The post மீண்டும் கிராமத்து கெட்டப்பில் விஷால்! பட்டையை கிளப்ப இணைய போகும் மருது கூட்டணி… appeared first on Touring Talkies.
]]>கடந்த சில ஆண்டுகளாக விஷாலின் படங்கள் தோல்வி அடைந்தன. ஆனால், ரத்னம் படம் அவருக்கு உத்வேகத்தைத் தந்துள்ளது. மிஸ்கின் விஷால் கூட்டணியில் வெளியான துப்பறிவாளன் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ஆனால், இருவருக்கும் இடையே சிக்கல் ஏற்பட்டதால், விஷால் தனியாக இந்தப் படத்தை இயக்குவதாகக் கூறினார். இப்போது, துப்பறிவாளன் 2க்குப் பிறகு விஷாலின் அடுத்த பட அப்டேட் வெளியாகியுள்ளது.
கிராமப்புற படங்களைப் பொறுத்தவரை இயக்குநர் முத்தையா பட்டையை கிளப்புவார் . கொம்பன், விருமன் போன்ற படங்களை இயக்கி அவர் பெரும் வெற்றிகளைப் பெற்றுள்ளார். மேலும், ஏற்கனவே விஷாலுடன் இணைந்து மருது என்ற படத்தையும் இயக்கியுள்ளார். தற்போது, மீண்டும் அதே கூட்டணி இணையப் போகிறது. இந்தப் புதிய படம் கிராமப்புற சூழலில் எடுக்கப்படும் என்றும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், முத்தையா தனது மகன் விஜய் முத்தையாவை ஹீரோவாக அறிமுகப்படுத்த உள்ளார். இந்தப் படம் பள்ளிப்பருவ காதலை மையமாகக் கொண்டது. அடுத்ததாக, விஷால் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் முத்தையா.
The post மீண்டும் கிராமத்து கெட்டப்பில் விஷால்! பட்டையை கிளப்ப இணைய போகும் மருது கூட்டணி… appeared first on Touring Talkies.
]]>The post ரத்னம் படம் ரத்னம் மாதிரி இருக்கா? ஹரியின் ஆக்ஷனால் அதிர்ச்சியான ரசிகர்கள்… appeared first on Touring Talkies.
]]>நடிகர் விஷால் எப்போதும் போல இது நம்ப ஏரியா என்றவாறு சண்டக்கோழி, தாமிரபரணி படங்களில் எந்த மாதிரி ஆக்ஷனில் தெறிக்கவிட்டிருந்தாரோ அதேபோல் இந்த படத்திலும் பறக்கவிட்டு இருக்கிறார். பிரியா பவானி சங்கருக்கு இந்த படத்தில் டபுள் ஆக்ஷன். தனக்கு கொடுத்த ரோல்-ஐ சற்றும் குறைவின்றி நிறைவாக முடித்திருக்கிறார். சமுத்திரகனி மற்றும் கெளதம் மேனன் தங்களுக்கு கிடைத்த இடங்களில் எல்லாம் ஸ்கோர் செய்ய மெயின் வில்லனாக மாஸ் காட்டியுள்ளார் தெலுங்கு நடிகர் முரளி ஷர்மா.
படத்தின் நிறை என்னவென்று பார்த்தோம் என்றால், ஹரி இயக்கம் என்றாலே ஆக்ஷன் தான் அப்படி இருக்க ஆக்ஷன் காட்சிகளில் மாஸ் காட்டும் அளவுக்கு தாமிரபரணி படத்தை போல எமோஷனல் காட்சிகளில் க்ளாஸ் காட்டியுள்ளார்.பிரியா பவானி சங்கருக்கும் விஷாலுக்கும் இடையேயான உறவு என்ன என்பதில் வைத்திருக்கிறார் ஹரி ட்விஸ்ட்.பீட்டர் ஹெய்ன், கனல் கண்ணன் என பல சண்டை இயக்குநர்கள் சேஸிங் சீன்களை அல்டிமேட்டாக கொடுத்துள்ளனர்.
படத்தின் குறை என்னவென்று பார்த்தோம் என்றால், ஹீரோயினை காப்பாற்ற எத்தனை பேர் வந்தாலும் விடாமல் பறக்கவிடும் ஹீரோவாக தோற்றமளிக்க இது கொஞ்சம் என்னடா இது என்றவாறு கேட்க்க தோன்றுகிறது.படத்தின் முதல் பகுதியில் தப்பை தட்டிக் கேட்கும் நாயகனாக காட்டி கதையை கடைசியில் நாயகியின் பக்கம் மொத்த படத்தையும் திருப்பி விட்டது படம் வலுவிலக்க காரணமாகிவிட்டது.
