The post OTT-யிலும் வெற்றியடைந்தது ‘யசோதா’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>நடிகை சமந்தாவுடைய ஆக்ஷன்- த்ரில்லர் திரைப்படமான ‘யசோதா’ சமீபத்தில் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் நல்ல சாதனை படைத்தது.
சமந்தாவுடைய வியக்கவைக்கும் சண்டைக் காட்சிகள் மற்றும் அவருடைய நடிப்பு, திரைக்கதையின் ட்விஸ்ட் இவை எல்லாம் பார்வையாளர்களின் அட்ரிலின் சுரப்பை திரையரங்குகளில் அதிகரித்தது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய பின்பு தற்போது அமேசான் பிரைமில் ‘யசோதா’ ஸ்ட்ரீம் ஆகிக் கொண்டிருக்கிறது.
ஆச்சரியமாக, திரையரங்குகளில் கிடைத்ததற்கு இணையாக ஓடிடி தளத்திலும் யசோதாவிற்கு பார்வையாளர்களிடையே வரவேற்பு இருக்கிறது. தங்களது விமர்சனங்கள் மூலம் படத்திற்கு அன்பையும் ஆதரவையும் ரசிகர்கள் இணையத்தில் கொடுத்து வருகின்றனர். இதனால், ‘யசோதா’ திரைப்படம் ப்ரைமின் வாட்ச் லிஸ்ட்டில் டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது.
ஸ்ரீதேவி மூவிஸின் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் படத்தைத் தயாரித்து இருக்க, ஹரி மற்றும் ஹரிஷ் இயக்கத்தில் வாடகைத்தாய் கதாபாத்திரத்தில் சமந்தா நடித்திருந்தார். ‘மெலோடி பிரம்மா’ மணி ஷர்மா படத்திற்கு இசையமைத்து இருந்தார்.
உன்னி முகுந்தன் மற்றும் வரலக்ஷ்மி இருவரும் சமந்தாவுடன் கதைக்கு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ், ஷத்ரு, மாதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்பிரிடா, பிரியங்கா ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
The post OTT-யிலும் வெற்றியடைந்தது ‘யசோதா’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>The post ரசிகர்கள், விமர்சகர்களின் பாராட்டுகளைக் குவித்து வரும் எஸ்.ஜே.சூர்யாவின் ‘வதந்தி- தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ இணையத் தொடர் appeared first on Touring Talkies.
]]>டிஜிட்டல் தளத்தை பார்வையிடும் ரசிகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த தருணத்தில்.., கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட தற்போது அதிக அளவிலான உள்ளடக்கத்தை ரசிகர்கள் பார்வையிடுகிறார்கள். வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று புதிய படைப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும், காத்திருப்பும் ஒவ்வொரு வாரமும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இது பழக்கமாகவும் மாறிவிட்டது. இருப்பினும் எஸ்.ஜே.சூர்யாவின் ரசிகர்கள், ‘வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’எனும் வலைதளத் தொடரைக் காண்பதற்கு பேரார்வம் கொண்டிருந்தனர்.
அமேசான் ப்ரைம் வீடியோவில் அசல் தமிழ் தொடரான ‘வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ டிசம்பர் 2 ஆம் தேதியன்று வெளியானது. ஏராளமான ரசிகர்கள் விடியற்காலை வரை காத்திருந்து எஸ்.ஜே.சூர்யாவை டிஜிட்டல் தளத்தில் கண்டு ரசித்தனர்.
வதந்திகள், பொய்கள் மற்றும் வஞ்சகத்தின் வலையில் சிக்கி இருந்தாலும், உண்மையை வெளிக் கொண்டு வரும்வரை மனம் திரும்ப மறுக்கும் ஒரு சிக்கலான ஆனால் உறுதியான காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் விமர்சகர்களும் அவரது தனித்துவமான நடிப்பைப் பாராட்டுகிறார்கள்.
