Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Vani Bhojan – Touring Talkies https://touringtalkies.co Sat, 24 Jun 2023 05:06:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Vani Bhojan – Touring Talkies https://touringtalkies.co 32 32 “சிகப்பு கலரு சிங்கிச்சா.. கருப்பு கலரு சிங்குச்சா..!: வாணி போஜனின் சேலை அதிரடி https://touringtalkies.co/vani-bhojan-cute-in-sleeveless-saree/ Sat, 24 Jun 2023 05:06:27 +0000 https://touringtalkies.co/?p=33720 The post “சிகப்பு கலரு சிங்கிச்சா.. கருப்பு கலரு சிங்குச்சா..!: வாணி போஜனின் சேலை அதிரடி appeared first on Touring Talkies.

]]>

The post “சிகப்பு கலரு சிங்கிச்சா.. கருப்பு கலரு சிங்குச்சா..!: வாணி போஜனின் சேலை அதிரடி appeared first on Touring Talkies.

]]>
“அரசியலுக்கு வருவேன்!” :  வாணி போஜன் அதிரடி https://touringtalkies.co/vani-bajan-politics/ Mon, 20 Mar 2023 01:48:43 +0000 https://touringtalkies.co/?p=30809 எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் வாணி போஜன், கலையரசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘செங்களம்’.  இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில்  அப்போது வாணி போஜன் பேசுகையில், “ஜீ 5 நிறுவனத்திலிருந்து படம் பண்ண அழைப்பு வந்தாலே உடனே ஓகே சொல்லி விடுவேன். எனக்கு தெரியும் நல்ல கதையைத்தான் அவர்கள் கொடுப்பார்கள் என்று. நான் முதலில் ஒன்லைன் மட்டும் தான் கேட்டேன். பின்பு படக்குழுவிடம் நான் இதற்கு சரியாக இருப்பேனா எனக் கேட்டேன். அவர்களும் என்னை ஊக்குவித்தார்கள். […]

The post “அரசியலுக்கு வருவேன்!” :  வாணி போஜன் அதிரடி appeared first on Touring Talkies.

]]>
எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் வாணி போஜன், கலையரசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘செங்களம்’.  இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில்  அப்போது வாணி போஜன் பேசுகையில், “ஜீ 5 நிறுவனத்திலிருந்து படம் பண்ண அழைப்பு வந்தாலே உடனே ஓகே சொல்லி விடுவேன். எனக்கு தெரியும் நல்ல கதையைத்தான் அவர்கள் கொடுப்பார்கள் என்று. நான் முதலில் ஒன்லைன் மட்டும் தான் கேட்டேன். பின்பு படக்குழுவிடம் நான் இதற்கு சரியாக இருப்பேனா எனக் கேட்டேன். அவர்களும் என்னை ஊக்குவித்தார்கள். அதனால் நடிக்க ஒத்துக்கிட்டேன்.

எந்த படத்துக்கும் இது போன்று பணியாற்றியதில்லை. இப்படம் பண்ணும்போதே நாம அரசியலுக்கு வந்தா என்ன என யோசித்து பார்ப்பேன். அந்தளவுக்கு படத்தின் கதை எனக்குள் நிறைய விஷயங்களை மாத்தியிருக்கு. நிச்சயமா நான் அரசியலுக்கு வருவேன்” என்றார் வாணி போஜன்.

The post “அரசியலுக்கு வருவேன்!” :  வாணி போஜன் அதிரடி appeared first on Touring Talkies.

]]>
மிரள் – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/miral-movie-review/ Sun, 13 Nov 2022 06:43:54 +0000 https://touringtalkies.co/?p=27006 ஸ்லாஷர் த்ரில்லர் வகையைச் சேர்ந்த இப்படம் பார்வையாளர்கள் தமிழ் திரையில்  இதுவரை கண்டிராத திரில்லர் அனுபவத்தை வழங்குகிறது. பரத், வாணி போஜன் தம்பதியினர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். வாணி போஜனின் காதலை அவரது தந்தை கே.எஸ்.ரவிக்குமார் இதுவரையிலும் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் வாணி போஜன் தன்னுடைய கனவில் வரும் சில சம்பவங்களை கண்டு பயப்படுகிறார். அந்தக் கனவில் யாரோ ஒரு முகமூடி அணிந்த ஆள், பரத்தை கொலை செய்துவிட்டு அவரையும் […]

The post மிரள் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
ஸ்லாஷர் த்ரில்லர் வகையைச் சேர்ந்த இப்படம் பார்வையாளர்கள் தமிழ் திரையில்  இதுவரை கண்டிராத திரில்லர் அனுபவத்தை வழங்குகிறது.

