The post “வாரிசு’ ரிலீஸ் ஆகலைன்னா வேற எந்தப் படமும் வெளியாகாது” – இயக்குநர் பேரரசு எச்சரிக்கை appeared first on Touring Talkies.
]]>இது குறித்து இயக்குநர் பேரரசு பேசும்போது, “தற்போது ஆந்திராவில் பண்டிகை காலங்களில் தமிழ் படங்களை திரையிடக் கூடாது. தெலுங்கு படங்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்திருக்கிறது.
நாம் மொழி பார்த்து படம் பார்ப்பதில்லை. இந்த வருடம் பொங்கலுக்கு ‘பீஸ்ட்’ படம் வெளியான அதே சமயத்தில்தான், ‘கே.ஜி.எப்.-2’ படமும் வெளியானது. அந்தப் படத்தின் முதல் பாகத்திற்கு ஏற்கனவே கிடைத்த வெற்றியால் ‘பீஸ்ட்’ படத்திற்கு போலவே, கே.ஜி.எப். படத்தின் 2-ம் பாகத்திற்கும் அதிகமான தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டது.
இதேபோலத்தான் ‘பொன்னியின் செல்வன்’ வெளியான சமயத்தில் கன்னடத்திலிருந்து வெளியான ‘காந்தாரா’ திரைப்படம் இங்கே வரவேற்பை பெற்றதால் அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டன.
நாம்தான் திராவிடம் என்கிற பாசத்துடன் அனைவரையும் ஒன்றாக பார்க்கிறோம். ஆனால் அவர்கள் நம்மை தமிழர்களாக மட்டும்தான் பார்க்கிறார்கள். ‘வாரிசு’ படத்தை தயாரித்தவரும், இயக்கியவரும் தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர்கள்தான். ஹீரோ மட்டும்தான் தமிழ். அதனால் ஹீரோவை கார்னர் பண்றாங்க.
இப்போது அவர்கள் கொண்டு வந்திருக்கும் புதிய நடைமுறை நம்மை அவமானப்படுத்துவது போல இருக்கிறது. இதை சாதாரண பிரச்சினையாக கடந்து போக முடியாது. இது நமது மானப் பிரச்சனை.
தென்னிந்திய மொழிகள் அனைத்துக்கும் சரிசமமான முடிவெடுக்க வேண்டிய தென்னிந்திய வர்த்தக சபை இதில் தலையிடவேண்டும். மவுனமாக இருப்பது தப்பாக போய்விடும். அதுமட்டுமல்ல, இந்த விஷயத்தில் தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கமும் குரல் கொடுக்க வேண்டும்.
‘வாரிசு’ படம் தெலுங்கில் ரிலீஸ் ஆகவில்லை என்றால் அடுத்து இங்கே வேறு எந்த மொழி படமும் ரிலீஸ் ஆகாத அளவுக்கு பிரச்சனை பெரிதாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இது நம் ரோஷத்தையும், உணர்வையும் தூண்டி விடக்கூடிய ஒரு விஷயம்..” என்றார்.
The post “வாரிசு’ ரிலீஸ் ஆகலைன்னா வேற எந்தப் படமும் வெளியாகாது” – இயக்குநர் பேரரசு எச்சரிக்கை appeared first on Touring Talkies.
]]>The post “வாரிசு’க்கு முன்.. ‘வாரிசு’க்கு பின்” என்று நிலைமை மாறும்” – இயக்குநர் லிங்குசாமி எச்சரிக்கை appeared first on Touring Talkies.
]]>இது குறித்து இயக்குநர் லிங்குசாமி கருத்து தெரிவிக்கையில், “தற்போது ஆந்திராவில் பண்டிகை காலங்களில் தமிழ் படங்களை திரையிடக் கூடாது என தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்திருப்பது தவறானது. இப்போது வெளியாகும் படங்கள் எல்லாம் நன்றாக ஓடுகின்றன. இது சினிமாவிற்கு ஒரு பொற்காலம். இந்த சமயத்தில் இப்படி ஒரு பிரச்சனை வரவே கூடாது.
‘வாரிசு’ ரிலீஸ் விஷயத்தில் சரியான ஆட்கள் பேசி இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும். குறுகிய எண்ணத்தோடு யாராவது இப்படி ஒரு முடிவெடுத்து இருந்தால், நிச்சயமாக ‘வாரிசு’க்கு முன்; ‘வாரிசு’க்கு பின் என்று இந்திய சினிமாவும் மாறிவிடும். அதனால் இப்போது ஏற்பட்டிருப்பது ஒரு சின்ன சலசலப்புதான். இது விரைவில் சரியாகிவிடும் என நம்புகிறேன்..” என்றார்.
The post “வாரிசு’க்கு முன்.. ‘வாரிசு’க்கு பின்” என்று நிலைமை மாறும்” – இயக்குநர் லிங்குசாமி எச்சரிக்கை appeared first on Touring Talkies.
]]>The post “100 கோடி கொடுத்தாலும் இனி இவருடன் நடிக்க மாட்டேன்” – நடிகர் அர்ஜூன் அறிவிப்பு! appeared first on Touring Talkies.
]]>இதற்காக தெலுங்கு சினிமாவில் வளர்ந்துவரும் நடிகரான விஷ்வக் சென்னை படத்தின் நாயகனாகவும் ஒப்பந்தம் செய்துள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், நேற்றைக்கு செய்தியாளர்களை அவசரமாக அழைத்த அர்ஜுன் தான் இயக்கவிருந்த படத்தின் நாயகன் விஷ்வக் சென் குறித்து பலவித குற்றச்சாட்டுகளை வரிசையாக அடுக்கினார்.
