The post செய்தியாளர்களை பார்த்து டென்ஷன் ஆகி கத்திய நடிகர் விஜய்யின் தாய்… என்ன நடந்தது? appeared first on Touring Talkies.
]]>அவரது அரசியல் கட்சி அறிவிப்பிற்குப் பிறகு, முதன்முறையாக தன்னுடைய பெற்றோரை சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில், விஜய்யின் பெற்றோர் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது, பத்திரிகையாளர்கள் தொடர்ந்து அவர்களை பின்தொடர்ந்ததால், கடுப்பான விஜய்யின் தாய் ஷோபா, “நீங்க வரக்கூடாது… வரக்கூடாது” என்று கோபமாக கூறினார். இதனால், அப்பகுதியில் சில நேரம் பரபரப்பு ஏற்பட்டது
இந்த நிலையில், எஸ்.ஏ. சந்திரசேகரைச் சூழ்ந்த பத்திரிகையாளர்கள், விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது அவர், “என் மகன் கட்சி ஆரம்பித்ததற்கு எனது வாழ்த்துகளும் ஆசிர்வாதங்களும் எப்போதும் இருக்கும். கட்சியில் தலையீடு செய்யவில்லை என்ற செய்தியாளர் கேள்விக்கு ‘எப்போதும் இருக்கும்’ என பதிலளித்துள்ளார்.
The post செய்தியாளர்களை பார்த்து டென்ஷன் ஆகி கத்திய நடிகர் விஜய்யின் தாய்… என்ன நடந்தது? appeared first on Touring Talkies.
]]>The post தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடியாகிறாரா அபர்ணா பாலமுரளி? appeared first on Touring Talkies.
]]>யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார். இந்த படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியிடப்படும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் முதல் பாடல் “விசில் போடு” மிகவும் வைரலானது.சில நாட்களுக்கு முன்பு, படக்குழுவினர் அமெரிக்காவில் VFX பணிக்காக சென்றனர், வெங்கட் பிரபு தனது சமூக வலைத்தள பக்கங்களில் VFX பணிகள் முடிந்துவிட்டதாக அறிவித்தார்.
அதே சமயத்தில், அரசியல் களத்தில் குதித்த விஜய், தனது 69-வது படத்தை முடித்தவுடன் சினிமாவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது. இந்த படத்தை “தீரன்” மற்றும் “துணிவு” போன்ற படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், விஜயின் 69-வது படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இவர் சூர்யாவுடன் இணைந்து “சூரரைப் போற்று” படத்தில் நடித்து தேசிய விருது பெற்றவர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடியாகிறாரா அபர்ணா பாலமுரளி? appeared first on Touring Talkies.
]]>The post தி கோட் படப்பிடிப்பிற்காக அமெரிக்கா பறந்த விஜய்! இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள தி கோட் படப்பிடிப்பு… appeared first on Touring Talkies.
]]>தற்போது கோட் படத்தின் படப்பிடிப்பிற்க்காக விஜய் அமெரிக்கா சென்றுள்ளார். அவர் அமெரிக்கா புறப்பட சென்னை விமான நிலையத்திற்குள் நடந்து செல்லும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.
இந்தப் படத்தில் விஜய் மட்டுமின்றி பிரபுதேவா, பிரசாந்த் போன்ற முக்கிய ஹீரோக்களை வெங்கட் பிரபு எவ்வாறான கதாபாத்திரங்கள் கொடுத்து எப்படி பயன்படுத்திருப்பர் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். மறுபுறம், நடிகர் மோகன் 90 களில் மிகப்பெரிய வெற்றிகரமான ஹீரோவாக இருந்தவர், அவர் கோட் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனும் கேமியோ ரோலில் நடித்திருப்பதாக சொல்லப்படும் நிலையில் சிவகார்த்திகேயனின் காட்சிகள் சென்னையில் நடந்ததாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், படத்தின் டப்பிங் பணிகளில் இயக்குனர் வெங்கட் பிரபு கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தின் டப்பிங் பணிகள் 50% முடிவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
The post தி கோட் படப்பிடிப்பிற்காக அமெரிக்கா பறந்த விஜய்! இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள தி கோட் படப்பிடிப்பு… appeared first on Touring Talkies.
]]>The post பிட்சா படத்தில் இவரும் ஒரு ஹீரோ தானே என்றபடி என்னை வரவேற்ற ரஜினி – Aadugalam Naren | CWC | Part -5 appeared first on Touring Talkies.
