The post ‘ரெய்டு’ நெகட்டிவிட்டியை வைத்துதான் படம் – விக்ரம் பிரபு appeared first on Touring Talkies.
]]>விக்ரம் பிரபு நடிப்பில், இயக்குநர் முத்தையா வசனத்தில் அறிமுக இயக்குநர் கார்த்திக் இயக்கத்தில் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ‘ரெய்டு’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகிறது. இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நவ.3ஆம் தேதி நடந்தது.
நடிகை ஸ்ரீதிவ்யா, “‘ரெய்டு’ படம் நான் முத்தையா சாருக்காகதான் நடித்தேன். ‘மருது’ படத்தில் எனக்கு அருமையான கதாபாத்திரம் முத்தையா கொடுத்தார். விக்ரம் பிரபுவுடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. அனைவருக்கும் வாழ்த்துகள்”.
நடிகர் விக்ரம் பிரபு, ” நெகட்டிவிட்டியை வைத்துதான் இந்தப் படம் உருவாக்கியுள்ளோம். நல்ல கதைகளைதான் தேர்ந்தெடுப்பேன். இது கொஞ்சம் கமர்ஷியல் படம். எனக்கு ஆக்ஷன் பிடிக்கும். அதை கமர்ஷியலாக சில விஷயங்கள் எனக்காக சேர்த்து முயற்சி செய்து கொண்டு வந்துள்ளோம். ஸ்ரீதிவ்யாவை பல வருடங்கள் கழித்து சந்தித்துள்ளேன். இயக்குநர் கார்த்தி, வேலு பிரபாகரன் சார் என அனைவருடனும் வேலை பார்த்தது மகிழ்ச்சி. நான் லீனியர் முறையில்தான் ரெய்டு கதை எழுதப்பட்டுள்ளது. படத்தின் விஷூவலுக்காக இசையை சாம் சூப்பராக கொடுத்துள்ளார்” என்றார்.
The post ‘ரெய்டு’ நெகட்டிவிட்டியை வைத்துதான் படம் – விக்ரம் பிரபு appeared first on Touring Talkies.
]]>The post ‘கேப் வேணாம்! இறுகப்பற்று”: அதிரடி வீடியோ appeared first on Touring Talkies.
]]>‘எலி’, ‘தெனாலிராமன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் இப்படத்தை இயக்குகிறார். விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். கார்த்திக் நேதா பாடல்களை எழுதியுள்ளார்.
இந்நிலையில், படக்குழு சார்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
‘தி கேப்’ என தலைப்பிடப்பட்டுள்ள இந்த வீடியோவில் பல்வேறு தம்பதிகள் இடம்பெற்றுள்ளனர். அவர்களிடம் அவர்களின் திருமண வாழ்க்கை சார்ந்து 21 கேள்விகள் கேட்கப்படுகிறது. அந்த கேள்விகளுக்கான அவர்களின் பதிலும், இருவரும் திருமண உறவில் எவ்வளவு விலகியிருக்கிறார்கள் என்பதை காட்டும் விதத்திலும் நேர்த்தியாக வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.
தம்பதிகள் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும் பொருட்டும் படத்தின் தன்மையை விளக்கும் வகையிலும் இந்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
The post ‘கேப் வேணாம்! இறுகப்பற்று”: அதிரடி வீடியோ appeared first on Touring Talkies.
]]>The post வீமர்சனம்: பாயும் ஒளி நீ எனக்கு appeared first on Touring Talkies.
]]>இந்நிலையில் தரமான வெற்றிக்காக காத்திருக்கும் விக்ரம் பிரபுவின் நடிப்பில் வெளியாகி இருக்கிறது பாயும் ஒளி நீ எனக்கு. இப்படத்தை கார்த்திக் அத்வைத் தயாரித்து இயக்கியிருக்கிறார். விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்திருக்கிறார். இவர்களைத் தொடர்ந்து தனஜெயன் மற்றும் விவேக் பிரசன்னா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கதை:
அதிகப்படியான வெளிச்சத்தில் மட்டும் தான் கண் தெரியும் என்றும் குறைந்த ஒளியில் குருட்டுத் தன்மை என்பதை மையமாக வைத்து இப்படம் எடுத்திருக்கிறார்கள். இப்படத்தின் கதை நன்றாக உள்ளது.
