Friday, April 12, 2024

விக்ரம் பிரபு-ஸ்முருதி வெங்கட் நடிக்கும் ‘பகையே காத்திரு’ திரைப்படம் துவங்கியது

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கந்தன் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ராசி முத்துச்சாமி, மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் ‘பகையே காத்திரு’.

இந்தப் படத்தில் விக்ரம் பிரபு வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். இதுவரையில் அவர் நடித்த படங்களில் இருந்து மாறுபட்ட படமாகவும், முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லர் நிறைந்த சமூகப் படமாகவும் இது உருவாகிறது.

கதாநாயகியாக ஸ்முருதி வெங்கட் நடிக்கிறார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், வித்யா பிரதீப், சாய்குமார் சிவா ஷாரா, பாலா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகளும் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு செல்வக்குமார்.S ஒளிப்பதிவு செய்ய, ஷாம் C.S இசை அமைக்கிறார். பிரமாண்டமான அரங்குகளை கலை இயக்குனர்  M.சிவா யாதவ் அமைக்க, படத் தொகுப்பினை ராஜா முஹமது மேற்கொள்கிறார். அதிரடியான சண்டைக் காட்சிகளை திலீப் சுப்பராயன் அமைக்க உள்ளார்.  A.ஜெய்சம்பத் நிர்வாகத் தயாரிப்பை ஏற்கிறார். லைன் புரொடியூசராக செல்வக்குமார்.S. பணியாற்றுகிறார். மக்கள் தொடர்பு – டைமண்ட் பாபு.

மேலும் பல தொழில் நுட்பக் கலைஞர்களைக் கொண்டு உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் A.மணிவேல் இயக்குகிறார். இவர் காக்கி’ என்னும் குறும்படத்தை இயக்கியவர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொச்சின், ஐதராபாத், சென்னை ஆகிய நகரங்களில்  நடக்கவுள்ளது.

இப்படத்தின் துவக்க விழா இன்று வெள்ளிக்கிழமை காலை, காட்டுப்பாக்கத்தில் உள்ள படப்பிடிப்பு பங்களாவில் நடைபெற்றது.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மே மாதம் இறுதிவரை தொடர்ந்து நடைபெறும்.

- Advertisement -

Read more

Local News