Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
vijay fans – Touring Talkies https://touringtalkies.co Thu, 21 Mar 2024 05:59:48 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png vijay fans – Touring Talkies https://touringtalkies.co 32 32 மிரண்டு போன விஜய்! பஸ் மீது ஏறி மலையாளத்தில் பேச்சு… https://touringtalkies.co/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4/ Thu, 21 Mar 2024 05:58:12 +0000 https://touringtalkies.co/?p=40035 தி கோட் திரைப்படத்தின் அடுத்தக்கட்ட படபிடிப்பு கேரளாவில் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இதற்காக சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் கேரளா புறப்பட்டார். திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது அவரை மலையாள ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு அவர்களின் அன்பை வெளிப்படுத்தினர். அப்படி அவர்கள் வெளிப்படுத்திய அன்பு கார் கண்ணாடி உடைந்து சேதமாகும் அளவிற்கு இருந்தது அதை கண்ட அனைவரும் பிரமித்து போனார்கள். யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அவர் தங்கியுள்ள ஓட்டல் மற்றும் படப்பிடிப்பு தளம் என தினமும் […]

The post மிரண்டு போன விஜய்! பஸ் மீது ஏறி மலையாளத்தில் பேச்சு… appeared first on Touring Talkies.

]]>
தி கோட் திரைப்படத்தின் அடுத்தக்கட்ட படபிடிப்பு கேரளாவில் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இதற்காக சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் கேரளா புறப்பட்டார். திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது அவரை மலையாள ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு அவர்களின் அன்பை வெளிப்படுத்தினர். அப்படி அவர்கள் வெளிப்படுத்திய அன்பு கார் கண்ணாடி உடைந்து சேதமாகும் அளவிற்கு இருந்தது அதை கண்ட அனைவரும் பிரமித்து போனார்கள்.

யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அவர் தங்கியுள்ள ஓட்டல் மற்றும் படப்பிடிப்பு தளம் என தினமும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் அவரை அங்கு சூழ்ந்து கொண்டே இருக்கிறது.வெங்கட் பிரபு இயக்கத்தில் இப்படத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, திரிஷா, ஜெயராம், மோகன், பிரேம்ஜி அமரன், அஜ்மல் என் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.இப்படம் டைம் டிராவல் தானா ? என ஒரே குழப்பும் அளவிற்கு வெங்கட் பிரபு ட்விஸ்ட் வைத்து வருகிறார்.

நேற்று நடிகர் விஜய் கேரளாவில் ரசிகர்களை சந்தித்தார்.ரசிகர்களின் அன்பை கண்டு மிரண்டு போன விஜய் மைக்கை எடுத்துக்கொண்டு தனது பாணியில் பஸ் மீது ஏறினார்.அப்போது அவர் மலையாளத்தில் தன் அன்பை ரசிகர்களுக்கு வெளிப்படுத்திய பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில் அவர் சேச்சி, சேட்டன்மார் என அனைவரையும் குறிப்பிட்டு ஒரு பாடு சந்தோஷம் என மலையாளத்தில் பேசினார் இதை கேட்ட ரசிகர்கள் விண்ணுக்கும் மண்ணுக்கும் துள்ளி குதித்தனர்.

அதுமட்டுமின்றி, கேரள ரசிகர்கள் ஓணம் பண்டிகை அன்று தான் மிகவும் மகிழ்ச்சியில் இருப்பீர்கள் எனக்கு உங்களை கண்டால் தற்போது இங்கு ஓணம் பண்டிகை நடப்பது போல் ஓணம் செவிபிரேஷன் ஃபீலிங் வருது என்றவுடன் மலையாள ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

The post மிரண்டு போன விஜய்! பஸ் மீது ஏறி மலையாளத்தில் பேச்சு… appeared first on Touring Talkies.

]]>
பிப்ரவரி 1 விஜய் ரசிகர்களுக்கு முக்கியமான நாள்…! ஏன் தெரியுமா? https://touringtalkies.co/february-1-important-day-vijay-fans-thalapathy-67-lokesh-kanagaraj/ Tue, 24 Jan 2023 16:49:00 +0000 https://touringtalkies.co/?p=29890 விஜய் நடித்த வாரிசு படம், பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாகி வெற்றி பெற்றது.  தற்போது அவர்,  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். ‘தளபதி 67’ என்ற அடையாளத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் அப்டேட்களை விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவரிடம்,  தளபதி […]

The post பிப்ரவரி 1 விஜய் ரசிகர்களுக்கு முக்கியமான நாள்…! ஏன் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
விஜய் நடித்த வாரிசு படம், பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாகி வெற்றி பெற்றது.  தற்போது அவர்,  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். ‘தளபதி 67’ என்ற அடையாளத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

படத்தின் அப்டேட்களை விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது அவரிடம்,  தளபதி 67 குறித்து அப்டேட் வழங்குமாறு அங்குள்ள மாணவர்கள் கேட்டனர். இதற்கு அவர், “தளபதி 67 குறித்து ஒரு முக்கிய குறிப்பு மட்டும் தருகிறேன், பிப்ரவரி 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளை குறித்து வைத்து கொள்ளுங்கள்” என்றார்.

