Touring Talkies
100% Cinema

Tuesday, May 13, 2025

Touring Talkies

ரொம்ப சிறப்பானவங்களா நாம் இருக்க வேண்டிய அவசியமில்லை… சிவகார்த்திகேயன் OPEN TALK! #AMARAN

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாகவும் சாய்பல்லவி கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படம் “அமரன்”. இந்தப் படத்தை கமல்ஹாசன் தயாரிக்க, இசையமைப்பை ஜி.வி. பிரகாஷ் குமார் மேற்கொண்டு உள்ளார். இதற்கிடையில் மலேசியாவில் நடைபெற்ற “அமரன்” படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பேசும்போது, “அமரன் நிச்சயம் நல்ல அனுபவத்தை வழங்கும் படமாக இருக்கும்.

இந்தப் படத்தின் கதாபாத்திரத்துடன் நீங்கள் உங்களையே தொடர்பு கொள்ள முடியும். இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். அதற்காக மிகுந்த உழைப்பை படத்தில் கொடுத்துள்ளோம். அதன் பிறகு தொகுப்பாளர், “வாழ்க்கையில் எப்படியாவது முன்னேற விரும்புவோருக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு சிவகார்த்திகேயன், நானே இங்கே வந்துவிட்டேன், அவர்களும் வர முடியாது என்று ஏன் நினைக்க வேண்டும்… நான் ரொம்ப தைரியமான ஆள் இல்லை. எல்லாத்துக்கும் மிகுந்த பயப்படுவேன். நான் முதல் முறை மேடையில் பேசியபோது நடுக்கம் உண்டாக, மைக்கை பிடிக்கவே திகைத்து போய்விட்டேன். ஆனால் முன்னேற வேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்தது.

மிக மிக சிறப்பானவராக இருக்க வேண்டிய அவசியமில்லை.நம் வேலையை கொஞ்சம் சரியாக செய்தால்கூட மக்கள் நம்மை ஏற்றுக்கொள்வார்கள். தமிழ் மக்களிடம் நான் வியந்த விஷயம் இதுதான். நம்மால் சிறிய முயற்சி செய்தால் கூட, அவர்கள் நம்மை கைதட்டி முன்னேற்றுவார்கள். இதை உணர்ந்ததால்தான் இப்போது இதைப் பகிர்ந்து சொல்கிறேன்,” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News