பரத், வாணி போஜன் தம்பதியினர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். வாணி போஜனின் காதலை அவரது தந்தை கே.எஸ்.ரவிக்குமார் இதுவரையிலும் ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்நிலையில் வாணி போஜன் தன்னுடைய கனவில் வரும் சில சம்பவங்களை கண்டு பயப்படுகிறார். அந்தக் கனவில் யாரோ ஒரு முகமூடி அணிந்த ஆள், பரத்தை கொலை செய்துவிட்டு அவரையும் கொலை செய்ய முயல்கிறான். இந்தக் கொடூர கனவினை பற்றி தனது கனவரான பரத்திடம் சொல்லி பயப்படுகிறார் வாணி. மேலும், இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டு சோர்வடைகிறார். இதன் பிறகு பரத் வேலை பார்க்கும் இடத்தில் எதிர்பாராதவிதமாக நடந்த விபத்தில் பரத் உயிர் பிழைக்க, அவரது கார் மட்டும் சேதமாகிறது.

இது மாதிரியான குழப்பங்களும், பிரச்சினைகளும் இத்தம்பதிகளை தொடர்ந்து சூழ்ந்து வந்திருக்கின்றன. இதனாலேயே பரத் தற்போதுதான் வீடு மாறி புது வீட்டுக்கு வந்திருக்கிறார். இங்கே வந்தும் இதே போன்று பிரச்சினைகள் தொடர்வதால் தம்பதிகள் இருவருமே கவலைப்படுகின்றனர். இந்த பிரச்சனைக்கெல்லாம் தீர்வு காண சொந்த ஊரிலுள்ள குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு படையலிட்டால் நல்லது பிறக்கும் என்று நினைத்து பரத், வாணி, மகன் அங்கித், பரத்தின் நண்பரான ராஜ்குமார் நால்வரும் பரத்தின் சொந்த ஊருக்கு காரில் செல்கின்றனர்.

கிராமத்தில் குல தெய்வ வழிபாடு பூஜைகள் நிறைவடைய.. தம்பதியர் இருவரும் நிம்மதிப் பெருமூச்சுவிடும் அதே தருணத்தில்,  பரத் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த ஒரு வேலைக்காக அவருக்கு அழைப்பு வருகிறது. “இது இறைவனின் செயல்” என்றெண்ணி சந்தோஷப்படும் பரத்தும், வாணியும் அவசரமாக அந்த இரவு நேரத்திலேயே ஊருக்கு கிளம்புகின்றனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக வழியில் கார் பஞ்சராகிறது. அப்போது அந்தப் பக்கமாக வரும் ஒருவர், “இந்த இடம் மிகவும் ஆபத்தானது.. உடனேயே போயிருங்க” என்று எச்சரிக்கிறார். பரத் டயரை மாற்றிவிட்டு கிளம்பும்போது பல அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் அங்கே நடக்கிறது. வாணி தன் கனவில் கண்டதுபோல முகமூடி அணிந்த ஒருவர் இவர்களை தாக்குகிறார். அவர்களை தாக்கியது யார்? வாணி கண்ட கனவுக்கும், நிஜத்தில் நடக்கும் இந்தச் சம்பவத்துக்கும் என்ன தொடர்பு என்பதெல்லாம்தான் இந்தப் படத்தின் மீதிக் கதை.

படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் திறம்பட நடித்திருக்கிறார்கள்.  ‘காளிதாஸ்’ படத்திற்குப் பிறகு பரத்துக்கு கிடைத்த நல்ல செமத்தியான திரில்லர் கதை இது. சிறப்பான கதையை தேர்வு செய்தது மட்டுமின்றி அதில் சிறப்பான நடிப்பையும் தந்து படத்திற்கு சிறப்பளித்திருக்கிறார் பரத். ஒரு சாதாரண மனிதனுக்கு திடீரென்று உயிர் போகும் பிரச்சனை வந்தால் அவன் அதை எப்படி எதிர்கொள்வானோ, அப்படிப்பட்ட இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் பரத். ஹீரோயிஸம் காட்டாமல் ஒரு எளிய மனிதனின் பிரதிபலிப்பாகவே படம் முழுவதும் நடித்திருக்கிறார் பரத்.

