The post கார்த்தியின் ஜப்பான் படத்துக்கு பிரம்மாண்ட கிராமம் செட் appeared first on Touring Talkies.
]]>தெலுங்கு நடிகர் சுனில், இயக்குநர் விஜய் மில்டன் உட்பட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.
இந்தப் படத்துக்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் பிரம்மாண்டமான கிராமம் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. 24-ம் தேதி முழு படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் என்றும் பிறகு 2 பாடல் காட்சிகள் மட்டும் படமாக்கப்பட இருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.
The post கார்த்தியின் ஜப்பான் படத்துக்கு பிரம்மாண்ட கிராமம் செட் appeared first on Touring Talkies.
]]>The post தண்ணீர் வழங்கும் ரஜினி! appeared first on Touring Talkies.
]]>இதனிடையே தனது பெற்றோருக்கு பூர்வீக கிராமத்தில் நினைவிடம் அமைக்க வேண்டும் என்று விரும்பிய நடிகர் ரஜினிகாந்த் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே இந்த கிராமத்தில் சுமார் 2.40 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார். இந்த இடத்தில் தனது பெற்றோர் ரானேஜிராவ் – ராம்பாய் சிலைகள் அமைத்து நினைவிடம் அமைக்க அப்போதே தனது அண்ணன் சத்தியநாராயணராவ் மூலம் அடிக்கல் நாட்டினார்.
ஆனால் அதன்பிறகு இந்த நினைவிடத்திற்கான பணிகள் எதுவும் நடைபெறாமல் இருந்தாலும், ரஜினிகாந்தின் அண்ணன் சத்தியநாராயணராவ் இடத்தை பராமரித்து வந்தார். அதேசமயம் ரஜினிகாந்தின் ரசிகர்கள் பொங்கல் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை இந்த இடத்தில் இருந்து தொடங்கி நடத்தி வந்தனர். இதனிடையே தற்போது இந்த இடத்தில் ரஜினியின் பெற்றோருக்கு சிலை அமைக்கப்பட்டுள்து.
ரானேஜிராவ் – ராம்பாய் சிலைகள் அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவிடத்தில் மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. அதேபோல் கால்நடைகள் தண்ணீர் குடிக்க தனியாக இடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் வீடியோ மூலம் நடிகர் ரஜினிகாந்துக்கு தெரியப்படுத்துவதாகவும், தொடர்ந்து படப்பிடிப்பு இருப்பதால் ரஜினிகாந்த் தற்போது இங்கு வர முடியாத சூழல் உள்ளதாவும், விரைவில் அவர் இங்கு வருவார் என்றும் அவரது அண்ணன் சத்தியநாராயணராவ் கூறியுள்ளார்.
The post தண்ணீர் வழங்கும் ரஜினி! appeared first on Touring Talkies.
]]>The post கிராமத்தில் செட்டில் ஆன ஸ்ரீதிவ்யா! appeared first on Touring Talkies.
]]>அதற்க்கு பிறகு ஜீவா, ரெமோ, காக்கி சட்டை, பெங்களூர் நாட்கள், சங்கிலி புங்கிலி கதவ தொற போன்ற படங்களில் நடித்தார் ஸ்ரீதிவ்யா.
ஆனால், தற்போது ஸ்ரீதிவ்யாவுக்கு தமிழில் வாய்ப்புகள் அதுவும் இல்லை.
இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஸ்ரீதிவ்யா இன்ஸ்டாகிரமில் தனது போட்டோவை பதிவிட்டு இருக்கிறார். அது மட்டுமின்றி அவர் தற்போது இருக்கும் கிராமத்தின் போட்டோவையும் வெளியிட்டு உள்ளார்.
ஸ்ரீதிவ்யா விரைவில் கம்பேக் கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் கமெண்டில் கேட்டு வருகின்றனர்.
The post கிராமத்தில் செட்டில் ஆன ஸ்ரீதிவ்யா! appeared first on Touring Talkies.
]]>The post நன்றி மறந்த பாரதிராஜா..!கோபத்தில் சென்ற இளையராஜா appeared first on Touring Talkies.
]]>பாரதிராஜா படங்கள் என்றாலே பெரும்பாலும் கிராமத்து பின்னணி கொண்ட கதைகள் தான் அதிகம் இருக்கும். வயல்
வரப்பு, ஆறுகள், வெகுளித்தனமான மக்கள் அதற்கேற்றவாறு படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா. பாரதிராஜா படங்களுக்கு ராஜாவின் இசை கச்சிதமாக பொருந்தும். இருவர் கூட்டணியில் வெளியான படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஒரு கட்டத்தில் படத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் இருவரும் பேசிக் கொள்வது இல்லை. இந்த சூழ்நிலையில் பஞ்சு அருணாச்சலத்தின் 80 வது பிறந்த நாள் விழாவை ஒரு தனியார் நிகழ்ச்சி நடத்தியது.இந்த விழாவில் பல சினிமா பிரபலங்கள் அழைக்கப்பட்டனர். இதில் பாரதிராஜா மற்றும் இளையராஜாவும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பாரதிராஜா 1 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.ஆனால் இளையராஜாவுக்கு பணம் எதுவும் கொடுக்க வில்லையாம்.கோபம் கொண்ட இளையராஜா மேடையில் இருந்து சென்றுவிட்டாராம்.
சினிமாவில் பாரதிராஜாவையும் மற்றும் இளையராஜாவையும் கொண்டு வந்தது பஞ்சு அருணாசலம் தான். நன்றியை மறந்து விட்டார் பாரதிராஜா என்றும் கோபத்தில் சென்று விட்டார் இளையராஜா என்று கூறுகின்றனர்.
The post நன்றி மறந்த பாரதிராஜா..!கோபத்தில் சென்ற இளையராஜா appeared first on Touring Talkies.
]]>The post “மனதை உருக்கிய கிராமத்து சம்பவம்!” : அதர்வா appeared first on Touring Talkies.
]]>நடிகர் அதர்வா சமீபத்தில் வீடியோ பேட்டி ஒன்றில் தன் மனதை உருக்கிய சம்பவம் ஒன்றை தெரிவித்தார்.
“படப்பிடிப்புக்காக கிராமம் ஒன்றுக்குச் சென்றேன். அந்த மக்கள் அவ்வளவு அன்பாக பழகினார்கள். யாரே, எனக்குயாரோ மீன் குழம்பு பிடிக்கும் என்று சொல்லிவிட்டார்கள். உடனே ஒரு வயதான அம்மா, மீன் குழம்பு வைத்து ஒரு சட்டியில் கொண்டு வந்து தந்தார். என்னை அறியாமல் கண் கலங்கிவிட்டேன்” என்றார் அதர்வா.
The post “மனதை உருக்கிய கிராமத்து சம்பவம்!” : அதர்வா appeared first on Touring Talkies.
]]>