“என் மகளை தெலுங்குத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்துவதற்காக இந்தப் படத்தைத் தொடங்கினேன். நான் கதையைச் சொன்னதும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் விஷ்வக் சென். அவர் கேட்ட சம்பளத்தையும் நாங்களும் தர தயாராக இருந்தோம்.
இருப்பினும், ஜெகபதி பாபு போன்ற மற்ற மூத்த நடிகர்களுடன் திட்டமிடப்பட்ட தேதிகளில் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. அவரை பல முறை தொடர்பு கொண்டும் பதில் இல்லை.
என் வாழ்நாளில் நான் அவருக்கு போன் செய்ததுபோல் போல் வேறு யாருக்கும் அத்தனை முறை தொடர்பு கொண்டது இல்லை. பெரிய ஸ்டாராக இருந்தாலும் அல்லு அர்ஜுன், ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் தொழில் ரீதியாக மிக அர்ப்பணிப்புடனும் பணியாற்றுகிறார்கள். ஒரு நடிகன் தனது தொழிலில் மிகவும் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும். அந்த அர்ப்பணிப்பு விஷ்வக் சென்னிடம் இல்லை.
இப்படி ஒரு விரோதமான சூழலில் அவரை வைத்து இந்தப் படத்தைத் தொடர வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன். அவருக்கு பதிலாக வேறொரு நடிகரை நடிக்க வைக்க இருக்கிறேன். எனினும் விஷ்வக் சென் பற்றி அனைவருக்கும் தெரிவிக்கவே இந்த பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துகிறேன். அந்த அளவுக்கு அவர் என்னையும், எனது குழுவையும் டார்ச்சர் செய்துள்ளார். இனிமேல் 100 கோடி கொடுத்தாலும் அவருடன் பணிபுரிய மாட்டேன்” என்று பொங்கித் தீர்த்துவிட்டார் அர்ஜூன்.
The post “100 கோடி கொடுத்தாலும் இனி இவருடன் நடிக்க மாட்டேன்” – நடிகர் அர்ஜூன் அறிவிப்பு! appeared first on Touring Talkies.
]]>The post தெலுங்கு நடிகர், நடிகைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள்..! – பிலிம் சேம்பர் அறிவிப்பு appeared first on Touring Talkies.
]]>இது தொடர்பாக தெலுங்கு திரைப்பட வர்த்தக சபையினரோடு ஆந்திராவின் திரைப்பட தொழிலாளர்கள் சங்கமும், நடிகர்கள் சங்கமும் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. தற்போது இதில் ஒரு முடிவு எட்டப்பட்டிருப்பதாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் பலவித கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதன்படி,
“இனிமேல் நடிகர், நடிகைகள் தங்கள் உதவியாளர்களுக்கு சம்பளம், பேட்டா உள்ளிட்டவைகளை அவர்களே கொடுக்க வேண்டும்.
உள்ளூரில் படப்பிடிப்பு நடக்கும்போது போக்குவரத்து செலவு, தங்குமிட செலவை நடிகர், நடிகைகளே ஏற்க வேண்டும். இதனை தயாரிப்பாளர்கள் தர மாட்டார்கள். முன்னணி தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் இது பொருந்தும்.
நடிகர், நடிகைகளுக்கு இனி நாள் கணக்கில் சம்பளம் தரப்படாது. ஒரு படத்திற்கு இவ்வளவு சம்பளம் என்கிற விதத்தில் சம்பளம் தரப்படும்.
ஒரு கால்ஷீட் என்பது 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக மாற்றப்படும்.
ஒரு படம் திரையரங்கில் வெளியாகி 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும்.
இந்த முடிவுகள் வருகிற செப்டம்பர் 10-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.”
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post தெலுங்கு நடிகர், நடிகைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள்..! – பிலிம் சேம்பர் அறிவிப்பு appeared first on Touring Talkies.
]]>The post நடிகர் சங்கத் தேர்தல் – பிரகாஷ்ராஜ் அணியினர் அறிவிப்பு appeared first on Touring Talkies.
]]>இந்த வேட்பாளர் அணியில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், சாய்குமார், பானர்ஜி, உத்தேஜ், தனீஷ், அஜய், நாகி நீடு, பிரஹம்ஜி, ரவி பிரகாஷ், சமீர், பந்த்லா கணேஷ், யெடிடா ஸ்ரீராம், சிவரெட்டி, போபால், டார்ஜான், சுரேஷ் கொண்டாட்டி, சுதாகலி சுதிர், கோவிந்தா ராவ், சுதாகர் ராவ், நடிகைகள் ஜெயசுதா, ஷனூர் ஷனா, அனுசுயா பரத்வாஜ், பிரகதி, அனிதா செளத்ரி, சுதா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும் இவர்களுடன் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவியின் தம்பியான நடிகர் நாகபாபுவும் இணைந்துள்ளார்,
பிரகாஷ் ராஜ் அணிக்கு எதிராக பிரபல மூத்த தெலுங்கு நடிகரான மோகன் பாபுவின் மகனான நடிகர் விஷ்ணு மஞ்சுவும், நடிகைகள் ஜீவிதாவும், ஹேமாவும் களம் இறங்க இருக்கிறார்கள்.
இவர்களில் ஜீவிதா, மோகன் பாபு அணிக்குத் தாவலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நடிகை ஹேமா தன் தலைமையில் புதிய அணியை அமைத்து போட்டியிடுவேன் என்று திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்.
மற்றைய அணிகள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post நடிகர் சங்கத் தேர்தல் – பிரகாஷ்ராஜ் அணியினர் அறிவிப்பு appeared first on Touring Talkies.
]]>