ஆகவே, அன்றைய தினம் தளபதி 67 படத்தின் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.

The post பிப்ரவரி 1 விஜய் ரசிகர்களுக்கு முக்கியமான நாள்…! ஏன் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
சர்ச்சையான சாந்தனுவின் அஜீத் பற்றிய டிவீட் https://touringtalkies.co/controversial-chandanus-tweet-about-ajith/ Thu, 15 Jul 2021 06:58:40 +0000 https://touringtalkies.co/?p=16185 கடந்த ஜூலை 11-ம் தேதியன்று ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வீடியோவாக வெளியானது. தொடர்ந்து வலிமை படத்தின் பல போஸ்டர்களும் வெளியாகின. ஒரேயொரு அப்டேட்டுக்காக காத்திருந்த அஜீத்தின் ரசிகர்களை தொடர்ந்து போஸ்டர்களை வெளியிட்டு இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டார் தயாரிப்பாளர் போனி கபூர். இதோடும் விடவில்லை. மறுநாளே அஜீத் பைக்கில் அமர்ந்திருப்பது போன்ற 2 ஸ்டில்ஸ்களை வெளியிட அஜீத் ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்துக்கே போனார்கள். உண்மையில் மற்றைய போஸ்டர்களில் இருந்த அஜீத்தைவிடவும் இந்த பைக்கில் அமர்ந்திருந்த அஜீத் ஸ்மார்ட்டாகவும், […]

The post சர்ச்சையான சாந்தனுவின் அஜீத் பற்றிய டிவீட் appeared first on Touring Talkies.

]]>
கடந்த ஜூலை 11-ம் தேதியன்று ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வீடியோவாக வெளியானது. தொடர்ந்து வலிமை படத்தின் பல போஸ்டர்களும் வெளியாகின.

ஒரேயொரு அப்டேட்டுக்காக காத்திருந்த அஜீத்தின் ரசிகர்களை தொடர்ந்து போஸ்டர்களை வெளியிட்டு இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டார் தயாரிப்பாளர் போனி கபூர்.

இதோடும் விடவில்லை. மறுநாளே அஜீத் பைக்கில் அமர்ந்திருப்பது போன்ற 2 ஸ்டில்ஸ்களை வெளியிட அஜீத் ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்துக்கே போனார்கள்.

உண்மையில் மற்றைய போஸ்டர்களில் இருந்த அஜீத்தைவிடவும் இந்த பைக்கில் அமர்ந்திருந்த அஜீத் ஸ்மார்ட்டாகவும், அழகாகவும் இருந்ததால் இதையே முதலில் ரிலீஸ் செய்திருக்கலாமே என்ற கருத்துக்களும் அஜீத் ரசிகர்களிடையே பேசப்பட்டு வந்தது.

இதே கருத்தை தனது டிவீட்டரில் வெளியிட்ட நடிகர் சாந்தனுவுக்கு வேறு விதமான வரவேற்பு கிடைத்தது என்பது எதிர்பாராதது.

இந்தப் புகைப்படத்தைப் பார்த்த நடிகர் சாந்தனு தனது டிவீட்டர் பக்கத்தில், “தல இந்தப் புகைப்படத்தில் சூப்பர் ஸ்மார்ட்டாக இருக்கிறார்..” என்று பதிவிட்டார்.

உண்மையில் சாந்தனு அஜீத் பற்றிய தனது உண்மைக் கருத்தை இப்படி சொல்லியிருந்தாலும் அவர் தீவிரமான விஜய்யின் ரசிகர் என்பதால் விஜய் ரசிகர்கள் அவரைக் கண்டிக்கத் துவங்கினார்கள். கூடவே அஜீத்தின் ரசிகர்களும் சேர்ந்து கொண்டு அவரை “டபுள் கேம் ஆடுறியா தம்பி..?” என்றெல்லாம் கேட்கத் துவங்க நொந்து போனார் நடிகர் சாந்தனு.

