Saturday, April 13, 2024

விஜய்யின் ரசிகர் மன்றத்தில் அதிரடி மாற்றம்..?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்து கலகத்தை ஆரம்பித்து வைத்த எஸ்.ஏ.சந்திரசேகரை இப்போது விஜய் ரசிகர் மன்றத்தினர் தாறுமாறாக மனதுக்குள் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர்.

இதுவரையிலும் ச்சும்மா பார்மாலிட்டாகாக இயங்கிக் கொண்டிருந்த மன்றங்கள் கடந்த 3 நாட்களாகத்தான் சுறுசுறுப்பாக இருக்கின்றனவாம்.

நேற்றைக்கு அனைத்து மாவட்ட மன்றத் தலைவர்களையும் நேரில் வந்து சந்திக்கும்படி விஜய் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் வந்தவர்களை சேர் போட்டு உட்கார வைத்ததோடு அவ்வளவுதான். விஜய் கடைசிவரையிலும் வரவேயில்லை. மதியம் சாப்பாடு போட்டு சாயந்தரம் காபியும், டிபனும் கொடுத்து அனுப்பிவிட்டார்களாம்.

“ஸாருக்கு இப்போ வேற வேலை வந்திருச்சு. அதனால் வர முடியலை. இன்னொரு நாள் தகவல் வரும். அப்போ வாங்க…” என்று சொல்லி அனுப்பி வைக்க.. மன்றத்தின் தலைவர்கள் ஏமாற்றத்துடன் ஊர் திரும்பியிருக்கிறார்கள்.

இதற்கிடையில் எஸ்.ஏ.சந்திரசேகரை தன்னைப் போலவே “அப்பா” என்றழைக்கும் ரசிகர்கள் யாரும் மன்றத்திலேயே இருக்கக் கூடாது என்று விஜய் முடிவெடுத்துவிட்டாராம். இதற்கேற்றாற்போல் எஸ்.ஏ.சி.யின் ஆதரவாளர்களாக கருதப்படுவர்களையெல்லாம் களையெடுத்து புதிய நிர்வாகிகளை நேற்றைக்கு அறிவித்திருக்கிறார் விஜய்.

ஆனால் இன்னொரு பக்கம் எஸ்.ஏ.சந்திரசேகரோ ரொம்பவே கூலாக தான் இயக்கிக் கொண்டிருக்கும் நான் கடவுள் அல்ல படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். ஆரம்பிச்சிட்டேன். இனி கடவுள் பார்த்துக்குவான் என்று சொல்லி சிரிக்கிறார்.

தற்போதைக்கு குடும்ப உறுப்பினர்கள் இரண்டு பக்கமும் சமாதானம் பேசிக் கொண்டிருக்கிறார்களாம். கூடிய விரைவில் எஸ்.ஏ.சி. சமாதானமாகி தேர்தல் ஆணையத்தில் கொடுத்திருக்கும் விண்ணப்பத்தினை திரும்பப் பெறுவார் என்றே விஜய்யின் ஆதரவு வட்டாரம் தெரிவிக்கிறது.

- Advertisement -

Read more

Local News