The post வாரிசு, துணிவு.. ஓ.டி.டி. ரிலீஸ் எப்போது தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>இந்த திரைப்படம் வசூலில் ரூ.250 கோடியை கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் வாரிசு திரைப்படம் பிப்ரவரி 22ம் தேதி அமேசான் ப்ரைமில் ஓடிடி தளத்தில் வெளியாகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதே போல் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவான ‘துணிவு’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டிலும் லைகா நிறுவனம் வெளிநாட்டிலும் வெளியிட்டது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் துணிவு திரைப்படத்தை ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் படம் வரும் பிப்ரவரி 8-ம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
The post வாரிசு, துணிவு.. ஓ.டி.டி. ரிலீஸ் எப்போது தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>The post துணிவு, வாரிசு காட்சிகள் குறைக்கப்படுகிறது! appeared first on Touring Talkies.
]]>
Vijay ajith Shah rukh khan pathaan varisu thunivu
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடித்த வாரிசு, அஜித் நடித்த துணிவு ஆகிய இரண்டு படங்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன.
கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இரு படங்களும் வசூலில் சாதனை படைத்து வருகின்றன.
இதனால் அடுத்து பிப்ரவரி மாதம் வரை தமிழில் வேறு எந்த படங்களையும் திரையிட தயாரிப்பாளர்கள் தயாராக இல்லை. தமிழில் அடுத்து புதிய படம் வெளியீடு பிப்ரவரி 3-ந் தேதிதான் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு பாலிவுட்டில் ஷாருக்கான நடிப்பில் வெளியான பதான் படம் தமிழில் டப் செய்து வெளியிடப்பட்டுள்ளது.
ஷாருக்கான் நான்கு வருட இடைவெளிக்கு பிறகு ரீ-எண்ட்ரி கொடுக்கும் படமாக இந்த பதான் படம் அமைந்துள்ளது. இப்படம் உலகம் முழுதும் நூறு நாடுகளில் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் வெளியாகி உள்ளது
அதே போல முதல் நாள் வசூல் எதிர்பார்த்தது போல இருப்பதாக படக்குழு தெரிவிக்கிறது.
‘வாரிசு’ மற்றும் ‘துணிவு’ ஆகியவை மட்டுமே வெளியாகி இரு வாரங்கள் ஆகிவிட்டன. ஆகவே, தற்போது இந்த இரண்டு படங்களுக்கும் முன்பதிவு குறைந்துள்ளதால், அப்படங்களின் காட்சிகளை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து பதான் படத்துக்கு அதிக அளவில் திரையரங்கம் ஒதுக்கப்பட்டும் என திரையுலக புள்ளிகள் தெரிவிக்கின்றனர்.
The post துணிவு, வாரிசு காட்சிகள் குறைக்கப்படுகிறது! appeared first on Touring Talkies.
]]>The post “அஜித்தால் என் மனைவியிடம் திட்டு வாங்கினேன்!” : நடிகர் ஷாம் appeared first on Touring Talkies.
]]>“20 வருடங்களுக்கு முன்பு குஷி என்கிற படத்தில் அவருடன் ஒரே ஒரு காட்சியில் இணைந்து நடித்து இருந்தேன். அதன்பிறகு இப்போது வாரிசு படத்தில் படம் முழுவதும் அவருடன் பயணிக்கும் விதமாக அவரது சகோதரர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஸ்ரீகாந்த் என பல சீனியர்கள் நடித்திருப்பதால் வாரிசு குடும்பத்தில் நான் தான் ஜூனியர் என்று கூட சொல்லலாம்.
இந்த படத்தின் படப்பிடிப்பில் நிறைய விஷயங்களை விஜய் சாரிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.
அஜித் சாருடன் இணைந்து நான் நடிக்கவில்லை என்றாலும் அவருடன் நெருங்கிய நட்பில் தான் இருக்கிறேன். அவரது மகளும் எனது மகளும் ஒரே பள்ளியில்தான் படிக்கிறார்கள். அதனால் அடிக்கடி பள்ளி சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது அவரை சந்தித்து பேசி இருக்கிறேன். அவர் தனது குழந்தைகள் சம்பந்தப்பட்ட பள்ளி நிகழ்வுகள் எதையுமே தவிர்க்க மாட்டார். ஒரு பெற்றோர் எப்படி தனது குழந்தைகளின் கல்வி விஷயத்தில் இருக்க வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக இருப்பார்.
