The post ‘தூத்துக்குடி’ கார்த்திகா திரும்பவும் நடிக்க வருகிறார்…! appeared first on Touring Talkies.
]]>குறிப்பாக அந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘கருவாப் பையா’ என்கிற பாடலை கேட்கும்போதே, இப்போதும் கார்த்திகாவின் முகம்தான் ஞாபகத்துக்கு வரும்.
அதேபோல ‘பிறப்பு’ படத்தில் அவர் ஆடிப் பாடிய, ‘உலக அழகி நான்தான்’ பாடல், அந்த சமயத்தில் பள்ளிக் குழந்தைகளின் மேடை நடனத்துக்கான பொருத்தமான பாடலாக அமைந்தது.
இடையில் சில நாட்கள் திரையுலகை விட்டு ஒதுங்கி மும்பை சென்றுவிட்ட கார்த்திகா தற்போது மீண்டும் திரையுலகில் மறுபிரவேசம் செய்கிறார் என்பதுதான் லேட்டஸ்ட் தகவல்..
தனது ரீ என்ட்ரி பற்றி கார்த்திகா பேசும்போது, “தமிழில் படங்களில் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில்தான், திடீரென தங்கையின் படிப்புக்காக மும்பை சென்று தங்க வேண்டிய சூழல் உருவானது. அப்போதும்கூட சில படங்களில் நடிக்க அழைப்பு வந்தும் ஏற்க முடியாத நிலையில் இருந்தேன்.
இடையில் சென்னை வந்தபோது, வெளியில் சென்ற இடங்களில் ரசிகர்கள் பலரும், “இத்தனை நாளாக எங்கே சென்றீர்கள்..? நீங்கள் ஏன் மீண்டும் நடிக்க கூடாது ?” என தவறாமல் கேட்டனர். உடன் இருந்த உறவினர்கள்கூட, “உன்னை எவ்வளவு பேர் மறக்காமல் ஞாபகம் வைத்திருக்கிறார்கள்..? அதற்காகவது மீண்டும் நீ நடிக்க வேண்டும்..” என்றார்கள்.
அப்போதுதான் ரசிகர்களின் அன்பை இவ்வளவு நாள் நான் மிஸ் பண்ணியிருக்கிறேன் என புரிந்தது. அந்த சமயத்தில் தமிழ், தெலுங்கு, என இரு மொழிகளில் உருவாகும் படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது. இதுதான் சரியான தருணம் என அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
அதில் ஒப்பந்தமான நேரம், அந்தப் படங்கள் மூலமாக இன்னும் இரண்டு தெலுங்கு படங்களிலும் நடிக்க அழைப்பு வந்துள்ளது. அதேபோல இங்கே தமிழிலும், இரண்டு படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
அது மட்டுமல்ல, அனுஷ்கா நடித்த ‘அருந்ததி’ படம் போல இன்னொரு கதையும் என்னைத் தேடி வந்திருக்கிறது. அது பற்றிய பேச்சுவார்த்தையும் நடக்கிறது. இனி வெள்ளித்திரையில் என்னை அடிக்கடி நீங்கள் பார்க்கலாம்…” என்கிறார் கார்த்திகா.
The post ‘தூத்துக்குடி’ கார்த்திகா திரும்பவும் நடிக்க வருகிறார்…! appeared first on Touring Talkies.
]]>