திரைக்கதை
கதை சிறப்பாக இருந்தாலும் அதை விவரிக்கும் முறை மற்றும் காட்சி அமைப்பதில் இயக்குனர் சற்று தடுமாறி இருக்கிறார். படத்தில் முக்கிய பிளஸ் ஆக ஒளிப்பதிவு உள்ளது. பாயும் ஒளி நீ எனக்கு படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். வாணி போஜன் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு ஈடு கொடுத்துள்ளார்.
படத்தில் நடிகர் தனஜெயனின் கதாபாத்திரம் சுவாரஸ்யமாக இருக்கிறது. படத்திற்கு இசை உறுதுணையாக இருக்கிறது. ஆக்ஷன் காட்சிகளும் சிறப்பு.
சில இடங்களில் தொய்வு இருக்கிறது. ஆனால் அடுத்தடுத்த காட்சி என்ன என்று ரசிகர்களை எதிர்பார்க்கும் படி உள்ளது. மேலும் நிறைய புது முயற்சிகளை படத்தில் இயக்குனர் கையாண்டுள்ளார் .
விக்ரம் பிரபுவுக்கு கண்டிப்பாக வெளிச்சத்தை பாயும் ஒளி நீ எனக்கு தரும்.
The post வீமர்சனம்: பாயும் ஒளி நீ எனக்கு appeared first on Touring Talkies.
]]>The post விக்ரம் பிரபுவின் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ பட டிரைலர்! appeared first on Touring Talkies.
]]>சாகர் இசை அமைக்க ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் தற்போது டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.
நாயகன் விக்ரம் பிரபுவுக்கு சாதாரண வெளிச்சத்தில் கண்கள் தெரியாது என்று டிரைலரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரைப்படம் வருகிற ஜூன் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது
The post விக்ரம் பிரபுவின் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ பட டிரைலர்! appeared first on Touring Talkies.
]]>The post விக்ரம் பிரபுவின் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ ரிலீஸ் தேதி! appeared first on Touring Talkies.
]]>சமீபத்தில் இப்படத்தின் பாடல் மற்றும் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ‘பாயும் ஒளி நீ எனக்கு’ திரைப்படம் வருகிற ஜூன் 23-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை விக்ரம் பிரபு போஸ்டரை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.
The post விக்ரம் பிரபுவின் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ ரிலீஸ் தேதி! appeared first on Touring Talkies.
]]>The post விக்ரம் பிரபுவின் ‘இரத்தமும் சதையும்’ படத்தின் டைட்டில் லுக் வெளியானது..! appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தில் கதையின் நாயகனாக நடிகர் விக்ரம் பிரபு நடிக்கிறார். இப்படத்திற்கு கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குநரான ஹரேந்தர் பாலசந்தர்.
இந்த ‘இரத்தமும் சதையும்’ படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது துவங்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.
படத்தின் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
The post விக்ரம் பிரபுவின் ‘இரத்தமும் சதையும்’ படத்தின் டைட்டில் லுக் வெளியானது..! appeared first on Touring Talkies.
]]>The post “ஸ்கிரிப்ட்டை கேட்டவுடன் நடிக்க வேண்டும் என்று தோன்றியது” – ‘டாணாக்காரன்’ படம் பற்றி விக்ரம் பிரபு பேச்சு..! appeared first on Touring Talkies.
]]>பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தில் விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர் மற்றும் லால் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்க, எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஃபிலோமின் ராஜ் எடிட்டராக பணியாற்றியுள்ளார்.
காவல் துறை சார்ந்த எண்ணற்ற திரைப்படங்களை தமிழ் சினிமா பார்த்திருந்தாலும், இந்த ‘டாணாக்காரன்’ திரைப்படம் பார்வையாளர்களுக்கு இதுவரையிலும் அறிமுகமில்லாத ஒரு புதிய பார்வையை, ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்கும்.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இந்த விழாவில் நாயகன் விக்ரம் பிரபு பேசும்போது, “டாணாக்காரன்’ என்ற தலைப்பே மிகவும் வித்தியாசமாகவும், அழுத்தமாகவும் இருந்தது. இந்த ஸ்கிரிப்டை கேட்ட பிறகு, இதில் நடித்தே ஆக வேண்டும் என முடிவு செய்தேன், ஒரு நடிகராக எனது திறமையை வெளிப்படுத்தும் படைப்பாக இருக்கும்.
