திரைப்பட நடிகைகள் குறித்து தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக பேசி வரும் பயில்வான் ரங்கநாதனுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், வடிவேலுவுடன் காமெடி காட்சிகளில் நடித்த டெலிபோன் ராஜ் ஒரு பேட்டியில், “அவருக்கு எண்பது வயது ஆகிவிட்டது. படப்பிடிப்பில் நிற்கக்கூட முடியாது, கண்களில் தொடர்ந்து நீர் வழியும், ஞாபக மறதியால் வசனங்களை பேச முடியாது.
ஆகவே பட வாய்ப்புகள் இல்லை.
ஆனால் சம்பாதிக்கவில்லை என்றால் அவரது குடும்பத்தினர் வீட்டுக்குளேயே விடமாட்டார்கள். ஆகவே, ஆபாசமாக பேசி, சம்பாதிக்கிறார், இந்த கேவலமான மனிதர்” என்று கூறியிருக்கிறார் டெலிபோன் ராஜ்.