அதேபோல் யோகி பாபு காமெடி என்ற பெயரில் இந்த படத்தில மொக்கைப் போட ரசிகர்கள் கடுப்பாகிவிட்டனர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பின்னணி எல்லாம் ஒருவிதத்தில் ஓகேவாக அமைந்துள்ளது. பாடல்கள் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை. ஹரி மற்றும் விஷாலின் கமர்ஷியல் படங்களை ரசிக்க கூடியவராக இருந்தால் இது ஒரு முறை பார்க்கும் படம்.
The post ரத்னம் படம் ரத்னம் மாதிரி இருக்கா? ஹரியின் ஆக்ஷனால் அதிர்ச்சியான ரசிகர்கள்… appeared first on Touring Talkies.
]]>The post தடைகளை தாண்டி வெளியான ரத்னம்! நிம்மதி பெருமூச்சு விட்ட விஷால்… appeared first on Touring Talkies.
]]>இன்று படம் வெளியான நிலையில் நேற்று மாலைக்கு முன்னர் வரை பல திரையரங்கில் டிக்கெட் புக்கிங் தொடங்காமல் இருக்கவே என்ன காரணம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், கடைசி நேரத்தில் படத்தை வெளியிட விடாமல் சதி செய்வதாக விஷாலே வெளியிட்டுள்ள ஆடியோ பரபரப்பை கிளப்பியது.
தமிழ்நாட்டில் ரத்னம் திரைப்படத்தை திருச்சி மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் ரிலீஸ் செய்ய விடாமல் தடுக்கிறாங்க என்றும் இதுக்கு பேர் கட்ட பஞ்சாயத்து என நடிகர் விஷால் அதிரடியாக குற்றச்சாட்டை முன் வைத்தார்.இப்படி ரத்தமும் வியர்வையும் சிந்தி இந்த படத்தில் நடிச்சிருக்கேன். என்னுடைய நண்பர்கள் இந்த படத்தை வாங்கி வெளியிடுகின்றனர்.இப்படி கடைசி நேரத்தில் இப்படி பண்ணால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படும், கடைசி நேரத்தில் ஒரு கடிதத்தை கொடுத்து விட்டார்கள் என படத்திற்கு தடை விதிப்பது சரியான நடைமுறை அல்ல என விஷால் எச்சரித்து பேசியிருந்தார்.
குறிப்பிட்ட திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஏரியா திரையரங்க உரிமையாளர் சங்கத்தில் கடிதம் ஒன்றை கடைசி நேரத்தில் கொடுத்தால் படத்தை வெளியிடாமல் தடுப்பீங்களா? எனவும் காலையில் இருந்து உங்களுக்கு கொள்ள போன் செய்கிறேன்.ஆனால் நீங்கள் வெயிட்டிங்கிலேயே வைத்து வருகிறீர்கள். பண்ணுங்க, எவ்ளோ பண்ண முடியுமோ பண்ணுங்க, என்று கூறியிருந்தார் எனக்கே இந்த நிலைமை அப்படி என்றால் மற்ற சாதாரண நடிகர்களுக்கு என்ன நிலை தமிழ் சினிமாவில் தெரிந்து கொள்ளட்டும் என்று பேசியிருந்தார்.
அதன்பின்னர், நேற்று மாலை ஒரு வழியாக பிரச்சினை தீர்ந்து இன்று திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் ரத்னம் திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
The post தடைகளை தாண்டி வெளியான ரத்னம்! நிம்மதி பெருமூச்சு விட்ட விஷால்… appeared first on Touring Talkies.
]]>The post ரிலீஸ் தேதி அறிவிக்க முடியாமல் திணறும் தமிழ் படங்கள்! கங்குவா முதல் ராயன் வரை… 600 கோடியை இழந்த பாலிவுட்? appeared first on Touring Talkies.
]]>சூர்யாவின் கங்குவா, சியான் விக்ரமின் தங்கலன், சூரியின் விடுதலை 2 மற்றும் தனுஷின் ராயன் ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராக இருந்தும் இன்னும் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்படவில்லை.
படங்களின் வெற்றிக்கு சரியான திட்டமிடல் முக்கியமானது என்றும் ஏனெனில் அவற்றுள் கவனம் சிதறினால் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வசூலில் தோல்வியடையும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் மலையாளத் திரையுலகம் இந்த ஆண்டு மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது, பிரம்மயுகம், பிரேமலு, மஞ்சுமேல் பாய்ஸ், ஆடு ஜீவிதம், அவேஷம், மற்றும் சேஷம் ஆகிய படங்கள் முதல் நான்கு மாதங்களில் 100 கோடியைத் தாண்டி தூள் கிளப்பி உள்ளன.
