The post தெலுங்கு அல்டிமேட் பிக்பாஸில் கலக்கும் பிந்து மாதவி appeared first on Touring Talkies.
]]>தமிழ் சினிமாவில் ‘வெப்பம்’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை பிந்து மாதவி, தொடர்ந்து ‘கழுகு’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘பசங்க-2’ என பல வெற்றிப் படங்களில் நடித்தார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் பல வெற்றிப் படங்களில் நடித்தார்,
தமிழில் கமல்ஹாசன் நடத்திய ‘பிக்பாஸ்-4’-ல் கலந்து கொண்டு புகழ் பெற்றார். ‘பிக்பாஸில்’ கலந்து கொண்ட பிறகு அவருக்கு பெருமளவில் ரசிகர் பட்டாளம் தமிழகத்தில் உருவாகியது.
இதனை தொடர்ந்து தற்போது தமிழைப் போல தெலுங்கு டிஜிட்டலில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் ‘நான் ஸ்டாப் அல்டிமேட் பிக் பாஸ்’ போட்டியில் பங்கேற்பாளராக கலந்து கொண்டுள்ளார்.
இதற்கு பெறும் வரவேற்பு கிடைத்துள்ளது. இப்பொழுதே ‘பிந்து மாதவி ஆர்மி’ என பல டிவிட்டர் மற்றும் ஹாஷ் டாக்குகள் துவங்கப்பட்டு பரபரப்பாகி வருகிறது.
இந்த போட்டியினை நடிகர் நாகார்ஜுனா அக்கினேனி தொகுத்து வழங்கி வருகிறார்.
இப்போட்டி பிந்து மாதவிக்கு தெலுங்கிலும் பெரும் புகழை பெற்றுத் தருமென அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்து வருகின்றனர்.
பிந்து மாதவி தற்போது தமிழில், நடிகர் சசிகுமாருடன் ‘பகைவனுக்கு அருள்வாய்’, ‘மாயன்’ மற்றும் இயக்குநர் ரஞ்சித் ஜெயகொடி இயக்கத்தில் நாயகியை முதன்மை கதாபாத்திரமாக கொண்ட ‘யாருக்கும் அஞ்சேல்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
The post தெலுங்கு அல்டிமேட் பிக்பாஸில் கலக்கும் பிந்து மாதவி appeared first on Touring Talkies.
]]>The post பிக்பாஸ் சீஸன்-5 டைட்டில் வின்னராக ராஜூ வெற்றி பெற்றார் appeared first on Touring Talkies.
]]>விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் என்ற ரியலிட்டி ஷோ தொடர்ந்து 5-வது ஆண்டாக நடந்து வருகிறது. 100 நாட்கள் ஒரு வீட்டுக்குள் 15 போட்டியாளர்கள் சில நிபந்தனைகளுடன் இருக்க வேண்டும். தினமும் அவர்களிடையே போட்டிகள் நடைபெறும். இவர்களில் சிறந்தவர்கள் யார் என்று தொலைக்காட்சி ரசிகர்களிடையே வாக்குப் பதிவு நடைபெறும். ஒவ்வொரு வாரமும் இந்த வாக்குப் பதிவில் முகக் குறைந்த வாக்குகளைப் பெற்றவர் வெளியேற்றப்படுவார். மற்றவர்கள் அந்த வீட்டிலேயே தொடர்வார்கள்.
இப்படி 100 நாட்கள்வரையிலும் தாக்குப் பிடித்து கடைசியில் அதிக வாக்குகளைப் பெற்ற போட்டியாளர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.
கடந்த 4 சீஸன்களும் விஜய் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது 5-வது சீஸனும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த சீஸனில் ராஜூ, பிரியங்கா, நிரூப், அபிஷேக், இமான் அண்ணாச்சி, சின்னப் பொண்ணு, பாவ்னி, ஐக்கி பெர்ரி, மதுமிதா, சம்யுக்தா, தாமரைச் செல்வி, சிபி, வருண், அக்சரா, நாடியா சாங், அபிநய் ஆகிய 15 பேர் முதல் நாளில் இருந்தே போட்டியிட்டனர். இடையில் வைல்டு கார்டு எண்ட்ரியாக டிவி நடிகர் சஞ்சீவும், நடனக் கலைஞர் அமீரும் உள்ளே வந்தனர்.
பல்வேறு போட்டிகளுக்கிடையே கடைசி வாரத்தில் ராஜூ, பிரியங்கா, பாவ்னி, அமீர், நிரூப் ஆகிய 5 பேர் மட்டுமே அந்த வீட்டில் இருந்தனர். இவர்களில் யாருக்கு டைட்டில் என்ற கடைசிக் கட்ட போட்டி நேற்றைக்கு நடைபெற்றது.