]]>The post சம்பவம் செய்த தி கோட்… இத்தனை கோடிக்கு சாட்லைட் விற்பனையா? appeared first on Touring Talkies.
]]>இப்படத்தில் நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.நடிகை த்ரிஷா விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனமாடியிருப்பதால் இந்தப் பாடல் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.
அதே போல சிவகார்த்திகேயனும் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாகவும், ஏற்கனவே சென்னையில் இதறகான படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. கூடுதலாக, பிரேம்ஜி மற்றும் வைபவ் உட்பட வெங்கட் பிரபுவின் குழுவும் இப்படத்தில் இணைந்துள்ளனர்.வெங்கட் பிரபு இவ்வளவு நட்சத்திரங்களை எப்படி படத்தில் இணைத்துள்ளார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
இந்நிலையில் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமம் அதிக தொகைக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோட் படத்தின் அனைத்து இந்திய மொழிகளின் சாட்டிலைட் உரிமையை 93 கோடி ரூபாய்க்கு Zee Network பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தளபதி 69 படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்க நெட்ஃபிளிக்ஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
The post சம்பவம் செய்த தி கோட்… இத்தனை கோடிக்கு சாட்லைட் விற்பனையா? appeared first on Touring Talkies.
]]>The post சூடுபிடிக்க தொடங்கிய தளபதி 69! ஹெச் வினோத்துடன் இணையும் பிரபல கேமரா மேன்? appeared first on Touring Talkies.
]]>தளபதி 69 படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. விஜய் அரசியலில் கால் பதித்துள்ளார். இந்த படம் தான் அவரது இறுதி படமென சொல்லிவுள்ள நிலையில் படத்தின் ஒளிப்பதிவாளர் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. விரைவில் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடையவுள்ளது. இதனிடையே அடுத்ததாக தளபதி 69 படத்தின் அறிவிப்பை விஜய் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தை பிரபல பட நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் ஹெச் வினோத் இயக்கவுள்ளதாக தொடர்ந்து அப்டேட்கள் வெளியாகி வருகின்றன.
ஹெச் வினோத்துடன் தீரன் மற்றும் விஜய்யின் மாஸ்டர் படங்களில் இணைந்து பணியாற்றிய சத்யன் சூரியன், தளபதி 69 படத்தில் கேமரா மேனாக இணையுள்ளதாக கூறப்படுகிறது. தீரன் மற்றும் மாஸ்டர் படங்கள் ஒளிப்பதிவு மிகப்பெரிய அளவில் பாராட்டுகள் பெற்றது.அடுத்ததாக சத்யன் சூரியன் தளபதி 69 படத்தின் இணையவுள்ள தகவல் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
The post சூடுபிடிக்க தொடங்கிய தளபதி 69! ஹெச் வினோத்துடன் இணையும் பிரபல கேமரா மேன்? appeared first on Touring Talkies.
]]>The post ரகசியமாக விஜய்யின் படத்தை பார்த்த அஜித்! வெளிவந்த ரகசியம்… appeared first on Touring Talkies.
]]>இந்திய சினிமாவின் டாப் ஹீரோக்கள் பட்டியலில் அஜீத்தும் விஜய்யும் தனக்கென தனி இடத்தை பிடித்தவர்கள்.அதேபோல், தற்போதைய நிலையை அடைய இருவரும் பல கஷ்டங்களை சந்தித்துள்ளார்கள். விஜய்யை உருவ கேலி கிண்டல் மற்றும் தமிழில் சரியாக பேசத் தெரியாதவர் எனவும் அஜித்தை உணர்ச்சிகரமான காட்சிகளில் நடிக்கத் தெரியாதவர், நடனமாடவில்லை என்று விமர்சித்து கேலி செய்தார்கள்.
அவர்கள் இப்போது இருக்கும் இடத்திற்கு சாதாரணமாக வரவில்லை. அவர்கள் தங்கள் திறமைகளை மேம்படுத்த அயராது உழைத்ததால் தான் இருவரும் இப்போது சூப்பர் ஸ்டார்களாகிவிட்டனர். இரண்டு பேருக்கும் போட்டி என்ற நிலைதான் இருந்தாலும் இருவரும் இணைந்து நடிக்க உள்ளுக்குள் ஆசை இருப்பதாகவே தெரிகிறது.