தமிழ் திரையுலகில் படைப்பாற்றல் மற்றும் திறமையாளர்களை கண்டெடுத்து, வளர்க்கும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் போன்ற தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிவது, ஒரு அற்புதமான அனுபவம். தயாரிப்பாளர்களின் ஆதரவு இல்லையென்றால், இந்த ‘டாணாக்காரன்’ இவ்வளவு திருப்திகரமான வெளியீட்டைக் கண்டிருக்க முடியாது.
இயக்குநர் தமிழ் இந்தப் படத்தை தன் உயிராக வடிவமைத்து, மிக அற்புதமான படைப்பாகச் செதுக்கியுள்ளார். ‘டாணாக்காரன்’ மூலம் பார்வையாளர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவம் கிடைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.
The post “ஸ்கிரிப்ட்டை கேட்டவுடன் நடிக்க வேண்டும் என்று தோன்றியது” – ‘டாணாக்காரன்’ படம் பற்றி விக்ரம் பிரபு பேச்சு..! appeared first on Touring Talkies.
]]>The post விக்ரம் பிரபுவுக்கு வில்லனாக மாறிய சக்தி வாசு…! appeared first on Touring Talkies.
]]>சமீபத்தில் இயக்குநர் முத்தையா இயக்கிய ‘புலிக்குத்தி பாண்டி’ திரைப்படத்தில் ஒரு கிராமிய பாத்திரத்தில், முழுதாக தன்னை மாற்றிக்கொண்டு, தனது திறமையை நிரூபித்திருந்தார்.
இந்த முறை இயக்குநர் முத்தையா கதை, வசனத்தில், கார்த்தியின் திரைக்கதை இயக்கத்தில் ‘டைகர்’ என்ற படத்தில் விக்ரம் பிரபு நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு வில்லனாக பிரபல இயக்குநரான பி.வாசுவின் மகனான சக்தி வாசு நடிக்கிறார் என்பதுதான் சிறப்புச் செய்தி.
இந்த டைகர் படத்தை எம் ஸ்டுடியோஸ் மற்றும் ஓபன் ஸ்கிரீன் பிக்டர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். மற்றொரு நாயகியாக அனந்திகா நடிக்க, வில்லனாக சக்தி வாசு நடிக்கிறார். இவர்களுடன் ‘அட்டு’ பட புகழ் ரிஷி, டேனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
எழுத்து, இயக்கம் – கார்த்தி, இசை – சாம் C.S., ஒளிப்பதிவு – கதிரவன், கலை இயக்கம் – வீரமணி, படத் தொகுப்பு – மணிமாறன், புகைப்படங்கள் – முருகன், நடன இயக்கம் – பாபா பாஸ்கர், சண்டை இயக்கம் – கணேஷ் மாஸ்டர், நிர்வாகத் தயாரிப்பு – S.வினோத் குமார்-தம்பி M பூபதி.
இப்படம் குறித்து இயக்குநர் கார்த்தி கூறுகையில், “இந்த ‘டைகர்’ படம் ஆரம்பம் முதல் இறுதிவரை ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரவைக்கும், பரபர த்ரில்லராக இருக்கும்.
ஒரு திரைக்கதை எழுத்தாளராக இந்தப் படத்தில் இயக்குvர் முத்தையா பங்களிப்பது உண்மையில் உணர்வுப்பூர்வமாக எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. படத்திற்கு இது ஒரு முக்கிய ஈர்ப்பை தரும் அம்சமாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
இத்திரைக்கதையை கூற வாய்ப்பளித்ததற்கும், இப்படத்தை ஒப்புக் கொண்டதற்கும் விக்ரம் பிரபு சாருக்கு, மிகுந்த நன்றி. ஒட்டு மொத்த தொழில் நுட்பக் கலைஞர்களும் இந்தப் படத்திற்கு மிகப் பெரிய தூணாக அமைந்துள்ளனர். இந்தப் படம் நிச்சயமாக பார்வையாளர்களை ஈர்க்கும், பரபர திரில்லராக, ஒரு நல்ல அனுபவத்தை தரும்…” என்றார்.
The post விக்ரம் பிரபுவுக்கு வில்லனாக மாறிய சக்தி வாசு…! appeared first on Touring Talkies.
]]>The post வாணி போஜனிடம் எப்போதும் பாஸிட்டிவ் எனர்ஜி இருக்கும் – நடிகர் விக்ரம் பிரபுவின் கணிப்பு! appeared first on Touring Talkies.