இருப்பினும் மற்றொரு புறம் ஃபைட்டர், படே மியான் சோடே மியான், மைதான் போன்ற படங்களின் தொடர்ச்சியான தோல்விகளால் பாலிவுட் திரையுலகம் சுமார் 600 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விஷாலின் ரத்னம் படம் இன்று ரிலீஸ் ஆன நிலையில் அரண்மனை 4, கவினின் ஸ்டார் , கமல்லின் இந்தியன் 2, சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு என அனைத்து படங்களும் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன.இப்படியிருக்க பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் செய்ய தாமதமாகி வருவது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
The post ரிலீஸ் தேதி அறிவிக்க முடியாமல் திணறும் தமிழ் படங்கள்! கங்குவா முதல் ராயன் வரை… 600 கோடியை இழந்த பாலிவுட்? appeared first on Touring Talkies.
]]>The post இன்றைய சினி பைட்ஸ் appeared first on Touring Talkies.
]]>தி கோட் படத்தில நடிகர் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் 4 பேரும் சிபிஐ அதிகாரிகளா நடிக்குறாங்க…மாநாடு படத்துக்கு அப்புறம் இந்த படத்தில நடிங்கனு வெங்கட் பிரபு கேட்டதால நான் ஒரு சின்ன ரோல்ல நடிச்சிருக்கேன் அது விஜய் கூட காம்பினேஷன் காட்சி தான் என ஒரு பேட்டியில் கூறியுள்ளார் ஒய்.ஜி. மகேந்திரன்.
முதலில் த்ரிஷா தான் ஜோடியாக இணைய இருக்கிறார் என கூறப்பட்டது ஆனால் தற்போது குட் பேட் அக்லி படத்தில் அஜித்துக்கு ஹீரோயினாக நடிக்க நடிகை ஸ்ரீலீலாவை படக்குழு கமிட் செய்திருப்பதாகவும், அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. ஸ்ரீலீலா இப்போது தெலுங்கில் சென்சேஷ்னல் ஹீரோயினாக வலம் வருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக குண்டூர் காரம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சி ஒன்றில் ஷாருக்கான் பாடலுக்கு பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நடனமாடி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். அவர் ஸ்டேஜில் ஆடிய இந்த நடன வீடியோவை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள ஷாருக்கான், தன்னுடைய சிறப்பான ஆட்டத்தால் மோகன்லால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளதாகவும் பாராட்டு தெரிவித்திரருக்கிறார்.தொடர்ந்து இந்தப் பாடல் தற்போது தனக்கு மிகவும் ஸ்பெஷலாக மாறியுள்ளதாகவும் அதற்கு மோகன்லாலுக்கு நன்றி என்றும் குறிப்பிட்டிருந்தார்.
வேட்டையனாக சரவணன் மீனாட்சி தொடரில் பிரபலமான கவின் பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக பங்கேற்று ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார். நட்புனா என்னான்னு தெரியுமா, லிப்ட், டாடா படங்களில் நடித்து வந்தவர் தற்போது ஸ்டார் படத்தின் மூலம் பெரிய ஸ்டாராக காத்திருக்கிறார். இந்நிலையில், ஸ்டார் படத்தில் இடம்பெற்ற மெலோடி பாடலுக்கு பெண் வேடமிட்டு நடனம் ஆடுவதற்காக கவின் எப்படி ரெடியான என்கிற மேக்கிங் வீடியோவை தற்போது படக்குழுவினர் வெளியிட்டு புரோமோஷன் செய்து வருகின்றனர்.
எந்த சமாதானமும் எனக்கு தேவை இல்லை என கூறி துப்பறிவாளன் 2 படப்பிடிப்பிற்கு தேவையான துணை நடிகர், நடிகைகள் மற்றும் லொகேஷன்காக அஜர்பைஜான், லண்டன் முதலிய நாடுகளையும் தேர்ந்தெடுத்துள்ளார் விஷால்.மிஷ்கின் ஏற்கனவே எடுத்து முடித்த 30 நாட்கள் பட காட்சிகளை தவிர்த்து முற்றிலும் புதிதாக துப்பறிவாளன் 2 படப்பிடிப்பை விரைவில் ஆரம்பிக்க உள்ளாராம் விஷால்.
The post இன்றைய சினி பைட்ஸ் appeared first on Touring Talkies.
