தயாரிப்பாளர் அருண் மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்து, பலத்த போட்டிகளுக்கு இடையே வெளியான திரைப்படம் ‘மாயோன்’.
எளிதில் யூகிக்க இயலாத திரைக்கதை, நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் பரிபூரண ஒத்துழைப்பு, ரசிகர்களை திரையரங்கிற்கு வரவழைக்கும் வகையில் வித்தியாசமான விளம்பர உத்தி, திரையலக பிரபலங்களின் பாரட்டு.. என பலவித அம்சங்களால் ‘மாயோன்’ திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது.
தமிழகம் முழுவதும் ‘மாயோன்’ திரையிடப்பட்ட திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. இதனால் படக் குழுவினர் உற்சாகமடைந்திருக்கின்றனர்.
எதிர்பார்த்ததைவிட கூடுதல் வெற்றி, ‘மாயோன்’ திரைப்படத்திற்கு கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்த தயாரிப்பாளர், பட குழுவினரை அலுவலகத்திற்கு வரவழைத்து, வெற்றியைக் கேக் வெட்டி கொண்டாடினார்.
இந்த நிகழ்வில் படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் கிஷோருக்கு, படத்தின் நாயகனான சிபிராஜ் தங்கச் சங்கிலியொன்றை பரிசளித்தார்.
தமிழில் ‘மாயோன்’ திரைப்படத்திற்கு மாபெரும் வெற்றி கிடைத்ததால், வரும் ஜூலை 7-ம் தேதியன்று தெலுங்கில் 350-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.
இதற்காக ஜுலை 1-ம் தேதியன்று ஹைதராபாத்தில் நடைபெறும் பட விழாவில் தெலுங்கின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.
இவர்களுடன் ‘கட்டப்பா’ சத்யராஜ் சார் உள்ளிட்ட ‘மாயோன்’ படக் குழுவினரும் கலந்து கொண்டு, தெலுங்கு ரசிகர்களுக்கு ‘மாயம் செய்யும் மணிவண்ணா’வை அறிமுகப்படுத்துகிறார்கள்.