]]>இந்தப் படத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடித்திருக்கிறார். வாணி போஜன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். வில்லனாக கன்னட நடிகர் தனஞ்செயா நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர் விவேக் பிரசன்னா மற்றும் குணா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை கார்த்திக் அத்வைத் இயக்கி உள்ளார். இவர், அமெரிக்காவில் திரைப்படம் தொடர்பான படிப்பை படித்து முடித்தவர். பிரபல தெலுங்கு நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் ஆகிய இருவர் நடித்த படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
ஒளிப்பதிவு – ஸ்ரீதர், இசை – சாகர். படத் தொகுப்பு – கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ், எழுத்து – இயக்கம் – கார்த்திக் அத்வைத்.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நாயகன் விக்ரம் பிரபு பேசும்போது, “இன்றைய கொரோனா காலக்கட்டத்தில் ஒரு படத்தை தயாரிப்பது என்பது எவ்வளவு கஷ்டம் என்பது எல்லோருக்கும் தெரியும். அதுவும் கொரோனா உச்சக் கட்டத்தில் இருந்தபோதுதான் இந்த படம் துவங்கியது.
இதில் நல்ல விஷயம் என்னவென்றால் இயக்குநர் கார்த்திக் அப்போது பேசிய தமிழைவிட, இப்போது பேசிய தமிழ் நன்றாக இருந்தது. பேசுவதும் புரிகிறது. அப்போது புரிவது ரொம்பவே கஷ்டமாக இருந்தது. இதற்காக கொரோனா காலகட்டத்தை கார்த்திக் நன்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
ரசிகர்கள் என்ன எதிர்பார்ப்பார்கள் என்பதை ஒரு இயக்குநராக இல்லாமல் ஒரு ரசிகராக இருந்து பார்த்து காட்சிகளை அமைத்திருக்கிறார்.அவருடன் பக்க பலமாக இருந்த இணை இயக்குநர் ஹரேந்தர் மற்றும் இயக்குநர்கள் குழுவுக்கு பாராட்டுக்கள்.
இந்தப் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ பெரிய படம். இந்த படத்தில் இயக்குநரின் பணியும், ஒளிப்பதிவாளரின் பணியும் நன்றாக இருந்தது. எல்லா விஷயத்தையும் நிறைவாக செய்திருக்கிறார்கள். இப்படத்தில் லைட் என்ற விஷயம் மிக முக்கியம். அதை மிக அற்புதமாக செய்திருக்கிறார் ஸ்ரீதர். அதனை உடனிருந்து நான் பார்த்தேன்.
மற்ற நடிகர்களுடன் நடிப்பது ரொம்பவே நல்ல விஷயம். வாணி போஜனிடம் எப்போதும் ஒரு பாசிடிவ் எனர்ஜி இருக்கும். எந்நேரமும் வாணி சிரித்த முகத்துடன் இருப்பார். அவருடைய அமைதியான முகத்தை பார்க்க நன்றாக இருக்கும்.
தயாரிப்பாளர் குமாரசாமி பத்திக்கொண்டா பிரம்மாண்டமான செலவில் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். இசையமைப்பாளர் சாகரின் பாடல்களும் நன்றாக இருக்கிறது. ராப் பாடல் எல்லாருக்கும் நன்றாக பிடிக்கும்.
பொதுவாக ஆக்ஷன் படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த படத்தில் ஆக்ஷன் மிக வித்தியாசமாக இருக்கும் தினேஷ் மாஸ்டர் சண்டைகள் அமைத்திருக்கிறார்.
படப்பிடிப்பு நடந்த நேரத்தில் இங்கு தேர்தல் நடந்தது. அதனால் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடத்தினோம். அந்த பரபரப்பிலும் எடிட்டிங் டீம் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே இருந்து பணியாற்றினார்கள்..” என்றார் விக்ரம் பிரபு.
The post வாணி போஜனிடம் எப்போதும் பாஸிட்டிவ் எனர்ஜி இருக்கும் – நடிகர் விக்ரம் பிரபுவின் கணிப்பு! appeared first on Touring Talkies.
]]>The post ‘டாணாக்காரன்’ படத்தின் டீஸர் appeared first on Touring Talkies.
]]>The post ‘டாணாக்காரன்’ படத்தின் டீஸர் appeared first on Touring Talkies.
]]>