The post குடும்பக் கதையாக உருவாகியிருக்கும் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>ஶ்ரீவாரி ஃபிலிம் சார்பாக தயாரிப்பாளர் P.ரங்கநாதன் இப்படத்தை தயாரித்துள்ளார்.
நடிகர் கெளதம் கார்த்திக் நாயகனாக நடிக்க ஷிவத்மிகா ராஜசேகர் நாயகி பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் சேரன், சரவணன், டேனியல் பாலாஜி, வெண்பா, மொட்ட ராஜேந்திரன், விக்னேஷ், சிங்கம் புலி, கும்கி ஜொம்மல்லூரி, பாடலாசிரியர் சினேகன், நமோ நாராயணன், சௌந்தராஜன், மௌனிகா, மைனா, ‘பருத்தி வீரன்’ புகழ் சுஜாதா, பிரியங்கா, ‘நக்கலைட்ஸ்’ தனம் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.
சித்து குமார் இசையமைக்க, போரா பரணி ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்களை சினேகன் எழுதுகிறார். குடும்பங்களை மையமாக வைத்து, உருவாகி உள்ள இப்படத்தை இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கி உள்ளார்.
பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமான நடிகர், நடிகைகள் நடித்திருப்பதால் ஓடிடி நிறுவனங்கள் இந்தப் படத்தை வாங்குவதற்கு பெரிதும் முயற்சி செய்திருக்கிறார்கள்.
ஆனால் தயாரிப்பாளரும், இயக்குநரும் திரையரங்கில்தான் இந்தப் படத்தை வெளியிடுவோம் என்பதில் உறுதியாக இருந்ததால் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
திரையரங்குகளில் குடும்பங்கள் நிறைந்த கூட்டத்தை இந்தப் படம் கொண்டு வரும் என்று படத்தின் சில பகுதிகளை பார்த்த முன்ணனி திரைப்பட விநியோகஸ்தர்கள் சொல்கிறார்கள்.
இந்தப் படத்தின் தயாரிப்பாளரான ரங்கநாதன் இதற்கு முன்பு யோகி பாபு ஹீரோவாக நடித்த ‘தர்ம பிரபு’ படத்தைத் தயாரித்தவர்.
இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர் பி.ரங்கநாதன் பேசும்போது, “நான் தயாரித்த முதல் படமான ‘தர்ம பிரபு’ படம் நினைத்ததைவிடவும் ஹிட் ஆனதால், அடுத்த படம் தயாரிக்கலாம் என்று முடிவு செய்தேன். ஆனால், அது ஒரு பக்காவான குடும்ப படமாக இருக்க வேண்டும் என்று அப்போதே முடிவு செய்திருந்தேன்.
கூட்டுக் குடும்ப வாழ்க்கை அறவே அழிந்து போன காலமிது. கொரோனா என்னும் கொடூர தொற்றுக் காலத்தில்கூட பக்கத்து வீட்டுக்காரர் யார் என்பதுகூட தெரியாமல் வாழ்ந்துவரும் இன்றைய சமூகத்திற்கு கூட்டுக் குடும்ப வாழ்வியலையும், அதன் மகிழ்வையும் ஆவணப்படுத்தவும் அதனை அகன்ற திரையில் காண்பிக்கவும் பெரிதும் ஆசைப்பட்டேன்.
அப்போது என்னை சந்தித்த இயக்குநர் நந்தா பெரியசாமி இன்னொரு கதை சொன்னார். அதில் இம்ப்ரஸ் ஆகாத என்னிடம் “ஒரு குடும்பம் ஒரு காரணத்துக்காக பிரிஞ்சிருக்காங்க.. அவங்களை ஹீரோ எப்படி ஒண்ணு சேர்க்கிறார்ங்கிறதுதான் இன்னொரு படத்தின் ஒரு வரி கதை..” என்றார். அது நான் நினைத்த கூட்டுக் குடும்ப வாழ்க்கையுடன் ஒத்துப் போனதால் செலவைப் பற்றியே கவலைப்படாமல் இந்தப் படத்தைத் தயாரித்துவிட்டேன்…” என்றார்.