நான் கூட சிலமுறை பள்ளிக்கு செல்வேன்.. சில நேரங்களில் எனது மனைவி மட்டுமே குழந்தைகள் விஷயமாக பள்ளிக்கு சென்று வருவார்.. அப்போது கூட அங்கே அஜித் வந்திருப்பதை பார்த்துவிட்டு வந்து, ‘அஜித் சாரே அனைத்து வேலைகளையும் ஒதுக்கிவிட்டு தனது குழந்தைகளுக்காக வருகிறார்.. நீங்கள் ஏன் வரமாட்டேன் என்கிறீர்கள்’ என என்னை திட்டுவார். அஜித் சாரால் அப்படி பலமுறை என் மனைவியிடம் திட்டு வாங்கி உள்ளேன்” என்றார் நடிகர் ஷாம்
The post “அஜித்தால் என் மனைவியிடம் திட்டு வாங்கினேன்!” : நடிகர் ஷாம் appeared first on Touring Talkies.
]]>The post ” ‘துணிவு’ படத்தை தமிழ் ரசிகர்களுடன் பார்க்க வேண்டும்”: நடிகை மஞ்சு வாரியர் appeared first on Touring Talkies.
]]>ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வெளியாகி இருக்கும் அஜித் குமாரின் ‘துணிவு’ திரைப்படத்தை, தமிழ் ரசிகர்களுடன் திரையரங்கில் பார்க்க விரும்புகிறேன் என அப்படத்தின் நாயகியான நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்திருக்கிறார்.
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான, அஜித் குமார் மற்றும் ‘அசுரன்’ படப் புகழ் நடிகை மஞ்சு வாரியர் நடிப்பில் தயாரான, ‘துணிவு’ திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி அன்று வெளியானது. இந்தத் திரைப்படம் கோலிவுட்டில் மட்டுமல்லாமல் டோலிவுட், சாண்டல் வுட் என தென்னிந்தியா முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தத் திரைப்படத்தில் கண்மணி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மஞ்சு வாரியர், கேரளாவில் உள்ள வனிதா சினி பிளக்ஸில் முதல் நாளில் ரசிகர்களுடன் படத்தை கண்டு ரசித்தார்.
இதன் பிறகு அவர் பேசுகையில், ” முதல்முறையாக திரையரங்கில் முழு படத்தையும் ரசிகர்களுடன் பார்த்து ரசித்தேன். அதிரடி வேடத்தில் நடித்திருப்பது இதுவே முதல் முறை. இது போன்ற சவாலான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பயிற்சி அவசியம். இந்த கதாபாத்திரத்தில் நடித்ததில் மிக்க மகிழ்ச்சி. கேரளாவில் இந்த படத்திற்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி. இந்தத் திரைப்படத்தை தமிழ் ரசிகர்களுடன் திரையரங்கில் பார்க்க விரும்புகிறேன்.” என்றார்.
இந்தத் திரைப்படத்தில் கண்மணி எனும் கதாபாத்திரம், வலிமையான கதாபாத்திரமாக உருவாக்கப்பட்டிருந்தது. இதற்காக நடிகை மஞ்சு வாரியார் தன் உடலை வருத்திக் கொண்டு கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக நடித்திருந்தார்.
இந்தத் திரைப்படம் தென்னிந்தியா முழுவதும் பெரும் வெற்றியை பெற்றதால் இதனை பகிர்ந்து கொள்ள நாயகன் அஜித் குமார், இயக்குநர் ஹெச். வினோத் மற்றும் பட குழுவினர் மஞ்சுவாரியருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். அத்துடன் ‘துணிவு’ படத்திற்கு அபிரிமிதமான ஆதரவை வாங்கியதற்காக கேரள பார்வையாளர்களுக்கு படக்குழுவினர் தங்களுடைய மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிலையில் ஜனவரி 20ஆம் தேதிக்கு பிறகு நடிகை மஞ்சு வாரியர் சென்னைக்கு பயணம் மேற்கொள்கிறார். அதே நாளில் அவரது நடிப்பில் தயாரான ‘ஆயிஷா’ எனும் திரைப்படம் வெளியாகிறது. இந்தத் திரைப்படத்தில் ‘துணிவு: திரைப்படத்தின் கண்மணி எனும் கதாபாத்திரத்திற்கு நேர் மாறாக ‘ஆயிஷா’ எனும் குணச்சித்திர வேடத்தில் மஞ்சு வாரியர் நடித்திருக்கிறார்.
இதனிடையே பரதநாட்டிய கலைஞரான மஞ்சு வாரியர், ஜனவரி மாதம் இருபதாம் தேதி சென்னையில் நடைபெறும் சூர்ய விழாவில் அவருடைய அண்மைய தயாரிப்பான ‘ராதே ஷ்யாம்’ எனும் நாட்டிய நாடகத்தை நிகழ்த்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post ” ‘துணிவு’ படத்தை தமிழ் ரசிகர்களுடன் பார்க்க வேண்டும்”: நடிகை மஞ்சு வாரியர் appeared first on Touring Talkies.
]]>The post ரசிகர்களை ஏமாற்றாத ’துணிவு’ விமர்சனம்… appeared first on Touring Talkies.