அஜித்துடன் மங்காத்தா படத்தை பார்த்த பிறகும் விஜய் வெங்கட் பிரபுவிடம் பேசியபோது நீங்கள் சொல்லியிருந்தால் அர்ஜுன் வேடத்தில் நான் நடித்திருப்பேன் என்றார். இதை வெங்கட் பிரபுவே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இந்த சமயத்தில் அஜித் விஜய் படத்தை ரகசியமாக பார்த்தது தெரியவந்திருக்கிறது.விஜய் நடித்த வில்லு படத்தை; தன்னுடைய ஃபேவரைட் இயக்குநர் சரணுடன் சேர்ந்து சென்னையில் ஒரு தியேட்டரில் மாறு வேடத்தில் சென்று பார்த்தாராம். பார்த்ததோடு மட்டுமின்றி படம் பார்க்கையில் சில காமெடி சீன்களுக்கு விழுந்து விழுந்து சிரித்து என்ஜாய் செய்தார் என்று இயக்குநர் சரண் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
The post ரகசியமாக விஜய்யின் படத்தை பார்த்த அஜித்! வெளிவந்த ரகசியம்… appeared first on Touring Talkies.
]]>The post வருஷத்துக்கு ஒரு படமாவது நடிங்க சார்…பெரிய ரோஜா மாலையுடன் சென்று விஜய்யை வாழ்த்திய பிரபலம்… appeared first on Touring Talkies.
]]>தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் தந்தையால் வந்தவன் எனவும், எஸ்.ஏ சந்திரசேகர் படத்தில் அறிமுக நாயகனாக தமிழ் சினிமாவிற்குள் வரும் போது இந்த மூஞ்சி எல்லாம் வியாபாரம் ஆகாது என விமர்சித்த தமிழ் சினிமா தற்போது அந்த சினிமா உலகிற்கே தளபதியாக மாறியுள்ள நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்ததை கேட்டு ஆட்டம் கண்டு கொண்டு இருக்கிறது தமிழ் சினிமா.
இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் 10 கோடி ரூபாய்க்கு மேல் கில்லி திரைப்படம் ரீ ரீலீஸாகி வசூல் சாதனை செய்துள்ளதாக சொல்லப்படும் நிலையில் கோட் படப்பிடிப்பில் இருக்கும் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்த சக்தி ஃபிலிம் ஃபேக்டரியை சேர்ந்த விநியோகஸ்தர் சக்திவேலன் மிகப்பெரிய ரோஜா மாலையை விஜய்க்கு அணிவித்தார் அதை அன்பாக ஏற்ற விஜய்க்கு கில்லி படத்தின் ரீ ரிலீஸ் வரவேற்ப்பையும் சாதனையும் குவித்து வருவதற்காக பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து இதுதான் சரியான சமயம் மனதில் நினைப்பதை என, ஒரே ஒரு கோரிக்கை சார் என நடிகர் விஜய்யிடம் சினிமாவை விட்டு முழுவதுமாக விலகி விட வேண்டாம் சார். வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க, வியாபாரத்துக்காக சொல்லல சார், தியேட்டர்ல வந்து ரசிகர்களின் கொண்டாட்டத்தை பாருங்க என விஜய்யிடம் கோரிக்கை வைத்துள்ள வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.
The post வருஷத்துக்கு ஒரு படமாவது நடிங்க சார்…பெரிய ரோஜா மாலையுடன் சென்று விஜய்யை வாழ்த்திய பிரபலம்… appeared first on Touring Talkies.
]]>The post இன்றைய சினி பைட்ஸ் appeared first on Touring Talkies.
]]>தி கோட் படத்தில நடிகர் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் 4 பேரும் சிபிஐ அதிகாரிகளா நடிக்குறாங்க…மாநாடு படத்துக்கு அப்புறம் இந்த படத்தில நடிங்கனு வெங்கட் பிரபு கேட்டதால நான் ஒரு சின்ன ரோல்ல நடிச்சிருக்கேன் அது விஜய் கூட காம்பினேஷன் காட்சி தான் என ஒரு பேட்டியில் கூறியுள்ளார் ஒய்.ஜி. மகேந்திரன்.
