்ற செயல்கள் தொடருமானால், உலக அரங்கில் ‘மாபெரும் ஜனநாயக நாடு’ என்ற பெருமையை இந்தியா இழப்பதோடு, அன்பையும், அஹிம்சையையும் சொன்ன மகாத்மா காந்தி பிறந்த மண்ணுக்கு மாபெரும் தலைக் குனிவையும் ஏற்படுத்திவிடும் என்பதே நிதர்சனம்.
எனவே, கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான ‘ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா 2021’-ஐ, திரைப்படங்களில் அநீதிக்கு எதிராக வசனம் பேசிக் கொண்டிருக்கும் உச்ச நட்சத்திரங்களும், அவற்றை எழுதிக் கொடுத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கும் ஆளுமை மிக்க இயக்குநர்களும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் தயாரிப்பாளர்களும் ஒன்றாக இணைந்து நின்று எதிர்க்க வேண்டியது மிக மிக அவசியமாகிறது.
இந்நேரத்தில்,
அவர்கள் முதலில் கம்யூனிஸ்டுகளைப் பிடிக்க வந்தார்கள்.
ஆனால் நான் ஒரு கம்யூனிஸ்ட் அல்ல.
எனவே நான் ஏதும் பேசவில்லை.
பிறகு அவர்கள் சோசலிஸ்டுகளையும், தொழிற் சங்கவாதிகளையும் பிடிக்க வந்தார்கள்.
ஆனால் நானோ ஒரு சோசலிஸ்டோ, தொழிற் சங்கவாதியோ அல்ல.
எனவே நான் ஏதும் பேசவில்லை.
பின்னர் அவர்கள் யூதர்களைப் பிடிக்க வந்தார்கள்.
ஆனால் நானோ ஒரு யூதன் அல்ல.
எனவே நான் ஏதும் பேசவில்லை.
கடைசியில் அவர்கள் என்னைப் பிடிக்க வந்தனர்.
அப்போது எனக்காகப் பேச யாருமே இருக்கவில்லை.
– மார்டின் நியெ மொல்லெர்
என்று ஹிட்லரின் கொடுங்கோல் அரசுக்கு எதிராக போர்ச் சூழலில் எழுதப்பட்ட கவிதையைப் புரிந்து கொள்ளவும், அதே போல நாமும் இங்கே எழுத வேண்டியதும் அவசியமாகிறது.
எனவே, இப்போதாவது ஒன்றிணைந்து குரலெழுப்புவோம்.! போராடுவோம்.!
வாழ்க ஜனநாயகம்.! ஒழிக சர்வாதிகாரம் .!!
ஜெய் தமிழ்நாடு.!!!
The post “வீர வசனம் பேசும் நடிகர்களே போராட வாருங்கள்”-இயக்குநர் அமீர் அழைப்பு appeared first on Touring Talkies.
]]>