Friday, April 12, 2024

‘வலிமை’ படக் குழு மீண்டும் இணைகிறதா..?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தயாரிப்பாளர் போனி கபூரின் தயாரிப்பில் நடிகர் அஜீத் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு 95 சதவிகிதம் முடிவடைந்தாலும் இன்னும் சண்டை காட்சிகள் மட்டுமே படம் பிடிக்க வேண்டியுள்ளது.

இந்தச் சண்டைக் காட்சிகளை வெளிநாட்டில் எடு்க்கலாமா.. அல்லது உள்நாட்டிலேயே எடுத்துவிடலாமா என்று படக் குழுவினர் தற்போது யோசித்து வருகிறார்கள்.

காரணம் கொரோனா லாக் டவுன் என்பதையும் தாண்டி படத்தின் பட்ஜெட் திட்டமிட்டதையும் தாண்டிவிட்டதுதானாம்.

இப்போதைக்கு கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் ‘வலிமை’ படம் இந்தாண்டுக்குள் வெளியானாலும் தயாரிப்பாளருக்கு அது நஷ்டத்தைத்தான் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் மிகப் பெரிய பைனான்ஸியர்களிடத்திலெல்லாம் கடன் வாங்கி இந்தப் படத்தைத் தயாரித்து வரும் தயாரிப்பாளர் போனி கபூருக்கு ‘வலிமை’ படம் இப்போதே நஷ்டத்தைத்தான் கொடுக்கும் என்பது புரிந்துவிட்டது.

இதனால் இதே டீமோடு.. மீண்டும் அடுத்தப் படம் செய்ய வேண்டும் என்ற ஆசையில் உள்ளாராம். அஜீத்துடன் இணைந்தால் மட்டுமே நஷ்ட ஈட்டுத் தொகையை சரி செய்ய முடியும். இல்லையெனில் நஷ்டத்தில் இருந்து தப்பிக்க சாத்தியமே இல்லை என்று போனி கபூர் நினைக்கிறார்.

இதற்கு அஜீத்தும் ஓகே சொல்லிவிட்டதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது. இது நடந்தால் இயக்குநர் வினோத் அதிர்ஷ்டக்கார இயக்குநராவார். தொடர்ச்சியாக அஜீத்தை வைத்து மூன்றாவது படத்தை அவர் இயக்குவார்.

ஏற்கெனவே இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா அஜீத்தை வைத்து ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’, ‘விஸ்வாசம்’ ஆகிய 4 படங்களை இயக்கிய பெருமைக்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News