]]>The post கொஞ்சம் பார்த்து கவனிக்க சொல்லிய விஷால்… கவனித்த சுந்தர் சி…அரண்மனை 4 Vs ரத்னம் appeared first on Touring Talkies.
]]>ஆனால் என்னதான் வெற்றியை கொடுத்தாலும் அந்த வெற்றிக்கு காரணமு எஸ்ஜே சூர்யாவுடன் கூட்டணி வைத்ததால் தான் என பேசப்பட்டது.இதனை தொடர்ந்து அவர் நடிக்கும் படங்களை எப்படியாவது வெற்றி படங்களாக்க மாற்ற கடுமையாக உழைத்து வருகிறார் விஷால்.
இந்நிலையில் விஷால் நடித்து ஹரி இயக்கத்தில் வெளிவரவுள்ள ரத்னம் படம் வருகிற ஏப்ரல் 26ல் ரிலீசாக உள்ளது.அதோபோல் சுந்தர் சி-ன் அரண்மனை படமும் அதே தேதியில் ரிலீசாக இருந்த நிலையில் அரண்மனை 4 வந்தால் ரத்னம் படத்துக்கு கலெக்ஷன் எல்லாம் ராங் ஆகிவிடும் என்பதால் சுந்தர் சி-ஐ சந்தித்து அரண்மனை 4 ரிலீஸ் தேதியை கொஞ்சம் பார்த்து கவனிக்க சொல்லி கேட்டாராம் அதற்கு என்கையில் ஒன்றுமில்லை தயாரிப்பு நிறுவனம் தான் முடிவெடுக்கும் என முடித்து இருக்கிறார் சுந்தர் சி.
பின்னர் ஒருகட்டத்தில் விஷாலின் கோரிக்கைக்கு சம்மதித்த சுந்தர் சி பொங்கல் தினத்திலிருந்து ஏப்ரல் 11 அங்கிருந்து ஏப்ரல் 26க்கு வந்த ரிலீஸ் தற்போது விஷாலின் நலனை கருத்தில் கொண்டு வருகிற மே 3ம் தேதி ரிலீசாக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.ஆக மொத்தத்தில் நைசாக பேசி காரியத்தை சாதித்து விட்டார் விஷால்.
The post கொஞ்சம் பார்த்து கவனிக்க சொல்லிய விஷால்… கவனித்த சுந்தர் சி…அரண்மனை 4 Vs ரத்னம் appeared first on Touring Talkies.
]]>The post துப்பு துலக்க நடிகர்களை தேடும் விஷால்…மீண்டு எழும் துப்பறிவாளன் 2 ! appeared first on Touring Talkies.
]]>தற்போது நடிகர் விஷால் நடித்து இயக்குனர் ஹரி இயக்கியுள்ள ரத்னம் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதில் பிரியா பவானி சங்கர் நாயகியாகவும், காமெடி ரோலில் யோகிபாபு, சமுத்திரகனி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.வரும் 26-ம் தேதி ரத்னம் படம் வெளியாகிறது.
ஆக்ஷன் த்ரில்லர் சஸ்பென்ஸ் என்ற வரிசையில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் விஷால்.சில படங்கள் வெற்றி சில படங்கள் தோல்வி என மாறி மாறி சந்தித்து கொண்டு இருக்கும் விஷால் தற்போது படப்பிடிப்பு பாதியிலேயே நின்றுபோன துப்பறிவாளன் 2 படத்தை கையில் எடுத்து இருக்கிறார்.
முன்னதாக லண்டனில் தொடங்கப்பட்ட துப்பறிவாளன் 2 படப்பிடிப்பின் போது இயக்குனர் மிஷ்கின் மற்றும் விஷால் இடையே பிரச்சினை ஏற்பட்டு மோதல் உண்டானது.அதனால் படப்பிடிப்பும் நின்றுபோனது.இதனால் துப்பறிவாளன் 2 படத்தை அவரே இயக்கி நடிக்க போகிறார் விஷால்.
இதற்கான பணிகளைத் மும்முரமாக ஆரம்பித்துள்ள விஷால் அஜர்பைஜான், மால்டா போன்ற பகுதிகளுக்கு லொகேஷன் பார்க்க சென்றுவந்தார். முதல் பாகத்தில் நடித்த பிரசன்னா உள்ளிட்ட சிலரும் இப்படத்திலும் நடிக்கின்றனர்.துப்பறிவாளன் 2 படத்துக்காக நடிகர் விஷாலே, நேரடியாக ஆடிஷன் செய்து துணை கதாபாத்திரங்களுக்கான நடிகர்களைத் தேர்வு செய்து வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
The post துப்பு துலக்க நடிகர்களை தேடும் விஷால்…மீண்டு எழும் துப்பறிவாளன் 2 ! appeared first on Touring Talkies.