எழுதி, இயக்கியிருக்கும் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ், இந்த தொடரில் எஸ்.ஜே சூர்யாவிடமிருந்து சிறந்த நடிப்பை வெளிகொனந்துள்ளார். அவரது சிறந்த நடிப்பிற்கான பட்டியலில் இந்த தொடரும் இடம்பெறும். கிரைம் திரில்லர் ஜானரில் தயாராகி, எட்டு அத்தியாயங்களை கொண்டதாக இருந்தாலும், ரசிகர்கள் இந்த தொடரை முழுமையாக கண்டு ரசித்து, தங்களது விமர்சனங்களையும், எண்ணங்களையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
அந்த வகையில் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ளப்பட்ட சில விமர்சனங்களை இங்கே காணலாம்….
சில்வர் ஆரிப் எனும் ரசிகரின் பதிவு… ” ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் வெளியான வதந்தி எங்களை ஏமாற்றவில்லை. தரமான படைப்பாக இருந்தது. இந்திய சினிமாவின் மிகப் பெரும் படைப்பாக உருவாகி இருக்கிறது. எஸ் ஜே சூர்யா, எங்களை சிறந்த நடிப்பின் மூலம் வியக்க வைத்திருக்கிறார். என்றாவது ஒரு நாள் பள்ளி பாடப் புத்தகத்தில் எஸ் ஜே சூர்யாவின் தனித்துவமான நடிப்பு குறித்த ஒரு அத்தியாயம் இடம்பெறும் என நம்புகிறேன்.”
ரிச்சர்ட் மகேஷ் என்பவரின் பதிவில், ” எஸ். ஜே. சூர்யாவின் கம்பீரமான நடிப்பில் வெளியாகி இருக்கும் மற்றொரு படைப்பு. எந்த இடங்களிலும் குறை கூற முடியாத அளவிற்கு அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் ஒரு திகில் கதையை நேர்த்தியாக எழுதி இயக்கியுள்ளார். வெலோனியாக நடித்திருக்கும் நடிகை சஞ்சனா, முழு தொடரின் ஆன்மாவாக பரவி, ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கிறார். இதனை உருவாக்கிய புஷ்கர் -காயத்ரிக்கும் பாராட்டுகள்..!” என பதிவிட்டிருக்கிறார்.
நித்யா எனும் ரசிகையின் பதிவில்,” வதந்தி இதயத்தை கனமாக்கிய தொடர்..! எஸ்.ஜே சூர்யாவின் நடிப்பு உங்களை உணர்வுபூர்வமாக தொடருடன் இணைக்கும். என்னை பொருத்தவரை எத்தனை காட்சிகளில் கண்ணீர் வந்தது என்று தெரியவில்லை. ஒவ்வொரு கட்சியிலும் எஸ். ஜே. சூர்யாவின் சிறப்பான நடிப்பை காணலாம். இயக்குநரால் நேர்த்தியாக உருவாக்கப்பட்ட தொடர். அவருக்கும் நன்றி” என பகிர்ந்திருக்கிறார்.
யூமரி பாலன் எனும் ரசிகரின் பதிவில், ” என்ன ஒரு தொடர்..! இந்த தொடரில் பங்களிப்பு செய்த அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். அதிலும் குறிப்பாக தலைவர் எஸ் ஜே சூர்யா சார், மது அருந்தும் காட்சியும், வசனமும் எனக்கு இறைவி திரைப்படத்தின் உச்சகட்ட காட்சியை நினைவு படுத்தியது. அருமை.. தொடர் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்..” என குறிப்பிட்டிருக்கிறார்.
வி வேலன் என்பவரின் பதிவில், ” வதந்தி- எஸ் ஜே சூர்யா நடிப்பில் வேட்டையாடியிருக்கும் தொடர். ஒளிப்பதிவாளர், பின்னணி இசை, கதை, நடிப்பு அனைத்தும் பிரமாதம். இதன் மூலம் எஸ் ஜே சூர்யாவால் நடிக்க முடியாத வேடம் ஏதும் உண்டா? என்ற அளவிற்கு அவர் நடித்திருக்கிறார். அத்துடன் இதைக் கடந்து அவர் அடுத்து என்ன செய்யப் போகிறார் ? எஸ் ஜே சூர்யா ஒரு நேச்சுரல் ஸ்டார் என்பதை நிரூபித்திருக்கிறார்.” என பகிர்ந்திருக்கிறார்.