இயக்குநர் நந்தா பெரியசாமி பேசும்போது, “இது பொது முடக்கத்திற்கு முன் துவக்கப்பட்ட படம். 35 நட்சத்திரங்களுக்கு மேல் வைத்து இப்படத்தை ஆரம்பித்தோம். சேரன், சரவணன், கௌதம் கார்த்திக் என பெரிய நட்சத்திர பட்டாளமே இதில் நடித்திருக்கிறது.
பொது முடக்க காலத்தில் தயாரிப்பாளர் முழு அர்ப்பணிப்புடன் இப்படத்தை உருவாக்க ஒத்துழைப்பு தந்தார். இப்படம் நன்றாக வர முழு முதல் காரணமும் தயாரிப்பாளர்தான். பெரும் தடைகள் பலவற்றை தாண்டி இப்படத்தை முடித்துள்ளோம்.
தமிழில் குடும்பங்களுக்கான திரைப்படம் வராத ஏக்கத்தை இப்படம் போக்கும். ஒன்றாக இருக்கும், ஒரு குடும்பத்தில் சூழலால் வரும் பிரச்சனைகளை தாண்டி, அண்ணன், தம்பிகள் எப்படி ஒன்று சேர்கிறார்கள், நாயகன் எப்படி அவர்களை ஒன்று சேர்கிறான் என்பதுதான் கதை.
இப்படத்துக்கான துவக்கப் புள்ளி என் குடும்பத்தில் இருந்துதான் தொடங்கியது. ஒரு குடும்பத்தில் அண்ணன், தம்பி ரெண்டு பேரும் ரொம்ப நல்லவர்களாகவே இருந்தாலும் நடுவில் சிலர் தலையிட்டு தேவையில்லாததை பேசி இருவருக்குள்ளே பிரச்சினையை ஏற்படுத்திடுறாங்க..
இப்படி என்னோட அக்கா கணவருக்கும், அவருடைய அண்ணனுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து, பல உண்மைச் சம்பவங்களின் கோர்வையாக இந்தப் படம் உருவாகியுள்ளது,
பிரிந்த உறவுகளை இணைப்பதற்காக இரண்டு குடும்பங்கள் என்னென்ன முயற்சிகளெல்லாம் செய்கிறார்கள் என்பதுடன் செண்டிமெண்ட் காட்சிகளுடன் ஓர் இலக்கை நோக்கி கதை பயணப்படும். அந்த இலக்கு என்ன என்பதுதான் ரகசியம். கிளைமாக்சில் அந்த இலக்கை அடைவது எப்படி என்பதை சுவையான திரைக்கதையில் அனைவரும் ரசிக்கும்படி காட்சிப்படுத்தி இருக்கிறோம்.
இதில் கெளதம் கார்த்திக் எனக்கு ஹீரோவாக வாய்த்தது என்னோட அதிர்ஷ்டம்ன்னுதான் சொல்லணும். மூன்று மணி நேரம் நான் சொன்ன கதையைப் பொறுமையாக கேட்டார். அவரோட கதாபாத்திரத்தின் பெயர் சக்திவேல். படிப்பை முடித்து, தன் சித்தப்பாவுக்கு துணையாக இருக்கும் ஜூனியர். வீட்டுக்கு வெளியே பாயும் புலி என்றால் பெரியர்கள் முன்பாக பணிவு காட்டுவார்.
ஷிவத்மிகா ராஜசேகர் நாயகியாக அறிமுகமாகிறார். அவருக்கு நன்றாக தமிழ் தெரிந்ததிருந்தது படப்பிடிப்பில் உதவியாக இருந்தது. நன்றாக நடித்துள்ளார். இப்படத்திற்கு பிறகு அவருக்கு நிறைய வாய்ப்புகள் வரும்.
இயக்குநரும், நடிகருமான சேரன் இந்தப் படத்தின் இன்னொரு பலம். மொத்தக் கதையும் அவரைச் சுற்றித்தான் நடக்கும். கதை பிடித்த காரணத்தால் மட்டுமே அவர் நடிக்க சம்மதித்தார்.
