Thursday, April 11, 2024

அலையில் சிக்கி இருந்த இயக்குனர்! பாக்யராஜ் தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சமீபத்தில் பாக்யராஜ், ஆச்சரியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

“செண்பக ராமன் இயக்கத்தில் வெளிவந்த “என் வீடு என் கணவர்” என்ற படத்தில் அஜித் பள்ளி மாணவனாக நடித்துள்ளார்.  தொடர்ந்து முதன் முதலாக பிரேம புஸ்தகம் என்ற தெலுங்கு படத்தின் தான் தெலுங்கில் நாயகனாக அறிமுகமானார்.  படத்தை  கோல்லுபுடி ஸ்ரீநிவாஸ் இயக்கி இருந்தார். இடையில் அவர் அகால மரணமடையவே அவரது தந்தையும்  இயக்குனருமான கோல்லுபுடி மாருதி ராவ் இயக்கினார்.

அந்த படம் வெளியாகி ரசிகர்கள் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. அந்த படத்திற்காக நந்தி விருது கூட கிடைத்திருந்தது.

இப்படத்தின் தயாரிப்பாளருக்கு என்னை தெரியும் என்பதால், ‘படத்தை எடுத்தவரை பாருங்கள் இப்படத்திற்கு என்ன கிளைமேக்ஸ் இயக்குனர் யோசித்து வைத்திருந்தார் என்பது தெரியவில்லை. நீங்கள் படம் பார்த்து உங்கள் ஐடியாவை சொல்லுங்கள்’ என உதவி கேட்டார்.  நானும் அப்படியே செய்து கொடுத்தேன்” என்றார் பாக்யராஜ்.

 

- Advertisement -

Read more

Local News