‘வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’எனும் வலைதளத் தொடரில், எஸ். ஜே. சூர்யாவின் அபாரமான நடிப்பு திறமைக்காக ஏராளமான ரசிகர்கள் தொடர்ந்து பாராட்டி வருகிறார்கள். ரசிகர்களின் அன்பு மழையிலும், பாராட்டிலும் எஸ் ஜே சூர்யா மூழ்கி விட்டார். இயக்குநர், கதாசிரியர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக ஆளுமை இருந்தாலும், பல திறமையான படைப்புகளை வழங்கி இருந்தாலும், நடிகராக வேண்டும் என்ற அவரது அசலான ஆசை, இந்த தொடரில் நிறைவேறி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் அவரை மலை அளவுக்கு புகழ்ந்து பேசும் நிலை உருவாகி, தொடர்கிறது.
The post ரசிகர்கள், விமர்சகர்களின் பாராட்டுகளைக் குவித்து வரும் எஸ்.ஜே.சூர்யாவின் ‘வதந்தி- தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ இணையத் தொடர் appeared first on Touring Talkies.
]]>The post வதந்திகள் செய்திகளாவது எப்படி என்பதை சொல்ல வரும் ‘வதந்தி’ இணையத் தொடர் appeared first on Touring Talkies.
]]>இந்த ‘வதந்தி’ தொடர், இளமமையும் அழகுமான வேலோனியின் உலகத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறது. இத்தொடரில் சஞ்சனா, வேலோனி பாத்திரத்தில் நடித்துள்ளார், அவர் இந்த தொடரின் மூலமாக நடிகராக அறிமுகமாகிறார். வெலோனி பாத்திரத்தின் கதை வதந்திகளால் நிறைந்துள்ளது. அதை கண்டுபிடிக்கும் உறுதி மிகுந்த போலீஸ் அதிகாரியாக எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். பொய்களின் வலையில் சிக்கியிருக்கும், உண்மையைக் கண்டறிய அவர் போராடும் கதை வெகு சுவாரஸ்யமாக சொல்லப்பட்டுள்ளது.
இந்த கதையை உருவாக்கியது குறித்து இயக்குநர் ஆண்ட்ரூ பேசும்போது, “நீண்ட காலமாக இந்த ‘வதந்தி’ தொடரின் கதை என் தலைக்குள் ஓடிக் கொண்டிருந்தது. அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பல விஷயங்கள், நாம் படிக்கும் அனைத்து நிகழ்வுகள் மற்றும் பல்வேறு தளங்களில் நமக்கு கிடைக்கும் தரவுகள் இது எல்லாம் நிறைந்ததுதான் இந்த தொடர்.
மிக நீண்ட காலமாக, எனக்குள் ஒரு விஷயம் ஓடிக் கொண்டிருந்தது, ‘நமக்கு தரப்படும் செய்திகளில் உண்மையிலேயே முழு உண்மையும் கிடைக்கிறதா, அல்லது உண்மையை சார்ந்து இருக்கும் பாதி உண்மையை மட்டுமே நாம் பெறுகிறோமா? இல்லை இவை அனைத்திலும், உண்மை மறைக்கப்பட்டு போகிறதா?’ இந்தக் கேள்விகள் என் மனதில் ஒலித்தன. இதுதான் இந்தக் கதையின் தொடக்கம்.
காலப்போக்கில், நான் நிறைய விஷயங்களைச் சேகரித்தேன். பின்னர் ஒரு கட்டத்தில் அது ஒரு தொடராக உருவாக்கப்படுவதற்கு என்னிடம் போதுமான விசயங்கள் இருப்பதை உணர்ந்தேன்..! அதுதான் இப்போது தொடராக மாறி உள்ளது.” என்றார்.
தயாரிப்பாளர்கள் புஷ்கர்- காயத்ரி பேசும்போது, “ஒரு தொடரைப் பார்ப்பது ஒரு வகையான சுற்றுலா போன்றது. மக்கள் எப்படி பயணம் செய்கிறார்கள் அல்லது ஆன்லைனில் படங்களைத் தேடுகிறார்கள் என்பதைப் போன்றது.