]]>ரசிகர்களை ஏமாற்றாத ’துணிவு’ விமர்சனம்…
ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் துணிவு. இந்த படத்தில் மஞ்சு வரியார், சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வாரிசு மற்றும் துணிவு இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகி ரசிகர்கள் மத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இரண்டு படங்களில் யாருக்கு வெற்றி என போட்டிகள் நிகழ்கிறது. அஜித்தின் துணிவு திரைப்படம் பற்றி பார்க்கலாம்.
இந்த படத்தில் அஜித் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வங்கி அரசுக்கு தெரியாமல் மிகப்பெரிய தொகையை மறைத்து விடுகிறது. நடிகர் வீராவின் குரூப் ஒரு வங்கியை கொள்ளையடிக்க செல்கிறது. ஆனால் ஏற்கனவே அந்த வங்கியை அஜித் குரூப் கொள்ளை அடித்திருப்பார்கள்.
படத்தின் முதல் பாதி விறுவிறுப்பு குறையாமல் தோட்டாக்களின் மத்தியில் நகர்கிறது. இடைவேளைக்குப் பிறகு வங்கியில் அஜித் ஏன் கொள்ளை அடித்தார் என்ற காரணத்தை கூறியுள்ளனர். ரசிகர்கள் எதிர்பார்த்தப்படி படத்தில் நிறைய சர்ப்ரைஸ் ரசிகர்களுக்கு கொடுத்திருப்பார் இயக்குனர். விறுவிறுப்பாக நகர்கிறது கதைக்களம்.
வங்கியில் நடக்கும் மோசடிகளை எதிர்த்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நடித்துள்ளார் அஜித்.
படத்தின் இடைவெளிக்குப் பிறகு ஏன் இந்த கொள்ளை சம்பவத்தில் அஜித் ஈடுபடுகிறார் என்பதை படத்தின் கிளைமாக்ஸ் உடன் முடித்திருக்கிறார் இயக்குனர் ஹெச். வினோத்.
வாரிசுடன் ஒப்பிடும் போது படத்தின் நீளம் குறைவுதான் என்றாலும் மின்னல் வேகத்தில் முதல் பாதி முடிந்து விடுகிறது.எடிட்டிங் விஜய் வேலு குட்டி. கமிஷனராக சமுத்திரக்கனி தனக்கு கொடுத்த கதாபாத்திரத்துக்கு கட்சிதமாக பொருந்தியுள்ளது.
வங்கியில் நடக்கும் மோசடிகளால் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் எப்படி பாதிப்படைகின்றன என்பதை இரண்டாம் பாதியில் கூறியுள்ளார் இயக்குனர்.
வலிமை படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்க வில்லை. மேலும் பல விமர்சனம் எழுந்து வந்தது. அதையெல்லாம் பூர்த்தி செய்யும் விதமாக துணிவு திரைப்படத்தில் மாஸ் காட்டியுள்ளார் அஜித். தனது ஒட்டுமொத்த உழைப்பையும் கொட்டியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
The post ரசிகர்களை ஏமாற்றாத ’துணிவு’ விமர்சனம்… appeared first on Touring Talkies.
]]>The post துணிவு: ‘அதை’ சொல்லவே இல்லையே..! appeared first on Touring Talkies.
]]>
முதல் காட்சியிலேயே ரசிகர்களை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடுகிறார். அவரின் உடல்மொழி, கிண்டல் சிரிப்பு, ஸ்டைலான நடனம் அனைத்தும் அட்டகாசமாக, அமைந்துள்ளன.
படம் வெளியாகும் ஒரு வாரத்துக்கு முன்பு நடிகர்களை அவர்கள் கதாப்பாத்திரத்தின் பெயர்களுடன் படக்குழு அறிமுகப்படுத்தியது. மேலும் அஜித்தின் பெயர் என்னவாக இருக்கும் என சொல்லுங்கள் ரசிகர்களிடம் கேள்வி எழுப்பி வந்தனர். அதற்கு ரசிகர்கள் அஜித்தின் பெயர் விநாயக் மகாதேவ்வாக இருக்கும் எனவும் அஜித்தின் கதாப்பாத்திரம் மங்காத்தா படத்தின் தொடர்ச்சியாக இருக்கும் எனவும் தங்கள் யூகங்களை வெளியிட்டுவந்தனர். ஆனால், படத்தின் டிரெய்லரிலும் அஜித்தின் பெயர் குறிப்பிடவில்லை.
இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்து. படம் பார்த்த ரசிகர்களுக்கு அவர்களே எதிர்பாராத சஸ்பென்ஸ் வைத்துவிட்டார் இயக்குநர். அதாவது, படத்தில் நடிகர் அஜித்தின் கதாப்பாத்திரத்துக்கு பெயரே இல்லை.