மற்ற படங்களைவிட வாணி போஜனுக்கு இப்படத்தில் நடிப்பிற்கான வாய்ப்புகள் அதிகம். அவரை மட்டுமே மையமாக வைத்து நடக்கின்ற கதைக் களம் என்பதால் அவரும் தன்னால் முடிந்த அளவுக்கான நடிப்பைக் காண்பித்திருக்கிறார். எமோஷன்ஸ், கோபம், காதல், பாசம் என அனைத்துவித நடிப்பையும் அழகாக கொடுத்துள்ளார். பெண்கள் பலரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனையால் பாதிக்கப்படும் வாணி போஜன், அதற்கான தீர்வாக கிளைமாக்ஸில் எடுக்கும் முடிவு அதிரடியாக மட்டுமல்ல, பாராட்டும்படியாகவும் உள்ளது.

கே.எஸ்.ரவிக்குமார், மீரா கிருஷ்ணன், பரத்தின் நண்பராக நடித்திருக்கும் நடிகர் ராஜ்குமார் ஆகியோரும் தங்களது பாத்திரத்திற்கேற்ற நடிப்பைக் காண்பித்திருக்கிறார்கள்.

ஒரு த்ரில்லர் படத்திற்கு இசை எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு ஒளிப்பதிவும் முக்கியம். அந்த வகையில் நம்மையும் திரையில் பயணிக்க வைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா. அந்த அத்துவானக் காட்டுக்குள்.. காற்றாலைகள் சூழ்ந்திருக்கும் இருட்டு பகுதியில் லைட் வசதிகளை ஞாபகம் வைத்திருந்து எப்படித்தான் தினம், தினம் ஷூட்டிங் நடத்தினார்கள்  என்று தெரியவில்லை. ஆனால் ஒளிப்பதிவு தரமானதுதான்.

படத்தை இறுதிவரை தாங்கிப் பிடிப்பது இசையும்தான். த்ரில்லர் ஷாட்டுகளில் நம்மை திகிலூட்ட சவுண்ட் எஃபெக்ட்டை அதிகப்படுத்தி, நம்மை அதிகம் பயப்படவும் வைத்திருக்கிறார் இசையமைப்பாளர். மேலும் படம் பார்ப்பவர்களை பயத்துடன் பார்க்கவும் வைக்கிறது கலைவாணனின் படத் தொகுப்பு. இரண்டு மணி நேரமும் நம் கவனம் முழுவதும் படத்துடன் ஒன்றிப் போக வைத்திருக்கிறார். பயமுறுத்துகின்ற காட்சிகளில் நறுக்கினாற் போன்றிருக்கும் அவரது வெட்டுக்களினால் நமக்குள் பயம் அதிகம் ஏற்படுகிறது.

பொதுவாக இது போன்ற சஸ்பென்ஸ், திரில்லர் படங்களில் ஒரு வீட்டிற்குள்ளேயே மொத்தப் படத்தையும் முடித்துவிடுவார்கள். ஆனால் இந்தப் படத்தில்தான் மொத்தத் திரில்லிங்கும் வெட்டவெளியில்தான் நடந்திருக்கிறது. இயக்குநருக்கு இதற்காக தனி  பாராட்டுக்கள்..!

ஒரு சஸ்பென்ஸ், திரில்லர் படத்தை வித்தியாசமான கோணத்தில் கொடுத்ததோடு அதில் நல்ல மெசேஜ் ஒன்றையும் சொல்லியிருக்கிறார் இயக்குநர். அதிலும், படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இருக்கும் ட்விஸ்ட் யாரும் எதிர்பார்க்காத ஒன்று.

முகமூடி அணிந்த அந்த நபர் யார்? எதற்காக இப்படி இவர்களை கொலை செய்ய நினைக்கிறார்? என்ற கேள்விகளை எழுப்பி அதற்கு கிளைமாக்ஸில் வெளிப்படுத்தும் காரணமும், அந்தக் காட்சியும் அசத்தல். தொடர்ந்து அந்தக் காரணத்திற்கான தீர்வாக இயக்குநர் முன் வைக்கும் விஷயமும் பாராட்டுக்குரியதுதான்..!