கடந்த 2-3 ஆண்டுகளில், தென்னிந்திய படங்கள் நாடு முழுவதும் உள்ள ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. இந்தியாவின் ஆழமாக வேரூன்றிய பகுதிகளில் இருந்து வரும் இந்த ‘வதந்தி’ போன்ற கதைகள், அத்தகைய தனித்துவத்தை கொண்டுள்ளன. அதுதான் எங்களை ஆக்கப்பூர்வமான பல கதைகளை மீண்டும் மீண்டும் வழங்க தூண்டுகிறது.
பிரைம் வீடியோவுடன், எங்களது இந்த கதை மிக பரந்த அளவிலான பார்வையாளர்களை சென்றடையவிருக்கிறது. இத்தொடர் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களுக்கு மேல் திரையிடப்பட உள்ளது.” என்றார்கள்.
The post வதந்திகள் செய்திகளாவது எப்படி என்பதை சொல்ல வரும் ‘வதந்தி’ இணையத் தொடர் appeared first on Touring Talkies.
]]>The post “இத்தொடரில் நடித்தமைக்காக சிறந்த நடிகர் விருதை நான் பெறுவேன்” – நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் நம்பிக்கை appeared first on Touring Talkies.
]]>இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய அசல் தமிழ் வலைதள தொடர் ‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’. இதில் வெலோனி எனும் கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி அறிமுகமாகிறார். இவருடன் எஸ்.ஜே.சூர்யா, விவேக் பிரசன்னா, நாசர், லைலா, குமரன் தங்கராஜன், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த வலைதள தொடருக்கு சைமன் கே கிங் இசையமைத்திருக்கிறார்.
அமேசான் ப்ரைம் வீடியோவில் டிசம்பர் 2-ம் தேதி முதல் வெளியாகவிருக்கும் அசல் தொடரான ‘வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ எனும் வலைதளத் தொடரின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற ‘ வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ எனும் வலைதள தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் அமேசான் பிரைம் வீடியோ ஒரிஜினல்ஸ் தலைவர் அபர்ணா புரோஹித், இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ், எஸ் ஜே சூர்யா, நாசர், லைலா, விவேக் பிரசன்னா, ஸ்மிருதி வெங்கட், குமரன் தங்கராஜன், தயாரிப்பாளர்களும், இயக்குநர்களுமான புஷ்கர் – காயத்ரி உள்ளிட்ட படக் குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேசுகையில், ”என்னுடைய உதவியாளரின் இயக்கத்தில் தயாராகி அமேசான் பிரைம் வீடியோ எனும் சர்வதேச அளவிலான புகழ்பெற்ற டிஜிட்டல் தளத்துடன் இணைந்து முதன்முதலாக வலைத்தள தொடரில் நடித்திருப்பதை பாக்கியமாக கருதுகிறேன்.
இந்தத் தொடரின் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் என்னுடைய உதவியாளர். அவரது இயக்கத்தில் முதன்முதலாக வலைத்தள தொடரில் நடிப்பதை பெருமிதமாக நினைக்கிறேன். இவர் ஏற்கனவே 2017-ம் ஆண்டில் என்னிடம் ஒரு கதையை சொன்னார். அப்போது அவரிடம், ‘நாம் இருவரும் இணைந்து பணியாற்றுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அதனால் வலுவான கதையை எழுதி வா’ என்றேன். இந்த முறை அவர் நல்ல கதையுடன் வந்தார். திரில்லர் என்றாலே அதில் பொழுதுபோக்கு அம்சம் நிறைய இருக்கும். இதில் உணர்வுபூர்வமான கதைகளும் உண்டு. இது பார்வையாளர்களை பெரிதும் ஈர்க்கும்.