படப்பிடிப்பில் எல்லோருமே ஒன்றாக ஒரு குடும்பம் போல்தான் இருந்தோம். படமும் எல்லோரும் கொண்டாடும் படமாக இருக்கும்..” என்றார்.
இந்த ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தின் டிரெய்லர், இசை வெளியீடு குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவுப்புகள் வெளியாகும் என படக் குழு அறிவித்துள்ளது.
இத்திரைபடம் நவம்பர் மாதம் திரைக்கு வரும் என தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
The post குடும்பக் கதையாக உருவாகியிருக்கும் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>The post “கெளதம் கார்த்திக் மாதிரியான ஹீரோ வேற யாருமே இல்லை” – தயாரிப்பாளரின் பாராட்டு appeared first on Touring Talkies.
]]>இயக்குநர் நந்தா பெரியசாமி எழுதி, இயக்கும் இப்படத்தினை ஶ்ரீவாரி ஃபிலிம் சார்பில் தயாரிப்பாளர் P.ரங்கநாதன் தயாரித்துள்ளார்.
கெளதம் கார்த்திக் நாயகனாக நடித்திருக்கிறார். ஷிவத்மிகா ராஜசேகர் நாயகி பாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குநர், நடிகர் சேரன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் சரவணன், டேனியல் பாலாஜி, வெண்பா, மொட்டை ராஜேந்திரன், விக்னேஷ், சிங்கம் புலி, கும்கி ஜோ மல்லூரி, பாடலாசிரியர் சினேகன், நமோ நாராயணன், சௌந்தராஜன், மௌனிகா, மைனா, ‘பருத்தி வீரன்’ சுஜாதா, பிரியங்கா, ‘நக்கலைட்ஸ்’ தனம் என பெரிய நடச்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.
இக்காலத்தில் அரிதாக நிகழும் குடும்பங்களை மையமாக வைத்து, அழகான கதையினை உருவாக்கியுள்ளார் இயக்குநர் நந்தா பெரியசாமி.
தற்போது இப்படத்தின் முழுப் படப்பிடிப்பும் முடிந்ததை, படக் குழுவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
ஶ்ரீ வாரி ஃபிலிம் சார்பில் தயாரிப்பாளர் P.ரங்கநாதன் கூறியதாவது, ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படம், பல ஆண்டுகளுக்கு பிறகு, எனது வாழ்வில் எனக்கு மிகவும் நெருக்கமான, சிறப்பான படமாக அமைந்தது.
இந்தப் படத்தில் மிகப் பெரிய நட்சத்திர கூட்டம் பங்கேற்றுள்ளனர். நடிகர் கௌதம் கார்த்திக் இப்படத்தில், எனக்கு பெரிதும் உறுதுணையாக இருந்து, மிக அர்ப்பணிப்புடன் படத்தை முடித்துக் கொடுத்தார். அவரது நடிப்பு, பொறுமை, இவை மட்டுமல்லாமல் படப்பிடிப்பில் ஏற்ற இறக்கம் காட்டாமல் அனைவரிடமும் ஒரே மாதிரியாக, மரியாதையுடன் நடந்து கொண்டது, எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சமீப காலமாக உள்ள நடிகர்களில் இந்த மாதிரியான குணத்தை, இவரை தவிர வேறு எந்த நடிகரிடமும் நான் கண்டதில்லை. இந்த குணம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு போகும்.
நடிகர், இயக்குநர் சேரன் அவர்களின் பங்கேற்பு இந்தப் படத்தினை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது. இந்தப் படத்தில் அவரது நடிப்பு மிகவும் பிரமாண்டமாக அமைந்திருக்கிறது. இவரது கதாபாத்திரம், ரசிகர்கள் மத்தியில் கண்டிப்பாக தனி இடம் பிடிக்கும்.
நடிகை ஷிவத்மிகா ராஜசேகர் பார்க்க பக்கத்து வீட்டு பெண்ணை போலவே உள்ளார். அவரது இயல்பான நடிப்பு, இந்த படத்தில் பெரிதும் பேசப்படும்.