ஆனால், முதல் பாதியிலே கதையை கொஞ்சம் மேலோட்டமாக சொல்லியிருந்தால் இரண்டாம் பாதியை நாம் இன்னும் அதிகமாக ரசித்திருக்கலாம். ஆனாலும் தனது முதல் படத்திலேயே ஒரு நல்ல த்ரில்லர் கதையை தேர்வு செய்து  மிரள வைத்திருக்கும் அறிமுக இயக்குநர் சக்திவேலுக்கு நமது வாழ்த்துக்கள்.

RATING : 3.5 / 5

The post மிரள் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
“பல சவால்களை சந்தித்துதான் இந்த ‘மிரள்’ படத்தை உருவாக்கினோம்” – தயாரிப்பாளர் G.டில்லி பாபு பேச்சு..! https://touringtalkies.co/we-faced-many-challenges-and-made-this-film-miral-producer-g-dilli-babu-said/ Sat, 05 Nov 2022 18:49:11 +0000 https://touringtalkies.co/?p=26656 Axess Film Factory G.டில்லி பாபு தயாரிப்பில், இயக்குநர் M.சக்திவேல் இயக்கத்தில் பரத்-வாணி போஜன் நடித்துள்ள திரைப்படம் ‘மிரள்’. புதுமையான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. படத்தின் வெளியீட்டை ஒட்டி படக் குழுவினர் நேற்று பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர். இவ்விழாவினில் நடிகை வாணி போஜன் பேசும்போது, “இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் மிகப் பெரிய நன்றியை கூறிக் கொள்கிறேன். இந்தப் படம் எனக்கு மிகப் பெரிய அனுபவமாக இருந்தது. ஒட்டு மொத்த படக் குழுவும் […]

The post “பல சவால்களை சந்தித்துதான் இந்த ‘மிரள்’ படத்தை உருவாக்கினோம்” – தயாரிப்பாளர் G.டில்லி பாபு பேச்சு..! appeared first on Touring Talkies.

]]>
Axess Film Factory G.டில்லி பாபு தயாரிப்பில், இயக்குநர் M.சக்திவேல் இயக்கத்தில் பரத்-வாணி போஜன் நடித்துள்ள திரைப்படம் ‘மிரள்’.

புதுமையான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. படத்தின் வெளியீட்டை ஒட்டி படக் குழுவினர் நேற்று பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர்.

இவ்விழாவினில் நடிகை வாணி போஜன் பேசும்போது, “இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் மிகப் பெரிய நன்றியை கூறிக் கொள்கிறேன். இந்தப் படம் எனக்கு மிகப் பெரிய அனுபவமாக இருந்தது. ஒட்டு மொத்த படக் குழுவும் முழு அர்ப்பணிப்பை கொடுத்து, இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். பரத் மிகச் சிறந்த நடிகர். அவருடன் பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது. உங்கள் எல்லோருடைய ஆதரவும் எங்களுக்கு தேவை..” என்றார்.

விநியோகஸ்தர் சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் பேசும்போது, “Axess Film Factory தொடர்ந்து சிறந்த படங்களை கொடுத்து கொண்டிருக்கும் நிறுவனம். Axess Film Factory ஒரு படத்திற்கு தரும் அர்ப்பணிப்பு பிரமிப்பானது. பேச்சுலர் படத்தின் ஒரு பாடலுக்காக மட்டுமே 5 மாதங்கள் எடுத்து கொண்டனர். இந்தப் படத்தை 20 நாட்களில் முடித்துள்ளனர். நான் படத்தைப் பார்த்துவிட்டேன். படம் 20 நாட்களில் எடுத்ததுபோல் இருக்காது. மிகப் பெரிய பிரமிப்பை தரும் படைப்பாக உள்ளது. தமிழ் சினிமாவுக்கு புதுமையான ஒரு ஹாரர் படத்தை தந்துள்ளார்கள். படம் கண்டிப்பாக பெரிய வெற்றியைப் பெறும்..” என்றார்.

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசும்போது, “இப்ப இருக்கிற ஜெனரேஷன் மிக திறமையானவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் மைண்டில் ஏதாவது ஓடிக் கொண்டே இருக்கிறது. இது 20 நாட்களில் எடுத்த படம் மாதிரியே இல்லை. ஒரு காட்சிக்கே அத்தனை ஷாட் வைத்திருக்கிறார். பெரிய திட்டமிடலுடன் படத்தை தந்துள்ளார். Axess Film Factory டில்லி பாபு நல்ல படங்களாக வெற்றிப் படங்களாக தயாரித்து வருகிறார் வாழ்த்துக்கள். நடிகர் பரத்தை எனக்கு பல காலமாக தெரியும். நல்ல உழைப்பாளி கதாப்பாத்திரம் புரிந்து மிக அழகாக நடித்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள்.” என்றார்.