தயாரிப்பாளர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரியின் தெளிவான திட்டமிடல், ப்ரைம் வீடியோவின் சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்பு, இயக்குநர் ஆண்ட்ரூ லூயிசின் கடின உழைப்பு… இவையெல்லாம் எனக்கு கிடைத்த ஆசீர்வாதங்கள். திறமையான இயக்குநர்களின் படைப்பின் மூலமாகத்தான், ஒரு நடிகர் சிறந்த நடிகராக புகழ் பெற முடியும்.
அந்த வகையில் என்னுடைய உதவியாளரின் இயக்கத்தில் ‘வதந்தி’ எனும் இந்தத் தொடரில் நடித்திருப்பதால், சிறந்த நடிகர் என்ற பெயர் கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன். ‘உண்மை நடக்கும். பொய் பறக்கும்’ என இந்த தொடரில் ஒரு வசனம் இடம் பெற்று இருக்கிறது. கன்னியாகுமரி பகுதியில் உள்ள மக்கள் இயல்பாக பேசும் இந்த பேச்சு, இந்த தொடருக்கு பொருத்தமானது. டேக் லைனாக இணைத்துக் கொள்ளலாம்.” என்றார்.
The post “இத்தொடரில் நடித்தமைக்காக சிறந்த நடிகர் விருதை நான் பெறுவேன்” – நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் நம்பிக்கை appeared first on Touring Talkies.
]]>The post கார்த்திக் சுப்பராஜின் ‘அம்மு’ படத்திற்கெதிராக நீதிமன்றத்தில் வழக்கு appeared first on Touring Talkies.
]]>அமேஸான் பிரைம் வீடியோவின் முதல் தெலுங்கு ஒரிஜினல் திரைப்படம் ‘அம்மு.’ இந்தப் படத்தை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் கல்யாண் சுப்ரமணியன் மற்றும் கார்த்திகேயன் சந்தானம் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரான கார்த்திக் சுப்பராஜ் இந்தப் படத்திற்கு கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றுள்ளார்.
இயக்குநர் சாருகேஷ் சேகர் எழுதி, இயக்கியிருக்கும் இந்த ‘அம்மு’ படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, நவீன் சந்திரா மற்றும் சிம்ஹா நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் தலைப்பான அம்மு என்ற பெயரை 2019-ம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதியன்று மயூரா சினி ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் வி.கணேசன் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளார்.
மேலும் இந்தப் படத்தின் கதையை 2020-ம் ஆண்டின் பிப்ரவரி 9-ம் தேதியன்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திலும் பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் 6-ம் தேதியன்று ஸ்டோன் பென்ச் நிறுவனம் தனது அம்மு படத்தை அமேஸான் பிரைமில் வெளியிடப் போவதாக அறிவித்தவுடன் இது குறித்து மயூரா சினி ஆர்ட்ஸ் நிறுவனம் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆனால் இதற்கு எந்தப் பதிலும் வராமல் போனதால் கடந்த 18-ம் தேதியன்று இந்தப் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுவது உறுதியானது. இதனால் மயூரா சினி ஆர்ட்ஸ் நிறுவனம் கடந்த 18-ம் தேதியன்று சென்னை மாநகர 7-வது உரிமையியல் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இது குறித்து எதிர்த் தரப்பினரின் கருத்தை வரும் 26-ம் தேதியன்று தாக்கல் செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டு வழக்கினை ஒத்தி வைத்துள்ளார்.
The post கார்த்திக் சுப்பராஜின் ‘அம்மு’ படத்திற்கெதிராக நீதிமன்றத்தில் வழக்கு appeared first on Touring Talkies.
]]>The post அமேசான் பிரைம் வீடியோவின் ஒரிஜினல் திரைப்படம் ‘அம்மு’ அக்டோபர் 19-ல் வெளியாகிறது appeared first on Touring Talkies.
]]>ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் கல்யாண் சுப்ரமணியன் மற்றும் கார்த்திகேயன் சந்தானம் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.
பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரான கார்த்திக் சுப்பராஜ் இந்தப் படத்திற்கு கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றுள்ளார்.
இயக்குநர் சாருகேஷ் சேகர் எழுதி, இயக்கியிருக்கும் இந்த ‘அம்மு’ படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, நவீன் சந்திரா மற்றும் பாபி சிம்ஹா நடித்துள்ளனர்.
குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் பரபரப்பான கதையையும், அவள் அதை விட்டு வெளியேறும் பயணத்தையும் விவரிக்கிறது.
திருமணம் என்பது தனது வாழ்க்கையில் காதலும் மேஜிக்கும் நிறைந்ததாக இருக்கும் என்ற கனவில் இருக்கும் அம்மு என்ற சராசரி பெண்ணைச் சுற்றித்தான் இந்தப் படம் சுழல்கிறது.
திருமண வாழ்க்கையில் அவளுடைய போலீஸ்-கணவன் அவளை முதல்முறையாக கை நீட்டி அடிக்கும்போது எல்லாமே தலைகீழாக மாறுகிறது. ஒரு முறை நடந்த சம்பவம் என்று அம்மு நினைக்க இது முடிவில்லாத கதையாகத் தொடர்கிறது. இதிலிருந்து அவள் எப்படி விடுபடுகிறாள் என்பதுதான் இந்த அம்மு படத்தின் கதைச் சுருக்கம்.
“ஐஸ்வர்யா, நவீன் மற்றும் சிம்ஹா ஆகிய நடிகர்களின் அற்புதமான நடிப்பு இல்லாமல் எங்களால் இதைச் சாதிக்க முடியாது. என் மீதும் எனது குழு மீதும் நம்பிக்கை வைத்த கார்த்திக் சுப்புராஜ், ஸ்டோன் பெஞ்ச் மற்றும் பிரைம் வீடியோ குழுவினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார் இயக்குநர் சாருகேஷ்.
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கூறுகையில், “ஒரு தவறான உறவில் சிக்கிய ஒரு பெண்ணின் பாத்திரத்தை எனக்குச் சித்தரிப்பது சவாலாகவும், அதன் தனிப்பட்ட முறையில் வலுப்படுத்துவதாகவும் இருந்தது. ஒரு பெண்ணாக அம்முவுடன் பெண்கள் தொடர்பு கொள்ள நிறைய இருக்கிறது, அதில் மிக முக்கியமானது எப்போதும் ஒருவரின் உண்மையைப் பேசுவதும் ஒருவரின் சுயத்திற்காக நிற்பதும் ஆகும்.
கார்த்திக் சுப்புராஜ், ஸ்டோன் பெஞ்ச், இயக்குநர் சாருகேஷ் சேகர், எனது சக நடிகர்கள் நவீன் மற்றும் சிம்ஹா மற்றும் பிரைம் வீடியோவில் உள்ள குழுவினரின் நிலையான ஆதரவிற்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். அம்முவுக்கு பார்வையாளர்களின் எதிர்வினைகருத்தைப் பார்க்க ஆவலாக உள்ளேன்” என்றார்.
“அம்முவின் கணவராக எனது கதாப்பாத்திரமான ரவியின் மனநிலையைப் புரிந்து கொள்வது முதலில் சவாலாக இருந்தது. ஒரு நடிகராக, இது போன்ற ஒரு சுவாரஸ்யமான கதையில் ஒரு பகுதியாக இருப்பதற்கும், அத்தகைய சவாலான கதாபாத்திரத்தை சித்தரிப்பதற்கும் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். சாருகேஷ், எழுத்தாளர் மற்றும் இயக்குநராக, பார்வையாளர்களின் மனதில் ஊடுருவும் ஒரு கதையை சிறப்பாகப் பின்னியுள்ளார்…” என்கிறார் நடிகர் நவீன் சந்திரா.
“கதையைக் கேட்ட மறுநிமிடம் அம்மு என்பது நான் ஒரு பகுதியாக இருக்க விரும்பிய தலைப்பு என்பதை நான் உணர்ந்தேன். ஐஸ்வர்யா மற்றும் நவீன் இருவரும் மிகவும் வலிமையான நடிகர்கள், அவர்கள் திரையில் நடிக்கும்போது உங்கள் கண்களைத் திருப்ப முடியாது. சாருகேஷ் கடைசிவரை பார்வையாளர்களை ஈர்க்கும் கதையை பின்னியிருக்கிறார்.” என்றார் நடிகர் பாபி சிம்ஹா.
