Thursday, April 11, 2024

“காமெடிக்கு சொன்னது வைரலாயிருச்சு” – நடிகை ஐஸ்வர்யாவின் வருத்தம்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவின் மூத்த நடிகையான லஷ்மியின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யா சமீபத்தில் பல்வேறு யுடியூப் சேனல்களுக்கு அளித்த பேட்டிகளால் மிகுந்த பரபரப்புக்குள்ளார்.

அந்தப் பேட்டிகளில் “வீடு, வீடாகச் சென்று சோப் போடுகிறேன்” என்றும், “சாப்பாட்டுக்கே வழியில்லை. இப்போ ஒரு வேளைதான் சாப்பிடுகிறேன்” என்றும், “மளிகைக் கடை அண்ணாச்சிக்கு நான்கு மாதம் பாக்கி” என்று சொல்லி பரபரப்பை ஊட்டியிருந்தார். மேலும் “தற்போது வேலையில்லை என்பதால் டாய்லெட் கழுவுற வேலையிருந்தாலும் செய்வேன்..” என்றும் அதிர்ச்சியையும் கொடுத்திருந்தார்.

ஆனால் இப்போது மீண்டும் ஒரு பேட்டியளித்திருக்கும் ஐஸ்வர்யா “முன்பு யுடியூப் சேனலில்ல நான் சொன்னதெல்லாம் ச்சும்மா காமெடிக்குத்தான்” என்று சொல்லி மீண்டும் காமெடி செய்திருக்கிறார்.

அவர் இது குறித்து அளித்துள்ள பேட்டியில், “அதெல்லாம் காமெடிக்கு சொன்னது. நெட்டிசன்ஸ் வைரலாக்கிட்டாங்க. அவ்ளோதான். இப்போ நான் ஹேண்ட் மேட் சோப் தயாரிக்கிறேன். யுடியூப் சேனல் நடத்துறேன். இது இரண்டும் எப்பவுமே நிக்காதுன்னு எனக்குத் தெரியும். இது இரண்டுமே என் பெர்ஸனல் கிரியேஷன்ஸ். என்னோட பேபிஸ். சினிமா, சீரியல்ல நான் ஜஸ்ட் எம்ப்ளாயி அவ்ளோதான்.

நான் யோகா பண்ணி ஒரு வேளைதான் சாப்பிடுறேன்னு சொன்னதையே “காசில்லாம ஒருவேளைதான் சாப்பிடுறாராம்”ன்னு கிளிக் பைட் ஆக்கிட்டாங்க. நான் 2016-ம் ஆண்டில் இருந்தே சோப் வித்திட்டிருக்கேன். அது இப்பத்தான் வைரலாகியிருக்கு. கேக் 2012-ல இருந்தே வித்திட்டிருக்கேன். நிறைய பேரு வாங்கியிருக்காங்க. ஆனா அந்த இண்டர்வியூவுக்கு அப்புறமா என்னோட கஸ்டமர் எண்ணிக்கை கூடியிருக்கு. இப்போ நிறைய பேர் சோப்பும் வாங்குறாங்க..” என்றார் மகிழ்ச்சியுடன்..!

- Advertisement -

Read more

Local News