The post துணிவு: ‘அதை’ சொல்லவே இல்லையே..! appeared first on Touring Talkies.
]]>The post த்ரிஷா ‘நோ கமெண்ட்ஸ்..’ சொன்னது எதற்கு தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>The post த்ரிஷா ‘நோ கமெண்ட்ஸ்..’ சொன்னது எதற்கு தெரியுமா? appeared first on Touring Talkies.
]]>The post ‘நம்பர் ஒன்’ பற்றி ‘துணிவு’ தயாரிப்பாளர் அதிரடி பேட்டி! appeared first on Touring Talkies.
]]>வாரிசு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜு, “தமிழ்நாட்டில் நான் தயாரிக்கும் ‘வாரிசு’ படத்துடன் அஜித் நடிக்கும் படமும் வெளியாகிறது. தமிழ் திரையுலில் விஜய் நம்பர் ஒன் ஸ்டார் என்பது எல்லோருக்கும் தெரியும்” என்று சொல்ல, தமிழ் திரையுலகில் சர்ச்சைகள் வெடித்தன. குறிப்பாக அஜித்தின் துணிவு படமும் வாரிசு படமும் நாளை ஒரேநேரத்தில் வெளியாகவுள்ள நிலையில் இரு நாயகர்களின் ரசிகர்களிடம் விவாதமாக உருமாறியது.
இதற்கிடையே துணிவு தயாரிப்பாளர் போனி கபூர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நம்பர் ஒன் சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், “விஜய் நம்பர் ஒன் என்று தில் ராஜு கூறுவது அவரின் மனநிலை. நம்பர் ஒன் என்பதில் எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. என்னைப் பொறுத்தவரை கன்டென்ட் தான் நம்பர் ஒன். லவ் டுடே எப்படி இவ்வளவு பெரிய ஹிட் ஆனது. கன்டென்ட் இல்லையென்றால் பொன்னியின் செல்வன் லவ் டுடே இவ்வளவு பெரிய ஹிட் ஆகியிருக்காது” என்று தெரிவித்து இருக்கிறார்.
The post ‘நம்பர் ஒன்’ பற்றி ‘துணிவு’ தயாரிப்பாளர் அதிரடி பேட்டி! appeared first on Touring Talkies.
]]>The post ‘துணிவு’ படத்தின் புதிய புரோமோ வீடியோ appeared first on Touring Talkies.
]]>சமீபத்தில் ‘துணிவு’ படத்தின் ‘சில்லா சில்லா’, காசேதான் கடவுளடா’, ‘கேங்ஸ்டா’ஆகிய பாடல்கள், டிரெய்லர் ஆகியன வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் ‘துணிவு’ படத்தின் ‘சில்லா சில்லா’ பாடலின் புதிய புரோமோ வெளியாகி இருக்கிறது. இதுவும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று, ஏராளமான பார்வைகளை பெற்று வருகிறது.
The post ‘துணிவு’ படத்தின் புதிய புரோமோ வீடியோ appeared first on Touring Talkies.
]]>The post சுடக் கற்றுக்கொடுத்த அஜித்! appeared first on Touring Talkies.
]]>வங்கி கொள்ளையை அடிப்படையாக வைத்து துணிவு படம் உருவாகி இருக்கிறது. துப்பாக்கி சுடும் காட்சிகலில் அஜித் தூள் பறத்தி இருக்கிறார். ஆச்சரியமான விசயம், இதுவரை ஆக்ஷன் படத்திலேயே நடிக்காத மஞ்சு வாரியாரும்
துப்பாக்கியை வைத்து சுடும் காட்சியில் அசத்தி இருக்கிறார்.
இது குறித்து மஞ்சு வாரியார் அளித்த பேட்டியில், “எனக்கு துப்பாக்கி பிடிக்கவே தெரியாது. படங்களில் தான் பார்த்திருக்கிறேன். துப்பாக்கியை கையில் கொடுத்து ஆக்ஷன் என சொல்லிவிட்டார் இயக்குநர். எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.
உடனே வேறு வழியில்லாமல் வெட்கத்தை விட்டு அஜித் சாரிடம் போய் தான் கேட்டேன். அவர்தான், எப்படி துப்பாக்கி பிடித்து சுடவேண்டும் சொல்லிக் கொடுத்தார். அதுவும் மிகவும் பொறுமையாக நிதானமாக எப்படி பிடிக்க வேண்டும் கையை எந்த இடத்தில் பிடித்து சுட வேண்டும் என்று ஒவ்வொன்றாக சொல்லிக் கொடுத்தார்” என்று சொல்லி இருக்கிறார் மஞ்சு வாரியார்.
The post சுடக் கற்றுக்கொடுத்த அஜித்! appeared first on Touring Talkies.
]]>