இந்த ‘அம்மு’ திரைப்படம் 240+ நாடுகள் மற்றும் பிரதேசங்களில் வரும் அக்டோபர் 19 முதல் தெலுங்கில் நேரிடையாகவும், தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழியில் டப்பிங்களுடன் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.
The post அமேசான் பிரைம் வீடியோவின் ஒரிஜினல் திரைப்படம் ‘அம்மு’ அக்டோபர் 19-ல் வெளியாகிறது appeared first on Touring Talkies.
]]>The post ‘சீயான்’ விக்ரமின் ‘மகான்’ படத்தின் புதிய கானா பாடல் வெளியானது..! appeared first on Touring Talkies.
]]>‘எவன்டா எனக்கு கஸ்டடி..’ எனத் தொடங்கும் இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்கிறார். பாடலுக்கு இசை அமைத்து, சந்தோஷ் நாராயணன் பாடியிருக்கிறார்.
இந்தப் பாடல் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கில் ‘யெவ்வர்ரா மனகி கஸ்டடி..’ என்றும், மலையாளத்தில் ‘இனி ஈ லைப்ஃபில்..’ என்றும், கன்னடத்தில் ‘யவனோ நமகே கஸ்டடி..’ என்றும் வெளியாகியிருக்கிறது.
இந்த ‘மகான்’ படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரித்திருக்கிறார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தில் சீயான் விக்ரமுடன் துருவ் விக்ரம், பாபி சிம்ஹா, சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் நாயகனான ‘மகான்’ தனக்கென சில இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு தனி மனித சுதந்திரத்துடன் லட்சிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இந்தச் சூழலில் அவரது குடும்பத்தைவிட்டு அவர் வெளியேற வேண்டிய சூழல் உருவாகிறது. கோடீஸ்வரனாக வேண்டும் என்ற தனது கனவு நனவான பிறகு, தன்னுடைய சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள வாரிசு இல்லையே என்று உணர்கிறார். அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி நல்லதொரு தந்தையாக வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் தொடர்ந்தாரா.. என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
குடும்ப சென்டிமெண்ட் கலந்து பரபரப்பான அதிரடி மிகுந்த படைப்பாக இந்த ‘மகான்’ திரைப்படம் உருவாகியிருக்கிறது.
எதிர்பாராத தொடர் நிகழ்வுகளின் வழியாக நாயகனது வாழ்க்கை எப்படி பயணிக்கிறது என்பதை ஆக்சன் திரில்லருடன் விவரிக்கிறது ‘மகான்’ படத்தின் திரைக்கதை.
இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 10-ம் தேதி முதல் அமேஸான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியிடப்படுகிறது.
தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் ‘மகான்’ வெளியாகிறது. கன்னடத்தில் இந்த படத்திற்கு ‘மகா புருஷா’ என பெயரிடப்பட்டிருக்கிறது.
The post ‘சீயான்’ விக்ரமின் ‘மகான்’ படத்தின் புதிய கானா பாடல் வெளியானது..! appeared first on Touring Talkies.
]]>The post ‘ஜெய் பீம்’ படத்தின் டீஸர் appeared first on Touring Talkies.
]]>The post ‘ஜெய் பீம்’ படத்தின் டீஸர் appeared first on Touring Talkies.
]]>The post உலக அரங்கில் வலம் வரும் தனுஷின் ‘கர்ணன்’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>அது மட்டுமில்லாமல் OTT தளமான AMAZON PRIME-ல் ‘கர்ணன்’ மிகப் பெரிய வரவேற்பையும் பெற்றது.
கடந்த சுதந்திர தினத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘கர்ணன்’ திரைப்படம் ஒளிபரப்பாகி கிட்டத்தட்ட 9.4 TRP பெற்று ரசிகர்களை கவர்ந்தது சாதனை படைத்தது.