முதலில் த்ரிஷா தான் ஜோடியாக இணைய இருக்கிறார் என கூறப்பட்டது ஆனால் தற்போது குட் பேட் அக்லி படத்தில் அஜித்துக்கு ஹீரோயினாக நடிக்க நடிகை ஸ்ரீலீலாவை படக்குழு கமிட் செய்திருப்பதாகவும், அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. ஸ்ரீலீலா இப்போது தெலுங்கில் சென்சேஷ்னல் ஹீரோயினாக வலம் வருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக குண்டூர் காரம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சி ஒன்றில் ஷாருக்கான் பாடலுக்கு பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நடனமாடி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். அவர் ஸ்டேஜில் ஆடிய இந்த நடன வீடியோவை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள ஷாருக்கான், தன்னுடைய சிறப்பான ஆட்டத்தால் மோகன்லால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளதாகவும் பாராட்டு தெரிவித்திரருக்கிறார்.தொடர்ந்து இந்தப் பாடல் தற்போது தனக்கு மிகவும் ஸ்பெஷலாக மாறியுள்ளதாகவும் அதற்கு மோகன்லாலுக்கு நன்றி என்றும் குறிப்பிட்டிருந்தார்.
வேட்டையனாக சரவணன் மீனாட்சி தொடரில் பிரபலமான கவின் பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக பங்கேற்று ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார். நட்புனா என்னான்னு தெரியுமா, லிப்ட், டாடா படங்களில் நடித்து வந்தவர் தற்போது ஸ்டார் படத்தின் மூலம் பெரிய ஸ்டாராக காத்திருக்கிறார். இந்நிலையில், ஸ்டார் படத்தில் இடம்பெற்ற மெலோடி பாடலுக்கு பெண் வேடமிட்டு நடனம் ஆடுவதற்காக கவின் எப்படி ரெடியான என்கிற மேக்கிங் வீடியோவை தற்போது படக்குழுவினர் வெளியிட்டு புரோமோஷன் செய்து வருகின்றனர்.
எந்த சமாதானமும் எனக்கு தேவை இல்லை என கூறி துப்பறிவாளன் 2 படப்பிடிப்பிற்கு தேவையான துணை நடிகர், நடிகைகள் மற்றும் லொகேஷன்காக அஜர்பைஜான், லண்டன் முதலிய நாடுகளையும் தேர்ந்தெடுத்துள்ளார் விஷால்.மிஷ்கின் ஏற்கனவே எடுத்து முடித்த 30 நாட்கள் பட காட்சிகளை தவிர்த்து முற்றிலும் புதிதாக துப்பறிவாளன் 2 படப்பிடிப்பை விரைவில் ஆரம்பிக்க உள்ளாராம் விஷால்.
The post இன்றைய சினி பைட்ஸ் appeared first on Touring Talkies.
]]>The post தூள் படத்தில் விட்டு கில்லி படத்தில் பிடித்த விஜய்…தூள் படத்தின் முதல் ஹீரோ இவர் தான்… appeared first on Touring Talkies.
]]>இப்படி இருவரும் பிஸியாக பயணிக்க விக்ரம் நடித்து வெளியாகி சூப்பர் ஹிட்டான தூள் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை நழுவ விட்டார் விஜய் என்ற சுவாரஸ்யமான தகவல் உங்களுக்கு தெரியுமா?
தமிழில் எதிரும் புதிரும், குருவி, ஒஸ்தி, தில், தூள் மற்றும் கில்லி என சூப்பர் ஹிட்டான படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் தரணி.தூள் படத்தின் கதையை இயக்குனர் தரணி விஜய்யிடம் சொல்லியிருக்கிறார் ஆனால் விஜய் ஏதோ சில காரணங்களால் இப்படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை தவிர்த்திருக்கிறார்.இப்படி தவிர்த்த சமயத்தில் தரணி தூள் படத்தை விக்ரம் நடிப்பில் இயக்க அப்படம் ப்ளாக் பஸ்டர் ஆனது.நடிகர் விக்ரமின் மிகசிறந்த படங்களில் ஒன்றாக அமைந்தது.
இவ்வாறு ப்ளாக் பஸ்டர் ஆன படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டோமே எனவும் இப்பேர்பட்ட சிறந்த இயக்குனர் தரணியை நழுவவிட கூடாது என முடிவெடுத்த விஜய் அவரின் அடுத்த படத்தில் நடித்தார் அப்படி அவர் நடித்து மெகா சூப்பர் ஹிட்டான படம் தான் கில்லி.இப்படம் 20 வருடங்களுக்கு பிறகு சில நாட்களுக்கு முன்பு ரீ ரிலீஸ் செய்யப்பட்டு திரையரங்குகளில் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
The post தூள் படத்தில் விட்டு கில்லி படத்தில் பிடித்த விஜய்…தூள் படத்தின் முதல் ஹீரோ இவர் தான்… appeared first on Touring Talkies.
]]>