இதையடுத்து இதற்கு டிவீட்டரிலேயே பதில் சொன்ன சாந்தனு, “இப்போது டிவீட்டரில் எது பேசினாலும் தவறாகிறது. நல்லவிதமாகச் சொன்னாலும் தவறாகவே அர்த்தம் செய்து கொள்கின்றனர். நான் சொன்னதைத் திரித்துப் பேசுகிறார்கள். எனவே, எனது முந்தைய ட்வீட்டில் சொன்னதை மீண்டும் வார்த்தைகள் மாற்றிச் சொன்னேன். ஒரு நல்ல விஷயம் சொன்னாலும் அதை யோசித்து யோசித்துத்தான் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். சமூக ஊடகம் மிகவும் ஆபத்தானதாகிவிட்டது. எப்படியோ, எனக்குத் தலயின் அந்தத் தோற்றம் பிடித்திருந்தது. அதனால் ட்வீட் செய்தேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

அழகா இருக்காருன்னு சொன்னால்கூட குத்தமாய்யா..?

The post சர்ச்சையான சாந்தனுவின் அஜீத் பற்றிய டிவீட் appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஜய்யை அரசியலுக்கு இழுக்கும் ரசிகர்கள்-தப்பிப்பாரா விஜய்..? https://touringtalkies.co/fans-who-drag-actor-vijay-into-politics-will-vijay-escape/ Wed, 23 Jun 2021 05:42:27 +0000 https://touringtalkies.co/?p=15696 நடிகர் விஜய்யின் 47-வது பிறந்த நாளையொட்டி நேற்றைய தினம் சமூக வலைத்தளங்களில் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லும் வைபவம் அமோகமாக நடந்து முடிந்தது. திரையுலக நடிகர், நடிகைகள், பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் விஜய்க்கு வாழ்த்துச் சொல்லி ஓய்ந்து போக.. இன்னொரு பக்கம் சத்தமில்லாமல் அவருடைய ரசிகர்கள் அவரை அரசியலுக்குள் இழுத்துவிடும் வேலையையும் செய்திருக்கிறார்கள். சில ஆர்வக் கோளாறு ரசிகர்கள் விஜய்யை வாழ்த்தியும், அவர்தான் அடுத்த முதல்வர் என்பது போலவும், அரசியல் களத்தில் விஜய் அடியெடுத்து […]

The post நடிகர் விஜய்யை அரசியலுக்கு இழுக்கும் ரசிகர்கள்-தப்பிப்பாரா விஜய்..? appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஜய்யின் 47-வது பிறந்த நாளையொட்டி நேற்றைய தினம் சமூக வலைத்தளங்களில் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லும் வைபவம் அமோகமாக நடந்து முடிந்தது.

திரையுலக நடிகர், நடிகைகள், பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் விஜய்க்கு வாழ்த்துச் சொல்லி ஓய்ந்து போக.. இன்னொரு பக்கம் சத்தமில்லாமல் அவருடைய ரசிகர்கள் அவரை அரசியலுக்குள் இழுத்துவிடும் வேலையையும் செய்திருக்கிறார்கள்.

சில ஆர்வக் கோளாறு ரசிகர்கள் விஜய்யை வாழ்த்தியும், அவர்தான் அடுத்த முதல்வர் என்பது போலவும், அரசியல் களத்தில் விஜய் அடியெடுத்து வைக்க வேண்டும் என்றும் போஸ்டர்களை அடித்து தூள் கிளப்பிவிட்டார்கள்.

ஏற்கெனவே ‘தலைவா’ படத்தின் போஸ்டரில் ‘A Time To Lead’ என்று எழுதப்பட்டிருந்த வாசகத்திற்காகவே அப்போதைய முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதாவின் கோபத்திற்கு ஆளான விஜய் அந்தப் படத்தை வெளியிடுவதற்குள் படாதபாடுபட்டுவிட்டார்.

ஜெயலலிதாவை சந்திக்க விஜய்யும், அவரது அப்பாவும் பெரும் முயற்சி எடுத்தனர். கோத்தகிரியில் இருந்த ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டுக்கே விஜய் சென்றும் அவரை சந்திக்கவோ, உள்ளே விடவோ அனுமதி மறுத்துவிட்டார் ஜெயலலிதா.

இதில் பெரிதும் அவமானப்பட்டுப் போன விஜய்.. அதற்குப் பிறகு அரசியல் பற்றிய கருத்துரைகளை தனது படத்தில் குறைத்துக் கொண்டார். வசனங்களில் நேரடியாக ஆட்சியாளர்களைத் தாக்காமல் பார்த்துக் கொண்டார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு விஜய்க்கு மீண்டும் அரசியல் ஆசை தலையெடுக்க போஸ்டர்களும், செய்திகளும், எஸ்.ஏ.சி.யின் அறிவிப்புகளும் ஒன்றாக வந்தபோது வருமான வரித்துறை களத்தில் குதித்தது.

‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நெய்வேலிக்கே படையெடுத்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் விஜய்யை வலுக்கட்டாயமாக சென்னைக்கு அழைத்து வந்து வீட்டை சோதனையிட்டனர்.

மேலும், வீட்டில் இருந்த சில அறைகளுக்கு சீல் வைத்தவர்கள் 20 நாட்கள் கழித்து மீண்டும் வந்து சீல் வைத்த அறைகளைச் சோதனையிட்டு விஜய்யை மன உளைச்சலுக்கு ஆளாக்கினார்கள்.

இதற்குப் பிறகு மீண்டும் நெய்வேலிக்கு படப்பிடிப்புக்கு வந்த விஜய் சத்தமில்லாமல் தனது ரசிகர்களை அங்கே வரவழைத்து அவர்களுடன் ஒரு செல்பி எடுத்து தனது ரசிகர் மன்றத்தினரை உற்சாகப்படுத்தினார்.

இந்தத் தொல்லைகளே வேண்டாம் என்றுதான் அவரது அப்பா எஸ்.ஏ.சி. துவங்குவதாகச் சொன்ன ‘தளபதி விஜய் மக்கள் மன்றம்’ என்ற கட்சிக்கு தனது ஆதரவினைத் தர மறுத்துவிட்டார் விஜய். அதோடு விஜய்க்கும் அவரது அப்பாவுக்குமான நல்ல நட்பும் முறிந்துபோய் இன்றுவரையிலும் அது ஒட்டாமலேயே இருக்கிறது.

இப்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிட்ட பின்பும் அடங்காத அவரது ரசிகர்கள், விஜய்யை முதலமைச்சர் ரேன்ச்சுக்கு உயர்த்தி போஸ்டர்களை அச்சடித்து வெளியிட்டுள்ளார்கள்.

மதுரை பகுதி விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த ரசிகர்கள் வெளியிட்ட ஒரு போஸ்டரில் 2026-ல் விஜய்தான் தமிழகத்தின் முதல்வர் என்று பட்டவர்த்தனமாய் எழுதப்பட்டிருக்கிறது. அதிலும் ஆட்சிக்கான செங்கோலை முதல்வர் ஸ்டாலினே விஜய்யிடம் கொடுப்பதுபோலவும் புகைப்படத்தை அச்சிட்டிருக்கிறார்கள்.

இதேபோல் “தமிழகத்தில் இனி எப்போதும் தேவையில்லை டாஸ்மாக்.. அரசியலில் நீங்கள் வந்தால் மக்கள் தருவார்கள் பாஸ்மார்க்” என்று மதுரை, தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.

மேலும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து விஜய் சிவப்புக் கம்பள விரிப்பில் நடந்து வருவது போலவும் இன்னொரு போஸ்டரில் ஜில்லென்று இருக்கிறார் விஜய்.

மற்றொரு போஸ்டர் விஜய் தமிழகத்தையே தன் கையில் தூக்கி வைத்திருப்பது போலவும் அமைக்கப்பட்டிருக்கிறது.

ஆக மொத்தத்தில் விஜய் ரசிகர்களின் அரசியல் ஆசை இன்னமும் அவர்களுக்குள் கனன்று கொண்டேயிருக்கிறது. இப்போதைய திமுக ஆட்சியில் பழி வாங்கும் போக்கு கடைப்பிடிக்கப்படாது என்கிற தைரியத்தில்தான் விஜய் ரசிகர்கள் இதனை செய்திருக்கிறார்கள் என்பதை ஊகிக்க முடிகிறது.

அதே நேரம் தனது ரசிகர்களின் இந்த ஆசையையும், நடவடிக்கைகளையும் பார்த்து ஆளும் கட்சியினர் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை விஜய்யும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.

இனி விஜய்யின் அரசியல் ஆசை வளருமா..? அல்லது வளராதா..? என்பது அவரது ரசிகர்களிடமோ அல்லது அவரது குடும்பத்தினரிடமோ இல்லை. தமிழகத்தை தற்போது ஆண்டு கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கைகளில்தான் உள்ளது. 

The post நடிகர் விஜய்யை அரசியலுக்கு இழுக்கும் ரசிகர்கள்-தப்பிப்பாரா விஜய்..? appeared first on Touring Talkies.

]]>