அப்போது அதிகப்படியான வாக்குகளைப் பெற்றிருந்த ராஜூ இந்த பிக்பாஸ் சீஸன்-5-ன் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். இவருக்கு பரிசுத் தொகையாக 50 லட்சம் ரூபாய் தரப்பட்டது.
இரண்டாமிடத்தை பிரியங்காவும், மூன்றாமிடத்தை பாவ்னியும், நான்காமிடத்தை அமீரும், ஐந்தாமிடத்தை நிரூப்பும் பிடித்தனர்.
The post பிக்பாஸ் சீஸன்-5 டைட்டில் வின்னராக ராஜூ வெற்றி பெற்றார் appeared first on Touring Talkies.
]]>The post பிக்பாஸில் இந்த வாரம் மதுமிதா வெளியேறினார் appeared first on Touring Talkies.
]]>பிக்பாஸின் முதல் பகுதியில் இருந்து வாரா, வாரம் வெளியாகும் நபர்களின் தகவல்கள் மட்டும் அதிகப்படியாக எதிர்பார்க்கப்படும். பிக்பாஸ் ரசிகர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பே இதுவாகத்தான் இருக்கிறது.
ஆனால் தற்போது நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-ம் பாகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் வெளியேற்றப்படுபவர் பற்றிய தகவல் சனிக்கிழமை இரவிலேயே தெரிந்துவிடுகிறது.
அந்த வகையில் இந்த வாரம் வெளியேறியவர் யார் என்பது நேற்றைய இரவு படப்பிடிப்பு முடிந்தவுடனேயே வெளியாகிவிட்டது.
இந்த வாரம் ராஜு, அபினய், அக்ஷரா, இமான் அண்ணாச்சி, சிபி, பாவனி, மதுமிதா ஆகியோர் எவிக்ஷன் புராசஸிற்கான நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் ராஜூ காப்பாற்றப்பட்டார் என்று நேற்றைக்கே கமல் சொல்லிவிட்டார்.
மேலும், ஓட்டெடுப்பில் அபினய் மற்றும் மதுமிதா ஆகிய இருவரும்தான் கடைசி இரண்டு இடங்களை பிடித்திருந்தனர். இதனால் அவர்களில் ஒருவர்தான் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அபினய் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் எதையுமே செய்யவில்லை.. ஆகையால் அவரை வெளியேற்ற வேண்டும் என்று பிக்பாஸ் ரசிகர்கள் கூறி வந்தனர். ஆனால் மதுமிதாதான் நேற்றைய தினம் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் ஸ்ருதி வெளியேற்றப்பட்டபோதுகூட அவருக்குப் பதிலாக அபினய்யை வெளியேற்றி இருக்கலாம் என்று கூறினார்கள். இந்நிலையில் இந்த வாரமும் அபினய் காப்பாற்றப்பட்டு, மதுமிதா வெளியேற்றப்பட்டுள்ளார்.
The post பிக்பாஸில் இந்த வாரம் மதுமிதா வெளியேறினார் appeared first on Touring Talkies.
]]>The post Big Boss-5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களின் பட்டியல் appeared first on Touring Talkies.
]]>1. கானா இசைவாணி (பாடகி)
2. ராஜு ஜெயமோகன் (சின்னத்திரை நடிகர்)
3. மதுமிதா (காஸ்ட்யூம் டிசைனர்)
4. அபிஷேக் ராஜா (விமர்சகர்)
5. நமிதா மாரிமுத்து (திருநங்கை)
6. பிரியங்கா தேஷ்பாண்டே (விஜே)
7. பாவ்னி (மாடல், சீரியல் நடிகை)
8. அபிநய் வாடி (நடிகர்)
9. சின்னப் பொண்ணு (நாட்டுப்புற பாடகி)
10. நதியா சங் (பாடகி)
11. வருண் (நடிகர்)
12. இமான் அண்ணாச்சி (நடிகர்)
13. ஸ்ருதி (நடிகை, மாடல்)
14. அக்சரா (நடிகை, மாடல்)
15. ஐக்கி பெர்ரி (மாடல், பாடகி)
16. தாமரை செல்வி (நாடக நடிகை)
17. சிபி சந்திரன் (நடிகர்)
18. நிரூப் நந்தகுமார் (நடிகர்)
ஆகியோர் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
The post Big Boss-5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களின் பட்டியல் appeared first on Touring Talkies.
]]>