40-க்கும் மேற்பட்ட நட்சத்திர பட்டாளத்தை ஒன்றிணைத்து, இந்தப் படத்தை உருவாக்க, பெரிதும் உதவிய இயக்குநர் நந்தா பெரியசாமிக்கு நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். அவரின் உதவியால்தான் இந்தப் படத்தை இவ்வளவு விரைவில் முடிக்க முடிந்தது…” என்றார்.
‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தின் டிரெய்லர், இசை மற்றும் திரை வெளியீடு குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவுப்புகள் வெளியாகும்.
The post “கெளதம் கார்த்திக் மாதிரியான ஹீரோ வேற யாருமே இல்லை” – தயாரிப்பாளரின் பாராட்டு appeared first on Touring Talkies.
]]>The post ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படப்பிடிப்பு துவங்கியது..! appeared first on Touring Talkies.
]]>இயக்குநர் நந்தா பெரியசாமி எழுதி இயக்கும் இப்படத்தினை ஶ்ரீ வாரி ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் P.ரங்கநாதன் தயாரிக்கிறார். சித்து குமார் இசையமைக்க, போரா பரணி ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்களை சினேகன் எழுதுகிறார்.
இந்தப் படத்தில் கெளதம் கார்த்திக், சேரன் இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஷ்வத்மிகா ராஜசேகர் நாயகியாக அறிமுகமாகிறார்.
மேலும், சரவணன், டேனியல் பாலாஜி, விக்னேஷ், சிங்கம் புலி, கும்கி ஜோ மல்லூரி, பாடலாசிரியர் சினேகன், நமோ நாராயணன், சௌந்தராஜன், மௌனிகா, மைனா, ‘பருத்தி வீரன்’ புகழ் சுஜாதா, பிரியங்கா, நக்கலைட்ஸ் தனம், வெண்பா உட்பட குடும்ப உறவுகளாக தமிழின் 30 முக்கிய நடிகர்கள் நடிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், நகர்ப் புறம், கிராமப் புறம் என அனைத்து இடங்களிலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று கிருஷ்ணகிரி பொன்மலை திருப்பதியில் மிக எளிமையான பூஜையுடன் துவங்கியது. கௌதம் கார்த்திக், ஷிவத்மிகா ராஜசேகர் நடிப்பில் நடன இயக்குநர் தினேஷ் வடிவமைப்பில் அழகான பாடலுடன் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
படம் குறித்து தயாரிப்பாளர் P.ரங்கநாதன் பேசும்போது, “எங்களுடைய இந்த ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படப்பிடிப்பு தளத்தில், நிலவும் குதூகலமும், கொண்டாட்டமும் மனதிற்கு பெரும் நிறைவை தந்துள்ளது.
நான் பல வருடங்களாக தமிழ்த் திரைத்துறையில் பயணிக்கிறேன். எப்போதுமே அழகான குடும்ப கதைகள், திரையுலகம் திரும்பி பார்க்கும் வெற்றியை தொடர்ந்து பெற்றிருக்கின்றன.
கடும் பசியில் உள்ளவர்களுக்கு அறுசுவை விருந்து படைப்பது போல்தான் குடும்ப கதைகள். அதில் சமைப்பவனுக்கு சம்பளம் மட்டுமல்லாமல் இதயம் நிறைந்த வாழ்த்துகளும் வந்து சேரும்.
முன்பே சொன்னதுபோல் ‘விஸ்வாசம்’, ‘கடைக்குட்டி சிங்கம்’ போன்ற குடும்ப படங்களுக்கு ரசிகர்களிடம் தனி வரவேற்பு இருந்து வருகிறது. இப்படியான படங்களை ரசிகர்கள் ஒரு முறை பார்ப்பதோடல்லாமல் அடுத்த முறை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை அழைத்து வந்து பார்த்து, ரசித்து கொண்டாடுவார்கள்.
எங்கள் ஶ்ரீ வாரி ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முக்கிய குறிக்கோளே குடும்பத்தில் உள்ள அனைவரையும் திரையரங்கிற்கு அழைத்து வரும் தரமான படங்களை தயாரிப்பதே ஆகும்..” என்றார்.
The post ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படப்பிடிப்பு துவங்கியது..! appeared first on Touring Talkies.
]]>