தற்போது அடுத்த பெருமையாக ஜெர்மனியில் FRANKFURT நகரில் வருகிற அக்டோபர் மாதம் 12,13,14 தேதிகளில் நடக்கவிருக்கும் NEW GENERATIONS INDEPENDENT INDIAN FILM FESTIVAL 2021-ல் ‘கர்ணன்’ திரைப்படம் திரையிடப்படவுள்ளது என்பது தமிழ் சினிமா ரசிகர்களை பெருமைப்பட வைத்திருக்கிறது.
The post உலக அரங்கில் வலம் வரும் தனுஷின் ‘கர்ணன்’ திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>The post நடிகர் சூர்யா தயாரிக்கும் நான்கு படங்களும் ஓடிடியில் வெளியாகின்றன appeared first on Touring Talkies.
]]>இது தொடர்பாக 2-டி என்டர்டைன்மென்ட் நிறுவனத்துடன் அமேசான் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
நேரடியாக அமேசன் பிரைம் வீடியோவில் திரையிடப்படும் திரைப்படங்களின் பட்டியலில் ‘ஜெய் பீம்’, ‘உடன்பிறப்பே’, ‘ஓ மை டாக்’ மற்றும் ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ ஆகிய படங்கள் இடம் பெற்றிருக்கின்றன.
இந்தத் திரைப்படங்களில் தமிழ் திரை உலகின் திறமையான நடிகர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும், புதுமுகங்களும் இடம் பெற்றிருக்கிறார்கள்.
இதில் ‘ஜெய் பீம்’ படத்தில் பிரகாஷ்ராஜ், ரமேஷ் ராவ், லிஜாமோள் ஜோஸ், ரஜிஷா விஜயன் மற்றும் மணி கண்டன் ஆகியோருடன் சூர்யாவும் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார்.
‘உடன் பிறப்பே’ என்ற படத்தில் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி, சூரி, கலையரசன், நிவேதிதா சதீஷ் மற்றும் சித்து ஆகியோர் நடிப்பில் குடும்ப ஃபேமிலி டிராமாவாக தயாராகியுள்ளது.
‘ஓ மை டாக்’ படத்தில் அருண் விஜய், அர்ணவ் விஜய், விஜயகுமார், மகிமா நம்பியார் மற்றும் வினை ராய் ஆகியோரின் நடிப்பில் குழந்தைகளை மையப்படுத்தி உருவாகியிருக்கிறது.
ரம்யா பாண்டியன், வாணி போஜன், மிதுன் மாணிக்கம், வடிவேல் முருகன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் நையாண்டி, நகைச்சுவையை மையப்படுத்தி ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ படம் உருவாகியுள்ளது.
2-டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் ‘சூரரை போற்று’ மற்றும் ‘பொன்மகள் வந்தாள்’ ஆகிய படங்கள் இதே அமேஸான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில்தான் வெளியாகின. அப்போது இந்தப் படங்களுக்கு உலகளவில் பார்வையாளர்களிடமிருந்து எதிர்பார்க்காத அளவில் ஆதரவு கிடைத்துள்ளது.
2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தலைவரான சூர்யா இது குறித்துப் பேசுகையில், “கடந்த ஆண்டு பெரும் மாற்றமாக அமைந்தது. எங்களுக்கு முன்னோடிகள் யாரும் இல்லாத சூழ்நிலையில், திரைப்பட வெளியீட்டில் பல்வேறு புதுமைகளை நாங்கள் மேற்கொண்டோம்.
2டி நிறுவனத்தின் அண்மைய திரைப்பட வெளியீடுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ட்ரீமிங் சேவையாக அமேசான் இருக்கிறது. ‘பொன்மகள் வந்தாள்’ முதல் ‘சூரரைப் போற்று’வரை இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பார்வையாளர்களை சென்றடைந்தது.
இதற்கு காரணமான அமேசான் பிரைம் வீடியோ நிறுவனத்துடன் தொடர்ந்து தொழில் ரீதியான ஒத்துழைப்பை நீட்டிப்பதில் நாங்கள் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறோம்…” என்றார்.
The post நடிகர் சூர்யா தயாரிக்கும் நான்கு படங்களும் ஓடிடியில் வெளியாகின்றன appeared first on Touring Talkies.
]]>