]]>The post விமான பணிப்பெண்களின் விருப்பத்தை தெரிந்து கொண்ட விஷால் appeared first on Touring Talkies.
]]>முதல் முறையாக இயக்குனராக அடியெடுத்து வைப்பதால் அந்தப் படம் பெரிய அளவில் பேசப்பட வேண்டும் என்று முடிவு செய்திருக்கும் விஷால், அந்தப் படத்தை வெளிநாடுகளில் அதிக காட்சிகளை படமாக்க இருக்கிறார்.
இதற்காக கடந்த மாதம் லொக்கேஷன் பார்க்க லண்டன், அஜர்பைஜான், மால்டா ஆகிய வெளிநாடுகளுக்கு சென்று படபிடிப்புக்கான இடங்களை தேர்வு செய்துள்ளார். அங்கிருந்து சென்னை திரும்பிய விஷாலுக்கு விமான பணிப் பெண்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தனது வலைப்பக்கத்தில், “துபாய் வழியாக இந்தியா திரும்பும் போது விமான பணிப் பெண்களிடம் இருந்து எனக்கு கிடைத்த ஆசீர்வாதத்துக்கு நன்றி. காயத்ரி, டயானா, ரிஷிட், ரீனா, கிம் ஆகியோர் எனது நாளை உற்சாகமானதாக மாற்றினார்கள்.
எனக்காக வாழ்த்துக் குறிப்பு எழுதுவதற்கும் சாக்லேட் கொடுப்பதற்கும் நேரம் ஒதுக்கியதற்கு நன்றி. உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற நிச்சயம் உழைப்பேன்” என்று விஷால் தெரிவித்துள்ளார்.
The post விமான பணிப்பெண்களின் விருப்பத்தை தெரிந்து கொண்ட விஷால் appeared first on Touring Talkies.
]]>The post “அது ஒரு பிராங்க்” – வைரல் வீடியோ குறித்து விஷால் விளக்கம் appeared first on Touring Talkies.
]]>அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “மன்னிக்கவும் நண்பர்களே, சமீபத்திய வீடியோவைப் பற்றிய உண்மையை வெளிப்படுத்த வேண்டிய நேரம் இது. ஆம் நான் நியூயார்க்கில் இருக்கிறேன். ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும், எனது உறவினர்களுடன் மன அமைதிக்காக இங்கு வருவது வழக்கம். இதனை ஒரு சடங்காகவே பின்பற்றி வருகிறேன்.
கிறிஸ்துமஸ் தினத்தன்று என்னுடைய உறவினர்களால் பிராங்க் செய்ய முடிவு செய்து, அவர்களால் உருவாக்கப்பட்ட வீடியோ தான் அது. என்னுள் எப்போதும் இருக்கும் குழந்தைத்தன்மையை வெளிக்கொண்டு வருவது நல்ல உணர்வை ஏற்படுத்தும். அதனால்தான் அப்படி செய்தேன். அத்துடன் உங்களின் அனைத்துஊகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறேன். சிலர் இதை காரணமாகவைத்து என்னை டார்கெட் செய்ய முயன்றனர். ஆனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. லவ் யூ ஆல்!” என பதிவிட்டுள்ளார்.
The post “அது ஒரு பிராங்க்” – வைரல் வீடியோ குறித்து விஷால் விளக்கம் appeared first on Touring Talkies.
]]>The post படப்பிடிப்பு தளத்தில் விஷால் கொடுத்த விருந்து.! appeared first on Touring Talkies.
]]>நடிகர் விஷால் அவர்களின் படப்பிடிப்பில் எப்போதும் கடைநிலை ஊழியர் தொடங்கி பெரிய நட்சத்திரங்கள் உட்பட அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பதை நடிகர் விஷால் உறுதியாக கடைபிடித்து வருகிறார்.
மேலும், கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தொடங்கி வைத்த இந்த அனைவரும் சமம் நாமும் தொடர வேண்டும் என 10 வருடங்களுக்கு முன்பே அனைவருக்கும் சமமான உணவு வழங்க வேண்டும் என்று தன்னுடைய படப்பிடிப்பிலும் தன்னுடைய அலுவலகத்திலும் நடிகர் விஷால் உத்தரவாக பிறப்பித்து இருந்ததது குறிப்பிடத்தக்கது.
The post படப்பிடிப்பு தளத்தில் விஷால் கொடுத்த விருந்து.! appeared first on Touring Talkies.
]]>