இயக்குநர் சக்திவேல் பேசும்போது, “Axess Film Factory தமிழ் சினிமாவுக்கு நல்ல படைப்புகள் தந்து வருகிறார்கள். அவர்கள் தயாரிப்பில் என் முதல் படம் உருவாகியுள்ளது மகிழ்ச்சி. இப்படத்தை குறுகிய காலத்தில் முடிக்க காரணம், தொழில் நுட்ப கலைஞர்களின் முழு பங்களிப்புதான் காரணம்.

பரத் சார்தான் இந்த படம் உருவாக முதல் காரணம். அவர் மூலமாகத்தான் தயாரிப்பாளர் இந்தக் கதையை கேட்டு தயாரிக்க ஒத்து கொண்டார். அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களும் இந்தப் படத்தின் கதையை புரிந்து கொண்டு படத்திற்காக உழைத்தனர். வாணி போஜன் படத்தின் கதையை உணர்ந்து அதற்காக கடின உழைப்பை கொடுத்திருக்கிறார். இந்தப் படம் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்…” என்றார்.

நடிகர் பரத் பேசும்போது, “இந்தப் படத்தை உருவாக்கியதற்கு தயாரிப்பாளருக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். தயாரிப்பாளருக்கும், நடிகருக்கும், தொழில் நுட்பக் கலைஞர்களுடனும் ஒரு சேர ஒத்து போகக் கூடிய நபர் இயக்குநர். இந்தக் கதையைப் பற்றியும், இயக்குநரைப் பற்றியும் நான் கூறியபோது, கதையின் தன்மையை புரிந்து கொண்டு, இதை எடுக்க உடனே ஒத்துக் கொண்டார்.

சினிமாவில் நிறைய மோசமான அனுபவங்கள் உள்ளது. ஒரு படம் உருவாவது அவ்வளவு எளிதில்லை. தயாரிப்பாளர் டில்லி பாபு அனைவரையும் மதிக்க கூடிய ஒரு நபர். இந்தப் படத்தில் நிறைய உணர்வுபூர்வமான அம்சங்கள் இருக்கிறது. கே.எஸ்.ரவிக்குமார் சாருடனும், வாணி போஜனடனும் நடித்தது பெரிய மகிழ்ச்சி. இந்த படத்திற்கு உங்களது ஆதரவு தேவை…” என்றார்.

தயாரிப்பாளர் டில்லி பாபு பேசும்போது, “ஒரு தயாரிப்பாளராக எங்களது பொறுப்பு அதிகம். படத்தின் கதை, நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் என அனைத்தையும் கதைக்கு ஏற்றார் போல் அமைக்க வேண்டும். எங்கள் நிறுவனத்தில் கதைக்கு மட்டும்தான் முக்கியத்துவம் கொடுப்போம்.

நாங்கள் எடுத்த பெரும்பாலான படங்கள் முதல் பட இயக்குநரின் படங்கள்தான். இது போன்ற படங்கள் மூலமாகத்தான், நாங்கள் சிறந்த நண்பர்களை சம்பாதித்துள்ளோம்.

இந்த படம் 20 நாளில் எடுக்கப்பட்டாலும், பெரிய உழைப்பை கொண்டுள்ளது. முன் தாயாரிப்பிற்கு நிறைய காலம் தேவைப்பட்டது. இந்த படத்தில் பல சவால்களை சந்தித்துதான் உருவாக்கினோம்.

பரத், வாணி போஜன் இருவரும் இந்த படத்தை முழுமையாக தாங்கி பிடித்து இருக்கிறார்கள். இந்த படம் குடும்பங்கள் பார்க்கக் கூடிய ஒரு படமாக இருக்கும்.” என்றார்.

The post “பல சவால்களை சந்தித்துதான் இந்த ‘மிரள்’ படத்தை உருவாக்கினோம்” – தயாரிப்பாளர் G.டில்லி பாபு பேச்சு..! appeared first on Touring Talkies.

]]>